Andal Soodi Kalaindha malai

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கருட சேவைக்காக கொண்டு வரப்பட்ட  ஆண்டாள் சூடி கொடுத்த மாலைக்கு சிறப்பு பூஜை.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 30 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தொறும் காலை இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிரம்மோற்சவத்தின் மூக்கிய வாகன சேவையான கருட சேவை நாளை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. இதையொட்டி விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிகொடுத்த கிளியுடன் கூடிய மாலை இன்று திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது.  

தலைமையில் அர்ச்சகர் ரமேஷ், சுதர்சன் ஆண்டாள் மாலை கொண்டு வந்தனர். ஆண்டாள் மாலைக்கு ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர் மடத்தில் வைத்து  ஜீயர்கள்,  கூடுதல் செயால் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் நான்கு மாடவீதியில் யானைகள் அணிவகுத்து முன் செல்ல நாதஸ்வரங்கள் முழங்க நான்கு மாடவீதியில் ஆண்டாள் மாலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஏழுமலையான் கோயிலில் வழங்கப்பட்டது.

ஆண்டாள் சூடி கொடுத்த மாலை நாளை காலை மூலவருக்கும், மோகினி அலங்காரத்தில் வரும் மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படவுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *