thiruvannamalai car festival

திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது, பத்து நாட்கள் நடைபெறும் தீப திருவிழாவில் ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனியே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோவிலின் நான்கு மாட விதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்திதரும் அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனை தொடர்ந்து இன்று ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனைகள் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளும் தனித்தனியே வெள்ளித் தேரில் எழுந்தருளி திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

ஆறாம் நாள் தீப திருவிழா உற்சவத்தில் முதலில் விநாயகர், இரண்டாவதாக முருகர், மூன்றாவதாக அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், நான்காவதாக பராசக்தி அம்மன், ஐந்தாவதாக சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளை சுற்றி பவனி வந்தனர்.

தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவாக கருதக்கூடிய ஏழாம் நாள் திருவிழா நாளை காலை நடைபெற உள்ளது, இதில் பஞ்ச மூர்த்திகளும் தனித்தனி மரத்தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்கள் காட்சியளிக்க உள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *