Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • November 18 2023 Rasipalan

    நவம்பர் 18 – இன்றைய ராசிபலன்….
    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  லாபம்
    ரிஷபம்         –    நலம்
    மிதுனம்     –   களிப்பு  
    கடகம்         –  செலவு
    சிம்மம்         –   பரிசு
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     எதிர்ப்பு
    விருச்சிகம்     –  வருத்தம்
    தனுசு         –     அச்சம்
    மகரம்         –    உறுதி
    கும்பம்         –       ஆதரவு   
    மீனம்         –      பயம்
    சந்திராஷ்டமம்    –    மிருகசீருஷம், திருவாதிரை

  • November 18 2023 Soorasamharam

    நவம்பர் 18 – கந்தசஷ்டி சூரசம்ஹாரம்
    சோபகிருது வருடம் – கார்த்திகை 2
    18-நவ-2023 சனி
    சூரசம்ஹாரம்,
    கந்தசஷ்டி விரதம் முடிவு
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 9.00 – 10.30
    குளிகை : 6.00 – 7.30
    எமகண்டம் : 1.30 – 3.00
    திதி : சஷ்டி
    திதி நேரம் : பஞ்சமி கா 10.14
    நட்சத்திரம்: உத்திராடம் ந.இ 1.26
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிசீ டம்,திருவாதிரை
    சூலம் : கிழக்கு

     

  • Koil agal vilakku deepam

    விளக்கில் எண்ணை விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும். தீபம் ஏற்ற தூய்மைமான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    விநாயக பெருமானுக்கு 7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்- சிங்கம்- நந்தி முன்பாக, பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்- கருடன் முன்பாக, முருகர்-மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம். ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2-வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3-வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2-வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் – தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி – எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

  • Karthigai Deepa Vazhipadu

    கார்த்திகை மாதம் மற்ற தமிழ் மாதங்களைவிட மிக, மிக புனிதமானது. முறைப்படி மனதை ஒரு முகப்படுத்தி வழிபட்டால் அளவிடற்குரிய பலன்களை கார்த்திகை மாதத்தில் பெறலாம். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

    தினமும் அதிகாலை பிரம்ம கூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும்.

    வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம். அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணைய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

    விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும். மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தைபாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

     

  • palani lingeswarar koil kumbabishegam

    பழனி லிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பழனி ராமநாதன் நகரில் காரிய நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நரசிம்மர் கோயில் வளாகத்தில் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர், ஐஸ்வர்ய நந்தி தேவர், ஐஸ்வர்ய நாயகி, பஞ்சமுக கணபதி சன்னதிகள் அமைப்பதற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து குடமுழுக்கு இன்று விழா நடைபெற்றது.

    முன்னதாக கோயில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து புண்ணிய நதிகளில் இருந்தது கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    குடமுழுக்கு விழா நிறைவடைந்தது அடுத்து திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பக்தர்கள் ஐஸ்வர்ய லிங்கேஸ்வரர்- ஐஸ்வர்ய நாயகியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவு அறுந்தினர்.

  • Thiruthani kantha sasti vizha

    திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3ஆம் நாள் திருவிழா உற்சவர் சண்முகப் பெருமான் நீல நிற பட்டு உடுத்தி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீப ஆராதனை நடைபெற்றது, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்…

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி & புஷ்பாஞ்சலி இலட்சார்ச்சனை 3-ஆம் நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் மலைக் கோவிலில் மூலவர் முருகப் பெருமான் பட்டு அங்க வஸ்திரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதேபோல் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப் பெருமான் அவருக்கு  பால், பழம், தயிர், பஞ்சாமிர்தம், திருநீர், இளநீர், போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து, புஷ்ப அலங்காரம் சிறப்பு நீல நிற பட்டு உடுத்தி, சிறப்பு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது,

     இதனைத் தொடர்ந்து இலட்சார்ச்சனை யில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கந்த சஷ்டி விரதம் இருந்து வரிசையில் சென்று  சாமி தரிசனம் செய்தனர்.

  • sabari malai nadai thirappu

    இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றினார். மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோவிலில் அதிகாலை 3.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும்.

    41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.  அன்று மாலை 6.30 மணிக்கு புகழ்பெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

  • November 16 2023 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்     –  பொறுமை
    ரிஷபம்         –    நற்செயல்
    மிதுனம்     –   லாபம்
    கடகம்         –  ஆதரவு
    சிம்மம்         –   வரவு  
    கன்னி         –    கவனம்
    துலாம்         –     செலவு  
    விருச்சிகம்     –  புகழ்
    தனுசு         –     பாராட்டு
    மகரம்         –    உற்சாகம்
    கும்பம்         –       அன்பு  
    மீனம்         –      பக்தி
    சந்திராஷ்டமம்    –    ரோகிணி

  • November 16 2023 Subamuhurthanaal

    நவம்பர் 16 வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    சோபகிருது வருடம் – ஐப்பசி 30
    சுபமுகூர்த்த நாள்
    16-நவ-2023 வியாழன் ஜமாதுல் அவ்வல் 2
    தேசிய பத்திரிகை தினம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 10.30 – 12.00)
    நல்ல நேரம் : 10.30 – 12.00
    ராகு : 1.30 – 3.00
    குளிகை : 9.00 – 10.30
    எமகண்டம் : 6.00 – 7.30
    திதி : சதுர்த்தி
    திதி நேரம் : திரிதியை ம 1.34
    நட்சத்திரம் : மூலம் ந.இ 3.49
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : ரோகிணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

     

  • Siva ganesha koil kandhasasti vizha

    கந்த சஷ்டி விழாவின் மூன்றாம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வணங்கி சென்றனர்.

    தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சிவகணேச கந்த பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவில் மூன்றாம் நாளான இன்று முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். முன்னதாக மூலவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு பொன்னமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பின்னர் ஏராளமான பொதுமக்கள் கூடி கந்த சஷ்டி பாராயணம் பாடி வழிபாடு நடத்தினர்.

    பின்னர் வேலுடன் காட்சி தந்த உற்சவர் முருகப்பெருமானுக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர் மாலைகளாலும் எலுமிச்சை பழம் மாலைகள் ஆளும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த முருக பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கி சென்றனர்.