Marudeeswarar koil Panguni vizha

திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோவிலின் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சென்னையில் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாக திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையடுத்து ஆலயத்தின் மேற்கு கோபுரம் அருகே உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலா நடைபெற்றது. 

திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் வீதிஉலா நிகழ்ச்சியும், ஆலய மண்டபத்தில் சொற்பொழிவு, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அத்துடன், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *