Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • Thiruvannamalai deepam kopparai

    கார்த்திகை தீபத் திருவிழா 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பறை சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீப திருவிழாவின் பத்தாம் நாள் திருவிழா நாளை நடைபெறுகிறது, நாளை காலை 4 மணியளவில் திருக்கோயிலின் கருவரை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு திருக்கோயில் பின்பு உள்ள 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது, மகா தீபம் ஏற்றப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த 5 – 3/4 அடி உயரமுள்ள கொப்பறை திருக்கோயிலின் கிளி கோபுரம் அருகில் உள்ள நந்தி சிலை முன்பு சிறப்பு பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் 5 – 3/4 அடி உயரமுள்ள பஞ்சலோகத்தால் செய்யப்பட்டு அர்த்தநாதரீஸ்வரர் உருவம் பதித்த தீப கொப்பறை பூஜை செய்து மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது, கொப்பறையை மலை உச்சிக்கு கொண்டு சென்ற பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தூக்கி சென்றனர்.

  • November 25 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  வெற்றி
    ரிஷபம்         –    உதவி
    மிதுனம்     –   பக்தி
    கடகம்         –  சினம்
    சிம்மம்         –   லாபம்
    கன்னி         –    புகழ்
    துலாம்         –     தனம்  
    விருச்சிகம்     –  ஆதாயம்
    தனுசு         –     செலவு
    மகரம்         –    ஆக்கம்
    கும்பம்         –       பரிசு
    மீனம்         –      நிறைவு
    சந்திராஷ்டமம்    –    உத்திரம், அஸ்தம்

  • November 25 2023 Indrayanaal

    நவம்பர் 25 – கார்த்திகை 9
    சோபகிருது வருடம்
    25-நவ-2023 சனி
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : திரையோதசி
    திதி நேரம் : திரையோதசி மா 5.13
    நட்சத்திரம் : அசுவினி ம 3.19
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : உத்திரம்,அஸ்தம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • deepam thiruvizha 8th day

    பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்கி தரும்  திருதலமாக விளங்குவது திருவண்ணாமலையாகும். இங்கு உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோரும் திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகின்றது.

    இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொங்கியது. திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 8ஆம் நாளான இன்று காலையில் விநாயகர் ,சந்திரசேகரர்  வெட்டும்குதிரையில் மாடவீதியுலா வந்தனர்.

    முன்னதாக விநாயகர் மற்றும் சந்திரசேகர் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடந்து  விநாயகர் சந்திரசேகரர் வெட்டும் குதிரை வாகனத்தில்  மாடவீதியுலா வந்தனர். ஆயிரக்கண்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 26 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும் அன்று மாலை 6 மணி அளவில் மழை உச்சியின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த தீப தரிசனத்தை காண தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vedapuriswarar temple pradhosham

    புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பிரதோஷ நாளில் பக்தர்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்குகிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்திலும் விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு, சிவபெருமான் மகிழ்ச்சியையும், செழிப்பையும், பேரின்ப வாழ்வையும் வழங்குவார் என்பது நம்பிக்கை. அதனால் பிரதோஷ நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

    இந்த பிரதோஷ நாளை முன்னிட்டு புதுச்சேரி புதுச்சேரி காந்திவீதியில் அமைந்துள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் ஆலயத்தில்,சிவ பெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், திருநீறு மற்றும் பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை வழிபட்டு வணங்கி சென்றனர்.

  • November 24 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பெருமை
    ரிஷபம்         –    நற்சொல்
    மிதுனம்     –   எதிர்ப்பு
    கடகம்         –  பொறுமை
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    ஆர்வம்  
    துலாம்         –     வரவு
    விருச்சிகம்     –  விவேகம்
    தனுசு         –     வருத்தம்
    மகரம்         –    அன்பு
    கும்பம்         –       உற்சாகம்  
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –    பூரம், உத்திரம்

  • November 24 2023 Pradhosham

    நவம்பர் 24 – பிரதோஷம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை8
    பிரதோஷம்
    சுபமுகூர்த்த நாள்
    24-நவ-2023 வெள்ளி
    வாஸ்து நாள்(காலை 11.29 – 12.05)
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 10.30 – 12.00
    குளிகை : 7.30 -9.00
    எமகண்டம் : 3.00 – 4.30
    திதி : துவாதசி
    திதி நேரம் : துவாதசி மா 6.51
    நட்சத்திரம் : ரேவதி மா 4.18
    யோகம் : அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : பூரம்,உத்திரம்
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்

     

  • thiruvannamalai car festival

    திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது, பத்து நாட்கள் நடைபெறும் தீப திருவிழாவில் ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனியே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து இன்று ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியே வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஆறாம் நாள் தீப திருவிழா உற்சவத்தில் முதலில் விநாயகர், இரண்டாவதாக முருகர், மூன்றாவதாக அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், நான்காவதாக பராசக்தி அம்மன், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி பவனி வந்தனர்.

    தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதக்கூடிய ஏழாம் நாள் திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது, இதில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்கள் காட்சியளிக்க உள்ளனர்.

  • Kal azhagar kumbabishegam

    பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 18ம், படி இராஜகோபுர குடமுழுக்கு நன்னீராட்டு விழா அதிவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா!  என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முக்கியமான திருத்தலமாகும். இதனால் இக்கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.  இக்கோவிலில் மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை மாதம் நடைபெறும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும், ஆடி மாதம் நடைபெறும் ஆடித் தேரோட்டமும் உலக புகழ்பெற்றதாகும்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் 18ம் படி இராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு விழா கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்துவது என்பது ஆகம விதியாகும் அதன்படி இந்த ஆண்டு குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசின் அறநிலைத்துறை முடிவு செய்து அதற்காக சுமார் 2 கோடி ரூபாய் ஒதிக்கீடு செய்தது.

    120 அடி உயரம் கொண்ட இந்த இராஜகோபுரம் 7நிலைகளைக் கொண்டது. கோபுரத்தில் உச்சியில் 6.1/2 அடி உயரம் கொண்ட 7 கலசங்கள் உள்ளன. இந்த இராஜகோபுரத்தின் கீழ் 18ம் படி கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சிலைவழிபாடு கிடையாது அங்குள்ள நிலை கதவுகளுக்கும், 18 படிகளுக்கும் தீபாராதனை வழிபாடு மட்டும் நடைபெறும்.  இதன் பழமை மாறாமல் இருக்க கடுக்காய், சுண்ணாம்பு, பணங்கற்கண்டு ஆகிய பொருட்களை கொண்டு புனரமைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.இந்நிலையில் வண்ணங்கள் பூசப்பட்டு புனரமைக்கும் பணி நிறைவு பெற்று ராஜகோபுரம் புதுப்பொலிவுடன் காட்சியளித்தது.

    பணிகள் நிறைவு பெற்ற நிலையில் நவம்பர் 23ஆம் தேதி இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 3ஆம் தேதி கோவில் முன்பாக உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. யாக சாலையில்  தனித்தனியாக 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. அதனையடுத்து நவ-21 நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் வாஸ்து சாந்தி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    மூலவர் சன்னதியில் பூஜை செய்யப்பட்ட நூபுர கங்கை தீர்த்த குடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள் ஊர்வலமாக தீர்த்தக் குடங்களை யாகசாலைக்கு எடுத்து வந்தனர். யாக சாலையில் 160 தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் கள்ளழகர் கோவில் சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட பட்டர்கள் கலந்து கொண்டு அன்று மாலை 5 மணியளவில் முதற்கால யாக பூஜைகள் நடைபெற்றது. நவ-22 நேற்று காலை 2 ஆம் கால பூஜையும் மாலை 3 ஆம் கால பூஜையும் வேத மந்திரங்கள் ஒலிக்க நடைபெற்றது.

     3 ஆம் நாளான இன்று காலை புண்யாகவாசனம், பூர்ணாகுதி, தீர்த்த குடங்களுக்கு தீபாராதணைகள் காட்டபட்டு 9:15 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டப யாக சாலையில் இருந்து மேலதாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் யானை சுந்தரவல்லி முன்னே செல்ல பட்டர்கள்  தீர்த்த குடங்களை தலையில் சுமந்தவாறு கடம்புறப்பாடாகி ஊர்வலமாக 18 ம் படி இராஜகோபுரத்திற்கு எடுத்து வந்தனர். வேத மந்திரங்கள் முழங்க தீர்தகுடங்களில் இருந்த புனித நீரானது கலசங்களில் சுமார் 9:43 மணிக்கு ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாக ஆங்காங்கே பைப்புகள் அமைத்து பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலமாக ராஜ கோபுரத்தின் மீதும் பக்தர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.

    மேலூர், கள்ளந்திரி, மாங்குளம், வல்லாளபட்டி, கிடாரிபட்டி உள்ளிட்ட மதுரை மாவட்டத்தின் பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திண்டுக்கல், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரகணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா! கோவிந்தா!  என்று கோஷங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களின் பாதுகாப்பிற்காக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப்பிரசாத் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மேலூர், மதுரை பெரியார் பேருந்து நிலையம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டன. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

  • Thirunallaru sani bagavan

    திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் இன்று  நடைபெற்றது.

    காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனிபகவான் ஸ்தலத்தில் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.  

    அவ்வாறு இந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் 05.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ள சனிப்பெயர்ச்சி விழாவிற்க்கான முன்னெடுப்பு பணிகளுக்காக இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்த பந்தக்கால் முகூர்த்தம் சென்ற மாதம் 27ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானத்தின் உள்துறை தருமை ஆதீனத்தின் கட்டுப்பாடு எனவும் மற்றும் மற்ற அனைத்து முடிவுகளும் அரசு சார்பில் சிறப்பு அதிகாரி தருமை ஆதீன பிரதிநிதியை கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட வேண்டியது என 2012ல் உயர் நீதிமன்ற தீர்ப்பு உள்ளதால் இந்த தேவஸ்தானத்தில் நடைபெறும் அனைத்து முடிவுகளும் இருதரப்பினரும் சேர்ந்து முடிவு செய்யப்பட வேண்டியது.

    ஆனால் இம்முறை ஆலய நிர்வாக சார்பில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ ல ஸ்ரீ கந்தசாமி தம்பிரான் சுவாமிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக தேதி குறிப்பிட்டு பின்னர் தம்பிரான் சுவாமிக்கு இவ்விழாவிற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தருமபுர ஆதீனத்தை ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவு என்பதால்  தம்பிரான் சுவாமிகள் பந்தக்கால் முகூர்த்ததில் பங்கேற்காததால் ஐந்து கிராம மக்கள் இவ்விழாவினை புறக்கணித்ததால் பூஜைக்கு தயார் நிலையில் இருந்தும் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றவில்லை.

    அப்போதே ஆதினத்தின் தரப்பில் வேறு தேதியில் மாற்றி அமைக்கப்படும் என ஆலய நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆதினம் சார்பில் நீதிமன்றத்தை நாடினர் அதற்கு புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து ஆலய நிர்வாகம் சார்பில் ஆதினத்துடன் ஆலோசித்து இன்று பந்தக்கால் மூகூர்த்தம் விழா சிறப்பாக நடைபெற்றது‌. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.