Blog

  • Sabari malai nadai october 17 thirappu

     ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அக்டோபர் மாதம்  17-ந்தேதி திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடைபெறும். 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இந்த நாட்களில் கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

     இதுதவிர, ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்துவார்.

    18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 22-ந் ேததி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

  • China Desathai Uivitha Siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    பாரத தேசத்தில் அவதரித்து
    சீன தேசத்திற்குப் பயணித்து இறைத்தன்மையால்
    சீன நாட்டை 
    ஆன்மீக பூமியாகிய பெருமை  சித்தர்களுக்கு உண்டு.

    காலாங்கி நாதர்
    போகர் 
    புலிப்பாணி சித்தர் 
    போதிதர்மர்
    முதலானோர்
    சீனம் வணங்கித் தொழும் 
    சித்தர் பிரான்கள்.

    சீன தேசத்தில்
    பலகாலம் தங்கியிருந்த காலாங்கி நாதருக்கு
    'ஒருநாள் போதும் இவ்வுலகம்'
    என சலிப்பு வந்தது.

    ஆழ்ந்து 
    மூவாயிரம் வருடம் சமாதியில் இருக்க விருப்பம் கொண்டார்.

    விடைபெறலாம்
    என எண்ணியபோது
    சீடர் போகரின் நினைவு
    நெஞ்சை நிறைத்தது.

    சீடனை அழைத்து  கற்றதைக் கற்பித்து 
    பெற்றதை எல்லாம் சமர்ப்பித்து
    தனக்குப் பின்னரும் பணிகள் தொடர விரும்பினார்
    காலாங்கிநாதர்.

    அவர் மனத்தில் நினைத்தது போகரின்
    மனத்திரையில் காட்சியாய் தெரிந்தது.

    இன்றைய டெலிபதிக்கு அன்றே சித்தர்கள் அதிபதி. 
    குருவின் அழைப்பை ஏற்றார் போகர்.

    ஒளியின் வேகமும் ஒலியின் ஓங்காரமும் தோற்கும் வகையில் உடனடியாக
    சீனாவில் இருந்தார் போகர்.

    எதையும் துறப்பதும் எங்கும் பறப்பதும்  நினைக்கும் இடத்தை கணத்தில் சேர்வதும் சித்தர்களுக்கு எளிது.

    பொதிகையிலிருந்த போகர் பெருமான்
    ஆகாய மார்க்கமாக சீனாவில் இருக்கும் காலாங்கிநாதரை அடைந்து 
    அடி பணிந்து வணங்கினார்.

    குரு காலாங்கிக்கு
    ஏக மகிழ்ச்சி.
    போகருக்கும்
    ஏக சந்தோஷம்.

    பிரிந்தவர் கூடும்போது பிறக்கும் மகிழ்வை புரிந்தவர் அறிவர்.

    சூடம் என பற்றி ஜோதியாய் ஒளிர்ந்த போகரிடம்,
    தான் சமாதி நிலைக்கு செல்வதாகவும்
    தனக்குப் பின்னர்
    சீன மக்களுக்கு
    தன்னைப் போல தொண்டாற்ற
    வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தார் காலாங்கி நாதர்
    அன்புக் கட்டளையாக.

    பின்
    "நான் செல்லவா"
    என கேட்டார் குருநாதர்.
    "சரி" என்றார் சீடர் போகர்.

    அடுத்த கணத்தில் 
    அந்த அதிசயம் நடந்தது.

    அங்கு ஓங்கி எழுந்த பெரும் ஜோதியில் 
    ஜோதியாய் கலந்தார் காலாங்கி நாதர்.

    இறையோடு இறையாய் இரண்டறக் கலப்பதும் ஒளியோடு ஒளியாய் ஒளிர்ந்து மறைவதும் 
    சித்தர்களுக்கான நிறைநிலைகள் அல்லவா ?

    அதன்பின்னர்
    குரு சொன்ன வார்த்தைகளை மெய்ப்பிக்க 
    சீனாவிலேயே 
    தங்கினார்
    போகர் பிரான்.

    கற்றதை 
    குருவிடம் பெற்றதை
    வாரி வழங்கி 
    வள்ளலாய்
    வலம்வந்தார்.

    இங்கு ஒரு சிக்கல் இயற்கையாய் எழுந்தது.

    அவர் விரித்த கடையில் கொள்வாரில்லை.

    காரணம் ….?

    அந்நியன் என 
    அவர் உருவமும் 
    நிறமும் மொழியும் 
    அடித்துச் சொன்னதால் 
    பல அடி தூரம் 
    விலகிச் சென்றனர் 
    சீன மக்கள்.

    'சிவனே …… 
    குருவின் எண்ணத்தை எளிதாய் நிறைவேற்ற முடியவில்லையே….'

    போகரின் உள்ளம் 
    கவலையில் துடித்தது.

    என்ன செய்யலாம் என யோசித்த வேளையில் அங்கு யாசித்து வந்த 
    ஒரு வயோதிகர் 
    கண்ணில் பட்டார்.

    இன்றோ நாளையோ என தள்ளாடும் வயது. 
    மூப்பும் ஒரு முடிவு எடுத்திருந்தது.
    இக்கணமோ மறுகணமோ என காலக்கெடு விதித்துக் காத்திருந்தது.

    அதுவும் நடந்தது.

    அந்த தாத்தா காலமானார் 

    போகருக்கு ஒரு 
    யோசனை வந்தது.

    'அந்த முதியவரின்
    உடலில் புகுந்து கொண்டால் 
    சீனர் என 
    மக்கள் நம்பி 
    நாடி வருவார்களே'
    என நினைத்தார்.

    பிறகென்ன ?

    அஷ்ட சித்திகளில் ஒன்றான 
    பரகாயப் பிரவேசம் செய்தார்.

    ஆம்….
    கூடு விட்டுக் 
    கூடு பாய்ந்தார்.

    அந்த சீன தாத்தாவின் உடலினுள் புகுந்தார் புனிதர் போகர்.

    தள்ளாத வயது
    தாத்தா ஆனார்.

    குரு சொன்னபடி
    தன் பணி தொடர்ந்தார்.

    நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
    கூட்டம் கூட்டமாய்
    ஊரே திரண்டு
    போகர் பிரானைக் கொண்டாடி மகிழ்ந்தது.

    எத்தனை காலம் 
    இந்த முதிய உடலில் ?

    காயகற்பம் புரிந்தவர் கட்டிளம் காளையாய் துள்ளிக் குதிக்க வேண்டாமா ?

    யோசித்த போகர்
    தவத்தில் அமர்ந்து
    குண்டலினியை
    சஹஸ்ர பீடத்தில்
    ஏற்றி எழுப்பினார்.

    பெண் சக்தியான குண்டலினி 
    ஆண் காளையான சகஸ்ர தளத்தில் இணைந்தால்
    ஆனந்தம் கூத்தாடும். பேரானந்தம் அலைமோதும்.
    சிவசித்தம் பூரணமாகும்.

    ஆனந்த பேரானந்த நிலையில் 
    ஆண்களும் வியக்கும் அழகர் ஆனார்.
    இளைஞர் ஆனார்
    போகர் தாத்தா.

    சீன மண்
    அவரை வணங்கி நின்றது.
    பணிகள் தொடர்ந்தன.

    போகர் என்ற
    பாரதப் பெயரையும் 
    சீன மொழிக்கு
    மாற்றம் செய்தார்.

    'போ யாங்'
    என்பதே அவரது
    சீனப் பெயர்.
    அதற்கு அர்த்தம்
    போகர் மார்க்கம்.

    'சிபு' போ – யாங் 
    போதனைகள்
    சீன மக்களை
    ஈர்த்தன.
    சிபு என்றால் குரு
    என்று பொருள்.

    எக்கச்சக்க சீடர்கள் வாழ்வின் 
    நிறைவைக் காண
    மெய்ஞான சித்தரிடம் எப்போது மொய்த்தனர்.

    நெருங்கிய சீடர்கள் அவரைத் தொழுதனர்
    அவரே உலகம் என ஆராதித்து மகிழ்ந்தனர்.

    அன்புடன் அவரை லாவோட்சூ  (LAU – TSU)
    என அழைத்தனர் சீனர்.

    சீன வரலாற்றில் 
    போகரே 
    லாவோட்சூ.

    அவர் சொன்னதே 
    வாழும் கலையை உலகுக்குச் சொன்ன தாவோயிசம் (Taoism).

    லாவோட்சூ காலத்தில்தான் அவரால்தான் 
    சீனாவில் ரசவாதம் என்னும் அதிசயம் நடந்தது.

    இளமையும் ஆரோக்கியமும் மரணமிலா 
    பெருவாழ்வும் தரும்
    காயகல்பம் 
    உலகின்கண்
    உலா வந்தது.

    சீன மருத்துவம் மூலிகைகளால் நிறைந்தது.
    சீன கலாசாரம்
    புது உருக்கொண்டது.

    சீன மக்கள் லாவோட்சூவை கடவுளாகவே பார்த்தனர்.

    ஒருமுறை அவர்
    தத்துவ ஞானி கன்பூசியசை
    சந்தித்துக் 
    கருத்துப் பரிமாற்றம் கொண்டது
    ஒரு வரலாற்றுப் பதிவு.

    கன்பூசியஸ் 
    லாவோட்சூவை
    'பறக்கும் சர்ப்பம்' (Dragon)
    என போற்றிப் புகழ்ந்தது இன்னுமோர் பதிவு .

    சீன பாம்பு… சீறும் பாம்பு ஆம்…. டிராகன்… நெளியும்
    ஆன்மீகமாய்…
    விரியும்…விரியும்.

     இன்னும் சிந்தித்தால் ஆயிரம் அர்த்தங்கள் அணிவகுத்தல்லவா வரும் ?.

    காலாங்கி நாதரே கன்பியூசியஸ் என்பதும்  ஆய்வுக் களத்தில் உள்ள ஓர் அதிசய ஆய்வு.

    சில வருடங்களுக்குப் பின்னர்
    இளமை தந்து 
    மரணமிலா பெருவாழ்வை அளிக்கவல்ல
    காயகற்பம் தயாரித்து 
    தானே உட்கொண்டு 
    இறை அம்சமாய்
    சீன தேசத்தில் இளைஞராய்
    பவனி வந்தார்.

    முதலில் 
    காயகற்பத்தை 
    விரும்பி வளர்த்த
    நாய்க்கு கொடுத்தார். 
    அது செத்து விழுந்தது.

    விசுவாச சீடன் 
    யூ வுக்குத் தந்தார்.
    அவனும் 
    செத்து விழுந்தான்.

    பார்த்திருந்த 
    பிற சீடர்கள்
    சிதறி ஓட 
    சிரித்தபடி 
    நாயையும் 
    அந்த
    நல்ல சீடனையும் உயிர்ப்பித்தார்.

    அந்த சீடன் தான்
    அந்த யூ தான் 
    புவி வணங்கும் புலிப்பாணி
    என்பது சித்தர்
    வரலாற்றுச் செய்தி.

    சீன மக்களை 
    உய்விக்க 
    சீன அரசிலும் 
    அங்கம்  வகித்தார் 
    லாவோட்சூ உருவில் இருந்த போகர் பிரான்.

    அப்போதைய 
    மன்னர் காலத்தில் 
    ஆவணக் களஞ்சியத்தின் காப்பாளர் பணியை அலங்கரித்திருந்தார்.

    தவோ தி சிங்
    (Tao-te -Ching)
    என்ற நூல் 
    அவர் யாத்ததே.

    காலப்போக்கில் மன்னராட்சியில்
    மனம் வெறுத்த
    லாவோட்சூ
    ஒருநாள் 
    அரண்மனையை விட்டு சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டார்.

    அவரை அடையாளம்
    கண்ட காவலாளி 
    அவரைத் தடுத்து வணங்கி,
    "எனக்கு ஏதேனும்  உபதேசம் தாருங்கள்"
    என மன்றாடினான்.

    அதுபோது
    லாவோட்சூ வழங்கியது தான் 
    தவோ- தி – சிங்கின் 
    ஒரு சிறுபகுதி.

    தவோ- தி – சிங்கை 
    சீன நாட்டின் 
    திருக்குறள் என்பர் 
    உலகில் சிறந்த
    பன்மொழி வித்தகர்கள்.

    எக்கச்சக்க சீடர்களை உருவாக்கிய பின்னர் 
    குரு எதிர்பார்த்த 
    உன்னத நிலையை சீனாவும் சீனர்களும் அடைந்திருப்பதாகத் திருப்தி கண்ட 
    லாவோட்சூ
    நான்காயிரம் வருட 
    சீன ஞான வாழ்க்கைக்குப் பின்னர் 
    போகராக
    தாய்த் திருநாடு
    திரும்பச் சித்தமானார்.

    இமயமலை மார்க்கமாக பாரத தேசத்திற்கு வந்தார்.

    சீன தேசம் 
    அவர் சொர்க்கத்திற்குச் 
    சென்று விட்டதாகக்
    குறிப்பு எழுதித் தொழுதது.

    உண்மைதானே…?

    இந்தியா என்கிற 
    ஆன்மீக 
    சொர்க்கத்திற்குத் தான்
    போகர் திரும்பி வந்தார்.

  • October 13 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பக்தி
    ரிஷபம் – வெற்றி
    மிதுனம் – வரவு 
    கடனம் – ஏமாற்றம்  
    சிம்மம் – நிறைவு
    கன்னி –  பணிவு 
    துலாம் –  சிரமம் 
    விருச்சிகம் – இரக்கம் 
    தனுசு –     பரீதி
    மகரம் –  ஆரோக்கியம்
    கும்பம் – நலம்
    மீனம் – தொல்லை
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்
     

  • October 13 paurnami

    அக்டோபர் 13 பவுர்ணமி
    விகாரி வருடம் – புரட்டாசி 26
     பவுர்ணமி 
    13-அக்-2019 ஞாயிறு  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    4.30 – 6.00    
    குளிகை    :    3.00 – 4.30
    எமகண்டம்    :    12.00 – 1.30                          
    திதி    :    பவுர்ணமி          
    திதி நேரம்    :    பவுர்ணமி    இ    3.11
    நட்சத்திரம்    :    உத்திரட்டாதி    கா    9.18
    யோகம்    :    அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அஸ்தம்
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Thungabadrai Esan Koil Nizhal

    ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது இந்த கோயில்.

    பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.

    விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது. 

    ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு பொருள்  இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் உச்சமாகும்.

    கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். 

    ஆனாலும் இதுவரை இரு தரப்பு வாதங்களும் நிரூபிக்கக்படவில்லை என்பதே உண்மை.

    அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும். படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது.

    எண்ணிலடங்கா மர்மத்தோடு விருபாட்சர் திருக்கோயில் நம் கலாச்சாரத்தின் சின்னமாகவும் நம் கட்டிடக்கலையின் திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டும் சின்னமாகவும் விளங்கி நமக்கெல்லாம் பெருமை சேர்கிறது.

  • Ragu Dhosham Neenga

    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும், இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரை காலம் இல்லை. 

    அதனால் சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது. 3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

    முடிந்த போதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்துசாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.
     

  • Thirupathy Rush

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி இருக்கிறது. இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரமாகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் நான்காவது  சனிக்கிழமையை ஒட்டி பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக உள்ளது. ஏற்கனவே பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் இன்றும் , நாளையும் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்யதரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் பழகக்கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 

    இதனால் இலவச தரிசனத்தில் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனத்தில் வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பியதை அடுத்து லேபாக்சி சந்திப்பு வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது .ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்து வருகின்றனர். 

    நேற்று வெள்ளிக்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 78,012 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 42 ஆயிரத்து 270 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் 2.86 கோடி ரூபாய் காணிக்கையாக செலுத்தி இருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் திருமலையில் உள்ள பக்தர்கள் ஓய்வு அறை அனைத்தும் நிரம்பி உள்ளது. இதனால் அறைகள் கிடைக்காத பக்தர்கள் ஆங்காங்கே உள்ள மர நிழலிலும், மண்டபங்களில் தங்கி வருகின்றனர்.
     

  • October 12 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நன்மை 
    ரிஷபம் – மேன்மை 
    மிதுனம் – நேர்மை
    கடனம் – லாபம் 
    சிம்மம் – உற்சாகம் 
    கன்னி –  சுகம் 
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – போட்டி
    தனுசு –     பாராட்டு
    மகரம் –  பரிவு
    கும்பம் – தெளிவு
    மீனம் – அன்பு
    சந்திராஷ்டமம்    – உத்திரம்

  • October 12 Indraya Naal Eppadi

    அக்டோபர் 12 – திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    விகாரி வருடம் – புரட்டாசி 25
    திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
    12-அக்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    இ    1.24
    நட்சத்திரம்    :    பூரட்டாதி    கா    6.50
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திரம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Girivalam sella ugandha neram

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம்.  அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

    இந்த நிலையில் திருவண்ணாமலையில் அக்டோபர் மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்தநேரம் எப்போது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது. 

    அதன்படி , நாளை மறுநாள் அக்டோபர் 13 (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.20 மணிக்கு பவுர்ணமி தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என்று கோயில் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.