Blog

  • Karikalan Kattiya Koil

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    கரிகாற்சோழன்.
    இன்றும் உலகே வியக்கும் கல்லணையை
    அன்றே – முதலாம் நூற்றாண்டிலேயே
    கட்டிய மன்னன்.
    அகண்ட காவிரிக்குப் பெருமை சேர்த்த சோழ அரசன்.
    'சோழ வள நாடு சோறுடைத்து'
    என பெயர் படைக்க அரசாண்ட மாமன்னன்.
    இமயம் வரை படையெடுத்துச் சென்று
    வழிநெடுக நாடுபல வென்று
    இமயத்தில் புலிக்கொடி பறக்கவிட்ட
    புகழ்மிகு சக்கரவர்த்தி.

     கரிகாற் பெருவளத்தான் அப்போதுதான்
    இமயமலையிலிருந்து நாட்டிற்குத்
    திரும்பி கொண்டிருந்தான்.
    வடபுலத்திலும்
    வெற்றி வாகை சூடி வீரத்திருமகனாக !

     தஞ்சை நோக்கிய பயணத்தில்….
    இடையே திருவையாறு.
    சித்தர் பெருமான்களுக்கு பிரியமான ஊரு திருவையாறு.
    அந்த ஊர் முழுக்க ஆன்மீகக் சேறு.
    தெய்வீக மணம் கமழும் தேன்தமிழ்ப் பேரு.

     திருவையாறில்
    மன்னனின் தேர்ச்சக்கரம்
    மண்ணில் புதையுண்டது.
    எவ்வளவு முயன்றும்
    இம்மியளவும் இடம்பெயரவில்லை.

     போர் பல புரிந்து எதிரிகளை காலடியில் விழச் செய்த கரிகாலனின் வீரமிகு வீரர்கள்
    பிரம்ம பிரயத்தனம் செய்தும் தேர்க்காலை நகர்த்த முடியவில்லை.

     கரிகாலன் வியந்தான்.
    ஏதோ என்னவோ என மனம் குழம்பினான்.
    'இறைவன் மறைவாய் ஏதோ குறிப்பால் உணர்த்துகிறாரோ'
    அவன் மனதில் பட்டது.

    தேர் அடிவரை
    மண் அகற்றியும்
    தேர் நகர மறுக்க
    இன்னும் ஆழமாய்
    வெட்டிப் பார்த்தனர் சலிப்படையா
    சோழ வீரர்கள்.

     மன்னவன்
    மனதில் பட்டது சரிதான்.
    ஆழத்தில்
    ஒரு சிவலிங்கம்.
    கூடவே
    அம்மன், விநாயகர், முருகன், சத்தமாதங்கன்,
    சண்டர், சூரியன் முதலான
    தெய்வச் சிலைகள் புதையுண்டிருந்தன.

     புத்தம் புதிதாய்
    அப்போதுதான் வடித்தது போல் ஒளி சிந்தின.
    ஓடித் தேரடி பணிந்தான் ஒப்பிலா தமிழ் மன்னன்.
    வணங்கி மெய்சிலிர்த்தான்.

     சிலைகளைச்
    சிதைவுபடாமல் எடுக்கச் செய்தான்.
    கண்களால் ஒற்றினான். கண்ணீர் மல்கினான்.
    'என்னே என் பாக்கியம் !'

    சிலைகளை எல்லாம் எடுத்த பின்னர்
    மேலும் மண் பரப்பில் உற்றுப்பார்த்தான்.
    ஒரு முடியின் நுனி தென்பட்டது.
    அந்த முடியை லாவகமாய் எடுத்தான் முடிமன்னன்.

    நுனி முடி சடைமுடியாய் தொடர்ந்தது. முடிவில் சடாமுடியாய்…
    பயத்துடன் பார்த்தான்
    …..ஒரு ஜடாமுனி.

    முனிவர் நிஷ்டையில் இருந்தார்.
    கரிகாலன் மட்டுமல்ல பரிவாரமும் அவர் பாதம் விழுந்தது.

    மெல்லக் கண் விழித்த முனிவர் மெலிதாய் சொன்னார்..
    "மன்னா..
    தமிழ் போற்றும் பெரும் மன்னா…
    இச்சிலைகளைக் கொண்டு கோயில் ஒன்று அமைப்பாயாக…!
    குடமுழுக்கும் செய்வாயாக….!

     மூத்த சித்தர் நந்தீசரும்
    முப்பத்து முக்கோடி தேவர்களும் வழிபட்ட சிலைகள் இவை.
    இந்த மகாலிங்கத்தின் பூரண சக்தி பூமியில் பரவட்டும்.

    கோயில் கட்ட பெரும் பொருள் குவியல் இந்த நந்தியின் காலடியில் கிட்டும்."
    தேரடி முனிவர் வாழ்த்தினார்.

     ஓரடி தள்ளி
    திகைத்திருந்த மன்னன் மெய்மறந்தான்.
    முனிவர் தொடர்ந்தார்…

     "தமிழ் கூறும் நல்லுலகில் உன் பெயர் என்றும் நிலைத்திருக்கும்
    சோழ மன்னர்களில் உன் பெயர் எப்போதும் உயர்ந்திருக்கும்
    காவிரி உள்ளளவும்
    காவிரித் தாய் கருணை உள்ளளவும் உன் பெயர் நீங்காது நிலைத்திருக்கும்."
    வாழ்த்தினார் மகாமுனி.

     "இதோ… உனக்கு என் அன்பு பரிசு"
    தண்டம் ஒன்றை கரிகாலனிடம் வழங்கி
    ஒளி போல் பெருகி கணத்தில் மறைந்தார் இறை போலிருந்த
    அந்த சித்தர்.

     அந்த தண்டம் எவராலும் வெல்ல முடியாத ஆயுதம்.
    சித்தர் பிரான் அருளிய சீர்மிகு போர்த்தண்டம்.
    உடனடியாக அதுபோதே
    சித்தர் வாக்கை செயலாக்க கோயில் பணி துவக்கினான் கரிகாலன்.

     போரில் கிட்டாத பூரிப்பு.. வெற்றியில் எட்டாத செருக்கு …
    கோயில் கட்டுவதில் கிட்டிற்று அவனுக்கு.

    அற்புதமான கோயில்.. அதன் பெயர் 'அய்யாரப்பன் கோயில்'
    அமைந்த இடம்
    தேர் புதையுண்ட
    அதே திருவையாறு.

    திருக்கோயிலின்
    இன்றைய பெயர் 'திருவையாறு அருள்மிகு பஞ்ச நந்தீஸ்வரர் என்னும் அய்யாரப்பன் கோயில்'.

    எல்லாம் சரியப்பா …..!
    வந்த சித்தர் யாரப்பா…?
    அருள்தந்த
    அம்முனி யாரப்பா…..?
    கரிகாலன் பெயர் விளங்கச் செய்த
    சித்தர் பிரான் பெயர் என்னப்பா… ..?

    அந்த சித்தர் தான்
    அகிலம் வணங்கும் அகப்பேய்ச் சித்தர்…
    அகப்பைச் சித்தர்
    என்றும் அவரை அழைப்பர்.
    நிய மேசர் என்ற
    தவப் பெயரும்
    அவருக்கு உண்டு.

     அவர் அருளிய பாடல்களின் இறுதியில்
    அகப்பேய் என வருவதால் அகப்பேய் சித்தர் என அழைத்து
    சித்தர் உலகம்
    தலைமேல் வைத்து
    கொண்டாடி வருகிறது.

  • October 1 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – பிரீதி 
    மிதுனம் – நலம்   
    கடனம் – வெற்றி
    சிம்மம் – ஓய்வு
    கன்னி –  ஆர்வம் 
    துலாம் –  களிப்பு    
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு –     பகை
    மகரம் –   சிந்தனை  
    கும்பம் – மேன்மை 
    மீனம் – ஊக்கம் 
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி

  • October 1 Indraya Naal Eppadi

    அக்டோபர் 1 – இன்றைய நாள் எப்படி?
    விகாரி வருடம் – புரட்டாசி 14
    01-அக்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    மா    6.38
    நட்சத்திரம்    :    சுவாதி    இ    7.26
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Navarathiri Vizha in Shakthi Online

    நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி பார்த்துப்பார்த்து செய்யப்பட்ட அலங்காரம் உலகம் முழுவதும் சென்றடைய வேண்டுமா?…. இதோ ஒரு வாய்ப்பு…..

     சக்தி ஆன்லைன் வெப்சைட்டில் உங்கள் வீட்டு கொலு அலங்கார காட்சிகள் வர நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவுதான்…. உங்கள் வீட்டு நவராத்திரி கொலு அலங்காரத்தின் இரண்டு போட்டோ மற்றும் உங்களை பற்றிய சிறு குறிப்பை எங்களுக்கு அனுப்புங்கள். அவ்வளவுதான். உங்கள் போட்டோவை அனுப்ப வேண்டிய வாட்ஸ் ஆப் எண் :   +91-63807-00085.

  • Thirupathy Ezhumalayan Koil Bramorchavam Kodiyetram

    திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மகா விஷ்ணுவின் வாகனமான கருடன் உருவம் வரையப்பட்ட மஞ்சள் கொடியை மலையப்ப சுவாமி தயார்கள், சக்கரத்தாழ்வார், விஷ்வ சேனாதிபதி, ஆகியோர் நான்கு மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். 

    ஊர்வலத்தில் பக்தர்கள் கோலட்டம் பஜனைகள் செய்தபடி பங்கேற்றனர்.  பின்னர் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தயார்களுடன்  மலையப்ப சுவாமி முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுங்க கருட கொடியை  கொடிமரத்தில் ஏற்றினர். 

    இந்த பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டதின் மூலம்  சகல தேவதைகளையும் அஷ்டதிக் பாலகர்களான பூத, பேரேதா, யக்சா, ராக்‌ஷச, கந்தர்வ குணத்திற்கு இதன் மூலம் அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை ஏற்று முக்கோட்டி தேவதைகள் வந்து சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தை காண்பதாக ஐதீகம்.

  • Thiruthani Navaraathiri Vizha

    முருகன் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழாவில் கிளி வாகனத்தில் கஜவள்ளி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    ஆறுபடை வீடுகளில் 5 ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயில் நவராத்திரி விழா தொடங்கியது. முன்னதாக, கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் கஜலட்சுமி அம்மையார் சிறப்பு அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. 

    நவராத்திரி விழாவில் 100க்கும்மேற்பட்ட கொலு பொம்மைகள் வகைக்கப்பட்டிருந்தன. நவராத்திரி விழாவை முருகன் கோயில் இணை ஆணையர் பழனி குமார், தக்கார் வே.ஜெய்சங்கர் துவக்கி வைத்தார். இந்த விழா, வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும், மாலை, 6.30 மணிக்கு ஊற்சவர் கஜலட்சுமி அம்மன் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

    இதே போல், திருத்தணி, சேகர்வர்மா நகர் சக்தி வினாயகர், மடம் கிராமத்தில் உள்ள வன துர்க்கையம்மன், ஆறுமுக சுவாமி கோயில் தெருவில் தணிகை மீனாட்சி அம்மன், பழைய பஜார் தெரு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோயில்களிலும் நவராத்திரி விழா இன்று துவங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை, மாலை 6.30 மணிக்கு கொலு பொம்மைகளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறுகிறது.

  • October month predictions – Meenam

    (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

    புதுமையான சிந்தனைகளும், சிறந்த கற்பனையாற்றலும் உடைய மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி கிடைக்கும். கோபம் அகலும். சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. உடல் நலம் பெறும். பூர்வ புண்ணிய சொத்துக்களும் அதனால் வரக்கூடிய தனலாபங்களும் உங்கள் தகுதியை உயர்த்தும். வெகுகாலம் தீராத பிரச்னைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வை தரும். 

    ராசிநாதனும் தொழில் ஸ்தானதிபதியுமான குரு ராசியைப் பார்க்கிறார். தனபாக்கியாதிபதி செவ்வாயும் ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

    குடும்பாதிபதி செவ்வாய் சூரியனுடன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கலாம் கவனம் தேவை.  பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும்.

    பெண்கள் வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.

    கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். அனுகூலமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். 

    மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.

    பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும். 
    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29
    அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21

    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • October month predictions – Kumbam

    (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    புதிய இடங்களில் திறமைகளை வெளிப்படுத்த தயங்கும் குணமுடைய கும்பராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனிபகவானின் சஞ்சாரத்தால் விரும்பாத இடமாற்றம்  உண்டாகலாம். குறிக்கோள் இன்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மைதரும். 

    தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் தொழில், வியாபாரத்தில்  தடங்கல்கள் அகலும். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள்.  அவர்களால் நன்மையும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள்.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். சிலருக்கு குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

    குடும்பாதிபதி குருவின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும்.  வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். 

    பெண்கள்  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன் செயல்படுவது நல்லது.

    கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

    அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

    பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
    அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

     

  • October month predictions – Maharam

    (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

    எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமான முடிவுடன் எந்த வேலையையும் செய்து முடிக்கும் திறமை உடைய மகர ராசியினரே இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சனிபகவான் விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    தொழில் ஸ்தானாதிபதி சுக்ரன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும்.

    ராசிநாதனும் குடும்பாதிபதியுமாகிய சனிபகவானின் சஞ்சாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது.  பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை.

    பெண்கள் உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. வீண்பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மைதரும்.

    கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம்.

    அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.     

    மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

    பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.
    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
    அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542

  • October month predictions – Dhanusu

    (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

    தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய தனுசு ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் குருவின் சஞ்சாரத்தால் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். ராசியை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்ப்பதால் இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். 

    தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

    குடும்பாதிபதி சனிபகவான் ராசியில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.

    பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.

    கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 

    அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். 

    மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.

    பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23
    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13, 14
    – பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் 
    Mobile : +91 7845119542