Blog

  • October 7 Saraswathi poojai

    அக்டோபர் 7 – சரஸ்வதி, ஆயுத பூஜை 
    விகாரி வருடம் – புரட்டாசி 20
    சரஸ்வதி, ஆயுத பூஜை (நல்ல நேரம் காலை 9.00 – 10.00 மணி), திருப்பதியில் தேர்
    07-அக்-2019 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    மா    4.25
    நட்சத்திரம்    :    உத்திராடம்    இ    9.31
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Thiruvoona Homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 08.10.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தை முன்னிட்டு திருவோண ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரி தைலாபிஷேகம், மற்றும் திருவோண நக்ஷத்திர விருட்ச பூஜை நடைபெற உள்ளது.

    மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத்தில்தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. திருவோண நக்ஷத்திரதன்று பெருமாளை வேண்டி நடைபெறும் யாக பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும். வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி அதிகரிக்கும், வசதிகள் பெருகும், செல்வ வளம் பெருகும். மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. மேலும் நக்ஷத்திர தோஷங்கள் நிவர்த்தியாகும்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருவோண நக்ஷத்திரத்தில் நடைபெறும் ஹோமத்திலும், அபிஷேக ஆராதனைகளிலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Navarathiri Poojai Muraigal

    நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

    சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

    இந்நாளில் மஹா கணபதி பூஜையுடன் தொடங்கி கலச பூஜை செய்து, துர்கையை தியானம் செய்து கலசத்தில் ஆவாஹனம் செய்து துர்கா அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம். மஹிஷாஸுரமர்த்தினி ம‌ந்‌திர‌ம் பாராயணம் செய்யலாம்.

    மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி மந்திரம் இதோ ……
    ஓம்ஹிரீம் ஐம்ஹிரீம் சரஸ்வத்யை நமஹ.
     

  • Saraswathi Poojai Nalla Neram

    கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும். நாளை அக்டோபர் 7 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.

    ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள், புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

    இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    ஆயுதபூஜைக்கு நாளை பூஜைக்கான நேரம்:
    மகாநவமியாக அமைந்து மிகச் சிறப்பான நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
    சரஸ்வதி தேவியின் புகைப்படத்தை வைத்து அதன் முன் நாம் அன்றாட வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    பூஜை செய்ய காலை 9:00 – 10:00 மணிக்குள் அவல், பொரி, சுண்டல் படைத்து பூஜித்தல் மிகவும் சிறப்பானது.

    அதே போல் அன்றைய நல்ல நேரம் காலை 6.15 – 7.15 மணி வரையும்

    மாலை 4.45 முதல் 5.45 மணி வரை நல்ல நேரமாக அமைந்துள்ளது.

    இந்த நேரத்தில் பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.
     

  • Durgastami

    மாதம்தோறும் வரும் அஷ்டமி திதியில் துர்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். புரட்டாசி மாதம் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்காஷ்டமி என்றே அழைக்கப்படுகிறது. மறுநாள் வரும் நவமி, மகா நவமியாகப் போற்றப்படுகிறது.

    துர்காஷ்டமி நாளில், ராகுகால வேளையில் ஆலயங்களில் உள்ள துர்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நவராத்திரியின் எட்டாவது நாளில் துர்காஷ்டமி வருவதால், வீட்டிலும் துர்கை அம்மனை வழிபடலாம். 

    வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருள்களை வழங்கினால், துர்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
     

  • October 6 Rasi palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – அச்சம் 
    ரிஷபம் – சுகம் 
    மிதுனம் – ஆக்கம் 
    கடனம் – சலனம் 
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி –  சிரமம் 
    துலாம் –  ஊக்கம் 
    விருச்சிகம் – நலம் 
    தனுசு –     சுபம் 
    மகரம் –   இரக்கம் 
    கும்பம் – ஜெயம் 
    மீனம் – புகழ்
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம், திருவாதிரை
     

  • October 6 Durgastami

    அக்டோபர் 6 – துர்காஷ்டமி 
    விகாரி வருடம் – புரட்டாசி 19
    06-அக்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    ம    3.34
    நட்சத்திரம்    :    பூராடம்    இ    8.00
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Perumal Grapes Alangaram

    சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டு பழமை வாய்ந்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

    மூலவர் கல்யாணவரதராஜ பெருமாளுக்கு விதவிதமான வண்ண மலர்களால் பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

    இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் பட்டாடை உடுத்தி அலங்காரப் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலர் திராட்சை மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    புரட்டாசி மாதம் நான்கு வாரங்களிலும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் விதவிதமான பழங்களிலும் பருப்பு வகைகளிலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு வருவதனால் ஆண்டுதோறும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வீடுகளில் பூஜை செய்து பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நடைமுறையில் ஒன்று இதனை அடுத்து மூன்றாவது வாரமான புரட்டாசி சனிக்கிழமையில் காலை முதலே கோவிலில் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது நவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும் நிலையில் ஆயுத பூஜை விஜயதசமி தொடர் விடுமுறை தினமான சனிக்கிழமை ஆன இன்று  அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
     

  • 38 Lakhs Gajalakshmi alangaram

    திருவண்ணாமலை மாவட்டாம் ஆரணி கைலாசநாதர் கோவிலில் இன்று நவராத்திரி 6வது நாளை முன்னிட்டு கஜலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது. 

    இந்த அலங்காரத்தில்  38 லட்ச ரூபாய் பணம் மற்றும் 150 சவரன் தங்க நகையால் சுவாமியை அலங்காரம் செய்து வழிபட்டனர். ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்..

  • Vallalar Ramlingam

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    மருதூர் என்றொரு சிற்றூர்.
    அவ்வூரில் ஒரு கணக்குப்பிள்ளை.பெயர் இராமையா பிள்ளை.
    மனைவி சின்னம்மை. சின்னகாவனம் சொந்த ஊர்.
    இராமையா பிள்ளைக்கு சின்னம்மை ஆறாவது மனைவி.
    முன்னவர் ஐந்துபேரும் மக்கட் பேறின்றி ஏதேதோ நோய்களால் மரணித்துப் போயினர்.
    சிவபக்தையான சின்னம்மை ஆறாவதாய் மனைநிறைத்தார்.

    ஒருநாள் சிவ அம்சத்தோடு சிவனடியார் ஒருவர் வாசலில் நிற்க ஓடிப்போய் தாழ் பணிந்தார் சின்னம்மை.
    உள் அழைத்து உள்ளன்போடு உபசரித்தார்.
    உபசரித்தலும் உணவிடுதலும் புண்ணியங்களில் உயர்ந்தவை.
    புறப்படும் தருணம் சிவனடியார் "உனக்கோர் ஞான மகன் பிறப்பான். உன்னைப்போல் அவன் பிறருக்குப் பசி தீர்ப்பான். ஊருக்கு மட்டுமல்ல; உலகுக்கே பசி தீர்ப்பான்.
    உலகம் போற்றும் இறையாய் ஒளிர்வான்" என்றபடி ஆசி தந்தார்.

    விடைபெற்று  வீதி வந்தவர் வீடு விலகி தெருக்கோடி வரை நடந்து போய் மாயமாய் மறைந்து போனார்.
     அவர் வேறு யாருமல்ல..!
     எல்லாம்வல்ல ஆதிநாதன் சிவபெருமானே..!
    கடவுளின் அருளால் கருத்தரித்த சின்னம்மை உரிய நாளில் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தார்.
    இல்லையில்லை….
    கடவுளின் அருளால் கருக்கொண்ட குழந்தை உரிய நாளில் உலகில் அவதரித்தது.

    ஐந்தாம் மாதம்.
    குழந்தையை நடராஜ தரிசனத்திற்கு சிதம்பரம் எடுத்துச்சென்றனர் பெற்றோர்.
    கோயில் அர்ச்சகர் அப்பைய தீட்சிதர் ஆற்றலும் அனுபவமும் கொண்டவர்.
    அவர் கோயிலில் திரையைத் தூக்கினார்.
    எல்லோரும் கைகளைச் சிரம் மேல் தூக்கி பக்தி பரவசத்தில் கன்னங்களில் ஒற்றிக் கொண்டிருந்தபோது… தாயின் தோளையும் முந்தானையையும் பற்றிக்கொண்டிருந்த பிள்ளை பொக்கை வாய் விரித்து அம்பலவாணரின் திக்கைப் பார்த்துச்சிரித்துக் கொண்டிருந்தது.

    சிதம்பர ரகசியம் தரிசனம் ஆயிற்று ஞான குழந்தைக்கு.
    அப்பைய தீட்சிதர் குழந்தையைக் கவனித்தார். ஓடோடி வந்தார்.
    அவரது சிவ அனுபவம் பேசிற்று. 
    "பிள்ளைவாள்…. இது ஏதோ சாதாரண குழந்தை அல்ல. இது தெய்வக் குழந்தை. ஞானக்குழந்தை.
     இறைவனுக்குத் தீபம் காட்டியபோது அங்கிருந்தபடி குழந்தையைப் பார்த்தேன்.
    அடாடா ….அப்படி ஒரு பேரொளி….!
    குழந்தையின் முகத்தில் சாட்சாத் அம்பலவாணரையே தரிசனம் கண்டேன்.
    குழந்தையைப் பத்திரமாய் வளர்ப்பது உங்கள் பொறுப்பு.
    அம்மா… நீ பாக்கியசாலி. கவனம்…. கவனம்"

    சின்னகாவன திருவாட்டியோடு மகிழ்வோடு புறப்பட்டார் இராமையா பிள்ளை மருதூருக்கு.
    அவர்கள் கோயில் சுற்றி வந்தபோது கோயிலின் வாசலில் அப்பைய தீட்சிதர் காத்திருந்தார்.
    "இன்று குழந்தையோடு எனது இல்லத்திற்கு தயவுகூர்ந்து வாருங்கள்.
    எனது வீட்டில் உங்களுக்கு மதிய உணவு. உணவு விருந்தாய் காத்திருக்கிறது.
    உலகுக்கே உணவளிக்கப் போகிறவனுக்கு அவன் சின்னஞ்சிறு வாயில் உணவு ஊட்டிய புண்ணியம் எங்கள் குலத்திற்கு கிடைக்கட்டும்".
    இன்னும் ஏதேதோ சொன்னார். அவை இறையும் மறையும் அவருக்கு உணர்த்திய வார்த்தைகள்.

    இறையருளால் அவதரித்த குழந்தை, இறை தரிசனம் கண்ட குழந்தை..தவழ்ந்தது…. நடந்தது…..வளர்ந்தது….
    குழந்தையைப் பார்க்க வரும் உற்றாரும் உறவினரும் ஒன்றை உணர்ந்தனர்.
    பார்த்துவிட்டுத் திரும்பிய மாத்திரத்தில் ஆகாத காரியங்கள் எல்லாம் ஆகத் தொடங்கின.
    அவர்கள் அகமகிழ்ந்து குழந்தையை 'குழந்தை வடிவில் தோன்றிய குமரன்' என்று கொண்டாடினர்.

    அந்த குழந்தை யார் என அறிய முடிகிறதா ?
    உடுத்ததற்கு கோவணம். உண்பதற்கு காய்கறிகள். உறங்குவதற்கு சுடுகாடு.குடிப்பதற்கு ஆற்றுநீர்.
    தலையில் சடைமுடி. முகத்தில் நீண்ட தாடி. கழுவாத உடல். கந்தல் உடை. 
    தங்குதல் வெட்டவெளி. தவமிருத்தல் இருண்ட குகை. சிந்தை எல்லாம் சிவமயம். சித்தி ஒன்றே மன விருப்பம்.

    இடையிடையே உலகம் உய்ய மறைபொருளாய் ஞானப்பாக்கள். பரிபாஷையில் சித்த மருத்துவம்.அள்ளித்தரும் அருளாற்றல்.
    இவையாவும் சித்தர்களின் இலக்கணமாய் மக்கள் மனதில் இருக்கும் பதிவு.
    அப்பதிவில் பெரிய மாற்றம் தந்தது பின்னாளில் அந்த ஞானக் குழந்தை.

    கருணை முகம். கனிந்த கரங்கள். பணிந்த பாதங்கள். இவை தவிர ஏதும் தெரியா வண்ணம் தூய வெண்ணிற ஆடை. உடுத்துவதில் மட்டுமின்றி உண்ணுவதிலும் உறங்குவதிலும் உடலைப் பேணுவதிலும் இறையருள் பெறுவதிலும் இலக்கணம் வகுத்து இலக்கணமாய் வாழ்ந்து நிறைஞானியாய் மிளிர்ந்தது அக்குழந்தை.

    அந்த ஞானக் குழந்தையே ஜோதி கண்ட பெருஞ்ஜோதி கண்ட, அருட்பெருஞ்ஜோதி கண்ட  வள்ளல் பிரான்.

    அவரது திருநாமம் இராமலிங்கம். பெற்றோர் வைத்த பெயர் இராமலிங்கம். உற்றார் ஊரார் அழைத்த பெயர் ராமலிங்கன். ஆன்றோர் சான்றோர் போற்றிய பெயர் இராமலிங்க அடிகள். கையொப்பத்தில் ஒளிர்ந்த பெயர் சிதம்பரம் இராமலிங்கம். ஆன்மீகம் வணங்கிய பெயர் இராமலிங்க வள்ளலார். சன்மார்க்கம் முதலாய் உலகே துதிக்கும் பெயர்திரு அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார்.

    வள்ளலார் அவதரித்த நாள் அக்டோபர் 5…வருடம் 1823.