Thirupathy 3 days dharshan Cancel

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3, 4 , 5 ஆகிய தேதிகளில் திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான  கருட சேவை 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த கருட சேவையை காண 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் ,  புரட்டாசி மாதம் 3  சனிக்கிழமை அன்று தமிழக பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால்  3 , 4,  5 ஆகிய தேதிகளில் மலைப்பாதையில் பாதயாத்திரையாக  நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கக்கூடிய திவ்ய தரிசனம் டிக்கெட் மற்றும் ஆதார் அட்டை மூலமாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசனம் டிக்கெட் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *