Thirupathy Arakattlaiku Nankodai

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு பக்தர்கள் மூலமாக 1,126 கோடி ரூபாய் இதுவரை பக்தர்கள் நன்கொடை வழங்கி உள்ளனர்.

 பக்தர்கள் வழங்கிய நன்கொடையை வங்கியில் செலுத்திய  முதலீட்டின் மூலமாக வரக்கூடிய வட்டியில் இருந்து தினந்தோறும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

 அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு ஒரு நாளைக்கு 30 லட்ச ரூபாய் வரை செலவாகிறது.

பிறந்த நாள், திருமண நாள், மற்றும் சுபநிகழ்ச்சிகள், நினைவுநாளில் நன்கொடை வழங்கும் பக்தர்களின் பெயரில்   அன்ன பிரசாதம் வழங்கும் திட்டமும் உள்ளது. இதன் மூலம்   30 லட்ச ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்கள் அவர்கள் குடும்பத்தினருடன் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கலாம்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *