Blog

  • October 4 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – உதவி
    ரிஷபம் – தனம் 
    மிதுனம் – களிப்பு 
    கடனம் – பிரிவு
    சிம்மம் – ஊக்கம் 
    கன்னி –  ஆர்வம் 
    துலாம் –  தோல்வி     
    விருச்சிகம் – பெருமை  
    தனுசு –     மகிழ்ச்சி 
    மகரம் –   பொறுமை 
    கும்பம் – சோதனை 
    மீனம் – கவனம் 
    சந்திராஷ்டமம்    – கார்த்திகை,ரோகிணி
     

  • October 4 Sasti Viradham

    அக்டோபர் 4 – ஷஷ்டி விரதம் 
    விகாரி வருடம் – புரட்டாசி 17
    04-அக்-2019 வெள்ளி  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    ம    3.22
    நட்சத்திரம்    :    கேட்டை    மா    6.21
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கார்த்திகை,ரோகிணி
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thirupathy Arakattlaiku Nankodai

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் மூலமாக 1,126 கோடி ரூபாய் இதுவரை பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.

     பக்தர்கள் வழங்கிய நன்கொடையை வங்கியில் செலுத்திய  முதலீட்டின் மூலமாக வரக்கூடிய வட்டியில் இருந்து தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

     அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ஒரு நாளைக்கு 30 லட்ச ரூபாய் வரை செலவாகிறது.

    பிறந்த நாள், திருமண நாள், மற்றும் சுபநிகழ்ச்சிகள், நினைவுநாளில் நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயரில்   அன்ன பிரசாதம் வழங்கும் திட்டமும் உள்ளது. இதன் மூலம்   30 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கலாம்.
     

  • Andal Soodi Kalaindha malai

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கருட சேவைக்காக கொண்டு வரப்பட்ட  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை.

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் மூக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.  

    தலைமையில் அர்ச்சகர் ரமேஷ், சுதர்சன் ஆண்டாள் மாலை கொண்டு வந்தனர். ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து  ஜீயர்கள்,  கூடுதல் செயால் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் நான்கு மாடவீதியில் யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வரங்கள் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது.

    ஆண்டாள் சூடி கொடுத்த மாலை நாளை காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.
     

  • Venpattu Kudaigal Thirupathyil Oppadaipu

    சென்னையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட 11 வெண்பட்டு குடைகள் திருப்பதி கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    திருப்பதி கோவில் கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம் இந்து தர்மார்த்த சமீதி அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி வழங்கினார்.

    சென்னையில் கடந்த 28-ந் தேதி தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று மாலை திருப்பதி திருமலையை வந்தடைந்தது.  வெண் பட்டு குடைகளுடன் பட்டுவஸ்திரங்கள், பழங்கள், மஞ்சள் உள்ளிட்ட மங்களப்பொருட்களும் மேளதாளத்துடன் மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு  ஏழுமலையான் கோயில் முன்பு  இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஏழுமலையான் கோயில்  கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டியிடம்  சமர்ப்பித்தார். 

    அப்போது திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுசலர் ஹரிந்திரநாத், முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத் ஜெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  முன்னதாக, நேற்று திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 2 வெண்பட்டுக்குடைகள் இந்து தர்மார்த்த சமிதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்டன. 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து பல ஆண்டுகளாக  வழங்கப்பட்டு வரும் மங்களப்பொருட்களில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் மாலைகளும், சென்னையில் இருந்து இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வழங்கப்படும் வெண்பட்டுக்குடைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 

    எனவே இந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து வெண்பட்டு குடைகள் கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சமர்பிக்கப்பட்டு வருகிறது. கடந்த 28 -ந் தேதி சென்னையில் இருந்து இந்த திருக்குடைகள் ஊர்வலம் புறப்பட்டதில் இருந்து திருமலை வரும் வரை சுமார் 20 லட்சம் பக்தர்கள் இந்தக் திருக்குடைகளை பெருமாளின் அம்சமாகவே கருதி பயபக்தியுடன் வழிபட்டனர். இந்த குடைகளுடன் தமிழக மக்களின் பிரார்த்தனைகளையும் சமர்ப்பித்ததாக எண்ணி பெருமை கொள்கிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • Navarathiri Vizha Eppadi Thodanga Vendum

    விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

    நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

    நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

    நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

    ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

    தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

    தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே மிகமிக முக்கியம்.

    அந்த காலத்தில் நாடு சீரும் சிறப்பும் அடையவும், செங்கோல் நடக்கவும், செல்வம் கொழிக்கவும் நவராத்திரி விழாவை மக்கள் கொண்டாடினார்கள்.

    நவராத்திரி ஒன்பது நாட்களிலும் நாராயணசுக்தம், புருஷசுக்தம், சகஸ்ரநாமம், சுதர்சனமந்திரம், கருடமந்திரம் முதலியவை ஜபரூபமாக முழங்கும்.

    கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமாகும்.

    நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

    சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

    நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.
     

  • Thirumaligai Thevar

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    சித்தர் பெருமான்களில்
    அழகு நிறைந்தவர் திருமாளிகைத் தேவர்.

     அழகு என்றால் அப்படி ஒரு அழகு…
    ஆண்களுக்குரிய அத்தனை புருஷ லட்சணங்களும் அமையப் பெற்றவர்.

     தவத்தில்…
    சிவத்தில்…
    காயசித்தியில்… நிறைந்தவர் என்பதால்
    பொன்னிறம் போர்த்திய உடம்பு…. ஒளிவீசும் முகம்…

    ஒளி பரப்பும் அகம்.
    ஆண் பெண் பேதமின்றி எவரையும் ஈர்க்கும் தெய்வீகம்.

     வேதியர் குலம் என்பதால் இறை பணி… மீதி நேரம் அவர் ஒரு தவமணி.
    திருவாடுதுறை பெண்களுக்கு திருமாளிகைத் தேவர் மீது ஆழ்ந்த பக்தி உண்டு.

    கூடவே கண்கவர் தேவரை மனம் கவர் மன்னனாக நாள் முழுக்க மனதில் நிறைப்பதும் உண்டு.
    அப்பெண்கள் மத்தியில் ஒரு ரகசிய விமர்சனமும் உண்டு….
    'மன்மதன் தோற்றுவிடுவான் இவரிடம்……. ரதியும் மதிமயங்கி விடுவாள் இவரிடம்…….'
    அதன் விளைவு…?

     அப்பெண்டிருக்குப் பிறக்கும் குழந்தைகள் யாவும் தேவர் சாயலில் இருந்தன.
    தேவர் மகன்கள்…! திருமாளிகைத்
    திருமகள்கள்…..!!

    வேதம் கற்ற ஆண்களுக்கு கோபமும் சந்தேகமும் கூடின. குலப் பெருமையையும் வம்சவிருத்தியையும் எண்ணியெண்ணி மனம் கலங்கினர்.
    நரசிங்கன் என்பான் அப்போதைய மன்னன்.

     ஒரு சமயம் அவன் படை சூழ திருவாடுதுறை அருகே (இப்போதைய நரசிங்க பேட்டை) முகாமிட்டு இருந்தான்.
    மன்னனிடம் அழுதபடி புகார் சொன்னார்கள் வேதியர்.

     "ஏதோ மாயம் மந்திரம் செய்து எம்குலப் பெண்களை மயக்கி கர்ப்பம் ஆக்கி விடுகிறான் அரசே….
    நீங்கள் தான் எங்கள் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்"
    மன்னனின் மீசை துடித்தது. கோபம் கொப்பளித்தது.
    வீரர்களை அழைத்தான்.

     "இவர்கள் சொல்லும் தீயவனை –  காமுகனைக் கட்டி இழுத்து வாருங்கள்" உத்தரவிட்டான்.
    விரைந்தோடிய வீரர்கள் திருமாளிகைத் தேவரைக் கண்டனர்.
    அரசன் உத்தரவை அமல்படுத்த இருப்பதாகச் சொன்னார்கள்.

    "அப்படியே ஆகட்டும்… என்னை கட்டிச் செல்லுங்கள்.." புன்னகை மாறாமல் சொன்னார்.
    தேவபிரான் உதிர்த்த வார்த்தைகள் சித்தன் உத்தரவாய்
    மன்னன் உத்தரவை முழுதாய் மாற வைத்தன.

    வீரர்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அரசன் நரசிங்கன் முன் நின்றனர்.
    அரசனின் கோபம் அதிகரித்தது. சீற்றமுடன் சேனாதிபதியை
    அழைத்தான்.

     வீரர்களின் சிந்தையை மயக்கிய மந்திரவாதியா அவன் …
    என்னிடமே விளையாடுகிறானா ?
    மாய மந்திரம் இந்த மன்னனிடம் பலிக்காது.
    அத்தீயவன் உயிருடன் இருப்பதே தப்பு" என சீறினான்.

     சேனாதிபதி ஒருபடி மேலே போய் "அரசே….அவன் தலையுடன் வருகிறேன்"
    வீரவசனம் பேசிவிட்டு விரைந்தான்.
    அதே இடம்…அதே புன்னகை….

    திருமாளிகைத்தேவர் 'சிவனே' என்று  ஆழ்ந்திருந்தார்.
    சேனாதிபதி உரத்த குரலில் தலை கொய்ய வந்திருப்பதாகக் கொக்கரித்தான்.
    அவன் உருவிய வாள் தேவரின் கழுத்தை
    குறிபார்த்துக் கொண்டிருந்தது.

     "ம்…. தலையை வெட்டி செல்லுங்கள்" தேவர் சம்மதம் சொன்னார்.
    அடுத்த கணம்….
    வீரர்களும் சேனாதிபதியும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
    முடிவில் …. ஒவ்வொருவர் கைகளிலும் இன்னொருவர் தலை…. தரையில் பல தலைகள் …

    தப்பித்த வீரர் சிலர் மன்னனிடம் சென்று நடந்த கதையை நடந்தபடி சொன்னார்கள்.
    உச்சந்தலைக்கு உஷ்ணம் ஏறி உயரக் குதித்தது மன்னனின் கோபம்.
    "நானே செல்கிறேன்….
    உடன் வரட்டும் நம் படை…. பார்த்துவிடலாம்"
    கர்ஜித்த மன்னன்,

    போர் எனும் அளவில் முழக்கமிட்டான், புறப்பட்டான்.
    ஒற்றை மனிதரைப் பிடிக்க உருவிய வாள்களுடன் பெரும் படை. தலைமை மன்னன் நரசிங்கன்.
    செய்தி கேட்டு புன்னகைத்தார்
    திருமாளிகைத்தேவர். அப்போதும் அதே புன்னகை.

     திருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோயிலின் மதில் சுவர்கள் மனம் மயக்கும் உயர் சுவர்கள்.
    அச்சுவர்களின் நாற்புறமும் காவலுக்குக் கம்பீர காளை சிலைகள் கண்கவரும்.
    மன்னனின் படைகள்
    மாளிகைத்தேவரை
    நெருங்கும்போது மதிற்சுவர் சிலைகள்  உயிர் பெற்றன.

     கோயிலில் வீற்றிருக்கும் நந்தியின் உடலில் புகுந்தன. பூத கணங்களாக வெளிப்பட்டன.
    சில நொடிகள் தாம். அதைப் போர் என்று சொன்னால் பிறந்த குழந்தையே பரிகசிக்கும்.
    மன்னரும் மந்திரியும் வீரர்களும் கட்டப்பட்டு தேவர் முன் நிறுத்தப்பட்டனர்.
    அடுத்த நொடியே பூதகணங்கள், மதிற்சுவர் காளைகள் மாயமாய் மறைந்து போயின.

    இதையெல்லாம் கண்ணுற்ற மன்னன் கதிகலங்கிப் போனான். உடம்பும் உள்ளமும் நடுங்கியது. உண்மை உணரத் தலைப்பட்டான்.
    "சுவாமி…..தங்களை ஏதோ மந்திரவாதி என நினைத்து தவறிழைத்து விட்டேன். தங்கள் தெய்வீகம் புரியாமல் கோபம் தலைக்கேறி பாவம் செய்துவிட்டேன் "
    கதறித் துடித்தான்

     "மன்னா…..
    நீ அரசன். நீதி காக்க வேண்டியவன்.
    அவசரத்தனம் அரசருக்கு ஆகாது. ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் அல்லவா?
    வேதியர் சொன்னதைக் கேட்டாய்…
    அவர்கள் வாதி…..
    பிரதிவாதி நான்.

    என் தரப்பை விசாரித்திருந்தால் இத்தனை தொல்லைகள் இருந்திருக்காது.
    இனி இப்படித் தவறுகள் செய்யாதே !
    மன்னா…
    எந்த சிந்தனையில் சதா சர்வகாலமும் இருக்கிறோமோ, அதுவாகவே ஆவதே இயற்கை நீதி.

    நான் சிவனே என்று இருக்கிறேன் அதனால் தான் சிவமயமாய் உணர்கிறேன்.
    அப்பெண்கள் என் நினைவாக இருந்ததால் எனைப் போல் பிள்ளை பெற்றார்கள்.
    இது பிழையல்ல. இயற்கை நியதி. இதுவே இறைநீதி.

    வேதியர்கள் கவலைப்படத் தேவையில்லை.
    சந்தேகம் சத்ரு. கேடு தரும்."
    மென்மையாய் சொன்னார்
    திருமாளிகைத்தேவர்.

     புரிந்த மன்னன் வணங்கி நின்றான்.
    இன்றும் திருவாடுதுறை ஈஸ்வரன் கோயிலில்
    மதில் சுவர் மேல்
    ரிஷப காளைகளின் சிலைகள் இல்லாதிருப்பதைக் காணலாம்.

     திருமாளிகைத்தேவர் மகத்துவம் உணரலாம். மனமுருகி லயிக்கலாம்.

  • October 3 Indraya Naal

    அக்டோபர் 3 – இன்றைய நல்ல நேரம்
    விகாரி வருடம் – புரட்டாசி 16
    03-அக்-2019 வியாழன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    மா    4.02
    நட்சத்திரம்    :    அனுஷம்    மா    6.17
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பரணி,கார்த்திகை
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • October 3 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – இன்பம் 
    ரிஷபம் – சாந்தம் 
    மிதுனம் – தடை 
    கடனம் – அலைச்சல்
    சிம்மம் – வரவு
    கன்னி –  உயர்வு
    துலாம் –  அமைதி    
    விருச்சிகம் – ஆக்கம் 
    தனுசு –     கோபம் 
    மகரம் –   முயற்சி
    கும்பம் – பெருமை  
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – பரணி, கார்த்திகை
     

  • Thirupathy 3 days dharshan Cancel

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3, 4 , 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான  கருட சேவை 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 

    இந்த கருட சேவையை காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் ,  புரட்டாசி மாதம் 3  சனிக்கிழமை அன்று தமிழக பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால்  3 , 4,  5 ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் பாதயாத்திரையாக  நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை மூலமாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசனம் டிக்கெட் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.