Tag: bramorchavam

  • Thirupathy bramorchavam day 1

    ஐந்து நாள் உற்சவத்தில் முதல் நாளில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பரிவாரங்களுடன் தெப்பத்தில் பவனி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் வருடாந்திர தெப்போற்சவம் வைபவமாக துவங்கியது. மார்ச் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தெப்போற்சவத்தை  முன்னிட்டு ஆலய கருவறையில் உள்ள ஸ்ரீ  ராமச்சந்திர  சமேத லக்ஷ்மண சீதா உற்சவ மூர்த்திகள் ஸ்ரீ ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நாள்தோறும் வலம் வருவர்.

     

    அந்த வகையில்  முதல் நாளில் மாட வீதிகளில் வலமாக வரச் செய்து ஆலய திருக்குளத்தில் தெப்பத்தில் எழுந்தருள செய்தனர் தொடர்ந்து உற்சவமூர்த்திகள் அலங்காரம் மின் விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் திருக்குளத்தை மூன்று முறை வலம் வர செய்தனர் திருக்குளத்தில் படித்துறையில் காத்திருந்த பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து  சுவாமியை வழிபட்டனர். ஐந்து நாட்கள் தெப்போற்சவத்தின்  முதல் நாள் உற்சவம் வைபவமாக நடைபெற்றது

  • Thirupathy bramorchavam laddu

    பிரம்மோற்சவ நாட்களில் ஒன்பது லட்சம் லட்டுக்கள் இருப்பு இருக்கும் வகையில் லட்டு உற்பத்தி செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, அடுத்த மாதம் 27 ஆம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 5ஆம் தேதி வரை 9 நாட்கள் திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக  கூறினார்.

    பிரமோற்சவ ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேவஸ்தானத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுப்பா ரெட்டி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ சாமி உச்சவங்கள் நான்கு மாட வீதிகளில் நடைபெற உள்ளன. எனவே பிரம்மோற்சவ சுவாமி உற்சவங்களை தரிசிக்க ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் முதல் தேதி என்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் கருடவாகன சேவையை தரிசிக்க தமிழகத்திலிருந்து ஏராளமான அளவில் பக்தர்கள் வருவார்கள். அதற்கு தகுந்தாற்போல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி மலையில் உள்ள வெளிவட்ட பாதையில் பிரமோட்சவத்திற்காக வரும் பக்தர்கள் தங்களுடைய வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு காலை 6 மணிக்கு துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை இலவச உணவு வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தவிர பிரம்மோற்சவம் நடைபெறும் ஒன்பது நாட்களும் 9 லட்சம் லட்டுக்கள் எப்போதும் இருப்பு இருக்கும் வகையில்   லட்டு உற்பத்தி செய்யவும்,திருப்பதி மலையில் உள்ள முக்கிய பகுதிகளை ஒளிரும் சரவிளக்குகளால் அலங்கரிக்கவும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கருட வாகன சேவை நடைபெறும் அக்டோபர் முதல் தேதி அன்று திருப்பதி மலை பாதையில் இருசக்கர மோட்டார் வாகன பயணம் அனுமதிக்கப்படாது. எனவே பக்தர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் அன்றைய தினம் திருப்பதி திருமலை இடையே பேருந்துகள், கார்கள் மற்றும் டாக்ஸிகள் ஆகியவற்றில் மட்டுமே பயணிக்க  முடியும்.

    அடுத்த மாதம் 27 ஆம் தேதி பிரம்மோற்சவ துவக்க நாளன்று முதல் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு ஆந்திர அரசின் சார்பில் பட்டுவஸ்திர சமர்ப்பணம் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் மட்டும் இரவு 9 மணிக்கு துவங்கி மாடவீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெறும். மற்ற எட்டு நாட்களும் காலை 7:00 மணிக்கும், இரவு 9:00 மணிக்கும் சாமி ஊர்வலம் துவங்கி நடைபெறும். திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக கரோனா நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அப்போது கூறினார்.

  • Thirupathy bramorchavam starts

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலத்துடன் தொடங்கியது. இன்று மாலை 5.10 மணிமுதல் 5.30 மணிக்கு இடையே ஆகம முறைப்படி வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு பெரிய சே‌ஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஏழுமலையான் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்.
     
    சீனிவாச பெருமாள் குடியிருக்கும் மலையும் அவர் சயனித்து இருப்பதும் சே‌ஷத்தின் (ஆதிசே‌ஷன்) மீது என்பதால் பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நாளை 7 தலைகளுடன் கூடிய பெரிய சே‌ஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோவிலுக்குள் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட உள்ளது. பிரம்மோற்சவ விழாவை காண ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கபடுவார்கள்.

    புரட்டாசி மாதம் என்பதால் தமிழக பக்தர்கள் விரதம் இருந்து கோவிந்த மாலை அணிந்து பாத யாத்திரை வருவது வழக்கம். ஆனால் மாலை அணிந்திருந்தாலும் டிக்கெட் இருந்தால் மட்டுமே திருமலைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் இருப்பு வைத்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதிகாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை திருமலையில் உள்ள தரிகொண்ட வேங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தித்தில் அன்னதானம் வழங்கப்படும்.

    பக்தர்களுக்காக திருப்பதி – திருமலை இடையே 200 அரசு பஸ்கள் மூலம் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Kanchi bramorchavam

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா வருகிற 27-ந் தேதி காலை சண்டி யாகத்துடன் விழா தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

     28-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றம், காலை வெள்ளி ரிப‌ஷ வாகனம், மாலை தங்கமான் வாகனத்தில் அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதிவுலா நடைபெறுகிறது.

    மார்ச் 5-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. பிரம்மோற்சவத்தின் 11-ம் நாளான மார்ச் 8-ந் தேதி திருக்கோவில் தெப்பகுளத்தில் அம்மன் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உள்ளுர் மற்றும் வெளியூரில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    நவராத்திரி 9 நாட்கள் மட்டும் கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முதல் பிரம்மோற்சவத்தின் போது கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
     

  • Thiruchanoor bramorchavam kodiyetram

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்கியது.   முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர். 

    கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள்  அபிஷேகம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. 

    இதில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் பசந்த் குமார், துணை செயலாளர் ஜான்சிராணி,  அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு 7.30 மணிக்கு பத்மாவதி தாயார் சின்னசேஷ வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். 

    இதைதொடர்ந்து பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் காலையிலும் இரவிலும் வீதியுலா நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து ஆர்ஜித சேவைகளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவத்தையொட்டி ரூ 1.44 கோடியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கோயில் முழுவதும் பல வண்ண மலர்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பஞ்சமி தீர்த்தம் அன்று  தேவஸ்தான விஜிலன்ஸ் பணியாளர்கள் 300, சாரண சாரணியர்கள்,200,  என்.சி.சி. மாணவர்கள் 200, வாரி சேவா பக்தர்கள் 200, போலீசார் 1500 பேர் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 100 சி.சி.டி.வி கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

  • Thirupathy Bramorchavam Niraivu

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்ற பிரம்மோற்சவம் 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி,பூதேவி தயார்களுடன்  பெரிய சேஷம், சின்ன சேஷம், அன்ன, கற்பக வீருட்சம், கருட, சிம்ம, அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் காலையும் மாலையும் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை கோயிலில் இருந்து அதிகாலை உற்சவ மூர்த்திகளும் சக்கரத்தாழ்வாரும் ஊர்வலமாக வராஹ சுவாமி கோயிலுக்கு வந்தனர். வராக சுவாமி கோயில் எதிரே மலையப்ப சுவாமி  தயார்களுக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் பால்,தயிர், தேன், இளநீர், உள்ளிட்ட சுகந்த திரவியங்களை கொண்டு ஜீயர்கள் முன்னிலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. 

    பின்னர் ஏழுமலையான் கோயில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் தெப்பள் குளத்தை சுற்றியிருந்த அயிரகணக்காண பக்தர்கள் புனித நீராடினர்.  சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம் 

    ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவ வீதி உலாவில் சுவாமியில் பல்வேறு வாகன சேவையை காண வந்த முக்கோட்டி   தேவதைகள வழி அனுப்பும் விதமாக ஆகம முறைப்படி வேத மந்திரங்கள் முழுங்க கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவத்திற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படுகிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

  • Ayya Vaikundar Bramorchavam Video

    சென்னை மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சென்னை அடுத்து மணலி புதுநகரில் மும்மூர்த்திகளின் வடிவான அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு புரட்டாசி மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் அதனையொட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது . 

    இன்று பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம் விழா நடைபெற்றது முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு பூ , பால் , பழம் , இளநீர் , ஜவ்வாது , சந்தனம் , துளசி உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது இதில் சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் பத்தாவது நாளான வருகிற 13 ஆம் தேதி தேர்பவனி நடைபெற இருக்கிறது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து வந்தனர் ஐயா உண்டு ஐயா நாமம் வாழ்க என்று கோஷங்கள் எழுப்பி கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்
     

  • Thirupathy Bramorchavam… Chinna Sesha vaganathi Veedhi Ula

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இரண்டாவது நாள் சின்ன சேஷ வாகனத்தில் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி

    திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறய சேஷ வாகனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலீத்தார். 

    பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும் சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாக மலையப்ப சுவாமி வீதிஉலா வந்ததை அயிரகணக்காண பக்தர்கள் பக்தி மனம் உருக கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் ஜீடர்களின் சீடர்கள் நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.   

    பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாளான இன்று இரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். அன்னம் பால், தண்ணீரை வேறு செய்வது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக ஐதீகம்.

  • Thirupathy Bramorchavam Program List

    நிகழ்ச்சி நிரல்….
    29.09.1019
    7.00pm அங்குரார்ப்பணம்.
     
    30.09.2019
     3.00P.M. தங்க திருவாட்சி 5.00PM கொடியேற்றம் 
    6.00PM. ஊஞ்சல் சேவ
    7.00PM ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு.
    8.00.P.M. பெரிய சேஷ வாகனம்.

    01.10.19
    9.00AM. சின்ன சேஷ வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம். 
    8.00.P.M ஹம்ச வாகனம்.

    02.10.2019
    9.00.AM . சிம்ம வாகனம்.
    2.00.PM. சப்னா திருமஞ்சனம்.
    6.00PM. ஊஞ்சல் சேவை.
    8.00PM. முத்து பல்லாக்கு வாகனம்.

    03.10.2019
    9.00AM. கல்ப விருட்ச வாகனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சர்வ பூபால வாகனம்.

    04.10.2019
    9.00.AM. மோகினி அவதார வாகனம்
    4.00PM. ஊஞ்சல் சேவை
    7.00PM. கருட வாகன சேவை.

    05.10.2019
    9.00AM. ஹனுமந்த வாகனம்
    4.00PM. தங்கத் தேரோட்டம்
    8.00PM. கஜ வாகனம்.

    06.10.2019
    9.00AM. சூரிய பிரபை வாகனம்
    2.00PM. சப்னா திருமஞ்சனம்
    6.00PM. ஊஞ்சல் சேவை
    8.00PM. சந்திர பிரபை வாகனம்.

    07.10.2019
    7.00AM. தேரோட்டம் 
    6.00PM . ஊஞ்சல் சேவை
    8.00PM அஸ்வ வாகனம்.
     
    08.10.2019
    6.00AM . சக்கர ஸ்நனம்
    7.00PM. கொடி இறக்குதல்

  • Thirupathy bramorchava kodiyetram

    திருப்பதி ஏழுமலையான கோயில் பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வுகள் 

    செப்டம்பர் 30 -பிரம்மோற்சவ கொடி ஏற்றுதல் பெரிய சேஷ வாகனம் 

    அக்டோபர் 1 – காலையில் சின்ன சேஷ வாகனம் , இரவில் ஹம்ச வாகனம் 

    அக்டோபர் 2 – காலையில் சிம்ம வாகனம் இரவில் முத்துப் பல்லாக்கு 

    அக்டோபர் 3 – காலையில் கற்பக விருஷப வாகனம் இரவில் சர்வ பூபாள வாகனம் 

    அக்டோபர் 4 – காலையில் மோகினி அலங்காரம், இரவில் கருட வாகனம் 

    அக்டோபர் 5 – காலையில் அனுமன் வாகனம் இரவில் தங்க தேரோட்டம் 

    அக்டோபர் 7 – காலையில் தேரோட்டம், இரவில் குதிரை வாகனம் 

    அக்டோபர் 8 – காலையில் தெப்ப குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் முடிகிறது மாலை கொடி இறக்கம்