Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • திருச்செந்தூரில் நவம்பர் 5 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
    திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா, யாக சாலை பூஜையுடன் அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது.
    விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)நடைபெறுகிறது.

    இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது திருச்செந்தூர் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    திருச்செந்தூரில் காவல்துறையினரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

     

  • தாயார் ரங்கநாயகி தாயாருக்கு புதிதாக திருமாங்கல்யம்

    108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மூலவர் அரங்கநாதர். தாயார் ரங்கநாயகி. தற்போது தாயாருக்கு புதிதாக திருமாங்கல்யம் சாத்தப்பட உள்ளது. இத்திருமாங்கல்யத்தை தமிழகத்தில் உள்ள பிரபல நகைக் கடையின் உரிமையாளர் வழங்குகிறார்.

  • திருமலையில் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை….

    திருப்பதி திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தம் ஆஞ்சநேய சுவாமிக்கு ஏகாந்த சேவை தொடங்கியது.
    அஞ்ஜனாத்திரி மலையில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி தீர்த்தக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில், திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வது வழக்கம்.
    தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும். அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல தேவஸ்தானம் படிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் இதுவரை ஏகாந்த சேவை நடத்தப்படவில்லை. அதனால் கோயில் பூஜாரி மாதவதாஸ் தலைமையில் முதல்முறையாக தீபாவளி நாளான கடந்த 29-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை தொடங்கப்பட்டது.
    ஏகாந்த சேவையின்போது பயன்படுத்தப்படும் ஊஞ்சல் வடிவ மரக்கட்டில், பட்டால் ஆன மெத்தை, தலையணை, துப்பட்டி உள்ளிட்டவற்றை பக்தர் ஒருவர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.
    தற்போது, உள்ளூர்வாசிகள், பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் ஏகாந்த சேவையில் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருகின்றனர்.

  • சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்….

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் 3-ஆம் நாளில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    சுப்பிரமணிய சுவாமி கந்தசஷ்டி திருவிழா கடந்த திங்கள்கிழமை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, அன்று அதிகாலை 1 மணிக்கும், 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கும் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. 3-ஆம் நாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.
    அங்கு கும்பங்கள் வைக்கப்பட்டு, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மூலவருக்கு உச்சிகால அபிஷேகத்துக்கு பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது.
    இதையடுத்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையிலிருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட, சண்முகவிலாச மண்டபத்துக்கு வந்தமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • திருப்பதி நகரத்தை அழகுபடுத்த ரூ.188 கோடி…

    திருமலை, திருப்பதி நகரத்தை அழகுபடுத்த 188 கோடி ரூபாய் நிதி ஒதுக்க, தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோயில்களில் நடைபெற உள்ள மனகுடி திருவிழாவுக்காக ரூ.66 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
    அதேபோல நவம்பர் மாதம் இறுதியில் ஐதராபாத்தில் உள்ள சன்சாபாத் நகரில் சீனிவாச கல்யாண உற்சவத்தை நடத்துவது எனறும், திருமலை, திருப்பதி நகரை அழகுபடுத்தவும், மின் விளக்குகள் அமைக்கவும், பல்வேறு கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் ரூ.188 கோடி நிதி ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
    மேலும், சொர்லோப்பள்ளி, சீனிவாசமங்காபுரம் சாலைகளை சீர் செய்ய ரூ.2 கோடி நிதி ஒதுக்குவது. 6 மாதங்களுக்குத் தேவையான 21 லட்சத்து 50 ஆயிரம் கிலோ எடையிலான நெய் கிலோ ரூ.364 வீதம் ரூ.78 கோடியே 28 லட்சம் செலவில் கொள்முதல் செய்வது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சந்திரபிரபை வாகனம் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் செலவில் தாயார் செய்வது. அதற்காக 165 கிலோ எடையிலான வெள்ளியை வழங்குவது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆராதனை பீடம், சிம்மாசனம் ஆகியவற்றுக்கு ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் செலவில் தங்க முலாம் பூசுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

  • சபரிமலையில் நவம்பர் 15-ஆம் தேதி நடை திறப்பு

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மகர விளக்கு முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. 15 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் நடை டிசம்பர் 26-ஆம் தேதி இரவு மூடப்படுகிறது.
    நவம்பர் 16-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி வரை தினந்தோறும் காலை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெறும்.

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20.1.2017 காலை நடை மூடப்படும்.
    மண்டல மகர விளக்கு பூஜை நாட்களில் டிசம்பர் 31-ஆம் தேதி முதல் ஜனவரி 19.1.2017 வரை நெய் அபிஷேகம் நடைபெறும்.

    இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை நடை திறந்து 17-ஆம் தேதி இரவு நடை மூடப்படும்.
    புதிய கொடி மரம் பணிகள் நடைபெற்று வருவதால் ஆண்டு உற்சவம் ஜூன் மாதம் மாற்றப்பட்டுள்ளது தேதி முடிவு செய்யப்படவில்லை.

  • திருத்தணியில் சஷ்டி விழா….

    திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது வரும் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக சஷ்டி விழா நடைபெற உள்ளது.

    இதில், தினந்தோறும் காலை புஷ்பம், பட்டு, தங்கக் கவசம், திரு வாபரணம், வெள்ளி மற்றும் சந்த னக் காப்பு ஆகிய அலங்காரங் களில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்க உள்ளார். மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழாவின் இறுதி நாளான நவ.6-ம் தேதி காலை 11 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று முதல் நவ.5-ம் தேதி வரை உற்சவரான சண்முகருக்கு லட்சார்ச்சனையும், நவ.5-ம் தேதி மாலை 5 மணியளவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. நவம்பர் 5-ம் தேதி வரை இருவேளைகளில் தேவார பாராயணம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் அமைதிக்கான ஓர் ஆன்மீக பயணம்

    வாழும் கலையின் தோற்றுனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்ட பிரான்ஸ், போலந்து, ஸ்வீடன் , நார்வே போன்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி பயணம் மேற்கொண்டார்.
    இந்த பயணத்தின் போது அவர் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் பாராளுமன்றங்கள் போன்றவற்றில் பல்வேறு துறைகளை சார்ந்த ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்களை சந்தித்து தனது அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான செய்தியை அளித்தார்.
    பின்னர் நார்வே பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய அவர் அந்நாட்டின் பாராளுமன்றத் தலைவரான ஒலிமிக் தொம்மெஸ்ஸெனை சந்தித்தார்.
    முன்னதாக திங்கள் கிழமையன்று மாலை குருதேவர் சமுதாய மக்களை சந்தித்து உரை நிகழ்த்தினார். மேலும் வாழும் கலை அமைப்பும், நார்வே ஒலிம்பிக் விளையாட்டு குழுவும் ஒன்றிணைந்து விளையாட்டு வீரர்களுக்கு மேலும் பல நம்பிக்கை அளிக்கும் திட்டங்களை நிகழ்த்துவதென்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தீர்மானித்தனர்.

  • கோதண்டராமர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்…

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோதண்டராமர் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
    திருப்பதி கோதண்டராமர் கோயிலில் வரும் 30-ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலைப் பல்வேறு வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. காலை சுப்ரபாதம், தோமாலை சேவையை தொடர்ந்து திருமஞ்சன சேவை நடைபெற்றது. இதையொட்டி, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், சிகைக்காய், பச்சை கற்பூரம் போன்றவற்றால் கர்ப்பகிரகம் உட்பட கோயில் வளாகம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.
    இதேபோன்று தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி, திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • திருப்பதி தேவஸ்தான அறைகளில் தங்க புதிய விதிமுறை!

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அறைகள் வாடகைக்கு எடுக்க மத்திய, மாநில அரசின் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக 50 ரூபாய் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரையிலான அறைகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் திருப்பதி, திருமலையில் தேவஸ்தான ஓய்வு அறைகள் வாடகைக்கு பெற இனி கட்டாயம் மத்திய, மாநில அரசின் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

    ஆதார், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளில் எதெனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை தேவை எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.