Thirupathy Bramorchavam Niraivu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம் 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தயார்களுடன்  பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்ன, கற்பக வீருட்சம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி  தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. 

பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பள் குளத்தை சுற்றியிருந்த அயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம் 

ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவ வீதி உலாவில் சுவாமியில் பல்வேறு வாகன சேவையை காண வந்த முக்கோட்டி   தேவதைகள வழி அனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படுகிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *