Shrikalahasti attained Kannappan Moksha by devoting her eyes to Shiva!

ஆந்திர மாநிலத்தில் வைணவ தளங்களில் புகழ்பெற்றுமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலையும்" செய்வ சமயத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலையும் குறிப்பிடலாம், சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்துள்ள இது பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாக கருதப்படுகிறது.

வேடன் கண்ணப்பன் சிவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்றதும்,  சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) ஆகிய மூன்றும்  இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்ற ஸ்ரீ காளாஸ்தி வரலாற்றை அறிந்து கொள்வோம்" 

ஆந்திர மாநிலத்தில் உள்ள உட்டுகுரு என்ற சிறு கிராமத்தில் வேடர்  குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். பாசுபத அஸ்திரத்தை பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அவனது வீரத்தை சோதித்த சிவபெருமான் அர்ஜுனனின் போர் திறனை. கண்டு அவனுக்கு  அஸ்திரத்தை வழங்கியதோடு,  மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அளித்தார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் வனப்பகுதியில் வேடவ குளத்தில் திண்ணனாக அவதரித்தபோது. வேட்டையாடச் சென்ற திண்ணன் சிறு குன்றின் மீது இருந்த சிவலிங்கத்திற்கு அந்தணர் ஒருவர் பூஜை செய்து  நிவேதனம் செய்வதை கண்டு, சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறை தெரியாத வேடன்  திண்ணன். தானும் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்ய எண்ணி அருகில் இருந்த சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரை உறிந்து வந்து  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடி கொண்டு வந்த விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் இருந்து மலர்கள், இலைகள் கொண்டு வந்து மாலையாக கட்டி, அதை சிவலிங்கத்திற்கு அணிவித்து வழிபட்டான். அப்போது திண்ணனின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் வழக்கம் போல் திண்ணன் வழிபட வந்தபோது தனது ஒரு கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார்.

இதனைக் கண்டு பதறிய திண்ணன் சிவலிங்கத்தில் வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தும் பலன் இல்லாததால்,  சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து, அர்ப்பணித்தபோது லிங்கத்தின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வழிந்தது, இதனால் மனம் வருந்திய அவன் தனது மற்றொரு கண்ணையும், கையில் வைத்திருந்த ஈட்டியால் தோண்டி எடுக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி திண்ணனின் பக்தியில் மகிழ்ந்து சிவபெருமான்  நேரில் தோன்றி ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு தனது கண்ணையே" கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற திருப்பெயரால் அவர் அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் நாயன்மார்களில் கண்ணப்பரும் ஒருவராக திகழ்கிறார். மேலும் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் புராணக் கதைகளில் ஒன்றாக மற்றொரு சம்பவமும் கூறப்படுகிறது.- அதில் ஒரு முறை  வாயு பகவான்  கற்பூர லிங்கத்தை பிரதிஷ்டை செய்து,  அதன் முன்பாக பல ஆண்டுகள் தவம் தவம் புரிந்து வந்தான்.

அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு தோன்றி, வாயு பகவானே, ஓரிடத்தில் நிற்கும்  தன்மையில்லாத நீ, பல ஆண்டுகள் சிறு நகர்வு கூட இல்லாமல், ஓரிடத்திலிருந்து தவம் புரிந்தமையால் உனக்கு, மூன்று வரங்களை அளிக்கிறேன்"என கூறினார்.  அதன்படி வாயு பகவான், 'தான் உலகம் முழுவதும் எங்கும்.  நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்’ அனைத்து  உயிரின் அந்தராத்மாக செயல்பட வேண்டும்' தான் ' வழிபட்ட கற்பூர லிங்கம் தன்னுடைய   பெயராலேயே வழங்கப்பட வேண்டும்’, என மூன்று வரங்களை கேட்டான். அதன்படி   சிவபெருமான் வரம் அளித்தார். இதனால்  வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே" சிவலிங்க வழிபாடு ஏற்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயர்:   ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். அம்பிகையின் திருப்பெயர்: அருள்மிகு ஸ்ரீஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை, ஞானசுந்தரி தல விருச்சகம் வில்வம்,       தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு. இங்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், அகத்திய மாமுனிவர், பட்டினத்தார், பத்ரகிரியார்,  நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *