Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Buddha said, “A good horse will run even if it sees the shadow of a whip.”

    தனிமனித வாழ்விலும், அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது செயல்படுத்த வேண்டிய திட்டத்தை குறித்த நேரத்தில் நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவதும், சிந்தித்து செயல்பட வேண்டிய தருணத்தில் அவசரகதியில் முடிவுகள் எடுப்பதும் தீர்க்க முடியாத பிரச்சனையை உருவாக்கி விடும், இத்தகைய தருணத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்து தான் அதற்கேற்ப தீர்வு கிடைக்கும் இத்தகைய தருணங்களில் புத்தர் வழியில் அமைதியாக இருப்பதே"சிறந்ததாகும்.

    ஒரு தத்துவஞானி ஒருமுறை புத்தரிடம் கேட்டார்: "வார்த்தைகள் தவிர்த்தும், வார்த்தைகள் இன்றியும், எனக்கு உண்மையைச் விளக்குவீர்களா?"

    புத்தர் அமைதியாக இருந்தார்.

    சிறிது நேரத்துக்குப் பிறகு தலைவணங்கி அவர் புத்தருக்கு நன்றி கூறினார் " உங்கள் அன்பான தயவால், என் பிரமை அனைத்தும் களைந்து உண்மையான பாதையில் நுழைந்தேன்."

    தத்துவஞானி வெளியேறியதும், புத்தரின் மூத்த சீடரான ஆனந்தர் கேட்டார் "ஆசீர்வதிக்கப்பட்டவரே, இந்த தத்துவஞானி எதை அடைந்தார்?"

    புத்தர் பதிலளித்தார் " நல்ல குதிரை, சவுக்கின் நிழல் பார்த்தாலும் ஓடும்"

    பொன்.கோ.முத்து

  • How did the fire that appeared in the holy pond when Ravana embraced it get the name “Mandodari Pillai”?

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவாலயம் எங்கு உள்ளது தெரியுமா ? இலங்கை மன்னனின் திருமணத்தடை நீக்கி பிள்ளை பெறு வரம் அளித்த திருக்கோவில் இராமநாதபுரம் மாவட்டத்தில்  சிவபெருமான் அருள் பாவிக்கும் திருக்கோவில்களில்  ஒன்று தான் உத்திரகோசமங்கை. இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவ ஆலயம் என கூறப்படுகிறது. ஸ்ரீ ராமபிரான் தோன்றிய காலத்தூள் சிறந்து விளங்கிய இதன் தொன்மை வாய்ந்த வரலாறை நாம் அறிவோம்"

    இலங்கையை ஆண்ட ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே போனது, இதற்கான காரணம் குறித்து அவர் வேத விற்பனர்களிடம் கேட்டபோது. உலகம் தோன்றிய போது முதலில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டால் தடை நீங்கி திருமணம் கைகூடும் என"கூறியதை ஏற்று ராவணன். திரு உத்தர கோச மங்கை சுயம்பு லிங்கத்தை பக்தியுடன் வழிபட்டு, ஈசனை வேண்டியது பலனாக' மாண்டோதரியை தனது. துணையாக தேர்வு செய்து மனம் முடித்துக் கொண்டான் ராவணன். பின் நீண்ட காலம் புத்திர பாக்கியம் ஏற்படாததால்,  ராவணனின் வாக்குப்படி,  மண்டோதரி சுயம்பு லிங்கத்தை வழிபட்டு  புத்திரப் பாக்கியம் அடைந்தாள்' 
    உத்திர கோச மங்கை என தற்போது அழைக்கப்பட்டாலும், இதன் பண்டைய கால முழுப் பெயர் ‘திரு உத்திர கோச மங்கை’ என்பதேயாகும்.

    ‘  இறைவன்"  ராவணனுக்கு மங்கள நாள் அருளியதால், இங்குள்ள ஈசன் ‘மங்களநாதர்’ ஆனார். மண்டோதரி, புத்திரப்பேறு வேண்டி  இறைவனை நோக்கி தவம் இருந்தாள். கருணை கொண்டு  சிவபெருமான், அவளுக்கு பிள்ளைப்  பேறு வரம் அளிப்பதற்காக, இலங்கை  எழுந்தருளி வரம் அளித்தார்.  அதற்கு முன்பாக தன் அடியார்களிடம், ‘தனது திரு மேனியை ராவணன் தழுவும் போது,  இங்குள்ள குளத்தில் அக்னி தோன்றும்’ என்று கூறி மறைந்தார். பின்னர் இலங்கையில் தோன்றிய  இறைவன், மண்டோதரியின் முன்பாக சிறு பாலகனாக உருமாறி வரம் அளித்தார். 

    அப்போது அங்கு வந்த ராவணன், குழந்தையின் தெய்வீக முகத்தைப் பார்த்து,  தன் கரங்களால் தூக்கி  கொஞ்சி மகிழ்வடைந்தான்.  ராவணன் கைகள் தழுவியவுடன்  உத்தர கோச மங்கை ஆலயத்தில் உள்ள திருக்குளத்தில் அக்னி தோன்றியதாக புராணம் கூறுகிறது.  இத்திருக்கோவிலில்  எழுந்தருளி இருக்கும் இறைவன் அருள்மிகு ஸ்ரீ ‘மங்களநாதர்’ என்றும், அம்பிகை அருள்மிகு ஸ்ரீ ‘மங்கள நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.

    மற்ற இடங்களில் சக்தியும்-சிவனும் சமேதராக விற்று இருப்பார்கள். இங்கு அம்மையும்' அப்பரும்" தனித்தனியே சன்னதி கொண்டிருப்பதும், தனித்தனி கருவறை விமானமும்,  ராஜகோபுரம் என'  இவ்விடம் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட பல ஐந்து கோபுரங்கள் உள்ளன. மங்களநாதர் என்ற திருப்பெயரை சிவபெருமான் தனக்குத்தானே சூட்டிக்கொண்டதாகும்,  மங்களநாயகி தாயாரையும்" மங்கள நாதரையும்' தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும், பிள்ளை பெறு பாக்கியம் கைகூடும், சொந்த வீடு மனை செல்வங்கள் உழைப்பின் வழியாக நம்மை தேடி வரும் என்பது திண்ணம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • How did the Pallava commander who defeated Pulikesi II kill his son and give the flesh to the Shiva devotees?

    காவிரி வளநாட்டில் தற்போதைய தஞ்சை மாவட்டத்தில்'  திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் பிறந்தவர்  பரஞ்சோதி இவர். நரசிம்ம வர்ம  பல்லவனின்  சேனாதிபதியாய் இருந்து. போர்க்களத்தில் இரண்டாம் புலிகேசி வென்று பகைவர்களை புற முதுகு காட்டி ஓட செய்து. வாதாபி நகரை கைப்பற்றி  கொண்டு அங்கிருந்து விலை உயர்ந்த செல்வங்களையும், பகைவர்களின் யானை, குதிரை படை, போர்க்கருவிகள் ஆகியவற்றையும் பல்லவ நாட்டு உடமை ஆகியதால், மன்னன் இவரது வெற்றியை போற்றும் வகையில் அரண்மனையில் சான்றோர் முன்னிலையில் விழா எடுத்து சேனாதிபதி பரஞ் சோதியின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டினார். 
    அப்போது அமைச்சர்கள், ‘அரசே! சேனாதிபதியிடம்  சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரியும் பண்பு உள்ளது. இதன் காரணமாக போரில் இவர் வெற்றிவாகை சூடி வருகிறார்.  என்றனர். இதனைக் கேட்டு பூரிப்படைந்த பல்லவ மன்னன்  அவருக்கு வேண்டிய பொன் பொருள், விலை நிலம்,  கால்நடைகள் ஆகியவற்றை வேண்டிய அளவிற்கு அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய சிவ தொண்டின் பணியினை சிறப்புடன் செய்வீராக’ என வாழ்த்தி அரண்மனை வாசலுக்கு சென்று விடை கொடுத்தனுப்பினார். 

    பின் பரஞ்சோதி வெண்காட்டு நங்கை எனும் தன் மனைவி, அழகிய மகன் ஒருவனுடன் வாழ்ந்து, திருத்தொண்டினை புரிந்து வந்தார். ஒரு நாள் இவரது இல்லத்திற்கு உடல் முழுவதும் திருநீர் பூசி காவி உடையுடன் வந்த சிவ அடியார் தன் பசிப்பிணி நீங்க உணவளிக்குமாறு வேண்டினார், அப்போது உணவு உண்ண வீட்டிற்குள் அவரை பரஞ்சோதி அழைத்துச் சென்றபோது. தம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை தான் உணவு அருந்துவது வழக்கம் என்றும்' அந்த உணவு.

    நரமாமிசத்துடன்‌ கூடியது. அந்த மாமிசமானது,  ஒரே புத்திரனாய்‌, அங்கக்‌ குறைவு ஏதும் இல்லாதவனாய், ஐந்து வயது பாலகனாய்
     இருப்பவனை அறுத்து, ஒரு உறுப்பும்‌ குறையாது  சமைத்ததாய்‌ இருக்கவேண்டும்‌” என்றார்‌ வந்த சிவ அடியார்‌.

    அதனை ஏற்று; பரஞ்சோதி அடியாரின் விருப்பத்தை மனைவியிடம்‌ தெரிவித்தார்‌; அதன்படி தன்‌ மகன்  சீராளதேவனை கொன்று அறுத்துச்‌ சமைத்து, சிவ அடியாருக்கு உணவாக தந்தார்‌. அப்போது" “என்னோடு உண்ண இன்னொரு சிவனடியாரும்‌ வேண்டும்‌” என – இச்‌ சிவனடியார்‌ கேட்டார்‌.
    உடனே பரஞ்சோதி வீதியில் வந்து தேடிய போது மற்றொரு சிவ அடியார் யாரும் கண்ணுக்கு தென்படாததால்,  இறுதியில்‌, “நீரே அமரும்‌” என்றார்‌ சிவ அடியார் பரஞ்சோதியிடம். அதற்கு அவரும் உடன்பட்டு அமர்ந்து, மகனின் மாமிசத்தை கையில் எடுத்து புசிக்க முனைந்தார்‌. உடனே" தடுத்த  சிவவனடியார்‌, “உமக்குப்‌ புத்திரன்‌ இருந்தால்‌ அவனையும்‌" அழையுங்கள்‌, ஒன்றாக அமர்ந்து உண்ணலாம்" என்றார்‌.

    அதற்கும்‌ உடன்பட்ட பரஞ்சோதி, துயரத்தை உள்ளடக்கி வீதிக்குச் சென்று, மகனே“ சீராள!”  என்று அழைத்தார். உடனே,  குருகுலத்தில் இருந்து திரும்பிக்‌கொண்டிருந்த  தன்‌ மகன்‌ சீராள தேவன் எதிரே ஓடி வந்தான்‌.  பரஞ்சோதி அவனை ஆரத் தழுவி கொண்டு வீட்டினுள்‌ நுழைய, அச்சிவனடியாரும்‌ சமைத்த மாமிச உணவுகளும்‌ மறைந்துவிட்டன. 

    ஆங்கு சிவபெருமான் ரிஷப வாகனத்தில்  காட்சி தந்து , திருத்தொண்டு புரிவதில் நீர் சிறந்தவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிறு பாலகனான உமது பிள்ளையை உணவாக்கி சிவ அடியாரின் பசிப்பிணி போக்கை எண்ணிய நீர் இன்று முதல் சிறுத்தொண்டர் என அழைக்கப்படுவீராக'அருளிய சிவபெருமான் ஜோதி வடிவாக மறைந்தார் அன்று தொட்டு பரஞ்சோதியார்; சிறுத்தொண்டர்‌ நாயனார் என மக்களால் அழைக்கப்பட்டு தன் வாழ்நாள் முழுவதும் இறைத் தொண்டில் ஈடுபட்டு ஈசன் திருவடியிற்‌ சேர்ந்தார்‌ என்பது சிவ புராண வரலாறு'. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • One temple, two towers, a miraculous Shivalinga that displays Goddess Parvati!

    இங்கு ராமகோனார் என்ற விவசாயி கரவை மாடுகளை வளர்த்து, அவைகள் மூலம் கிடைக்கும் பாலைக்கரந்து ஊர் முழுவதும் வியாபாரம் செய்து வந்தார். ஒரு முறை வழக்கம் போல் அரண்மனைக்கு பால் கொண்டு போகும்போது. அரண்மனை வீதியில் இருந்த கல் ஒன்றில் அவரின் காலை தடுக்கி நிலைத்திரு மாறிய போது அவரது, கையில் இருந்த பால் குடம் கீழே நழுவி விழுந்து அதிலிருந்து பால் முழுவதும்  கொட்டி விட்டது. இதேபோன்று தொடர்ச்சியாக  4 தினங்கள்  நடைபெற்றது.

    எதிர்பாராமல்  தடுக்கி விழுவது என்பது ஒருநாள் மட்டும் நடந்தால் பரவாயில்லை,  தினந்தோறும் நடந்தால்'; அச்சமடைந்த விவசாயி ராமகோனார் அரண்மனைக்குச் சென்று" மன்னரிடம் நடந்ததை எடுத்துரைத்தார். இதைக் கேட்டு உடனே  மன்னர் படைவீரர்கள் சிலரை அழைத்துக் கொண்டு  அந்த இடத்திற்கு சென்று, வீதியில் இருந்த கல்லை அகற்ற கோடரியால் வெட்டும்படி ஆணையிட்டார், அதன்படி கல்லை அகற்ற முற்பட்டபோது. கோடரி பட்டதால் கல்லிலிருந்து ரத்தம் வெளியேறியது. இதனைக் கண்டு, மன்னன் உள்ளிட்ட அனைவரும் நிலை குலைந்து நின்றனர். அப்போது விண்ணிலிருந்து ஒரு அசரீரி குரல் ஒலித்தது.

    அந்தக் கல்லின் அடியில் சுயம்பு சிவலிங்கம்  இருப்பதாகவும், அந்த லிங்கத்தை தோண்டி எடுத்து திருக்கோவில் எழுப்பி அதனை கருவறையில்  மூலவராக  பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்தி வழிபட வேண்டும் என அந்த குரல் ஒலித்தது. சிவபெருமானே"விண்ணிலிருந்து தனக்கு கட்டளையிட்டதாக உணர்ந்த மன்னன். அந்த சிவலிங்கத்தை பக்தியுடன் அணுகி அங்கிருந்து தோண்டி எடுத்து அதே" இடத்தில் சிவபெருமானுக்கு  நெல்லையப்பர் என்ற திருப்பெயரில் இன்றளவும் அருள் பாவிக்கும் கோவிலை கட்டியதாக இதன் வரலாறு கூறுகிறது. சுயம்பு வடிவ அருள் பாவிக்கும் சிவலிங்கத்தினை.

    அருள்மிகு ஸ்ரீ 'நெல்லையப்பர் சுவாமி என்ற திரு பெயரிலும் 'வேண்ட வளர்ந்தநாதர்' என்றும் அழைக்கின்றனர். சிவலிங்கத்தின்  மத்திய பகுதியில் அன்னை பார்வதி தேவியின் திரு உருவம் தென்படுகிறது.  அபிஷேக சமயத்தின் போது அந்த அற்புத காட்சியினை தரிசனம் செய்யலாம். அம்மையும்" அப்பனும் ஒன்று தான் என்பது போன்று" அர்த்தநாரீஸ்வரராக ஈசன் இங்கு காட்சி தருகிறார். வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத தனி சிறப்பாக இறைவனுக்கு என தனி ராஜ கோபுரமும், இறைவிக்கு என மற்றொரு ராஜ கோபுரமும் தனித்தனியாக கம்பீரத்துடன் நிற்கும் இரண்டு சன்னதிகளை இணைக்கும் பாலமாக நீண்ட மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    பார்ப்பதற்கு வெவ்வேறு கோவிலாக தோற்றம் அளித்தாலும் சக்தியும் சிவனும் ஒன்றே என்பதை மானுடருக்கு உணர்த்தும் இரண்டும் ஒரே கோவில்தான். அருள்மிகுஸ்ரீ காந்திமதி அம்மை உடனுறை அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில், தென் வடக்காக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவன் கோவிலாக காட்சியளிக்கிறது. இதன் தீா்த்தம்: பொன் தாமரை தீா்த்தம்(சுவா்ணபுஷ்கரணி) வெள்ளி திருக்குளம் (சந்திரபுஷ்கரணி) சிந்துபூந்துறை உட்பட 32 புனித தீா்த்தங்கள்

    தல விருட்சம்:
    முங்கில்
    ஆகமம்
    காமிக ஆகமம்,
    இசைக்கருவி:
    சாரங்கி" – இத்திருக்கோவிலுக்கு.  வேணுவனம், நெல்லூா். சாலிவேலி. சாலிவாடி. சாலிநகா், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுா்வேதி மங்கலம், ஆகும்.
    புராணத்தின் படி, பார்வதி தேவி தான் படைத்த உலகை காக்கும் பொருட்டு  இறைவனை வேண்டி கடும் தவம் புரிந்து சிவன்  அருளை உலகம் பெறும்படிச் செய்தது. இறைவனிடம் இருநாழி நெல் பெற்று.வேணுவனம் அடைந்து. முப்பத்திரண்டு அறங்களையும் வளா்த்தது.

    கம்பை நதியின் கரையில் ஈசனை வேண்டி தவமிருந்து.நெல்லை நாதனது திரு அருளை பெற்று  சிவனும் சக்தியுமாய் தோன்றி உயிர்களுக்கு இன்ப  வாழ்வினை அளித்து அளித்தருளி அம்மை அப்பனாய் எல்லா உயிர்களையும் காத்து தவத்தின் வலிமையை அறிவுறுத்த அருள்வது,உயிர்களுக்குத் தவம் இயற்றும் முறையை அறிவுறுத்தற் அன்னை ஸ்ரீ காந்திமதி' கமலபீட நாயகியாக காமாட்சி என்ற திருப்பெயருடன்  தவக்கோலம் கொண்டது.

    அகத்தியமா முனிவருக்கு  திருமணக்கோலம் காட்டி திருக்கல்யாண விழா நடத்தியது இங்குதான். சிவபெருமானின் நித்திய நிவேதனத்திற்காக  வேதசா்மா என்ற அந்தண சான்றோர் யாசகம் எடுத்து  வந்து உலா்த்தியிருந்த நெல்லை. திடீரென பொய்த கனமழை  அடித்து சென்றுவிடுமோ"  என அஞ்சியபோது. ஈசனே" இறங்கி வந்து உலர்த்தி வைக்கப்பட்டு இருந்த நெல்லை. மழை நீா் அடித்துச் செல்லாமல்'தானே" வேலியாக நின்று காத்தமையால் நெல்வேலி நாதா் எனவும் எனப்பெயா் பெற்றார். இதன் காரணமாகவே'  திருநெல்வேலி என்றும் பெயா் வந்தது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • In Karnataka, Manju Nathan, who bows down to the orders of Dharma devas and gives charity!

    கர்நாடக மாநிலம் தெட்சிண கன்னாடா மாவட்டம் பெல் தங்கடி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதர் திருக்கோயில் உள்ளது.
     பல ஆண்டுகளுக்கு முன்பு இவ்விடம் குடுமபுரம் என்ற பெயரில் விளங்கியது. இந்த ஊரின் நாட்டாமையாக  பரமண்ணா ஹெக்டே என்பவர் இருந்தார். அப்போது ஒரு நாள் யானை, குதிரை ஆகியவற்றில் வந்த சிலர் தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வந்துள்ளதாகவும், நீண்ட தூர பயணத்தின் காரணமாக களைப்புடன் இருப்பதால், சற்று ஓய்வெடுக்க ஏதேனும் இடம் கிடைக்குமா ? என ஊரிலிருந்து சிலரிடம் விசாரித்தபோது, நாட்டாமையின் இருப்பிடத்திற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    வீடு தேடி வந்தவர்களை வரவேற்று அவர்களின் தாகம் தீர இளநீர், கொடுத்து உபசரித்து சற்று ஓய்வு எடுக்குமாறு மதிய உணவு அருந்திவிட்டு வெயில் மறைந்த பின் பயணத்தை தொடருங்கள் என வந்தவர்களிடம், நாட்டாமை ஹெக்டே, கூறிவிட்டு, விருந்தினர்களுக்கு உணவுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்தார். அவர்களும் உணவை அருந்தி விட்டு, திடீரென நாட்டாமை ஹெக்டேவிடம், நாங்கள் இந்த வீட்டிலேயே நிரந்தரமாக தங்க விரும்புகிறோம். எனவே" உங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் உடனே ' வெளியேறுங்கள் என உத்தரவிட்டனர். தர்மசீலரான ஹெக்டே, மறுவார்த்தை கூறாமல் குடும்பத்தினருடன் தனது வீட்டில் இருந்து வெளியேற  தயாராகி விட்டார்.

    ஹெக்டேவின் இந்த செயலை கண்டவர்கள்.  ‘நாங்கள் சிவபெருமானின்  ஆணைப்படி உங்களின் இருப்பிடத்திற்கு வந்த தர்மதேவதைகள். இங்கு ஈசன் குடி கொள்ள போவதால் இந்த குடுமபுரம் வரும் காலத்தில் ஒரு புண்ணிய பூமியாக திகழப் போவதாகவும், இங்கு நீங்கள் தான் ஜோதி வடிவான இறைவனுக்கு கோவில் கட்டி வழிபாடுகள் நடத்த வேண்டும், என்பது சிவனின் கட்டளை என்றும் எனவே"  அதற்கான சோதனை தான் தற்போது உங்களுக்கு நடத்தப்பட்டது. தன்னலம் இன்றி பிறருக்கு உதவி புரிய வேண்டும் என்ற  தன்னலமில்லாத உங்களின் குணத்தை பரிசோதிக்கத்தான் இந்த நாடகம்.

    நீங்கள் கட்டப்போகும் இந்த திருக்கோவிலில்  கன்னியாகுமரி அம்மனையும், மஞ்சு நாதரையும், தர்மதேவதை சிலையையும் வைத்து வழிபட வேண்டும். இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் அதன் மூலம் மகிழ்ச்சி அடையும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தொகையை வைத்து. நீங்கள் தர்ம
    காரியங்கள் செய்ய வேண்டும். உங்களுக்கு ஒரு குறையும் வராமல் அந்த சிவபெருமான் காத்தருள்வார்;" என  கூறி அந்த தேவதைகள்  வின் நோக்கி மறைந்து விட்டனர்.’ தர்ம தேவதைகளின் கட்டளைப்படி நாட்டாமை ஹெக்டேவும் தொடர்ந்து. பல தர்ம காரியங்களை செய்து வந்தார். இதனால் இந்த இடம் ‘தர்மஸ்தலம்’ என்ற பெயரை பெற்றது. நாட்டாமை ஹெக்டேவுக்கு பிறகு தலைமுறை தலைமுறையாக அவரது, சந்ததியினர் இந்த தர்ம காரியத்தை விடாமல் இன்று வரை செய்து வருகின்றனர். இதன் காரணமாக ஊர் மக்கள் நாட்டாமை ஹெக்டேவின்  குடும்பத்திற்கு தொடர்ந்து மரியாதை அளித்து கௌரவித்து வருகின்றனர். அவரது வம்சாவழி வாரிசுகளும் நீதிநெறி தவறாமல் தர்மத்தின் பக்கம் நின்று இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். அருள்மிகு ஸ்ரீ மஞ்சுநாதரின் சன்னிதியின் வலது புறம் தர்ம தேவதைகளுக்கும், அன்னை ஸ்ரீ கன்னியாகுமரி அம்மனுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. கோவிலுக்கு வெளியே  உள்ள அன்னபூர்ணா 'அன்ன  சத்திரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு உணவு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • The king who looted and built the temple “how was he caught by Thirumal when he was engaged in robbery?

    இறைவன் ஆட்கொண்டு விட்டால் பக்தர்கள் அவனுக்கு தொண்டு புரிந்து பேர் ஆனந்தம் அடைவர் அவரவர் பொருளாதார நிலை, எண்ணங்களுக்கு ஏற்ப பாமாலை சுட்டுவது, பூமாலை தொடுத்து கொடுப்பது, ஆலயங்களை தூய்மைப்படுத்துவது போன்ற தொண்டுகளை புரிவது உண்டு, ஆனால் கொள்ளை அடித்து அதில் கோவில் கட்ட எண்ணிய மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது திருமாலிடம், பிடிபட்ட கதையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    காவேரி வலப்பகுதியான திருவாலி நாட்டின் திருக்குறையலூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி நாட்டான் – வல்லித்திரு தம்பதியரின் மகனான" நீலன் கிபி ஏழாம் நூற்றாண்டு பிறந்தான். இளம் வயதிலேயே கல்வி கற்க பயின்று பல கலைகளும் கற்று'போர் வீர சாகச கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் நீலன். திருமங்கை கிராம தலைவனான இவனது ஆற்றலை அறிந்த எட்டிக் கடம்பன் சோழ முத்தைரயன்  அரசன் அவனை தனது சேனாதிபதியாக நியமித்தார், பின்  நடைபெற்ற பல்வேறு போர்களில் வெற்றியடைந்த முத்தைரயன் அரசன் நீலனை கௌரவிக்கும் வகையில், அவனை ஆலிநாட்டிற்கு அரசனாக நியமித்து எதிரிகளுக்கு காளானாக விளங்கியதால், பரகாலன்  என்ற பட்டத்தையும் வழங்கினான். இதன் காரணமாக' நீலனை நாட்டு மக்கள்  திருமங்கை மன்னன் என அழைத்தனர்.

    பின்னாளில் திருமங்கை மன்னன்" குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், திருமாலின் பக்தையான இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, திருமாலுக்கு திருக்கோவில் கட்ட வேண்டும், தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்கும்படி வேண்டினார், அரசியின் விருப்பப்படி திருமங்கை மன்னன் திருத் தொண்டர் களுக்கு நாள்தோறும் அமுது படைத்தும், மற்றொரு புறம் கோவில் திருப்பணிகை மேற்கொண்டும் வந்தான். இதனால் அரசு கருவூலத்தில் இருந்த தனது அனைத்து செல்வங்களையும் இழந்து, அடியார்களுக்கு உணவளிக்க வழி இன்றி திருமங்கை மன்னன் தவித்தான். இருந்த போதும் எப்போதும் போல்,  உணவு அளிக்க முடிவு செய்து, செல்வந்தர்களிடமும், பக்கத்து நாடுகளுக்குச் சென்று பொன், பொருள்களை கொள்ளை அடித்து கொண்டு வந்து வழக்கம்போல் உணவளித்து வந்தான்.

    திருமங்கை மன்னன் தவறான வழியில் தனது அடியார்களுக்கு துண்டு புரிவதை விரும்பாத திருமால்,   ஒரு நாள் வனப்பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கோடு, தனது கூட்டத்துடன்  திருமங்கை மன்னன். பதுங்கி இருப்பதை அறிந்து, கொள்ளையை தடுக்கும் நோக்கோடு' திருமால் தானே தன் தேவியருடன் மானுட ரூபம் எடுத்து ஏராளமான தங்க, வைர, வைடூரிய அபகரணங்களை  அணிந்துகொண்டு  திருமண கோலத்தில் இரட்டை மாட்டு வண்டிகளில் சுற்றம் சூழ கூட்டமாக அவழியாக வந்தார், திருமங்கை மன்னன் திருமண கோஷ்டியை  கண்டதும் ஆயுதங்களுடன்  அவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை  கழற்றி தருமாறும் மறுத்தால் கொன்று விடுவதாகவும்" மிரட்டினான். இதனால் அச்சமடைந்த திருமண கூட்டத்தினர், தங்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர்.

    அப்போது மணமகன் ஆகிய திருமாலின்  வலது காலின் ஒரு விரலில் மட்டும் வைரக்கல் பதிக்கப்பட்ட மெட்டி  அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார். மாப்பிள்ளை வேடத்தில் இருந்த திருமால் இந்த மெட்டியை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கை மன்னன் அதனை  தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்து கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, பிறகு வழிப்பறி செய்த பொருட்களை மூட்டையாக கட்டி தூக்கிச் செல்லும் முயன்றனர், அவர்களால் அதை நகர்த்த கூட முடியவில்லை, இதனால் கோபம் கொண்ட திருமங்கை மன்னன்' மணமகனை நோக்கி,    மூட்டையை தூக்க முடியாமல் நீ ஏதோ மந்திர தந்திர வேலையை செய்து விட்டாய்.  அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கர்ஜித்தான்.

    மாப்பிளை (திருமால்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கை மன்னனும் திருமால் அருகே சென்றான். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னனின் அகக்கண் திறந்தது தாயினும் இனிய அன்பின் வடிவமான  நலம் தரும் சொல்லை நான் அறிந்து கொண்டேன்"  என இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் கருணை பொழியும் திரு  கண்களால் திருமங்கை மன்னனை பார்த்து அருளினால், பிறகு தோன்றிய இறைவனும் இறைவியும் சுற்றத்தாறுடன்  மறைந்து விட்டனர்.

    இந்நிகழ்வுக்குப் பின் திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.

    "வாடினேன் வாடினேன் மனத்தாற்
    பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
    கூடினேன், கூடி இளையவர் தம்மோடு"
    அவர்தரும் கலவியே கருதி
    ஓடினேன், உயவதோர் பொருளால்
    உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
    நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்"

    என நாராயணனை பாடி பல்வேறு பல்வேறு இடங்களுக்கு சென்று திருமாலின் மீது பாசுரங்களை பாடி எம்பெருமானின் அருளால் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் என போற்றுதலுக்கு உள்ளாகி அரங்கனின் திருப்பாத கமலத் திருவடியில் சேர்ந்தார் என்பதே" திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டு திருமால் இடம் சிக்கிய புனித வரலாறு ஆகும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Shrikalahasti attained Kannappan Moksha by devoting her eyes to Shiva!

    ஆந்திர மாநிலத்தில் வைணவ தளங்களில் புகழ்பெற்றுமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலையும்" செய்வ சமயத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலையும் குறிப்பிடலாம், சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்துள்ள இது பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாக கருதப்படுகிறது.

    வேடன் கண்ணப்பன் சிவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்றதும்,  சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) ஆகிய மூன்றும்  இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்ற ஸ்ரீ காளாஸ்தி வரலாற்றை அறிந்து கொள்வோம்" 

    ஆந்திர மாநிலத்தில் உள்ள உட்டுகுரு என்ற சிறு கிராமத்தில் வேடர்  குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். பாசுபத அஸ்திரத்தை பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அவனது வீரத்தை சோதித்த சிவபெருமான் அர்ஜுனனின் போர் திறனை. கண்டு அவனுக்கு  அஸ்திரத்தை வழங்கியதோடு,  மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அளித்தார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் வனப்பகுதியில் வேடவ குளத்தில் திண்ணனாக அவதரித்தபோது. வேட்டையாடச் சென்ற திண்ணன் சிறு குன்றின் மீது இருந்த சிவலிங்கத்திற்கு அந்தணர் ஒருவர் பூஜை செய்து  நிவேதனம் செய்வதை கண்டு, சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறை தெரியாத வேடன்  திண்ணன். தானும் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்ய எண்ணி அருகில் இருந்த சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரை உறிந்து வந்து  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடி கொண்டு வந்த விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் இருந்து மலர்கள், இலைகள் கொண்டு வந்து மாலையாக கட்டி, அதை சிவலிங்கத்திற்கு அணிவித்து வழிபட்டான். அப்போது திண்ணனின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் வழக்கம் போல் திண்ணன் வழிபட வந்தபோது தனது ஒரு கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார்.

    இதனைக் கண்டு பதறிய திண்ணன் சிவலிங்கத்தில் வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தும் பலன் இல்லாததால்,  சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து, அர்ப்பணித்தபோது லிங்கத்தின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வழிந்தது, இதனால் மனம் வருந்திய அவன் தனது மற்றொரு கண்ணையும், கையில் வைத்திருந்த ஈட்டியால் தோண்டி எடுக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி திண்ணனின் பக்தியில் மகிழ்ந்து சிவபெருமான்  நேரில் தோன்றி ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு தனது கண்ணையே" கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற திருப்பெயரால் அவர் அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் நாயன்மார்களில் கண்ணப்பரும் ஒருவராக திகழ்கிறார். மேலும் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் புராணக் கதைகளில் ஒன்றாக மற்றொரு சம்பவமும் கூறப்படுகிறது.- அதில் ஒரு முறை  வாயு பகவான்  கற்பூர லிங்கத்தை பிரதிஷ்டை செய்து,  அதன் முன்பாக பல ஆண்டுகள் தவம் தவம் புரிந்து வந்தான்.

    அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு தோன்றி, வாயு பகவானே, ஓரிடத்தில் நிற்கும்  தன்மையில்லாத நீ, பல ஆண்டுகள் சிறு நகர்வு கூட இல்லாமல், ஓரிடத்திலிருந்து தவம் புரிந்தமையால் உனக்கு, மூன்று வரங்களை அளிக்கிறேன்"என கூறினார்.  அதன்படி வாயு பகவான், 'தான் உலகம் முழுவதும் எங்கும்.  நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்’ அனைத்து  உயிரின் அந்தராத்மாக செயல்பட வேண்டும்' தான் ' வழிபட்ட கற்பூர லிங்கம் தன்னுடைய   பெயராலேயே வழங்கப்பட வேண்டும்’, என மூன்று வரங்களை கேட்டான். அதன்படி   சிவபெருமான் வரம் அளித்தார். இதனால்  வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே" சிவலிங்க வழிபாடு ஏற்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயர்:   ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். அம்பிகையின் திருப்பெயர்: அருள்மிகு ஸ்ரீஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை, ஞானசுந்தரி தல விருச்சகம் வில்வம்,       தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு. இங்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், அகத்திய மாமுனிவர், பட்டினத்தார், பத்ரகிரியார்,  நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Do you also want to see the wonderful event of 63 Nayanmars throwing palm oil to Kailaya Nathan on the day of Maha Shivratri?

    சிவபெருமான் தனது திருவிளையாடல் மூலம், தனது அடியார்களுக்கு பல்வேறு சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் படும் அவதியை கண்டு மகிழ் பவர் மட்டுமல்ல, அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மோட்ச நிலை வழங்குவதற்காக தானே" வெவ்வேறு வடிவங்கள் எடுத்து நேரடியாக சென்று ஆட்கொண்ட கதைகள் சிவபுராணத்தில் ஏராளம், அப்படி சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட 63 நாயன்மார்கள் குறித்து நாம் அறிந்திருப்போம், அவர்களின் வரலாற்றை தான் நாம் சிவபுராணமாக போற்றி வருகிறோம்"அந்த 63 நாயன்மார்களும் ஒரே" நேரத்தில் கூடி சிவபெருமானுக்கு பாமாலை சூட்டுவது எப்போது தெரியுமா ?

    உலகத்தில் பிறளையும் ஏற்பட்டபோது. உலக உயிர்கள் அனைத்தும் அபயம் தேடி கைலாயம் சென்று சிவபெருமானின் திருவடியை பற்றின. அப்போது பார்வதி தேவி உயிரினங்களைக் காக்க சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தால், பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான். தனது கருணையால் உலகை சமப்படுத்தி மீண்டும் உயிரினங்களை படைத்தார், அப்போது பார்வதி தேவி தான் மேற்கொண்ட தவத்தின் பலன் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் சென்றடைய அருள் புரியுமாறு" இறைவனை வேண்டினாள். அதன்படி சிவபெருமான் அருளிய தினமே" மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி ஆனது" பூலோகத்தில் உள்ள ஆலயங்களில் மட்டுமல்ல ஏழு லோகங்களிலும் கொண்டாடப்படுவதாகவும், அப்போது தேவர்கள், மாமுனிகள், ரிஷிகள், கந்தவர்களும் விரதத்தை கடைப்பிடித்து கண் விழித்து சிவபெருமானை போற்றி வணங்குவார்கள்.

    இதேபோன்று மானுடர்களாக அவதரித்து சிவன் ஆட்கொண்டதால் பிறப்பில்லா நிலை அடைந்து இறைவனடி சேர்ந்த 63 நாயன்மார்களும் மகா சிவராத்திரி அன்று கைலாயத்தில் ஒன்றாக கூடி சிவனைப் போற்றி பாமாலை சூட்டி வழிபடுவதாகவும், இந்த அற்புத நிகழ்வை சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் நீங்களும் காண வேண்டுமா ? அதற்கு சிவனை நோக்கி ஆழ்ந்த தியானத்தில் மனதை ஒருங்கிணை படுத்துங்கள் பின் கைலாயத்தில் இருப்பது போன்று வாவித்துக் கொண்டு ஓம் நமச்சிவாய"ஓம் நமச்சிவாய"என்ற திருமந்திரத்தை ஆத்ம ரீதியாக உச்சரித்து உங்கள் அவ கண்ணை திறந்து பாருங்கள் கைலாயநாதன் உங்கள் கண்முன்னே" முழுவதும் நாயன்மார்கள் பாமாலை சுற்றி அவரை போற்றுவதையும் நாம் உணரலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Maha Shivratri was blessed by the grace of

    மகா சிவராத்திரி எப்படி உருவானது? புராண காலத்தில் உலகம் பிரளயம் ஆன போது, அதில் இருந்த உயிரினங்கள் அவையும் தேடி" சிவபெருமானிடம் சென்றன.  இதனால் உலகம் செயலற்று போனது. இதனைக் கண்ட, அன்பின் வடிவமான உமையவள்  உலகம் மீண்டும் இயங்குவதற்கும், உயிரினங்கள் இன்புற்று வாழ்வதற்காகவும் கடும் தவம் செய்தால், அன்னையின் தவக்கோளத்தை கண்ட சிவபெருமான்   அப்போது, மீண்டும் உயிரிகளை உயிர்களை படைத்து ஆட்கொண்டார்.

    எம்பெருமானின் அருளால்.உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. உமையவள் சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபட்ட அந்நேரத்தில் அனைத்து உயிரினங்களும்  விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டன. அந்த நாளை சிவராத்திரி ஆகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில்  மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று  முக்தி அடைய வேண்டும் என உமையவள் வேண்டி ஈசனிடம் வரம் பெற்றமையால், நந்தி தேவர், சனாகதி முனிவர் உள்ளிட்ட முக்கோடி தேவர்களும் மகா சிவராத்திரி விரதம் இருந்து நற்பலன்களை பெற்றதாக பல்வேறு புராண கதைகள் வெவ்வேறு வடிவங்களில் கூறுகின்றன.

    அன்றைய நாள் முதல்  பல யுகங்களாக இந்த மகா சிவராத்திரி தினத்தை தற்போது வரை தேவர்களும், மாமுனிகளும், கந்தவர்களும் கடைப்பிடித்து வருவதாக ஐதீகம்,மகா சிவராத்திரி தினத்தன்று  மாலை சூரியன் மறைந்தது முதல் மறு தினம்  சூரியன் உதயமாகும் வரை சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். ஐதீகமாகும்.மகா சிவராத்திரி அன்று  அன்று தேவாரம், திருவாசகம், திருமுறைகள் மற்றும் சிவபுராணம் படிப்பது மிகவும் சிறப்புடையதாகும், மகா சிவராத்திரி திருநாள் அன்று சிவபெருமானுக்கு'பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், திருநீர் ஆகியவற்றை கொண்டு பக்தியுடன் நாளை எங்களுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும், இதனால் லிங்க வடிவான சிவபெருமான் ஆனந்தம் அடைந்து அருளை அள்ளி வழங்குவார், அன்பே சிவம்" அவன் அருளே" பெரும் செல்வம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • How did Murugan, who was hidden in the tomb, come to Kandakottam?

    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்,
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்,
    உறவுகல வாமைவேண்டும்.
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும், பொய்மை
    பேசா திருக்கவேண்டும்.
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியா திருக்கவேண்டும்.
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை,
    மறவா திருக்கவேண்டும்.
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்.

    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே,
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி,
    சண்முகத் தெய்வமணியே

    என அருள் பிரகாச வள்ளலார் சுவாமிகள் தனது திரு அருட்பாவில் கந்தகோட்டை முருகன் குறித்து இவ்வாறு பாடி பணிந்துள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கந்தகோட்டை முருகன் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்.

    போரூர் அடங்கிய நிலப்பரப்பை பாளையக்காரர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது, மராட்டியர்கள் பகை கொண்டு படை எடுத்து வந்தனர். அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட போரில் மராட்டிய படையினர் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு, வழிபாட்டு தளங்களையும் விட்டு வைக்காமல் கோவிலுக்குள் புகுந்தும் செல்வங்களையும் அபகரித்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய பொன்னம்பல தம்பி பிரான் அடிகள், திருப்போரூர் கோவிலில் இருந்த முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைக்குமாறு கட்டளை இட்டார். அதன்படி மூலவர் திரையிட்டு மூடப்பட்ட நிலையில் உற்சவமூர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதை நினைத்து தம்பி பிரான் அடிகள் மனம் வரைந்தினார். பின் போரூர் கோவிலுக்குள் புகுந்த மராட்டிய படை கலக காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அப்போது மூலவர் முருகப் பெருமான் திரை நீக்கி அங்கிருந்து புற்று ஒன்றில் புகுந்தது மறைந்ததாகவும், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பக்தியுடன் உருகியதால் மராட்டிய படையினரின் பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அப்பகுதி மீண்டும் செல்வ செழிப்புடன் மேலோங்கி வளர்ந்ததாகவும் பெருமையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

    பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆடி கிருத்திகை அன்று காவடி எடுத்து பாதயாத்திரை ஆக திருப்போரூர் சென்று முருகனை வழிபட்ட பின்னர், இருப்பிடம் திரும்பி கொண்டு இருந்தபோது, சற்று ஓய்வு எடுப்பதற்காக மரத்தடி ஒன்றில் தங்கினர். அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார்.

    புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பிய போது குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம் அதிகமானதால் கையில் இருந்த முருகன் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முற்பட்டபோது முடியாததால், அங்கேயே திருக்கோயில் எழுப்பினர். முருகனுக்கு “கந்தசுவாமி” என்ற திருப்பெயரிட்டு வழிபட்டனர். அந்த இடம்தான் பெத்தநாயக்கன்பேட்டை என அழைக்கப்பட்ட, அவ்விடம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்” என தற்போது அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள முருகனை பம்பன் குமாரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாமாலை சூட்டி உள்ளனர். அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம், சென்னை பாரிமுனையில்அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்