Author: லிங்கேஷ்

  • Thirisoola Nadhar

    சென்னை மீனம்பாக்கத்தில் சர்..சர்.. என விமானங்கள் வந்து இறங்குகின்றன, மேலேறி பறக்கின்றன, பரபரப்பாக இயங்கும் நெடுஞ்சாலையை கடப்பவர்கள் இங்கு இப்படி ஒரு ஆன்மீக தலம் இருப்பதை அறிவார்களா என்று தெரியவில்லை. இறைவனின் பெயராலேயே இந்த ஊர் இன்றளவும் அறியப்படுகிறது. 

    பிரம்மன் வழிபட்ட தலமாக இங்கு திரிசூலநாதர் எழுந்தருளியிருக்கிறார். நான்கு மலைகள் சூழ நடுவில் அமைந்துள்ளது திரிசூல நாதர் திருக்கோயில். தனது படைப்புத்தொழில் இடையூறின்றி நடக்க வேண்டி பிரம்மதேவர் ஒரு குளத்தை வெட்டி அங்கு சிவலிங்கம் அமைத்து வழிபடுகிறார். பிரம்மன் உருவாக்கிய பாணதீர்த்தம் கொண்ட இந்த சிவலிங்கமே திரிசூலநாதர் திருக்கோயில். 

    நான்கு வேதங்களே நான்கு மலைகளாக, வேதங்களின் உட்பொருளான இறைவன் அவற்றின் நடுவில் வீற்றிருக்கும் இடமே திரிசூல நாதர் திருக்கோயில்.  பிரம்மதேவர் அமைத்ததாக கூறப்படும் தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. கோயிலின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜை, வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. 


    விமான நிலையத்திற்கு எதிரில், ரயில்வே கேட்டை கடந்து வந்தால், ஒருகிலோமீட்டர் தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நந்தியெம்பெருமானை வழிபட்டு, நல்ல தரிசனத்திற்கு அனுமதிகேட்டு உள்ளே நுழைவோம். நுழைந்ததும் திரிசூலநாதரை தரிசிக்கலாம். திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதராக இருந்தாலும், அவருக்கு அருகே சௌந்தராம்பிகை இருக்கிறார். நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது, காரணம் திரிசூலநாதரின் அருகே இடப்புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இப்படி இருப்பதற்கு பின்னே ஒரு வரலாறு இருக்கிறது. 

    அந்நியர் படையெடுப்பின்போது கோயிலில் இருந்த சௌந்தராம்பிகை தாயாரின் கையில் கட்டைவிரல் சேதமடைந்துவிடுகிறது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக்கூடாது என்று கூறி, தனியே வைத்துவிடுகிறார்கள்.அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரிசெய்து, மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு தாய் அருள் கூற, அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே அன்னையை இருக்கச்செய்திருக்கிறார்கள். அன்னையும், தந்தையுமாக உயிர்ப்புடன் அருள் தரும் தலம் இது.


    அன்னையை தரிசிக்க வேண்டும் என்றால், ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால், அன்னையின் தரிசனத்தை பெறலாம். காலம் காலமாக அருள் சுரக்கும் அன்பு முகத்துடன் காட்சிதரும் அன்னை, உண்மையிலேயே சௌந்தரம் ததும்பும் பேரழகி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  இந்தக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 -1120) காலத்தில் கட்டப்பட்டது. முதலில் வானவன் சதுர்வேதிமங்களம் என இந்த ஊர் அழைக்கப்பட்டது. முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் திருநீற்றுசோழநல்லூர் என்றும் பின்னர் இறைவனின் பெயரால் திரிசூலம் என்றும் அழைக்கப்படுகிறது. 
    பல்லவபரமன வானவன் மாதேவிச் சதுர்வேதிமங்களம், திருநீற்றுசோழநல்லூர், திருச்சுரம், சுரத்தூர், பிரம்மபுரி, திரிசூலம் என்ற பெயர்களில் இந்த ஊர் வழங்கப்படுகிறது.

    இக்கோயிலில் ஆதிசங்கரர், ஐயப்பன், ஆஞ்சநேயருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின்றன. கோயிலின் பழைமையை இங்கு நுழைந்ததுமே உணர முடியும். யக்ஷர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை.  பிரம்மனுக்கே அருள்பாலித்த இடம் என்பதால் திரிபுரசுந்தரி உடனுறை திரிசூலநாதரை வழிபட்டால் நமக்கு வரும் கெட்ட நேரங்களும் நல்லநேரங்களாக மாறும்..

    நமச்சிவாயம் வாழ்க, நாதன் தாள் வாழ்க.. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 
    –    எழுத்தாளர் பாமா
     

  • Thirupathy Koil Special Dharshan

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் சிபாரிசு கடிதங்களுக்கு அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி  தரிசனம் செய்வதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மேயர்கள்  என்று மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசு கடிதங்களுக்கு அறைகள் மற்றும் விஐபி  தரிசன  டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே கோயிலில், முக்கிய பிரமுகர்களின் பதவியை கவுரவிக்கும் விதமாக, அவர்களின்  சிபாரிசு கடிதங்களுக்கு வழங்கப்பட்டு வந்த அறை ஒதுக்கீடு, தரிசன டிக்கெட்டுகள் வழங்குவது தேர்தல் முடியும் வரை முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. 

    ஆனால் நேரடியாக வரும் விஐபிக்கள் வழக்கம்போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏழுமலையான் கோயிலுக்கு முன் அரசியல் பேசக்கூடாது  என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிலர் தொடர்ந்து அரசியல் பேசி வந்தனர். 

    தற்போது தேர்தல் விதிகள் உள்ளதால் கோயிலுக்கு வரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் வாக்குறுதியை அளிப்பதோ,   பேசுவதோ கூடாது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வழக்கம்போல் சிபாரிசு கடிதங்கள் எடுத்து வருபவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

  • Dhayanam manadhai kattupadutha

    முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருந்து கொண்டு மனதைக் கட்டுப்படுத்தாமல் எண்ணங்களை மனதின் வழியே சுதந்திரமாக விடுங்கள். என்ன என்ன எண்ணங்கள் மனதில் உண்டாகின்றதோ அவற்றை முக்கியப்படுத்தாது அப்படியே விடுங்கள். 

    மனதில் நல்ல எண்ணங்கள் மட்டுமன்றி தீய எண்ணங்களும் ஏற்படலாம். தீய எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டுமென்று அவசியமில்லை. அதனை அதன்படியே விட்டுவிட வேண்டும். இவ்வளவு கெட்ட எண்ணங்கள் இருந்ததா என்று எண்ணும் போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதேபோன்றே நல்ல எண்ணங்களும் உருவாகும். 

    இவ்வாறு தினமும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் தோன்றி இறுதியில் எண்ணுவதற்கு எண்ணங்கள் இல்லாத நிலையில் தாமாகவே எண்ணங்கள் குறைந்து கொண்டே வந்து இறுதியில் மனம் அமைதியடையும்.

    தியானம் செய்ய ஆரம்பித்த பின்னர் அவசியமற்றவர்களின் தொடர்புகளை விட்டுவிடுவதோடு மனதைக் குழப்பும் காரியங்களிலும் ஈடுபடாதிருப்பது நலம் பயக்கும்.

  • Marudeeswarar koil Panguni vizha

    திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவிலின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

    சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. 

    திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் வீதிஉலா நிகழ்ச்சியும், ஆலய மண்டபத்தில் சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அத்துடன், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

  • Kallazhagar koil thirukalyanam

    108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது.

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது திருக்கல்யாண வைபவம். 

    இந்த விழாவானது வருகிற 18-ந்தேதி காலை 9.45 மணி அளவில் தொடங்குகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவியருடன் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து அடுத்த 2 நாட்கள் அதே மண்டப வளாகத்தில் சாமி, தேவியர்களுடன் எழுந்தருள்வார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாண வைபவம் வருகிற 21-ந்தேதி, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது. அன்று காலை 11.15 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் விழா நடைபெறுகிறது. மேலும் பலவண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் ஸ்ரீதேவி, பூமிதேவி, கல்யாணசுந்தரவள்ளி, ஆண்டாள் ஆகிய 4 பிராட்டிமார்களையும் ஒரே நேரத்தில், ஒரே மேடையில் திருக்கல்யாண திருக்கோலத்தில் கள்ளழகர் பெருமாள், மாலைகளையும், மாங்கல்யங்களையும் அணிவித்து மணக்கிறார்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பக்தி 
    ரிஷபம் – அமைதி
    மிதுனம் – சிரமம்
    கடனம் – திறமை 
    சிம்மம் – களிப்பு 
    கன்னி – காரியசித்தி
    துலாம் –   சோர்வு
    விருச்சிகம் – வரவு 
    தனுசு – ஊக்கம்
    மகரம் –   அலைச்சல் 
    கும்பம் – கோபம் 
    மீனம் – பகை
    சந்திராஷ்டமம்    – சுவாதி, விசாகம்

  • March 12 Karthigai Naal

    மார்ச் 12 – கார்த்திகை 
    விளம்பி வருடம் – மாசி 28
     கார்த்திகை 
    12-மார்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    இ    1.46
    நட்சத்திரம்    :    கார்த்திகை    இ    2.03
    யோகம்    :    சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    : சுவாதி, விசாகம்
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Nandhiyin Kurukke Sella Kudadhu

    ஒவ்வொரு சிவன் கோயில் வாசலிலும் நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலங்களில் நந்திக்கு சிறப்பு பூஜை செய்து முக்கியத்துவம் கொடுப்பர். நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என பலரும் கூறுவர்.

    இதற்கு காரணம் நந்தி கர்ப்பகிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். நந்தி சிவனின் வாகனமாகும். வாகனம் எதுவாக இருந்தாலும் அது ஜீவ ஆத்துமாவை குறிக்கும். ஜீவ ஆத்துமா கருவறையில் உள்ள பரம ஆத்துமாவை (இறைவன்) குறிக்கும். ஜீவாத்துமாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். 

    இதனால் கருவறையில் உள்ள இறைவனை பார்த்த வண்ணம் உள்ளது. நந்தியின் குறுக்கே செல்ல தடை விதிக்க காரணம் கடவுளை அடைய  நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்பதால் தான். சன்னதியை மறைத்து நிற்க வேண்டாம் என்பதற்கு காரணமும் இதுதான். 

    கடவுள்களுக்கெல்லாம் முதல்வன் எப்படி விநாயகரோ அதே போல் கோயில்களுக்கெல்லாம் முதல்வன் நந்தீஸ்வரர் தான். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது. 
     

  • Tuesday Friday

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

    எனவே இவ்விரு தினங்களிலுமே ஒரு சில விடயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
     
    சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டில் வெள்ளி நிறப் புறாக்களை வளர்க்க வேண்டும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்யக் கூடாதவை?

    குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

    இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

    ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

    வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

    விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

    நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.
     

  • Dyanam Sei murai

    தியானத்தின் நோக்கம் தியானிக்கப்படும் பொருளின் தன்மையை அறிந்து கொள்ளுல் ஆகும். அதற்கு மனம் ஒரு கருவியாக பயன்படுகிறது. தியானத்தில் 2 நிலைகள் உள்ளன.

    நம் மனதில் ஏதாவது ஒரு உருவத்தை குறித்தோ அல்லது ஒரு கருத்தை குறித்தோ தொடர்ந்து சிந்தனை செய்வது. மனதில் இருந்து எல்லாவிதமான எண்ணங்களையும் அகற்றிவிடுதல். முதல் நிலையில் ஏதாவது ஒரு பொருளின் மீது அல்லது குரு புகட்டிய ஒரு மந்திரத்தை உச்சரிக்க தொடங்குகிறோம். அப்போது நமக்கு ஒரு புதுமையான அனுபவம் உண்டாகும். 

    இதுவரை நம் மனதில் புதைந்து உறங்கி கிடந்த நூற்றுக்கணக்கான நினைவுகள் நம் கண்முன்னே தோன்றும். நமக்கு இது சிக்கலாக கூட இருக்கும். அதற்கும் வழி இருக்கிறது. நாம் உச்சரிக்கும் மந்திரத்தை அதன் பொருள் உணர்ந்து அப்பொருளின் பாவத்துடன் நம்மை அதில் பிணைத்து கொண்டால், நாம் தியான நிலையை அடையமுடியும். மற்ற நினைவுகள் மறந்து போகும்.

    இரண்டாம் நிலையில், எவ்வித இடர்பாடுகளும் இல்லாமல், அமைதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ளவேண்டும்.  கால் முதல் தலை வரை எல்லா உறுப்புகளும் ஓய்வில் இருக்க வேண்டும். காதுகள் திறந்திருந்தால், வெளிச்சத்தங்கள் இடையூறு செய்யும். 

    மனதிலிருந்தும் பல எண்ணங்கள் எழும். நாம் அதை பொருட்படுத்த தேவையில்லை. வேடிக்கை பார்ப்பவரை போல நாம் ஒதுங்கி நிற்க வேண்டும். அப்போது நம் காதுகள் திறந்திருந்தாலும் எவ்வித இடர்பாடுகளும் இருக்காது. தியானம் செய்தவன் மூலம் நம்மை நாம் உணர முடியும்.