இன்றைய ராசிபலன்
மேஷம் – பாராட்டு
ரிஷபம் – அசதி
மிதுனம் – அமைதி
கடகம் – பரிவு
சிம்மம் – நலம்
கன்னி – இரக்கம்
துலாம் – உதவி
விருச்சிகம் – வெற்றி
தனுசு – நிம்மதி
மகரம் – எதிர்ப்பு
கும்பம் – நலம்
மீனம் – ஊக்கம்
சந்திராஷ்டமம் – மகம், பூரம்
Category: அவசியம் படிக்க
அவசியம் படிக்க
-
November 23 2023 Rasipalan
-
November 23 2023 indrayanaal
நவம்பர் 23 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
சோபகிருது வருடம் – கார்த்திகை7
சுபமுகூர்த்த நாள்
23-நவ-2023 வியாழன்
சாய்பாபா பிறந்த நாள்
வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
நல்ல நேரம் : 10.30 – 12.00
ராகு : 1.30 – 3.00
குளிகை : 9.00 – 10.30
எமகண்டம் : 6.00 – 7.30
திதி : ஏகாதசி
திதி நேரம் : ஏகாதசி இ 8.47
நட்சத்திரம் : உத்திரட்டாதி மா 5.35
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
சூலம் : தெற்கு
பரிகாரம் : தைலம் -
November 22 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – சிந்தனை
ரிஷபம் – நன்மை
மிதுனம் – அனுகூலம்
கடகம் – சுகம்
சிம்மம் – ஓய்வு
கன்னி – பிரிவு
துலாம் – இன்பம்
விருச்சிகம் – பெருமை
தனுசு – களிப்பு
மகரம் – மறதி
கும்பம் – ஏமாற்றம்
மீனம் – அன்பு
சந்திராஷ்டமம் – ஆயில்யம், மகம் -
November 22 2023 Indraya naal
நவம்பர் 22 – இன்றைய நல்லநேரம்
சோபகிருது வருடம் – கார்த்திகை 6
22-நவ-2023 புதன்
நல்ல நேரம் : 9.00 – 10.30
ராகு : 12.00 – 1.30
குளிகை : 10.30 – 12.00
எமகண்டம் : 7.30 – 9.00
திதி : தசமி
திதி நேரம் : தசமி இ 10.56
நட்சத்திரம் : பூரட்டாதி இ 7.3
யோகம் : அமிர்த-சித்த யோகம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்,மகம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால் -
Tanjai periya koil 1008 sangabishegam
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற உள்ளது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு பால், சந்தனம் , மஞ்சள் , அன்னம், விபூதி உள்ளிடட் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது . பின்னர் பெருவுடையாருக்கு முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் மற்றும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற -ந்தேதி 27-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி 3-வது சோமவாரமும், 11-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
-
singaravelar alayam valli thirumanam
புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வள்ளி திருமண காட்சி, யானையுடன் வள்ளியை பயமுறுத்தும் காட்சி தத்ரூபமாக நடத்தி காட்டி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கலில் புகழ்பெற்ற சிங்காரவேலர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வள்ளி முருகன் திருமணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு குறவள்ளி முருகனை சந்திப்பதும் அப்போது விநாயகர் பெருமான் யானை ரூபத்தில் வந்து வள்ளியை பயமுறுத்துவதும் அதனைத் தொடர்ந்து முருகனை வள்ளி அடைக்கலமாகி திருமண காட்சி நடைபெறுவதும் நடைபெற்றது.
யானை அழைத்து வரப்பட்டு யானை பிளிருவதும் அதனை அடுத்து யானைக்கு பயந்து வள்ளி முருகனை சந்திப்பதும் அடியார்களால் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு மாங்கல்யதாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை எடுத்து மாலை மாற்றும் வைபவம் மகா தீபாரதனை உள்ளிட்டவைய் செய்யப்பட்டு வள்ளி திருமணம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
-
Tamilnadu Iyappan Temples
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே ஐயப்பன் ஆலயம் உள்ளது. இங்கே 27 நட்சத்திரங்களுக்கான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன; இந்திய புண்ணியத் தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 444 புனிதக் கற்கள் ஆலயத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்படுகின்றன.
* சிதம்பரம் நடராஜப் பெருமான் ஆலயத்தில் மகாசாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா என எட்டு சாஸ்தாக்கள் திசைக்கொருவராக அருள்கின்றனர்.
* சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஐயப்ப சாஸ்தா ஆலயம் உள்ளது. இவர் திருவுரு முன் ஒரு வாழையிலையில் அரிசியைப் பரப்பி அதன்மீது தேங்காய் மூடியில் நெய் தீபமேற்றி வழிபட நல்ல வேலை கிடைப்பதாக நம்பிக்கை.
* சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் ஆலயம் வடசபரி என போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தில் தங்கத்தேரில் ஐயன் உலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
* திருத்துறைப்பூண்டி அருகே காடந்தேத்தியில் ஐயப்பன் ஐயனாராக அருளாட்சி புரிகிறார். இவரை சுகப்பிரம்ம ரிஷி வழிபட்டு பேறு பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.
* சீர்காழி தென்பாதியில் யானை வாகனத்தில் பூரணா, புஷ்கலாவோடு சாஸ்தா வீற்றருள்கிறார். தேவேந்திரனிடமிருந்து இந்திராணியை பிரியாமல் காத்ததால் இவர் கைவிடேலப்பர் என போற்றப்படுகிறார்.
* கையில் பூச்செண்டுடனும் இருபுறமும் தேவியருடனும் அமர்ந்த நிலையில் அருளும் சாஸ்தாவை காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயப் பிராகாரத்தில் தரிசிக்கலாம்.
* கன்னியாகுமரி, ஆச்ராமம் தலத்தில் உச்சிக்கொண்டை போட்டு, திருமார்பில் பூணூல் தவழ, கழுத்தில் பதக்கம் மின்ன, நெற்றியில் திருநீற்றுப் பட்டையுடன் ‘அஞ்சனம் எழுதிய சாஸ்தா’ எனும் பெயரில் ஐயப்பன் காட்சி தருகிறார்.
* சபரிமலையில் ஐயப்பன் யோகாசன முறையில், மூலாதாரத்து குண்டலினி சக்தி மேலெழ உதவும் ஆசனத்தில் வீற்றருள்கிறார். அறிவின் அடையாளமான சின்முத்திரை ஜீவாத்மா, பரமாத்மா ஐக்கிய நிலையையும் ஹரிஹர ஐக்கியத்தில் பிறந்ததை கால்களை இணைக்கும் பட்டையும் உணர்த்துகிறது.
* சிதம்பரம் அருகே உசுப்பூரில், ஐயப்பனை, பரதேசியப்ப ஐயனார் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.
* விழுப்புரம் அருகே நேமூர் பாதையில் எண்ணாயிரம் கிராமத்தில் செம்மணேரி ஆண்டவர் எனும் பெயரில் சாஸ்தா அருள்கிறார். தன்னை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தன்னை மறந்தால் அவர்கள் கனவில் தோன்றி தான் இருக்கும் இடத்தை தெரிவிக்கும் அற்புதத்தை நிகழ்த்துபவர் இவர்.
* திருவையாறு திருக்காட்டுப்பள்ளி பாதையில், கூத்தூரில், கேரள வியாபாரிகள் கொணர்ந்த ஐயப்பன் விக்ரகம், வழியில் இங்கே நிலை கொண்டு விட்டார். கருவறையில் தேவியருடன் ஐயப்பனும் விநாயகப் பெருமானும் அருள்கிறார்கள்.
* பூத கணங்கள் புடைசூழ தன் நாயகியருடன் ஐயன் அருளும் தலம் சொரிமுத்தையனார் ஆலயம். தென்திசையை சமன் செய்ய வந்த அகத்தியருக்கு ஐயன் காட்டிய அருட்கோலம் இது.
* ஈசன் பவனி வரும் திருவழகை உலாவாக்கினான் சேரமான் பெருமான். அதை பூவுலகிற்கு தெரியப்படுத்த அந்த ஏட்டுக்கட்டினை ஏந்திய ஐயனை அரங்கேற்றிய ஐயனார் எனும் பெயரில் திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் பாதையில் உள்ள பிடவூரில் தரிசிக்கலாம்.
* தென்காசி அருகே குற்றாலத்தில் நான்கு திசைகளிலும் ஐயன் அருள்புரிகிறார். இதில் மேலவாசல் தர்மசாஸ்தா, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்புரிகிறார். பீட வடிவில் அருவமாக ஐயன் இங்கு அருள்வது சிறப்பு.
* திருநெல்வேலி – கல்லிடைக்குறிச்சி அருகே, ஏரிக்கரை ஓரத்தில் கர்ப்பிணி ஒருத்திக்கு கையில் விளக்கொளியுடன் சடைமுடியுடன் வந்து பிரசவம் பார்த்த ஐயன், பாலக வடிவில் நின்ற கோலத்தில் கோயில் கொண்டுள்ளார்.
* சேங்காலிபுரம் அருகே எருமைத்தலை கிராமத்தில் மாவிலங்கை மரத்தடியில் யானை மீதமர்ந்த கம்பீரமான சாஸ்தாவை தரிசிக்கலாம்.
* நெல்லை, பாளையங்கோட்டை, சாந்தி நகரில் சங்குகர்ணன் எனும் அரக்கனை அழித்த சண்பகாரண்ய சாஸ்தா எனும் மத்யாரண்யேஸ்வர சாஸ்தாவை தரிசிக்கலாம்.
* மயிலாடுதுறை, வஸ்த்ரராஜபுரம் எனும் இடத்தில் தேவியரை அணைத்தபடி காட்சி தரும் ஐயனை தரிசிக்கலாம். இங்கு நாகம் ஒன்று ஐயனுக்கு காவலாக உள்ளதால் இவர் நாகசாஸ்தா என்றும் வணங்கப்படுகிறார்.
* தஞ்சை, மெலட்டூர் அருகே சுரைக்காயூரில் ஐயன் தன் தேவியுடன் அருள்கிறார். வருடா வருடம் மெலட்டூரில் நடக்கும் பாகவதமேளாவில் ஹரிஹரபுத்ர ஜனனம் மிகவும் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.
-
November 21 2023 Rasipalan
இன்றைய ராசிபலன்
மேஷம் – நன்மை
ரிஷபம் – சாந்தம்
மிதுனம் – வரவு
கடகம் – மேன்மை
சிம்மம் – உற்சாகம்
கன்னி – வெற்றி
துலாம் – அசதி
விருச்சிகம் – சிரமம்
தனுசு – ஆக்கம்
மகரம் – வரவு
கும்பம் – நட்பு
மீனம் – புகழ்
சந்திராஷ்டமம் – பூசம், ஆயில்யம் -
November 21 2023 Indrayanaal
நவம்பர் 21 – இன்றைய நல்லநேரம்…
சோபகிருது வருடம் – கார்த்திகை 5
21-நவ-2023 செவ்வாய்
நல்ல நேரம் : 7.30 – 9.00
ராகு : 3.00 – 4.30
குளிகை : 12.00 – 1.30
எமகண்டம் : 9.00 – 10.30
திதி : நவமி
திதி நேரம் : நவமி ந.இ 1.12
நட்சத்திரம் : சதயம் இ 8.38
யோகம் : மரணயோகம்
சந்திராஷ்டமம் : பூசம்,ஆயில்யம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்