Blog

  • Kamakshi Karunai Petren 2

    மதிப்பிற்குரிய டாக்டர் கீது வாட்ஸ் அவர்களுக்கு, 

    என் பெயர் திருமதி சிவராமன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திய மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மிக சிலரே. அவர்களில் ஒருவர் தான் கீது வாட்ஸ். பிரசன்னம் பார்ப்பதிலும் நியுமராலஜி கணிப்பதிலும் மிகவும் வல்லவர். அவர்களிடம் நமது பிரச்சனையை சொன்னால் அதை மிக எளிய முறையில் பரிகாரங்கள் மூலம் தீர்த்து வைக்கின்றார். அவற்றில் சிலவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    என் மகளின் ஜாதகத்தை பார்த்து இந்த தேதியில், இந்த கிழமையில், இந்த நட்சத்திரத்தில் முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை பிறக்கும் என்று ஆருடம் சொன்னார். அதேபோல என் மகளுக்கு முதுகில் மச்சத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. என் மகளும், பேத்தியும், மருமகனும் வெளிநாடு எப்போது செல்வார்கள் என்பதையும் கணித்து சொன்னார். சொன்ன சொல் அப்படியே பலித்தது. என் குடும்ப நண்பர் ஒருவர், வீட்டு பிரச்சனைகளால் மிரண்டு போயிருந்தார். என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்லி கீது வாட்ஸை அணுகச் சொன்னேன். என் நண்பரது வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் நல்ல முறையில் தீர்த்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர்கள் சொல்லும் சில எளிய பரிகாரங்களை மிகவும் சிரத்தையுடன் செய்து வந்தாலே கை மேல் பலன் கிடைக்கும். என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அவர்கள் சொன்ன பரிகாரங்கள் மிகுந்த பலனை அளித்தது. என்ன செய்வதென்றே தெரியாமல் சில பிரச்சனைகளோடு அவரை ஒரு முறை சந்தித்தேன். திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனுக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை செய்ய சொன்னார்கள். அந்த பூஜையை மூன்று மாதம் தொடர்ந்து செய்த பிறகு என் வாழ்வில் நம்ப முடியாத அதிசயங்கள் நடந்தது. நடக்கவே நடக்காதென்று எதையெல்லாம் நான் நினைத்திருந்தேனோ அது எல்லாம் நடந்தது. நன்றி.

    -சவுதியிலிருந்து திருமதி. சிவராமன்

    பிரசன்ன ஜோதிடர் டாக்டர். கீது வாட்ஸ் அவர்களை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    Dr. Geetu Watts (Prasanna Jodhidar)

    9-A, துளசி கார்டன், (Near Golden Flats Signal)

    சந்தான சீனிவாச பெருமாள் கோவில் தெரு,

    முகப்பேர் மேற்கு, சென்னை – 600 037

    போன் – 98845 12895 / 98848 80257

  • Panjam Pokkiya Perum siddhar

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    ஆடு மேய்த்த படி 
    மன விசாரணையில் ஆழ்ந்திருந்தார் 
    அந்த சித்தர்..

    சில காலமாக இப்படித்தான் 
    அவர் எப்போதும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.

    அவரை பித்தர் என்றே பெரும்பாலானோர் அழைத்தனர்.
    ஒருசிலர் சித்தர் என வணங்கவும் செய்தனர்.

    ' இதென்ன அநியாயம்…?

    மனித உறவு என்பதே உதட்டளவில் அருகி வருகிறதே…?
    உள்ளங்கள் கலப்பது
    வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே…? 

    குணம் கெட்ட உறவால் குற்றங்கள் மிகுகிறதே.!
    பக்தி வேசமாகி
    போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே ..!

    நம்பிக்கை துரோகம்
    நயவஞ்சகம் 
    நாகரிகம் போல்
    நர்த்தனம் ஆடுகிறதே…..?

    கலங்கினார் சித்தர் பிரான்.

    இதன் விளைவு,
    எதில் முடியும் ?

    மக்கள் மனம் 
    பாழானால் 
    மழை நிற்கும்.

    வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.
    இடி,மின்னல், மழை மறக்கும்.

     பஞ்சமே பஞ்சமின்றி
     தஞ்சம் புகும் .

    சித்தர் கலக்கம் கொண்டார்.

    முன்னொரு நாளில் 
    மகா புருஷர் ஒருவர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை 
    நினைவுக்கு வந்தது.

    கட்டமிட்டார்.
    கவலை மிகக் கொண்டார்.

    '12 ஆண்டுகள் 
    கடும் பஞ்சம்'
    கணிப்பு கதறியது.

     சித்தர் மனம் பதறியது.

    'பெருமானே……
    ஆடுகள் என்ன செய்யும்
    மாடுகள் என்ன செய்யும் மக்கள் என்ன செய்வார்' துடித்தார்.
    துவண்டார். 
    துடிதுடித்தார்.

    விடிவெள்ளியாய் 
    அக்னி குஞ்சொன்று அகத்தில் உதித்தது.

    அடுத்த கணமே
     செயலில் இறங்கினார்.

    ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உணவாக கொடுத்து 
    பழக செய்தார்.

    ஆங்காங்கே 
    சுவர் எழுப்பி
    வரகு அரிசி நிரப்பி 
    சேறு கொண்டு பூசிவைத்தார்.

    காலம் நகர்ந்தது. கணித்தபடி பஞ்சம் வந்தது.

    மரம் செடி கொடிகள் மட்டுமல்ல மக்களும் மடியத் தொடங்கினர்.

    உயிர்களும் பயிர்களும்
    கருகிச் சாய்ந்தன.

    சித்தர் மட்டும் 
    பஞ்ச பாதிப்பு 
    ஏதுமின்றி 
    காலம் தள்ளினார்.

     எப்படித் தெரியுமா …?

    பஞ்ச காலத்திலும்
    காட்டில் 
    எருக்கஞ்செடிகளுக்குக் குறைவிருக்காது. 
    அவை பூத்துக் குலுங்கும்.

    அவற்றை உண்டு 
    பழக்கப் பட்டிருந்த ஆவினங்கள் பசியாறின.

    எருக்கம்பூ உடம்பை அரிக்குமே ….?

    ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.

    அவற்றின் உரசல்கள் சுவற்றின் உள்ளே இருந்த வரகரிசியை 
    வெளிக் கொணர்ந்தன.

    வரகரியை எடுத்து 
    சித்தர் அமுது 
    ஆக்கினார்.
    ஆட்டுப் பாலில் 
    கலந்து குடித்து பசியாற்றினார்.

    சித்தரின் இந்த யுத்தி அக்கம்பக்கம் பரவியபோது பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம் 
    பசியாற்ற
    முடியவில்லை .

    ஒரு காலத்தில் பைத்தியம் என பரிகசித்தவர்கள்,

    வரகரிசியோடு கலந்து சுவர் எழுப்பிய போது  'எடக்கு மடக்கு' என 
    கேலி பேசியவர்களில் செத்தவர் போக 
    மீதம் இருந்தவர்கள் ஓடிவந்தனர் சித்தரிடம் .

    "சாமி…. பஞ்சத்தால் 
    சாவது ஒருபுறம். … தாகத்திற்கு தண்ணீர் கூட இல்லை எங்களுக்கு .

    எங்களின் சாவு நிச்சயம். சாகிற வரை குடிக்க நீராவது கொடுத்து உதவுங்கள்"
    காலைப் பிடித்தனர்.

    ஞானி கனிந்துருகினார்.

    முதலில் பசி ஆற்றினார்.
    பின்
    " வாருங்கள்…."
    என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
    ஓர் இடத்தில் 
    குழி ஒன்றைப் 
    பறிக்கச் சொன்னார் .

    வந்தது பாரு ஊற்றென… தரை பிளந்து நீர் பீறிட்டது.

    திரண்ட மக்கள் 
    தாகம் நீங்கி 
    மனம் ஒப்ப .
    வாழ்த்தி வணங்கினர்.

    *சுவாமி ….
    நீங்கள்…
    எங்கள் குலசாமி" விண்ணதிரக் கூக்குரலிட்டனர்.

    ஊர்க்காரர்கள்  வாழ்த்தொலிகள் 
    மேலுலகிலும் எதிரொலித்தது.

    அது 
    நவகிரக நாயகர்கள் கூட்டத்தில் 
    விவாதம் ஆனது.

    " பஞ்சத்தை 
    ஏற்படுத்தியது நாம்.

     மக்களின் 
    பாவச் செயல்களால் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.

    அதை மாற்ற இவர் யார் ? கோபப்பட்டனர் 
    கிரக நாயகர்கள்.

    "அவர் 
    மகத்துவமிக்க
    மகா புருஷர் ஒருவரால் ஞானம் பெற்ற 
    ஞான புருஷர்,"
     என்றார் சூரியனார்.

    "அவர் திருமாலின் அவதாரம் என்றொரு பேச்சு இருக்கிறது"
    என்று ஒரு மெல்லிய 
    குரல் எழுந்தது.
    அது சந்திரனின் குரல்.

     *அவருக்கு 
    ஞானம் தந்த 
    மகாபுருஷர் யார் தெரியுமா..?
    ….. போகர்"
     ஒலித்தது ஓர் ஓங்கிய குரல். ஆணித்தரமான அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான்.

    "அந்த மகானை நாம் பார்க்கலாம்…
    நியாயம் கேட்கலாம்…"
    இது சனி பகவான்.

    புத்தி நாயகன் புதனும்
    சுக நாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும் 
    தங்கள் அபிப்பிராயத்தை ஆழமாய் சொன்னார்கள்.

    'கேட்போம் நியாயம்'
    கூட்டம் ஏகமனதாகத் தீர்மானித்தது.

    பூமிக்கு 
    உடனே விஜயம் செய்தது.

     "வாருங்கள்.…. நவநாயகர்களே….." வரவேற்றார் சித்தர் பிரான்.

    சூரியன் சந்திரன் செவ்வாய் குரு புதன் சுக்கிரன் சனி ராகு கேது எனும் ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்.
    அவரவர் அமைப்பில்.

    கிரக அமைப்பு எந்த  நிலையிலும் எப்போதும்
    மாறக் கூடாதல்லவா ?!!

    எனவே அவ்விதம் அமர்ந்தனர்.

    "மகானே..
     எங்கள் சந்தேகம் 
    நீக்கப் பெற 
    இங்கு வந்துள்ளோம்…."
    சூரியன் ஆரம்பித்தார் .

    "எங்கள் சக்தியை
     தாங்கள் மீறி விட்டீர்கள்" சுக்கிரன் குற்றம் சாட்டினார் .

    "பஞ்சம் என்பது 
    நாங்கள் நிர்ணயித்தது…. அதை நீங்கள் 
    நீக்கி விட்டீர்கள்…." செவ்வாய் சினந்தார்.

     "ஈசனே ஒருமுறை 
    எங்கள் அனுமதியின்றி செயல்பட்டதால் 
    அவனே இயங்காமல் போய்விட்டான்.. தெரியுமா ?
    ராதுவும் கேதுவும் 
    கோபமாய் வெடித்தனர்.

    "சர்வசக்தி படைத்த எங்களை மீறி
    ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்…"
    சந்திரன் 
    அமைதியாகக் கேட்டார்.

    கேட்பார்களே தவிர மகாபுருஷரிடம் 
    கொஞ்சம் பயம் இருந்தது. எனவே பேச்சில் 
    பணிவிருந்தது.

    சித்தர் பிரான்
    கருணையோடு ஒவ்வொருவரையும் 
    உச்சி முதல் உள்ளங்கால் வரைபார்த்து விட்டு 'பதிலுக்கு முன்னர் உபசரிப்பு' என்றார் 
    மறுக்க முடியாத அன்போடு.

    வரகரிசி 
    ஆட்டுப்பால் விருந்து.

    உண்டனர் நவநாயகர்கள்.

    உண்ட களைப்போ சித்தரின் சித்தாடல் 
    உருவாக்கிய களைப்போ
    சில நொடிகளில் 
    உறங்கி போனார்கள்.

    சித்தர் பிரான்
    அவர்கள் தூங்கும் 
    அழகை ரசித்தபடி 
    ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி அவர்களை மெலிதாய் தூக்கி நகர்த்தி
    கிரக நாயகர்களின்
    இடத்தையே
    மாற்றி வைத்தார்.

    'இனி பிரச்சனை-இல்லை.. பஞ்சம் வராது….'

    அதற்கேற்ற 
    கிரக அமைப்புகளை
    சரிசெய்த திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார் .

    சித்தரின் சாதுர்யத்தால் வெளியே
    மழை.. மழை… மழை….
    மாமழையாய்
    பொழியத் தொடங்கியது.

    மழை தந்த இளம் குளிரும் ஈரம் தந்த மண் வாசனையும்
    நவகிரக நாயகர்களின் தூக்கத்தைக் கலைத்தன.

    விழித்த நாயகர்கள் முதலில் 
    உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.

    அமைதியின் திருவுருவாய் சித்தர் பிரான்
    அமர்ந்திருக்க
    ஆனந்தம் தாண்டவமாடியது 
    அக் குடிலில்.

    மகா புருஷரின் மகாத்மியம்
    ஒரு நொடியில்
    கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.

    வெளியே மழை
    வெறித்தனமாய்  பெய்துகொண்டிருந்தது. உலகம் கண்டிராத பேய்மழை.

     "மன்னிக்கவேண்டும்…. நாயகர்களே…!

    மக்கள் துயர் கண்டு 
    மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
    பஞ்சம் தவிர்த்துவிட்டேன்.

    "அபசாரம்…. ஐயனே..!

    முக்காலம் உணர்ந்த ஞானியே.!

    உங்கள் குணமறியாது உங்களைப் போன்ற சித்தர்களின் செயல் அறியாது
    பிறவியின் நோக்கம் புரியாது 
    நாங்கள் தான் தவறு செய்து விட்டோம். ஆசீர்வதியுங்கள்.

    உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும் 
    அன்பும் பரிவும் வழிபடத்தக்கது."

    சித்தர் பெருமானின் 
    அருளாசி 
    கிடைத்த பேரானந்தத்துடன்
    நவகிரக நாயகர்கள்
    வணங்கியபடி 
    வாழ்த்திய படி விண்ணுலகம் பயணித்தார்கள்.

    மழை 
    கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.

    அந்த மழைச் சித்தர்
    ஒரு மலைச்சித்தரும் கூட. திருவண்ணாமலையில் 
    திருவருள் பொழியும் சித்தர் அவரே.

    அவர் மாற்றி
    அமைத்துத் தந்த
    கிரக நிலைகளே  இன்றளவும் 
    ஜாதக கணிப்பிற்கு அடிப்படை.

    அந்த சித்தர்
    இடைக்காடர் .

  • October 17 Rasi Plangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – உதவி
    மிதுனம் – நட்பு
    கடனம் – பகை
    சிம்மம் – ஆர்வம் 
    கன்னி –  ஜெயம்
    துலாம் –  புகழ்
    விருச்சிகம் – பயம் 
    தனுசு –     அமைதி
    மகரம் –  யோகம் 
    கும்பம் – போட்டி
    மீனம் – கவனம் 
    சந்திராஷ்டமம்    – விசாகம், அனுஷம்

  • October 17 Sangadahara chadurthi

    அக்டோபர் 17 – சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – புரட்டாசி 30
     சங்கடஹர சதுர்த்தி 
    17-அக்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சதுர்த்தி          
    திதி நேரம்    :    திரிதியை    கா    7.27
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ம    3.42
    யோகம்    :    மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்,அனுஷம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Sagala Thirumana Dhosham Neenga

    துளசி கல்யாணம் செய்தால் திருமணம் நடைபெறும்.

    ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் நடைபெறும்.

    சென்னை – திருவேற்காட்டில் கருமாரியம்மனை தரிசிக்கும் பெண்களுக்கு திருமண பாக்கியம் கூடி வருகிறது.

    வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்தால் திருமணம் நடைபெறும்.

    நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள்.

    கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களும் நீங்கி திருமணம் கூடி வருகிறது.

    முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் நிச்சயமாகும்.

    வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றினால் திருமணம் கை கூடும்.

    புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் நடைபெறும்.

    ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்.

  • Nellaippar Koil Ippasi Thiruvizha

    நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கி இருக்கிறது. 

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 5-30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 6 மணிக்கு காந்திமதி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா சுற்றி வந்தார்.

    இதைத்தொடர்ந்து அம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் காலை 7-30 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர். இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் வீதி உலா நடந்தது.

     4-ஆம் திருவிழாவான வருகிற 18-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், காலை 9 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் காந்திமதி அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் வீதிஉலாவும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 21-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் தந்த பல்லக்கு வாகனத்தில் தவழ்ந்த திருக்கோலத்திலும், இரவு 8 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    22-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள் வெள்ளி சப்பரத்தில் பச்சை சாத்திவீதி உலாவும், இரவு 8 மணிக்கு கிளி வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது. 

    23-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாள், செப்பு தேரில் பவனியும், இரவு 8 மணிக்கு தந்தப்பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 

    24-ந்தேதி காலை 8 மணிக்கு அம்பாளுக்கு தங்க பல்லக்கில் தீர்த்தவாரியும், இரவு 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மாள் தவக்கோலத்துடன் தங்கசப்பரத்தில் கம்பை நதிக்கு எழுந்தருளுகிறார்.

    25-ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை 8-30 மணிக்கு சுவாமி ரி‌‌ஷப வாகனத்தில் அம்பாளுக்கு காட்சி கொடுக்க கோவிலில் இருந்து எழுந்தருளலும், 12 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் ரி‌‌ஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் வைபவமும் நடக்கிறது.

    26-ந்தேதி அதிகாலை 4-30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது. 

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஊஞ்சல் திருவிழா நடக்கிறது. 29-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரி‌‌ஷப வாகனத்தில் மனுவீடு பட்டணப்பிரவேசம் வீதிஉலா நடக்கிறது.

  • Saneeswararukku Pushpanjali

    உலக மக்கள் நோயின்றி ஆரோக்யத்துடன் வாழ, நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு பிரத்யோகமான முறையில் வாலாஜாபேட்டையில் ஆலயம் அமைத்து அவருடன் 77 பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் நலனே குறிக்கோலாக கொண்டு தினசரி யாகங்கள், விசேஷ பூஜைகள் என்ற முறையில் மிகவும் சிறப்பாக நடத்தி வருகிறார் இப்பீடத்தின் ஸ்தாபகரும் பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    ஒவ்வொரு தேவைக்கும் ஒரு கடவுள் என்ற முறையில், அக்கடவுள்களை பிரதிஷ்டை செய்து அதற்குரிய ஹோமங்கள் இங்கே சிறப்பாக நடைபெற்று வருகிறது. உண்டியல், தனி நபர் அர்ச்சனை என்று இல்லாமல் உலக நலனுக்காக கூட்டு பிரார்த்தனையும், சிறப்பு ஹோமங்களுமே இங்கு பிரதானமாகும். தன்னுடைய தாய்க்கு ஏற்பட்ட கொடிய நோய் வேருயாருக்கும் வரக்கூடாது என்ற முறையில் இந்த ஆரோக்ய பீடத்தை நிறுவி, பெற்றோருக்கும் ஆலயம் அமைத்து வழிபட்டு வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். மேலும் தேச நலம் தேக நலம் என்ற முறையிலும், தேக நலமே தேச நலம் என்ற முறையிலும் பாரத மாதாவிற்கு ஆலயம் அமைத்துள்ளார்.

    பாதாள சொர்ண சனீஸ்வரர் :

    கடந்த 15 ஆண்டுகளாக மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சனி சாந்தி ஹோமம் நடைபெற்று, காலசக்கிரத்தில் அமைந்துள்ள வன்னி விருட்சத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இத்தகைய பீடத்தில் சுகபிரம்மரிஷியின் ஓலைச்சுவடியில் தெரிவித்த பிரகாரம், நவக்கிரகங்களில் நீதிபதியாக உள்ள சனி பகவானுக்கு ஒரு ஆலயம் அமைக்க ஸ்வாமிகள் முன்வந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வர்ருக்கும் ஆலயம் அமைத்து விசேஷ பூஜைகள் செய்து வருகிறார்.

    சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். பிரபஞ்சத்தையை ஆட்டிப்படைக்கும் ஒரு மாபெரும் கிரகம் தான் சனீஸ்வரர். தவறு செய்பவர்களை தண்டிப்பதையும், தர்மம் செய்பவர்களை காப்பதும் இவருடைய முக்கிய பணியாகும். ராஜாங்க பதவிகளில் அமர வைப்பவரும், மரணத்தை மாற்றுபவரும் இவரே. ஆயுள் தோஷத்தை நீக்கி ஆரோக்யத்தை அளிப்பவரும் சனி பகவானே. அவரவர் பாப புண்ணியங்களுக்கேற்ப பலா பலன்களை அள்ளிதருபவரும் இவரே. இவருக்கு மந்தன், மகேசன், ரவிபுத்ரன், நொண்டி, முடவன், ஜடாதரன், ஆயுள் காரகன் என பல பெயர்களில் அழைக்கப்படும் சனி சூரியனின் மகனாவார். இவர் ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றிவர 30 வருடங்கள் ஆகிறது.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வரருக்கு உலகில் எங்கும் இல்லாதவாறு முதன்முறையாக சொர்ணத்தில் விக்ரகம் அமைத்து, 20×27 என்ற நீள அகலத்தில், 13 படிகள் கொண்டு பாதாளத்தில் பிரத்யோக மண்டபம் அமைத்து பக்தர்கள் வலம் வரும் வகையில் அமைக்கப்பட்டு, உலகில் முதல் சொர்ண சனீஸ்வர பகவான் ஆலயமாக திகழ்ந்து வருகிறது என்பது நம் பாரத நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடியதாகும்.

    பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு புஷ்பாஞ்சலி :

    ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, அர்தாஷ்டம சனி, ஜென்ம சனி, பாத சனி போன்ற சனிக்கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், சனி பகவானால் மக்களுக்கு ஏற்படும் பயங்கள் நீங்கி சுபிக்ஷங்கள் பெற மேற்கண்ட பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞப்படி வருகிற 19.10.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை விசேஷ பூஜைகளும் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :
    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

     

  • Kula deiva vazhipadu

    குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.  குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்களின் முன்னோர்கள் எந்த நாளில் வழிபாடு செய்தார்களோ அதே நாளில் வழிபாடு செய்வது நன்று.  உதாரணமாக நம் முன்னோர்கள் வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு செய்திருப்பார்கள்.  

    ஆனால் நாமோ வெள்ளிக்கிழமை செய்யாமல் ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்பதால் அந்த நாளில் வழிபாட்டினை மாற்றி வைத்துக்கொள்வது மிகவும் தவறு.

    குலதெய்வ வழிபாடு புதிதாக செய்ய தொடங்குபவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரையில் வழிபாடு செய்து வருவது நல்லது.  ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு ஓரை காலை சூரிய உதயம் ஆன நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை இருக்கும்.  

    அத்தகைய நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்து வருவது மிகுந்த நற்பலன்களை கொடுக்கும்.  காலையில் செல்ல இயலாதவர்கள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.  இந்த நேரம் அவரவர் இருப்பிடத்தின் சூரிய உதய நேரத்தினைப் அனுசரித்து மாறுபடும்.
     

  • October 16 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – பயம்
    மிதுனம் – ஈகை
    கடனம் – சிரத்தை  
    சிம்மம் – கவனம் 
    கன்னி –  தெளிவு
    துலாம் –  எதிர்ப்பு 
    விருச்சிகம் – அமைதி
    தனுசு –     அன்பு
    மகரம் –  மறதி
    கும்பம் – காரியசித்தி
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்
     

  • October 16 Karthigai Viradham

    அக்டோபர் 16 –  கார்த்திகை விரதம்
    விகாரி வருடம் – புரட்டாசி 29
     கார்த்திகை
    16-அக்-2019 புதன்  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    பரணி    ம    2.46
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி,விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்