Perumal Grapes Alangaram

சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டு பழமை வாய்ந்த காலடிப்பேட்டை கல்யாண வரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது வார சனிக்கிழமை பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.

மூலவர் கல்யாணவரதராஜ பெருமாளுக்கு விதவிதமான வண்ண மலர்களால் பிரமாண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

இதனையடுத்து உற்சவர் பவழ வண்ண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களுடன் பட்டாடை உடுத்தி அலங்காரப் பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட உலர் திராட்சை மாலைகள் அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புரட்டாசி மாதம் நான்கு வாரங்களிலும் கல்யாண வரதராஜப் பெருமாள் கோவிலில் விதவிதமான பழங்களிலும் பருப்பு வகைகளிலும் மாலைகள் அணிவிக்கப்பட்டு வருவதனால் ஆண்டுதோறும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் வீடுகளில் பூஜை செய்து பின்னர் கோவிலுக்கு சென்று வழிபடுவது நடைமுறையில் ஒன்று இதனை அடுத்து மூன்றாவது வாரமான புரட்டாசி சனிக்கிழமையில் காலை முதலே கோவிலில் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளது நவராத்திரி பூஜைகள் நிறைவு பெறும் நிலையில் ஆயுத பூஜை விஜயதசமி தொடர் விடுமுறை தினமான சனிக்கிழமை ஆன இன்று  அதிகாலை முதலே கோவில்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *