Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • November 20 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    செலவு
    மிதுனம்     –   பாராட்டு
    கடகம்         –  நன்மை
    சிம்மம்         –   அமைதி
    கன்னி         –    உதவி
    துலாம்         –     கவனம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    ஊக்கம்
    கும்பம்         –       நிம்மதி  
    மீனம்         –      தனம்
    சந்திராஷ்டமம்    –    புனர்பூசம், பூசம்

  • November 20 2023 Indrayanaal

    நவம்பர் 20 – சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 4
    20-நவ-2023 திங்கள்
    சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
    கரிநாள்
    நல்ல நேரம் : 6.00 – 7.30
    ராகு : 7.30 – 9.00
    குளிகை : 1.30 – 3.00
    எமகண்டம் : 10.30 – 12.00
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : அஷ்டமி ந.இ 3.33
    நட்சத்திரம் : அவிட்டம் இ 10.17
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : புனர்பூசம்,பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • Palani murugan thirukalyanam

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தர்சஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

     திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கள்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவின் போது நாள்தோறும் அருள்மிகு சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

    நேற்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.  நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.  மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.   அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை,  நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.  

    மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.  பின்னர் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

  • poojai coconut bid

    போடிநாயக்கனூர் சுப்பிரமணியர் திருக்கோவில் முருகன் திருக்கல்யாணத்தில் நடைபெற்ற சுவாரசியம். கந்த சஷ்டி பூஜை கலசத்தில் வைக்கப்பட்ட கலசத் தேங்காய் ரூபாய் 36 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த நபர்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் திருத்தலங்களிலும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்று முடிந்ததை அடித்து திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக போடிநாயக்கனூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் இன்று முருகன் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

     முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க கவசம்   சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோவில் மண்டபத்தில் நடைபெற்ற திருக்கல்யாணத்தில் அலை கடலென பக்தர்கள் திரண்டு வந்து திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

     திருக்கல்யாணத்தின் முக்கிய நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போல் இந்த முறையும்  கலச பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது. ஆலய நிர்வாகம் சார்பாக ரூபாய் 3001ல் தொடங்கப்பட்ட ஏலம் படிப்படியாக உயர்ந்து நிறைவாக ரூபாய் 36 ஆயிரத்திற்கு  ஏலம் கேட்கப்பட்டது.

    போடிநாயக்கனூர் குப்பிநாயக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மதன் வீரன் என்பவர் ரூபாய் 36 ஆயிரத்து ஒன்றுக்கு பூஜையில் வைக்கப்பட்ட ஒற்றை தேங்காயை ஏலம் எடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாணம் நிறைவு பெற்றதும் வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வேள்வி பூஜையில் வைக்கப்பட்டு ஏலம் எடுக்கப்பட்ட தேங்காய் வீட்டில் வைத்து பூஜிக்கும் பொழுது பல்வேறு சுபிட்சங்கள் சுப காரியங்கள் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

  • November 19 2023 indrayanaal

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  நன்மை
    ரிஷபம்         –    வெற்றி
    மிதுனம்     –   எதிர்ப்பு
    கடகம்         –  சுகம்
    சிம்மம்         –   மகிழ்ச்சி  
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     மேன்மை
    விருச்சிகம்     –  ஆர்வம்
    தனுசு         –     இன்பம்  
    மகரம்         –    ஏமாற்றம்
    கும்பம்         –       நன்மை  
    மீனம்         –      முயற்சி
    சந்திராஷ்டமம்    –    திருவாதிரை, புனர்பூசம்

  • November 19 2023 Murugan thirukalyanam

    நவம்பர் 19 – முருகன் திருக்கல்யாணம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 3
    சுபமுகூர்த்த நாள்
    19-நவ-2023 ஞாயிறு
    சோலைமலை முருகன் திருக்கல்யாணம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 4.30 – 6.00
    குளிகை : 3.00 – 4.30
    எமகண்டம் : 12.00 – 1.30
    திதி : சப்தமி
    திதி நேரம் : சஷ்டி கா 8.4
    நட்சத்திரம் : திருவோணம் இ 11.55
    யோகம் : அமிர்த-மரணயோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • Thiruchendur soorasamharam

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமா நடைபெற்றது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி  திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான  கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கியது. ஆறு நாட்களும் தினமும் யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. இன்று சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1-00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    இதனையடுத்து  யாகசாலை மண்டபத்தில் இன்று காலை 6-00 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி கந்த சஷ்டி மண்டபம் வந்தடைந்தார். பின்னர் மதியம் 2 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    மாலை 4-00 மணிக்கு கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி ஜெயந்திநாதர் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும், சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் முகம் கொண்ட சூரபத்மனை வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்த  சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றி சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பல லட்சக்கணக்கான பக்தர்கள்  அரோகரா கோசத்துடன் கலந்து கொண்டனர். நாளை இரவு 11 மணிக்குமேல்  சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் திருக்கோயில் வளாக மேலக்கோபுரம் முன்பு உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

     

  • Thiruthani puspanjali

    திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி  உற்சவர் சண்முக பெருமாளுக்கு  4-டன் மலர்களால் புஷ்பாஞ்சலி பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும்,  உற்சவர் சண்முகப் பெருமானுக்கு திருவிழாவில் கந்த சஷ்டி , இன்று 4-டன்மலர்களால் புஷ்பாஞ்சலி,1008 இலட்சார்ச்சனை நிகழ்ச்சி வெகு விமர்சையாக பக்தர்கள் முன்னிலையில் தொடங்கியது.

     இதனை தொடர்ந்து நாளை நவம்பர் 19-ஆம் தேதி காலை 10- மணிக்கு பக்தர்கள் முன்னிலையில் முருகப்பெருமான் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது,

    இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர், செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள்- வி. சுரேஷ் பாபு, மோகனன், நாகன் ,ஆகியோர்கள் செய்துள்ளனர்.

  • Palanai Soorasamharam

    பழனி முருகன் கோவில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான  சூரசம்ஹாரம் நடைபெற்றது ,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டனர்.

    அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் விமர்சையாக நடைபெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரனை வதம் செய்ய கூடிய நிகழ்ச்சி  மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதையில் நடைபெற்றது.

    முன்னதாக மலைமீது எழுந்தருளி இருக்கக்கூடிய மலைக்கொழுந்து அம்மனிடம் இருந்து சின்னக்குமாரர் சக்திவேலை வாங்கி கொண்டு நவ வீரர்கள் முன்னே அணிவகுத்து வர மலையடிவாரத்திற்கு வந்து சூரபத்மன்களை வதம் செய்தார். முதலில் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரனையும், அடுத்ததாக கிழக்கு வீதியில் பானுகோபன் சூரனையும் சின்னகுமரர் வதம் செய்வார்.

    பின்னர் தெற்கு கிரி வீதியில் சிங்கமுக சூரனையும் இறுதியாக மேற்கு கிரி வீதியில் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூரனை வதம் செய்யக்கூடிய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி விமர்சியாக திருவிழாவானது நடைபெற்றது.  விழாவுக்கான ஏற்பாடு கோயில் நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

  • Murugan vel vangum nigazhchi

    கந்தசஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு; அம்மனிடம் வேல் வாங்கிய முருகனுக்கு முகத்தில் முத்து,முத்தாக வியர்க்கும் மகிமையை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம்.

    தமிழ்கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான திருத்தலமாக நாகை மாவட்டத்திலுள்ள சிக்கல் சிங்காரவேலவர் ஆலயம் விளங்கி வருகிறது.இத்தகைய சிறப்புகளை கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 13,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக துவங்கியது. தினமும் ஆலயத்திலிருந்து  சிங்காரவேலவர்சுவாமி தங்க மயில் வாகனம், வெள்ளிரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    இந்நிலையில் கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி,சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல்வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வைபொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேரில் எழுந்தருளிய சிங்காரவேலவர் தனது தாயார் வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் சக்திவேல் வாங்கினார்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா,முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டனர். பின்னர் வேல் வாங்கிய முருகப்பெருமான் தனி சன்னதியில் அமர்ந்ததும், சிங்காரவேலவரின் திருமுகம் முழுவதும் வியர்வை துளிகள் அரும்பியது. சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்தில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் சிங்காரவேலவர் முகத்தில் முத்து முத்தாக வியர்க்கும் அதிசயத்தை கண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.