Blog

  • Vallar Kolgaigal

    கடவுள் ஒருவரே. 

    அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர். 

    புலால் உணவு உண்ணக்கூடாது. 

    எந்த உயிரையும் கொல்லக்கூடாது. 

    சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது. 

    இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும். 

    எதிலும் பொது நோக்கம் வேண்டும். 

    பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும். 

    சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது. 

    எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.

    வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

    நல்லோர் மனதை நடுங்க செய்யாதே. 

    தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே. 

    மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே. 

    ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே. 

    பொருளை இச்சித்து பொய் சொல்லாதே. 

    பசித்தோர் முகத்தைப் பாராதிராதே. 

    இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே. 

    குருவை வணங்கக் கூசி நிற்காதே. 

    வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே 

    தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.
     

  • Vallar Birth Day

    வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் பிறந்தார்.

    மக்களின் மிகுந்த துயரங்களுள் ஒன்றான பசியை போக்கிட வள்ளலார் வழி வகுத்தார். இன்றளவும் வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் பசியாற்றுகிறார்கள்.

    தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.

    இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
     

  • October 5 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – சினம் 
    ரிஷபம் – மேன்மை 
    மிதுனம் – சாந்தம் 
    கடனம் – முயற்சி
    சிம்மம் – செலவு 
    கன்னி –  சுகம் 
    துலாம் –  போட்டி 
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –     குரோதம் 
    மகரம் –   எதிர்ப்பு  
    கும்பம் – கவனம்  
    மீனம் – உயர்வு
    சந்திராஷ்டமம்    – ரோகிணி, மிருகசீரிடம்
     

  • October 5 Indraya Naal Eppadi

    அக்டோபர் 5 இன்றைய நல்ல நேரம் 
    விகாரி வருடம் – புரட்டாசி 18
    05-அக்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    ம    3.12
    நட்சத்திரம்    :    மூலம்    மா    6.54
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Ayudha Poojai Sami Kumbida Nalla Neram

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம். 

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். 

    ஆயுதபூஜையின் ஐதீகம் ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது. 

  • Durga Lakshmi Saraswathi En?

    சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்றுதான் வரும். ஆனால் நவராத்திரியின்போது மட்டும் ஏன் இந்த முறை மாற்றமடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்று வருகிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. 

    துர்க்கையே முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள். நவராத்திரியின்போது துர்க்கையை முதலில் பூஜிக்கிறோம் என்பதுதான் காரணம். துர்க்கா பூஜை ராத்திரிக்கு அதிதேவதை துர்க்கை. அகத்தையும், புறத்தையும் அழகுப்படுத்தித் தூய்மைப்படுத்துவதற்காக துர்க்கை முதலில் வருகிறாள். முதல் ராத்திரியின்போது மலர்களால் துர்க்கையை அலங்கரித்து வழிபட்டால் சர்வமங்கள ரூபிணியாக அவள் நமது கிரகத்தில் கொலு வீற்றிருப்பாள். 

    இரண்டாவது ராத்தியின்போது ஆபரணங்களை அவளுக்கு அணிவித்தால் சர்வபூர்ண பூஜிதமாக அருள் பாலிப்பாள். மூன்றாவது ராத்திரியின்போது முதலில் செய்வித்த பூஜைகளுக்கு மகிழ்ந்து ஞானத்தை நமக்கு அளிக்கிறாள். மகாலட்சுமி பூஜை முதல் மூன்று நாட்களிலும் மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் துர்க்கையிடமிருந்து பெறும் நாம், அடுத்த மூன்று நாட்களிலும், மகாலட்சுமியை பூஜிக்க வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை நான்காவது நாளில் இருந்து பூஜிக்கின்றனர். அன்னைக்கு பாசம் அதிகம். 

    அதனால் என்னை பூஜிப்பவர்களை எப்போதும் கைவிட மாட்டேன் என்று கூறுகிறாள். பஞ்சபூதங்களுக்கும் மரியாதை ஐந்தாவது நாளில் பூஜிப்பதால் சகல சவுபாக்கியங்களும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பஞ்ச பூதங்கள் நம்மை சரிவர நடத்தும். ஆறாவது நாளில் அறுசுவையுடன் அல்லாது போனாலும், பசியின்றி இருக்க உணவு கிடைக்கும் வண்ணம் நம்மை மகாலட்சுமி காத்தருளுவாள். 

    இந்த ஆறு நாட்களும் முடிந்த பிறகு வித்தைக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதிக்கு பூஜை ஏழாவது நாளில் நாதஸ்வரூபமாக எழுந்தருளும் கலைவாணி நமக்கு வினயத்தைத் தந்தருளுகிறாள். எட்டாவது நாளில் வாழ்க்கையில் எட்டாததையும் எட்டச் செய்து நமக்கு ஏற்றத்தை அளிக்கிறாள் அன்னை. ஒன்பதாவது நாளில் அழியாத தன்மையைத் தருகிறாள். செல்வம் அழிந்தாலும் கற்ற வித்தை அழியாது என்பதை உணர்த்துகிறாள் தேவி சரஸ்வதி. வெற்றி தரும் விஜயதசமி பத்தாவது நாள் விஜயதசமி. 

    விஜயம் என்றாலே வெற்றி! தீயவை அழிந்து நன்மை பெருகும். நாம் தொடங்கும் காரியம் வெற்றி பெறும் என்பதற்காகவே விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற இம்மூவரையும் பூஜிப்பவர்களுக்கு எதிலும் நலம்பெறும் வகையில் வெற்றி கிடைக்கும். 
     

  • Ayudha Poojai Sami Kumbida Nalla Neram

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. ஆயுதபூஜை நாளில் வாகனங்களுக்கு பூஜை போடவும், சரஸ்வதி பூஜைக்கான ஆயத்தங்களையும் செய்ய எது நல்ல நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

    நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், கம்ப்யூட்டர், அக்கவுன்ட்ஸ் புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை இந்தியாவில் காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாள் சரஸ்வதி பூஜை. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே ஆயுதபூஜையின் ஐதீகம். 

    சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை புரட்டாசி 20ஆம் தேதி அக்டோபர் 7 திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. அஷ்டமி முடிந்து நவமி திதி அக்டோபர் 6ஆம் தேதி 10.54 மணிக்கு தொடங்குகிறது. அக்டோபர் 7ஆம் தேதி 12.38 மணிக்கு நவமி திதி முடிவடைகிறது. ஆயுதபூஜை செய்ய நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணிவரை காலை 9 மணி முதல் 9.30 வரை பகல் 12.10 மணிவரை 12.35 மணிவரை பூஜை செய்யலாம். 

    ஆயுதபூஜையின் ஐதீகம் ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நீக்கமறை நிறைந்திருக்கிறான் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுதபஜை கொண்டாடப்படுகிறது. 
     

  • Ayya Vaikundar Bramorchavam Video

    சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சென்னை அடுத்து மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு புரட்டாசி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் அதனையொட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

    இன்று பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் விழா நடைபெற்றது முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பூ , பால் , பழம் , இளநீர் , ஜவ்வாது , சந்தனம் , துளசி உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் பத்தாவது நாளான வருகிற 13 ஆம் தேதி தேர்பவனி நடைபெற இருக்கிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வந்தனர் ஐயா உண்டு ஐயா நாமம் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பி கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
     

  • Kamakshi Karunai Petren

    பிரபல பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களால் வாழ்வில் நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்தித்த ஒருவரின் நன்றிக் கடிதம்..

    மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, 

    முரளிதரன் எழுதிக் கொள்வது… வணக்கம், எங்களுடைய ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க வைத்தோம். நல்லா படித்துக் கொண்டிருந்த எனது மகன் சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாதை மாறிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் நான் தங்களை சந்தித்தேன்.

    நீங்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி இருக்கிறதா என்று கேட்டீர்கள். அதுவும் (பல வருடங்களுக்கு முன்) நீங்கள் கேட்கும்போது எனக்கு  நினைவுக்கு வரவில்லை. 1 வாரம் கழித்து உங்களை போனில் தொடர்பு கொண்டு நான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை கூறினேன்.

    எங்கள் சொந்த ஊர் மதுரை. நான் ரொம்ப நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்த போது, வேலை கிடைத்தால் மீனாட்சி அம்மனுக்கு என்னுடைய ஒரு மாத சம்பளம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டினேன். நீங்கள் உடனே அந்த காணிக்கையை செலுத்திவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறினீர்கள். அப்போது என்னுடைய சம்பளம் ரூ.150/- மட்டும். இன்று என்னுடைய சம்பளம் ரூ.15,000/-. இதை நான் உங்களிடம் கேட்கும் போது 21 வருடங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதை வட்டியும், முதலுமாக செலுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினீர்கள். நானும் 2 மாதங்கள் கழித்து செலுத்திவிட்டேன்.

    என்ன ஆச்சர்யம், இந்த காணிக்கையை செலுத்துவதற்கு முன்பே என் மகனிடம் நல்ல மாற்றங்களை பார்த்தேன். இன்று என் பையன் வடநாட்டில் தனியார் தொலைக்காட்சியில் நல்ல பதவியில் இருக்கிறார். என்னுடைய மகனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த தங்களுக்கும், நீங்கள் வணங்கும் காமாட்சிக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீனாட்சிக்கு நான் வேண்டிக்கொண்டதை காமாட்சி நினைவுபடுத்தி என்னுடைய இன்னல்களை போக்கி வைத்தார்.

    நன்றி…

    இப்படிக்கு முரளிதரன்.

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

  • Kamakshi Amman Karunai Petren

    மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு, 

    முரளிதரன் எழுதிக் கொள்வது… வணக்கம், எங்களுடைய ஒரே மகனை மிகவும் சிரமப்பட்டு விஷ்வல் கம்யூனிகேஷன் படிப்பு படிக்க வைத்தோம். நல்லா படித்துக் கொண்டிருந்த எனது மகன் சில கெட்ட நண்பர்களின் சகவாசத்தால் பாதை மாறிப் போய்விட்டான். இந்த நிலையில்தான் நான் தங்களை சந்தித்தேன்.

    நீங்கள் ஜாதகத்தை பார்த்துவிட்டு என்னிடம் ஒரு கேள்வியை கேட்டீர்கள். நீங்கள் ஏதேனும் தெய்வத்திற்கு வேண்டுதல் பாக்கி இருக்கிறதா என்று கேட்டீர்கள். அதுவும் (பல வருடங்களுக்கு முன்) நீங்கள் கேட்கும்போது எனக்கு  நினைவுக்கு வரவில்லை. 1 வாரம் கழித்து உங்களை போனில் தொடர்பு கொண்டு நான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை கூறினேன்.

    எங்கள் சொந்த ஊர் மதுரை. நான் ரொம்ப நாட்களாக வேலை கிடைக்காமல் இருந்த போது, வேலை கிடைத்தால் மீனாட்சி அம்மனுக்கு என்னுடைய ஒரு மாத சம்பளம் காணிக்கையாக செலுத்துவதாக வேண்டினேன். நீங்கள் உடனே அந்த காணிக்கையை செலுத்திவிட்டு என்னை வந்து சந்திக்குமாறு கூறினீர்கள். அப்போது என்னுடைய சம்பளம் ரூ.150/- மட்டும். இன்று என்னுடைய சம்பளம் ரூ.15,000/-. இதை நான் உங்களிடம் கேட்கும் போது 21 வருடங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதை வட்டியும், முதலுமாக செலுத்த வேண்டும் என்று மிகவும் திட்டவட்டமாகக் கூறினீர்கள். நானும் 2 மாதங்கள் கழித்து செலுத்திவிட்டேன்.

    என்ன ஆச்சர்யம், இந்த காணிக்கையை செலுத்துவதற்கு முன்பே என் மகனிடம் நல்ல மாற்றங்களை பார்த்தேன். இன்று என் பையன் வடநாட்டில் தனியார் தொலைக்காட்சியில் நல்ல பதவியில் இருக்கிறார். என்னுடைய மகனின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்த தங்களுக்கும், நீங்கள் வணங்கும் காமாட்சிக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மீனாட்சிக்கு நான் வேண்டிக்கொண்டதை காமாட்சி நினைவுபடுத்தி என்னுடைய இன்னல்களை போக்கி வைத்தார்.

    நன்றி…

    இப்படிக்கு முரளிதரன்.

     

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257