இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – விருத்தி
ரிஷபம் – நலம்
மிதுனம் – ஓய்வு
கடனம் – சிரமம்
சிம்மம் – லாபம்
கன்னி – நட்பு
துலாம் – பக்தி
விருச்சிகம் – நன்மை
தனுசு – வெற்றி
மகரம் – களிப்பு
கும்பம் – சோர்வு
மீனம் – போட்டி
சந்திராஷ்டமம் – மகம்
Blog
-
October 10 Rasi Palan
-
October 10 Indrya Naal
அக்டோபர் 10 – இன்றைய நாள் எப்படி?
விகாரி வருடம் – புரட்டாசி 23
10-அக்-2019 வியாழன்
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : துவாதசி
திதி நேரம் : துவாதசி இ 9.21
நட்சத்திரம் : சதயம் மா 4.15
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
Thirupathy Dharshan
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்ற 8 நாட்களில் 7 லட்சத்து 7,737 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் மூலவரை 5 லட்சத்து 90,584 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 7 லட்சத்து 7737 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 20.40 கோடி காணிக்கை செலுத்தினர்.
பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதால் 34 லட்சத்து 1384 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
18 மாநிலங்களை சேர்ந்த 357 கலைக்குழுவினர் 8210 பேர் சுவாமி வீதி உலாவின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதே போன்று அடுத்த ஆண்டு 25 மாநிலங்களில் இருந்து பக்தர்களை வரவழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Thirupathy Divaya Daharshan
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்ட திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
புரட்டாசி மாதத்தை ஒட்டி நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில் கடந்த 3 ம் தேதி முதல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசனம் டிக்கெட்கள் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இந்நிலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையடுத்து பக்தர்கள் கூட்டம் தற்போது குறைந்துள்ளதால் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Thiruparnkundram Ambu podum vizha
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நவராத்திரி 10 நாள் திருவிழாவாக பசுமலையில் அம்பு போடும் விழா நடைபெற்றது,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி தெய்வானையுடன் மாலை 6 மணிக்கு சர்வ அலங்காரத்தில் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அங்கு யாகம் வளர்க்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை,புன்னியவாசனம், பாசுபதஸ்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணி மரத்தடியில் பால், எண்ணை உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து எட்டு திக்கும் பலி கொடுக்கப்பட்டு, சுவாமி பாதத்தில் வில் அம்பு வைக்கப்பட்டு நான்கு திசைகள் மற்றும் மேல் நோக்கி அம்பு போடப்பட்டது.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். சுப்பிரமணிய சுவாமிக்கு வழி எங்கிலும் திருக்கண் அமைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
-
October 9 Rasi Palan
இன்றைய ராசி பலன்கள்
மேஷம் – ஜெயம்
ரிஷபம் – பாராட்டு
மிதுனம் – கவனம்
கடனம் – நிம்மதி
சிம்மம் – அன்பு
கன்னி – தடங்கல்
துலாம் – ஆதாயம்
விருச்சிகம் – அமைதி
தனுசு – செலவு
மகரம் – பெருமை
கும்பம் – பரிவு
மீனம் – உற்சாகம்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம்
-
October 9 Indraya Naal Eppadi
அக்டோபர் 9 – சிருங்கேரி சாரதாம்பாள் தேர்
விகாரி வருடம் – புரட்டாசி 22
சிருங்கேரி சாரதாம்பாள் தேர்
09-அக்-2019 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 7.26
நட்சத்திரம் : அவிட்டம் இ 1.47
யோகம் : மரண-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
-
Kollu Bommaigalai Paramrikum murai
நவராத்திரி திருநாளில் பத்து நாட்களும் , விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து தெய்வத்தின் நாமாவளிகளை பாடி மகிழ்ந்தோம். உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் என பலரையும் அழைத்து உறவுகளையும் மேம்படுத்தும் திருநாளாக அமைந்தது நவராத்திரி பெரு விழா. இந்துகளின் பண்டிகைகளில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவான நவராத்திரி கால கட்டத்தில் நமது வீட்டில் அனைத்து தெய்வங்களும் குடிபுகுந்து நம்மை காக்கிறது.நம் வீட்டில் வைத்திருந்த கொலு பொம்மைகளை நல்லபடி பராமரித்தால் நமக்கு எல்லா அனுக்ரஹங்களும் சர்வ நிச்சயமாக வந்து சேரும்.
நவராத்திரி திருநாளில் போற்றி வைத்திருக்கும் கொலு பொம்மைகளை எப்படி பராமரிப்பது? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுகிறது. இந்த கேள்விக்கான விடைதான் இந்த பதிவு.
கொலு பொம்மைகளை பராமரிக்க எளிய வழிகள்
முதலில் கொலு பொம்மைகளை கொலு படியில் அடுக்குவதற்கு முன் கொலு படிகளை நன்றாக சரிபார்க்க வேண்டும். கொலு பொம்மைகளை மேல் படியில் இருந்து அடுக்கிகொண்டு வரவும். கொலு படிகளை அலங்கரிக்க காட்டன் துணிகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கொலு பொம்மைகளை அழுத்தி துடைக்ககூடாது.தினமும் பூஜை செய்த பிறகு கொலு படிக்கு கீழ் படைத்த தின்பண்டகளை எடுத்து விட வேண்டும். எலி போன்ற ஜீவ ராசிகள் கொலு படியை தள்ளி விடக்கூடும் என்பதாலேயே இந்த எச்சரிக்கை.
இப்படி கொலுவை பாதுகாத்த நாம் கொலு முடிந்தவுடன் இந்த வருடம் என்ன என்ன பொம்மைகளை எந்த படிகளில் வைத்தோம் என எழுதிவைத்து கொள்வது அடுத்த வருடத்துக்கு கொலு வைக்கும் போது எளிதாக இருக்கும்.கொலுவில் இருக்கும் பொம்மைகளின் பெயர்களை எழுதிவைத்து கொள்வதும் குழப்பங்களை தவிர்க்க உதவும். அடுத்த வருடம் கொலு வைக்கும்போது நம்மிடம் இல்லாத பொம்மைகளை வாங்க இந்த குறிப்பு பயன்படும்.
கொலு படிகளை கலைத்து பொம்மைகளை திரும்ப பெட்டிகளில் அடுக்கி வைக்கும்போது எந்த எந்த பெட்டிகளில் என்ன என்ன பொம்மைகள் உள்ளன என்று எழுதிவைத்துகொள்ளவும் .பெட்டிகளில் பொம்மைகளை அடுக்கும்போது காகித பொம்மைகளாக இருந்தால் நிற்கவைக்கவும், காகித பொம்மைகளை படுக்கவைக்ககூடாது.
எவ்வளவு ஆர்வத்துடன் கொலு வைக்கின்றோமோ அந்த ஆர்வத்துடனே பொம்மைகளை நன்றாக அடுக்கி முறையாக பராமரிக்கவேண்டும்,
இந்த பராமரிப்பு அடுத்தாண்டு கொலுவை மேலும் சிறப்பிக்கும்.
-
Thirupathy Bramorchavam Niraivu
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தயார்களுடன் பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்ன, கற்பக வீருட்சம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது.
பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பள் குளத்தை சுற்றியிருந்த அயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்
ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவ வீதி உலாவில் சுவாமியில் பல்வேறு வாகன சேவையை காண வந்த முக்கோட்டி தேவதைகள வழி அனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படுகிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
-
Kaligambal Koil Special
காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. மட்டுமின்றி வரலாற்று சிறப்புடையதாகவும் திகழ்கிறது.
ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி பெறும்.
தற்போதுள்ள ஆலயம் 1639-ம் ஆண்டு விஸ்வகர்மா குலத்தவரால் கட்டப்பட்டு, இன்றும் சீரும், சிறப்புமாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகிறது.
சிதம்பரத்தில் வழிபட்டால், திருவண்ணாமலையை நினைத்தால், காளையார் கோவிலில் காலடி எடுத்து வைத்தால், திருவாரூரில் பிறந்தால் மோட்சகம் கிடைக்கும் என்பார்கள். அது போல பாரிமுனை காளிகாம்பாள் தலத்தில் குங்குமம் பிரசாதம் பெற்றாலே வாழ்வில் உயர்வும், மோட்சமும் கிடைக்கும்.
காளிகாம்பாள் கோவிலுக்கு செல்லும் போது அவசரப்பட்டு வழிபாடுகளை செய்யாதீர்கள். ராஜகோபுரம், நடராஜ மண்டபம், காயத்ரி மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. நின்று நிதானமாக ரசித்து பார்த்து வரலாம்.
காளிகாம்பாள் மகாலட்சுமியையும், சரஸ்வதியையும் தன் இரு கரங்களாக பெற்றிருப்பதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காளிகாம்பாள் ஆலயத்தின் பரிவார தேவதை கடல் கன்னியாகும்.
காளிகாம்பாள் ஆலயம் கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறாள்.
ஆதிபராசக்தி தன்னை பல சக்திகளாக தோற்றுவித்த சித்தாடல் செய்து வருகிறாள். அந்த அபூர்வ சக்திகளுள் ஒருவளே அன்னை காளிகாம்பாள்.
காளிகாம்பாளின் அவதாரம் நீலியாய், சூலியாய், காளியாய் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், தும்பட்டம், வீண் பெருமை, தன்நிலை உணராமை போன்றவற்றை காளிகாம்பாளை வழிபட, வழிபட நம் மனதில் இருந்து நீங்கச் செய்யலாம்.
அன்னை காளிகாம்பாளிடம் பாரதியார் போன்று உரிமையோடு பேசி மனதை பறி கொடுத்தால் நிச்சயம் அவள் பக்தர்களின் உள்ளத்தை பக்குவப்படுத்துவாள் என்பது நம்பிக்கை.
காளிகாம்பாள் அருள்புரியும் இத்தலத்தில் இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் போற்றி துதித்துள்ளனர்.
காளிகாம்பாள் அவதரித்த இடத்தை நம் முன்னோர்கள் “சொர்ணபுரி” என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.
நாகலோக கன்னிகளும், தேவலோக கன்னிகளும் அன்னை காளிகாம்பாளை வழிபட்டு பூர்வ ஜென்ம புண்ணியங்களை அடைந்தனர்.

காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், பன்றிமலை சுவாமிகள், காயத்ரி சுவாமிகள், தவத்திரு ராமதாசர் உள்பட பல மகான்கள், ஆன்மீகப் பெரியோர்கள் காளிகாம்பாளை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
பவுர்ணமி தோறும் இரவு 7 மணிக்கு அம்பாளுக்கும், ஸ்ரீ காயத்ரி தேவிக்கும் கூட்டு வழிபாடும், பூஜையும் நடைபெறும்.
இத்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 5 மணிக்கும், ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கும் சிறுவர்களுக்கான நீதி போதனை மற்றம் ஆன்மீக வகுப்பு இலவசமாக நடைபெறும்.
காளிகாம்பாள் கோவிலில் 18-7-14 தொடங்கி 9 வெள்ளிக்கிழமைகள் ஆடித்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் கன்னி பூஜை, கோ பூஜை, திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
இத்தலத்தில் நடைபெறும் சுவாசினி பூஜை சிறப்பு மிக்கது. இந்த பூஜை சுமங்கலிகளுக்கு விசேஷ அருள் தருவதாகும். இதற்காகவே சென்னையில் வேறு எங்கும் இல்லாதபடி இத்தலத்தில் “சுவாசினி சங்கம்” அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் அமாவாசை தோறும் ஸ்ரீகாயத்ரி தேவிக்கும், விஸ்வ பிரம்மத்துக்கும் விஸ்வகர்ம வழிபாட்டுக் குழு சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
காளிகாம்பாள் மொத்தம் 12 அம்சங்களைக் கொண்டவள். அதில் ஒரு அம்சம், காஞ்சீபுரத்து காமாட்சி அம்மனாகும்.

இத்தலம் இரு பிரகாரங்கள் கொண்டது. உள் பிரகாரத்தில் அருணாசலேஸ்வரர், நவக்கிரகங்கள், வள்ளி-தெய்வானை சமேத முருகர், ஸ்ரீ வீரபகாமங்கர், அவர் சீடர் சித்தையா, ஸ்ரீ கமடேஸ்வரர், ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சண்டிமகேஸ்வரர், பைரவர், பிரம்மா, சூரிய-சந்திரர்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்தில் சித்தி விநாயகர், கொடி மரம், வடகதிர்காம முருகன், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர், ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீதுர்கா, யாகசாலை, ஸ்ரீநடராசர், ஸ்ரீமகாமேரு, ஸ்ரீவீரபத்திர மகா காளியம்மன், ஸ்ரீ நாகேந்திரர், ஸ்ரீவிஸ்வ பிரம்மா சன்னதிகள் அமைந்துள்ளன.
திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ காளிகாம்பாள் கருவறையில் உள்ள மூலவருக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து, அந்த மஞ்சளை பயன்படுத்தி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபடுவது கூடுதல் நன்மை தரும்.
இத்தலத்தில் மேற்கு நோக்கிய நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் தம்புச் செட்டித் தெருவில் உள்ள கிழக்கு கோபுர வாசல், “குண வாயில்” என்றும், அரண்மனைக்காரன் தெருவில் உள்ள மேற்கு கோபுர வாசல் “குட வாயில்” என்றும் அழைக்கப்படுகிறது.
சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், காணபத்யம், சவுரம் ஆகிய 6 சமயங்களுக்கும் பொதுவானவளாக காளிகாம்பாள் இயங்குகிறாள்.
இத்தலம் சிவனும்-சக்தியும் அருள்பாலிக்கும் தலமாக கருதப்படுகிறது.
இத்தலத்தின் உற்சவர் பெயர் பெரிய நாயகி.
காளிகாம்பாள் தலத்தில் உள்ள ஒவ்வொரு சன்னதியும், பகுதியும் வாஸ்து முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தின் வடமேற்கு பகுதியில் அகோர வீரபத்திர சுவாமி உள்ளார். பவுர்ணமி தினத்தன்று அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபட்டால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகி விடும்.

“உள்ளம் உருகுதய்யா… முருகா…” என்று டி.எம்.சவுந்தராஜன் பாடிய பாடலை கேட்டிருப்பீர்கள். மிகவும் இனிமையான அந்த கந்தன் பாடலை இயற்றியவர் ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் ஆவார். 1952-ம் ஆண்டு அவர் காளிகாம்பாள் கோவிலில் உள்ள வடசுதிர்காம முருகப்பெருமான் சன்னதி முன்பு அமர்ந்து இந்த பாடலை பாடினார்.
இத்தலத்தின் தல விருட்சமாக மாமாரம் உள்ளது.
இங்கு குங்கும லட்சார்ச்சனை கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காளிகாம்பாளை முறைப்படி தியானித்து வழிபடுபவர்கள் நிச்சயம் செல்வந்தர்கள் ஆகி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.