Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • ரிஷபம்: மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    ரிஷபம்
     

    (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

     

    கிரகநிலை:

     

    தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில்  குரு (வ)  – தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் – சுக ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், புதன் (வ), சனி, ராஹூ, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

     

    கிரகமாற்றங்கள்:

     

    03-03-2026  அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-03-2026  அன்று சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2026 அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    14-03-2026  அன்று சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-03-2026  அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

     

    பலன்:

     

    தனது நேர்மையான உணர்வுகளால் வாழ்வில் வெற்றி பெறும் ரிஷப ராசிக்காரர்களே இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை  வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  பழைய விஷயம் ஒன்றால் வாக்குவாதம் ஏற்பட்டு சரியாகும்.ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும் போதும் கவனம் தேவை.

    பெண்களுக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை  தவிர்ப்பதும் நல்லது.

    அரசியல்வாதிகள் வாக்கு வன்மை அதிகரிக்கும். பேசி சில காரியங்களைச் சாதிக்க முற்படுவீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழ்நிலை உருவாகும்.

    கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். புதிய வாய்ப்புகள் வந்து சேரும். செய்து கொண்டிருக்கும் வேலைகள் மிகச் சிறப்பாக நடந்து முடியும்.

    மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.

     

     

    கார்த்திகை – 2, 3, 4:

    இந்த மாதம் உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடும் போது கவனத்துடன் இருப்பது நல்லது. வாழ்க்கை தரம் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லாவற்றிலும் மனகவலை ஏற்படும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை.

     

     

    ரோகினி:

    இந்த மாதம் தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் கவனம் தேவை.

     

    மிருகசீரிஷம் – 1, 2:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் கவனமாக இருப்பது  லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

     

     

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வெள்ளிக்கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

    அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

  • மேஷம் : மார்ச் மாதம் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்! அனைத்திலும் நல்லது நடக்கும்!

    மேஷம்

    கிரகநிலை:

    தைரிய வீரிய ஸ்தானத்தில்  குரு (வ)  – சுக ஸ்தானத்தில் சந்திரன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், சுக்ரன், புதன் (வ), சனி, ராஹூ, செவ்வாய் – என கிரக நிலைகள் உள்ளன.

    கிரகமாற்றங்கள்:

    03-03-2026  அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    06-03-2026  அன்று சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    13-03-2026 அன்று புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

    14-03-2026  அன்று சூர்ய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    27-03-2026  அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    பலன்:

    பிறர் குற்றங்களை எளிதில் மன்னிக்கும் குணமுடைய மேஷ ராசிக்காரர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். மனதில் இருக்கும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். முக்கியமான பணிகள் துரிதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது.

    உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வந்து சேரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.

    குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிøடேய நெருக்கம் உண்டாகும். சகோதரர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும்.

    பெண்களுக்கு:முக்கியமான  வேலைகளில் தாமதம் உண்டாகும். வீண் பிரச்சனைகளை கண்டால் ஒதுங்கி சென்று விடுவது நல்லது.

    அரசியல்வாதிகள் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக யோசித்து செயல்பட்டால் காரியங்களை சாதித்துக் கொள்ளலாம். உங்கள் கட்சி பிரச்சனைகள் குடும்ப சந்தோஷத்தை கெடுக்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    கலைத்துறையினர் வாக்கு சாதுர்யத்தால் சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

     

    அசுபதி:

    இந்த மாதம் மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது. ஆன்மீக போக்கு மனதிற்கு நிம்மதியைத் தரும். மேலிடத்தில் கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.

    பரணி:

    இந்த மாதம் அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

    கார்த்திகை 1:

    இந்த மாதம் எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இருந்து வந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள்.

     

    பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.

    சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

    அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10, 11

     

  • பம்பையில் நீராடுவது முதல் ஐயப்பனைத் தரிசிப்பது வரை நீங்கள் செய்ய வேண்டியவை!

    சபரிமலை பயணம்: பம்பையில் நீராடுவது முதல் ஐயப்பனைத் தரிசிப்பது வரை நீங்கள் செய்ய வேண்டியவை!

     

    கேரளாவின் புண்ணிய நதியான பம்பை, சபரிமலை ஐயப்பனைத் தரிசிக்கச் செல்லும் கோடிக்கணக்கான பக்தர்களின் பாவங்களைப் போக்கும் ஒரு புனிதத் தீர்த்தமாகும். "தட்சிண கங்கை" என்று போற்றப்படும் இந்த ஆற்றின் கரையில்தான், பந்தள இளவரசன் மணிகண்டன் மகிஷியை வதம் செய்துவிட்டு, தவம் புரிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. எனவே, பம்பையில் நீராடுவது என்பது வெறும் உடல் தூய்மை மட்டுமல்ல, அது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் ஒரு தெய்வீகச் சடங்காகும்.

    பம்பை நதி நீராடல் மற்றும் வழிபாட்டு முறைகள்:

    சபரிமலை யாத்திரையில் பம்பை நதிக்கு ஒரு தனித்துவமான இடம் உண்டு. மலை ஏறுவதற்கு முன்னதாக, பக்தர்கள் தங்களது இருமுடியைத் தலையில் சுமந்தபடி ஐயப்ப மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு ஆற்றில் இறங்க வேண்டும். ஆற்றில் மூன்று முறை முழ்கி எழுந்து, பின்னர் கரையில் நின்று சூரிய நமஸ்காரம் செய்வது மிக முக்கியமான சடங்காகும். அதன் பிறகு, ஈர ஆடையுடன் கரையில் அமர்ந்து தியானம் செய்வதும், விபூதி மற்றும் குங்குமம் அணிந்து 'சுவாமி சரணம்' என முழக்கமிடுவதும் பக்தர்களுக்கு மனவலிமையைத் தரும். மேலும், பம்பையின் காவல் தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைத்து, அர்ச்சனை செய்வது பாதுகாப்பான பயணத்திற்கு அடித்தளமிடும்.

    விரத முறைகளும் பயணத் தயாரிப்புகளும்:

    ஐயப்பனின் அருளைப் பெற 41 நாட்கள் கடும் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த காலத்தில் கருப்பு அல்லது நீல நிற ஆடை அணிந்து, புலால் உணவைத் தவிர்த்து, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

    • இருமுடி கட்டு: குருசாமியின் முன்னிலையில் நெய் தேங்காய் மற்றும் பூஜை பொருட்களைக் கொண்டு இருமுடி கட்டைத் தயார் செய்ய வேண்டும்.

    • அத்தியாவசியப் பொருட்கள்: மாற்றுத் துணிகள், குளிருக்குத் தேவையான உடைகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளைத் தயாராக வைத்துக்கொள்வது நல்லது.

    நீலிமலை முதல் பதினெட்டாம் படி வரை:

    பம்பையில் இருந்து தொடங்கும் மலையேற்றம் என்பது ஒரு வாழ்வியல் பாடமாகும். கருப்பசாமி சன்னதி மற்றும் வாவர் சன்னதியில் தரிசனம் செய்த பிறகு, செங்குத்தான நீலிமலைப் பாதையில் ஏறும்போது உடல் சோர்வு ஏற்படலாம். அந்த தருணத்தில் "சுவாமி சரணம்" என்ற கோஷம் மட்டுமே பக்தர்களுக்கு ஊக்கமளிக்கும் மருந்தாகும். சரங்குத்தி பகுதியில் சரணக்கோல் நட்டு, பின்னர் புனிதமான பதினெட்டாம் படியை அடையலாம். ஒவ்வொரு படியிலும் விழுந்து வணங்கி, பதினெட்டாம் படியேறுவது ஒரு பக்தனின் பிறவிப் பயனை அடையச் செய்யும் உன்னத தருணமாகும்.

    சன்னிதான தரிசனமும் அதன் பலன்களும்:

    சன்னிதானத்தை அடைந்ததும், நெய் அபிஷேகம் செய்து மணிகண்டனைத் தரிசிப்பது பெரும் பாக்கியம். அங்கு வழங்கப்படும் அரவணப் பிரசாதம் மற்றும் விபூதி ஆகியவை புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த யாத்திரையை முடித்துத் திரும்பும்போதும் மீண்டும் பம்பையில் நீராடி இறைவனுக்கு நன்றி தெரிவிப்பது மரபு. இத்தகைய முறையான யாத்திரையை மேற்கொள்வதன் மூலம் ஒருவருக்கு மன அமைதி கிடைப்பதோடு, குடும்பத்தில் ஒற்றுமை பெருகி, தீராத நோய்கள் விலகும் என்பது ஐயப்ப பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

  • குடும்ப அமைதி வேண்டுமா? இதோ சில எளிய வழிமுறைகள்!

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்கச் செய்யும் எளிய ஆன்மீக ரகசியங்கள்!

    ஒரு மனிதனின் வாழ்நாள் சாதனைகள் அனைத்தும் அவனது இல்லத்தில் நிலவும் அமைதியைப் பொறுத்தே அமைகின்றன. குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தால், அது மன அழுத்தத்தை உருவாக்குவதோடு, தொழில் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியையும் நேரடியாகப் பாதிக்கும். நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த எளிய வாஸ்து மற்றும் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை அதிர்வுகளை அதிகரிக்க முடியும். குறிப்பாக, வீட்டின் ஈசான்ய மூலையான வடகிழக்குப் பகுதியைச் சுத்தமாக வைத்து அங்கே நீர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைப்பதும், கிழக்கு திசையில் தெய்வப் படங்களை வைத்து வணங்குவதும் குடும்பத்தில் பொருளாதார மேன்மையையும், மன நிம்மதியையும் கொண்டு வரும்.

    ஆன்மீக ரீதியாகப் பார்க்கும்போது, தினமும் காலையில் குலதெய்வத்தை மனதாரப் பிரார்த்தனை செய்வதும், மாலை வேளையில் வீட்டின் நிலைவாசலில் தீபமேற்றுவதும் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு எள் தீபமேற்றி, சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது குடும்பத்தில் நிலவும் தேவையற்ற பகை மற்றும் திருஷ்டிகளை நீக்கும். அதேபோல், சனிக்கிழமைகளில் நவக்கிரகங்களுக்கு நல்லெண்ணெய் தீபமும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிறத் தீபமும் ஏற்றி வருவது கிரக தோஷங்களால் ஏற்படும் தடைகளைத் தகர்த்து, குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தும்.

    வெறும் ஆன்மீகப் பரிகாரங்கள் மட்டுமின்றி, சில வாழ்வியல் மாற்றங்களும் குடும்ப அமைதிக்கு மிக அவசியம். வீட்டை எப்போதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருப்பதுடன், தேவையற்ற உடைந்த பொருட்களைச் சேர்க்காமல் தவிர்ப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; இது அவர்களுக்குள் இருக்கும் மனக்கசப்புகளை நீக்கி அன்பைப் பெருக்கும். பேசுவதில் நிதானத்தையும், இன்சொற்களையும் கையாளுவதன் மூலம் வீட்டை ஒரு நந்தவனமாக மாற்ற முடியும். நம்பிக்கையுடன் இந்த எளிய மாற்றங்களைச் செய்து வந்தால், உங்கள் இல்லம் என்றும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கும் என்பது உறுதி.

  • ராமேஸ்வரம் மணல் லிங்கம்: சீதா தேவி உருவாக்கிய அதிசய வரலாறும் ஆன்மீகப் பலன்களும்!

    ராமேஸ்வரம் மணல் லிங்கம்: சீதா தேவி உருவாக்கிய அதிசய வரலாறும் ஆன்மீகப் பலன்களும்!

    ராமேஸ்வரம் புண்ணிய பூமியில் அமையப்பெற்றுள்ள மணல் லிங்கம், வெறும் ஆன்மீகச் சின்னம் மட்டுமல்லாது, ராமாயண காவியத்தின் வரலாற்றுச் சான்றாகவும் திகழ்கிறது. லங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு, ஒரு பிராமணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் சிவபெருமானை வழிபட எண்ணினார். இதற்காக கைலாயத்திலிருந்து புனிதமான லிங்கத்தைக் கொண்டு வர ஹனுமான் அனுப்பப்பட்டார். ஆனால், பூஜைக்கான குறிப்பிட்ட சுப முகூர்த்த நேரம் முடிவடைய இருந்த நிலையிலும் ஹனுமான் திரும்பி வராததால், அன்னை சீதா தேவி கடற்கரை மணலை எடுத்துத் தனது தெய்வீகக் கரங்களால் ஒரு லிங்கத்தை உருவாக்கினார். அந்த மணல் லிங்கத்திற்கே ஸ்ரீராமர் முறைப்படி தனது முதல் பூஜையைச் செய்து தோஷ நிவர்த்தி பெற்றார்.

    பின்னர் ஹனுமான் கைலாயத்திலிருந்து லிங்கத்துடன் வந்தபோது, சீதை மணலில் செய்த லிங்கத்தை அப்புறப்படுத்த முயன்றார். ஆனால், அவரது அபாரமான வலிமையால் கூட அந்த மணல் லிங்கத்தை அசைக்க முடியவில்லை என்பது இத்தலத்தின் பெரும் அதிசயமாகும். ஹனுமானின் வருத்தத்தைப் போக்க, அவர் கொண்டு வந்த 'விஸ்வலிங்கத்தை' அருகிலேயே பிரதிஷ்டை செய்த ராமர், இனிவரும் காலங்களில் விஸ்வலிங்கத்திற்கே முதல் பூஜை செய்யப்பட வேண்டும் என்ற நியதியையும் வகுத்தார். இன்றும் ராமேஸ்வரத்தில் அந்த மரபு மாறாமல் பின்பற்றப்பட்டு வருகிறது. சீதா தேவி உருவாக்கிய மணல் லிங்கமான ராமநாத சுவாமிக்குத் தினசரி அபிஷேகங்கள் நடைபெற்றாலும், அது இன்றுவரை சிதையாமல் அதே பொலிவுடன் இருப்பது ஒரு தெய்வீக ரகசியமாகும்.

    இத்தலத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, 22 புனித தீர்த்தங்களிலும் புனித நீராடிய பிறகு இந்த மணல் லிங்கத்தைத் தரிசிப்பது ஒருவரது தீராத பாவங்களை நீக்கும் என்பது ஐதீகம். குறிப்பாக ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்குத் திதி கொடுத்து இந்த லிங்கத்தை வழிபடுவது முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத்தரும். ராமர், சீதை மற்றும் ஹனுமானின் பக்தி சங்கமமான இந்த மணல் லிங்கம், இன்றும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு மன அமைதியையும், வாழ்வில் வேண்டிய வரங்களையும் அள்ளித் தரும் அருட்சுடராகத் திகழ்கிறது.

  • காரியத் தடைகள் விலக தேங்காய் உடைப்பது ஏன்?

    காரியத் தடைகள் விலக தேங்காய் உடைப்பது ஏன்?

     

    இந்து வழிபாட்டு முறைகளில் மிகவும் புனிதமான பொருளாகவும், 'மங்கலப் பொருள்' எனப் போற்றப்படுவதாகவும் விளங்குவது தேங்காய். நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், காரியத் தடைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத இடையூறுகளை நீக்குவதற்குத் தேங்காய் உடைப்பது ஒரு சிறந்த ஆன்மீகத் தீர்வாகக் கருதப்படுகிறது. தேங்காய் உடைக்கும் செயலுக்குப் பின்னால் ஆழமான தத்துவார்த்தக் கருத்துக்கள் ஒளிந்துள்ளன. தேங்காயின் கடினமான வெளிப்பகுதி மனிதனின் அகந்தையையும், உள்ளே இருக்கும் வெண்மையான பகுதி தூய்மையான ஆத்மாவையும் குறிக்கிறது. இறைவனுக்கு முன்னால் தேங்காயை உடைப்பது என்பது, நமது ஆணவத்தை அழித்துத் தூய்மையான மனதோடு இறைவனைச் சரணடைவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகும்.

    வாழ்க்கையில் பொருளாதாரம், குடும்பம் அல்லது தொழில் என எந்தத் துறையில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், அவற்றை நீக்கத் தேங்காய் உடைத்தல் ஒரு முக்கியப் பரிகாரமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, புதிய முயற்சிகளைத் தொடங்கும் போது தேங்காய் உடைப்பது, வரவிருக்கும் தீய சக்திகளையும் எதிர்மறை ஆற்றல்களையும் சிதறடித்து வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம். தேங்காய் உடைக்கும்போது எழும் அதிர்வுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, ஒருவிதமான நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. கடன் சுமைகள் குறையவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவு பெறவும் இந்த வழிபாட்டு முறை பெரும் துணையாக இருக்கிறது.

    எந்தவொரு ஆன்மீகச் செயலுக்கும் அதன் பின்னால் இருக்கும் நம்பிக்கையே அடிப்படைச் சக்தியாகும். முழுமையான ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் தேங்காயைச் சமர்ப்பிக்கும்போது, அது வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை வழங்குகிறது. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறைச் சூழலை மாற்றி, நல்வாய்ப்புகளை ஈர்க்கும் ஒரு ஆன்மீகத் திறவுகோலாகத் தேங்காய் உடைத்தல் திகழ்கிறது. எனவே, உங்கள் வாழ்வில் தீராத தடைகள் இருப்பதாக உணர்ந்தால், நம்பிக்கையுடன் தேங்காய் உடைத்து வழிபடுவது உங்களுக்குப் புதிய திருப்பத்தையும், வளமான வாழ்வையும் நிச்சயம் பெற்றுத் தரும்.

  • காரியத் தடைகள் விலக தேங்காய் உடைப்பது ஏன்?

    காரியத் தடைகள் விலக தேங்காய் உடைப்பது ஏன்?

     

    இந்து வழிபாட்டு முறைகளில் மிகவும் புனிதமான பொருளாகவும், 'மங்கலப் பொருள்' எனப் போற்றப்படுவதாகவும் விளங்குவது தேங்காய். நமது வாழ்வில் ஏற்படும் சிக்கல்கள், காரியத் தடைகள் மற்றும் கண்ணுக்குத் தெரியாத இடையூறுகளை நீக்குவதற்குத் தேங்காய் உடைப்பது ஒரு சிறந்த ஆன்மீகத் தீர்வாகக் கருதப்படுகிறது. தேங்காய் உடைக்கும் செயலுக்குப் பின்னால் ஆழமான தத்துவார்த்தக் கருத்துக்கள் ஒளிந்துள்ளன. தேங்காயின் கடினமான வெளிப்பகுதி மனிதனின் அகந்தையையும், உள்ளே இருக்கும் வெண்மையான பகுதி தூய்மையான ஆத்மாவையும் குறிக்கிறது. இறைவனுக்கு முன்னால் தேங்காயை உடைப்பது என்பது, நமது ஆணவத்தை அழித்துத் தூய்மையான மனதோடு இறைவனைச் சரணடைவதைக் குறிக்கும் ஒரு குறியீடாகும்.

    வாழ்க்கையில் பொருளாதாரம், குடும்பம் அல்லது தொழில் என எந்தத் துறையில் முட்டுக்கட்டைகள் ஏற்பட்டாலும், அவற்றை நீக்கத் தேங்காய் உடைத்தல் ஒரு முக்கியப் பரிகாரமாகப் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, புதிய முயற்சிகளைத் தொடங்கும் போது தேங்காய் உடைப்பது, வரவிருக்கும் தீய சக்திகளையும் எதிர்மறை ஆற்றல்களையும் சிதறடித்து வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம். தேங்காய் உடைக்கும்போது எழும் அதிர்வுகள் மன அழுத்தத்தைக் குறைத்து, ஒருவிதமான நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதாக நம்பப்படுகிறது. கடன் சுமைகள் குறையவும், குடும்பத்தில் அமைதி நிலவவும், மனக்குழப்பங்கள் நீங்கித் தெளிவு பெறவும் இந்த வழிபாட்டு முறை பெரும் துணையாக இருக்கிறது.

    எந்தவொரு ஆன்மீகச் செயலுக்கும் அதன் பின்னால் இருக்கும் நம்பிக்கையே அடிப்படைச் சக்தியாகும். முழுமையான ஈடுபாட்டுடனும், பக்தியுடனும் தேங்காயைச் சமர்ப்பிக்கும்போது, அது வெறும் சடங்காக மட்டும் இல்லாமல், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையை வழங்குகிறது. நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறைச் சூழலை மாற்றி, நல்வாய்ப்புகளை ஈர்க்கும் ஒரு ஆன்மீகத் திறவுகோலாகத் தேங்காய் உடைத்தல் திகழ்கிறது. எனவே, உங்கள் வாழ்வில் தீராத தடைகள் இருப்பதாக உணர்ந்தால், நம்பிக்கையுடன் தேங்காய் உடைத்து வழிபடுவது உங்களுக்குப் புதிய திருப்பத்தையும், வளமான வாழ்வையும் நிச்சயம் பெற்றுத் தரும்.

  • தந்தைக்கே உபதேசித்த தகப்பன்சாமியின் தல வரலாறு மற்றும் சிறப்புகள்!

    தந்தைக்கே உபதேசித்த தகப்பன்சாமியின் தல வரலாறு மற்றும் சிறப்புகள்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகவும், தந்தைக்கே மந்திரம் உபதேசித்த "தகப்பன்சாமி" உறையும் உன்னதத் தலமாகவும் போற்றப்படுகிறது. சோழர் காலத்துக் கட்டிடக்கலை நுணுக்கங்களுடன் திகழும் இக்கோவிலில், மூலவர் அலங்காரப் பிரியராக விளங்குகிறார்; அவருக்கு விபூதி அபிஷேகம் செய்யப்படும்போது அருள் பழுத்த ஞானியாகவும், சந்தன அபிஷேகத்தின்போது கம்பீரமான பாலசுப்பிரமணியனாகவும் காட்சியளிப்பது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். இக்கோவிலின் கருவறையை உற்று நோக்கினால், சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும், அவர் வீற்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும் அமைந்திருப்பதை அறியலாம், இது சிவனும் முருகனும் வேறல்ல என்பதை உலகுக்கு உணர்த்துகிறது. இத்தலத்தின் மற்றொரு தனிச்சிறப்பு, பொதுவாக முருகப்பெருமான் சன்னதிக்கு முன் இருக்கும் மயிலுக்குப் பதிலாக, இங்கு இந்திரனால் காணிக்கையாக வழங்கப்பட்ட ஐராவதம் என்ற யானை வாகனமாக வீற்றிருப்பதாகும். புராண ரீதியாக, பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மனைச் சிறையிலடைத்த முருகப்பெருமான், பின்னர் சிவபெருமானின் வேண்டுகோளுக்கிணங்க அவரை விடுவித்து, தந்தையின் மடியில் அமர்ந்து சிவபெருமானின் காதருகே ஓங்காரத்தின் உட்பொருளை உபதேசித்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக இது திகழ்கிறது. அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிக்கட்டுகளைக் கடந்து செல்லும் இந்த மலைக்கோவில், இன்றும் கோடிக்கணக்கான பக்தர்களுக்குப் பாவ விமோசனமும் ஞானமும் வழங்கும் சக்தி வாய்ந்த புண்ணியத் தலமாக விளங்குகிறது.

  • திருவெழுந்தூர் அழகியமணவாளப் பெருமாள் கோவில் சாப விமோசன தலம்!

    திருவெழுந்தூர் அழகியமணவாளப் பெருமாள் கோவில் சாப விமோசன தலம்!

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகத் திகழும் திருவெழுந்தூர் அழகியமணவாளப் பெருமாள் கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்துத் திராவிடக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

    இத்தலத்தின் மூலவர் அழகியமணவாளப் பெருமாள், சங்கு, சக்கரம், கதை மற்றும் பத்மம் ஆகிய நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்; இவருடைய உற்சவர் 'சொக்கழகிய பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலின் தனிச்சிறப்பாக, பூமிப்பிராட்டி தாயார் தனிச்சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களின் திருமணத் தடைகளை நீக்கும் கருணைக்கடலாகப் போற்றப்படுகிறார்; இங்கு முதலில் தாயாரை வணங்கிய பின்னரே பெருமாளைத் தரிசிக்கும் தனித்துவமான மரபு பின்பற்றப்படுகிறது.

    புராண ரீதியாக, பிரம்மதேவன் தனது அகங்காரத்தைப் போக்கிக் கொண்டதாலும், காலபைரவர் தனது சாபத்திலிருந்து விடுதலை பெற்றதாலும் இத்தலம் ‘சாப விமோசன க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகச் சிவபெருமானுக்கு உகந்த வில்வ மரம் இங்கு ஸ்தல விருட்சமாக இருப்பதோடு, பெருமாளுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுவது ஒரு அபூர்வமான ஆன்மீக நிகழ்வாகும்.

    பிரம்ம, சூரிய மற்றும் இந்திர தீர்த்தங்களைக் கொண்டுள்ள இத்தலத்தில், பங்குனி உத்திரத் தேரோட்டம், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆடிப்பூரம் போன்ற விழாக்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ மற்றும் காரைக்காலில் இருந்து 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவில், இன்றும் பல நூற்றாண்டுகளாக மக்களின் நம்பிக்கைக்குரிய புனிதத்தலமாகத் திகழ்கிறது.

  • லட்சுமி தேவியின் அருளால் வாழ்வில் செல்வம் பெருகும் ரகசியங்கள்

    லட்சுமி தேவியின் அருளால் வாழ்வில் செல்வம் பெருகும் ரகசியங்கள்

    செழிப்பு மற்றும் மங்கலத்தின் தெய்வமாகப் போற்றப்படுபவர் லட்சுமி தேவி. 'லக்ஷ்' என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவான 'லட்சுமி' என்ற பெயருக்கு, 'இலக்கு' அல்லது 'குறிக்கோள்' என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது தாமரை மலரில் அமர்ந்த கோலத்தில் தோன்றியவர் என்பதால் இவரை 'பத்மா' என்றும் அழைக்கிறோம். லட்சுமி தேவி என்பவர் வெறும் பணத்தை மட்டும் வழங்கும் தெய்வம் அல்ல; அவர் வாழ்வின் முழுமையான வளம், தூய்மை மற்றும் வெற்றியின் அடையாளமாகத் திகழ்கிறார். திருமாலின் பத்தினியாக விளங்கும் இவரை வழிபடுவது, ஒருவரது வாழ்வில் பொருள் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்பது நம்பிக்கையாகும்.

    லட்சுமி தேவியின் அருளை நாம் 'அஷ்டலட்சுமி' தத்துவத்தின் மூலம் விரிவாக உணர முடியும். அஷ்டலட்சுமிகள் எனப்படும் எட்டு வடிவங்கள், மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை செல்வம் (ஆதிலட்சுமி), உணவு வளம் (தான்யலட்சுமி), தைரியம் (தைரியலட்சுமி), அதிகாரம் (கஜலட்சுமி), குழந்தை பாக்கியம் (சந்தானலட்சுமி), வெற்றி (விஜயலட்சுமி), கல்வி (வித்யாலட்சுமி) மற்றும் தனம் (தனலட்சுமி) ஆகியவற்றை வழங்குகின்றனர். இவருடைய வாகனமான யானை வலிமையையும், அவர் அமர்ந்திருக்கும் தாமரை மலர் உலக பந்தங்களுக்குள் சிக்காத தூய்மையையும் குறிக்கின்றன. ஒருவருக்கு 'லட்சுமி கடாட்சம்' கிடைக்கும்போது, செல்வம் சேருவது மட்டுமல்லாமல், அந்தச் செல்வத்தை நல்வழியில் நிர்வகிக்கும் பக்குவமும் கிடைக்கிறது.

    இன்றைய நவீன காலத்திலும் லட்சுமி தேவியின் போதனைகள் நிதி நிர்வாகம் மற்றும் சமூகப் பொறுப்புணர்விற்கு மிகவும் பொருத்தமானவை. செல்வம் என்பது ஒரு பெரிய பொறுப்பு என்பதையும், அதைத் தர்மத்திற்கும் சமூக நலனுக்கும் பயன்படுத்த வேண்டும் என்பதையும் லட்சுமி தேவியின் வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. தூய்மையான எண்ணம், நன்னடத்தை மற்றும் உழைப்பு உள்ள இடத்தில் திருமகள் நிரந்தரமாக வாசம் செய்கிறார். தீபாவளி, வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சுமி தேவியை வழிபடுவது, வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் முன்னேற்றத்தையும், மன அமைதியையும், நிலையான நல்வாழ்வையும் தேடித்தரும் என்பது திண்ணம்.