Tag: #MahaShivaratri #Shivaratri #MahaShivaratri2025 #LordShiva #ShivaBlessings #ShivPuja #OmNamahShivaya #ShivaDevotees #ShivaratriCelebrations #NightOfLordShiva Tamil Hashtags: #மகாசிவராத்திரி #சிவராத்த

  • The king who looted and built the temple “how was he caught by Thirumal when he was engaged in robbery?

    இறைவன் ஆட்கொண்டு விட்டால் பக்தர்கள் அவனுக்கு தொண்டு புரிந்து பேர் ஆனந்தம் அடைவர் அவரவர் பொருளாதார நிலை, எண்ணங்களுக்கு ஏற்ப பாமாலை சுட்டுவது, பூமாலை தொடுத்து கொடுப்பது, ஆலயங்களை தூய்மைப்படுத்துவது போன்ற தொண்டுகளை புரிவது உண்டு, ஆனால் கொள்ளை அடித்து அதில் கோவில் கட்ட எண்ணிய மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டபோது திருமாலிடம், பிடிபட்ட கதையை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

    காவேரி வலப்பகுதியான திருவாலி நாட்டின் திருக்குறையலூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லி நாட்டான் – வல்லித்திரு தம்பதியரின் மகனான" நீலன் கிபி ஏழாம் நூற்றாண்டு பிறந்தான். இளம் வயதிலேயே கல்வி கற்க பயின்று பல கலைகளும் கற்று'போர் வீர சாகச கலைகளிலும் தேர்ச்சி பெற்றான் நீலன். திருமங்கை கிராம தலைவனான இவனது ஆற்றலை அறிந்த எட்டிக் கடம்பன் சோழ முத்தைரயன்  அரசன் அவனை தனது சேனாதிபதியாக நியமித்தார், பின்  நடைபெற்ற பல்வேறு போர்களில் வெற்றியடைந்த முத்தைரயன் அரசன் நீலனை கௌரவிக்கும் வகையில், அவனை ஆலிநாட்டிற்கு அரசனாக நியமித்து எதிரிகளுக்கு காளானாக விளங்கியதால், பரகாலன்  என்ற பட்டத்தையும் வழங்கினான். இதன் காரணமாக' நீலனை நாட்டு மக்கள்  திருமங்கை மன்னன் என அழைத்தனர்.

    பின்னாளில் திருமங்கை மன்னன்" குமுதவல்லி என்ற பெண்ணை மணந்தார், திருமாலின் பக்தையான இவருடைய மனைவி குமுதவல்லி திருமணத்தின் போது, ஒரு நிபந்தனை வைத்து, திருமாலுக்கு திருக்கோவில் கட்ட வேண்டும், தினமும் 1008 வைணவர்களுக்கு விருந்து அளிக்கும்படி வேண்டினார், அரசியின் விருப்பப்படி திருமங்கை மன்னன் திருத் தொண்டர் களுக்கு நாள்தோறும் அமுது படைத்தும், மற்றொரு புறம் கோவில் திருப்பணிகை மேற்கொண்டும் வந்தான். இதனால் அரசு கருவூலத்தில் இருந்த தனது அனைத்து செல்வங்களையும் இழந்து, அடியார்களுக்கு உணவளிக்க வழி இன்றி திருமங்கை மன்னன் தவித்தான். இருந்த போதும் எப்போதும் போல்,  உணவு அளிக்க முடிவு செய்து, செல்வந்தர்களிடமும், பக்கத்து நாடுகளுக்குச் சென்று பொன், பொருள்களை கொள்ளை அடித்து கொண்டு வந்து வழக்கம்போல் உணவளித்து வந்தான்.

    திருமங்கை மன்னன் தவறான வழியில் தனது அடியார்களுக்கு துண்டு புரிவதை விரும்பாத திருமால்,   ஒரு நாள் வனப்பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கோடு, தனது கூட்டத்துடன்  திருமங்கை மன்னன். பதுங்கி இருப்பதை அறிந்து, கொள்ளையை தடுக்கும் நோக்கோடு' திருமால் தானே தன் தேவியருடன் மானுட ரூபம் எடுத்து ஏராளமான தங்க, வைர, வைடூரிய அபகரணங்களை  அணிந்துகொண்டு  திருமண கோலத்தில் இரட்டை மாட்டு வண்டிகளில் சுற்றம் சூழ கூட்டமாக அவழியாக வந்தார், திருமங்கை மன்னன் திருமண கோஷ்டியை  கண்டதும் ஆயுதங்களுடன்  அவர்களை சுற்றி வளைத்து, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை  கழற்றி தருமாறும் மறுத்தால் கொன்று விடுவதாகவும்" மிரட்டினான். இதனால் அச்சமடைந்த திருமண கூட்டத்தினர், தங்கள் அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழற்றிக் கொடுத்தனர்.

    அப்போது மணமகன் ஆகிய திருமாலின்  வலது காலின் ஒரு விரலில் மட்டும் வைரக்கல் பதிக்கப்பட்ட மெட்டி  அகற்றப்படாமல் இருந்ததை கண்டு அதையும் கழற்றிக் கொடுக்க வற்புறுத்தினார். மாப்பிள்ளை வேடத்தில் இருந்த திருமால் இந்த மெட்டியை கழற்றி இயலவில்லை என்றார், திருமங்கை மன்னன் அதனை  தன் பற்களால் மாப்பிள்ளையின் விரலில் இருந்து கடித்து கழற்ற முயன்றான் முடியவில்லை, பிறகு வழிப்பறி செய்த பொருட்களை மூட்டையாக கட்டி தூக்கிச் செல்லும் முயன்றனர், அவர்களால் அதை நகர்த்த கூட முடியவில்லை, இதனால் கோபம் கொண்ட திருமங்கை மன்னன்' மணமகனை நோக்கி,    மூட்டையை தூக்க முடியாமல் நீ ஏதோ மந்திர தந்திர வேலையை செய்து விட்டாய்.  அந்த மந்திரத்தை சொல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவேன் என கர்ஜித்தான்.

    மாப்பிளை (திருமால்) என் அருகில் வா அந்த மந்திரத்தை கூறுகிறேன் என்றார், திருமங்கை மன்னனும் திருமால் அருகே சென்றான். எம்பெருமானாகிய இறைவன், அவரது காதில், "ஓம் நமோ நாராயணா" என்ற திருமந்திரமான திருவெட்டெழுத்தை உபதேசித்தார். அதைக் கேட்ட "திருமங்கை மன்னனின் அகக்கண் திறந்தது தாயினும் இனிய அன்பின் வடிவமான  நலம் தரும் சொல்லை நான் அறிந்து கொண்டேன்"  என இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறி திகைத்து நின்றார். மணப்பெண் கோலம் பூண்டிருந்த மகாலட்சுமியும் கருணை பொழியும் திரு  கண்களால் திருமங்கை மன்னனை பார்த்து அருளினால், பிறகு தோன்றிய இறைவனும் இறைவியும் சுற்றத்தாறுடன்  மறைந்து விட்டனர்.

    இந்நிகழ்வுக்குப் பின் திருமங்கை மன்னனுக்கு ஞானத் தெளிவு பிறந்தது உள்ளத்தில் பேரொலி எழுந்தது உடன் திருமாலை நோக்கி பாசுரங்கள் பாடத் தொடங்கினார்.

    "வாடினேன் வாடினேன் மனத்தாற்
    பெருந்துயர் இடும்பையிற் பிறந்து
    கூடினேன், கூடி இளையவர் தம்மோடு"
    அவர்தரும் கலவியே கருதி
    ஓடினேன், உயவதோர் பொருளால்
    உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
    நாடினேன், நாடி நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்"

    என நாராயணனை பாடி பல்வேறு பல்வேறு இடங்களுக்கு சென்று திருமாலின் மீது பாசுரங்களை பாடி எம்பெருமானின் அருளால் திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வார் என போற்றுதலுக்கு உள்ளாகி அரங்கனின் திருப்பாத கமலத் திருவடியில் சேர்ந்தார் என்பதே" திருமங்கை மன்னன் வழிப்பறியில் ஈடுபட்டு திருமால் இடம் சிக்கிய புனித வரலாறு ஆகும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Shrikalahasti attained Kannappan Moksha by devoting her eyes to Shiva!

    ஆந்திர மாநிலத்தில் வைணவ தளங்களில் புகழ்பெற்றுமையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலையும்" செய்வ சமயத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஸ்ரீகாளஹஸ்தி கோவிலையும் குறிப்பிடலாம், சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்துள்ள இது பஞ்சபூத தலங்களில் வாயு லிங்க க்ஷேத்திரமாக கருதப்படுகிறது.

    வேடன் கண்ணப்பன் சிவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்றதும்,  சிலந்தி (ஸ்ரீ), பாம்பு (காள), யானை (அஸ்தி) ஆகிய மூன்றும்  இறைவனை வழிபட்டு மோட்சம் பெற்ற ஸ்ரீ காளாஸ்தி வரலாற்றை அறிந்து கொள்வோம்" 

    ஆந்திர மாநிலத்தில் உள்ள உட்டுகுரு என்ற சிறு கிராமத்தில் வேடர்  குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். பாசுபத அஸ்திரத்தை பெற அர்ஜுனன் தவமிருந்தபோது, அவனது வீரத்தை சோதித்த சிவபெருமான் அர்ஜுனனின் போர் திறனை. கண்டு அவனுக்கு  அஸ்திரத்தை வழங்கியதோடு,  மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அளித்தார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் வனப்பகுதியில் வேடவ குளத்தில் திண்ணனாக அவதரித்தபோது. வேட்டையாடச் சென்ற திண்ணன் சிறு குன்றின் மீது இருந்த சிவலிங்கத்திற்கு அந்தணர் ஒருவர் பூஜை செய்து  நிவேதனம் செய்வதை கண்டு, சிவபெருமான் மீது பக்தி கொண்டார். வழிபாட்டு முறை தெரியாத வேடன்  திண்ணன். தானும் சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்ய எண்ணி அருகில் இருந்த சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரை உறிந்து வந்து  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடி கொண்டு வந்த விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் இருந்து மலர்கள், இலைகள் கொண்டு வந்து மாலையாக கட்டி, அதை சிவலிங்கத்திற்கு அணிவித்து வழிபட்டான். அப்போது திண்ணனின் பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருநாள் வழக்கம் போல் திண்ணன் வழிபட வந்தபோது தனது ஒரு கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார்.

    இதனைக் கண்டு பதறிய திண்ணன் சிவலிங்கத்தில் வழியும் ரத்தத்தை நிறுத்த முயற்சித்தும் பலன் இல்லாததால்,  சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து, அர்ப்பணித்தபோது லிங்கத்தின் மற்றொரு கண்ணில் இருந்தும் ரத்தம் வழிந்தது, இதனால் மனம் வருந்திய அவன் தனது மற்றொரு கண்ணையும், கையில் வைத்திருந்த ஈட்டியால் தோண்டி எடுக்க முற்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்தி திண்ணனின் பக்தியில் மகிழ்ந்து சிவபெருமான்  நேரில் தோன்றி ஆட்கொண்டார். சிவபெருமானுக்கு தனது கண்ணையே" கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற திருப்பெயரால் அவர் அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில் நாயன்மார்களில் கண்ணப்பரும் ஒருவராக திகழ்கிறார். மேலும் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலின் புராணக் கதைகளில் ஒன்றாக மற்றொரு சம்பவமும் கூறப்படுகிறது.- அதில் ஒரு முறை  வாயு பகவான்  கற்பூர லிங்கத்தை பிரதிஷ்டை செய்து,  அதன் முன்பாக பல ஆண்டுகள் தவம் தவம் புரிந்து வந்தான்.

    அதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், வாயு பகவான் முன்பு தோன்றி, வாயு பகவானே, ஓரிடத்தில் நிற்கும்  தன்மையில்லாத நீ, பல ஆண்டுகள் சிறு நகர்வு கூட இல்லாமல், ஓரிடத்திலிருந்து தவம் புரிந்தமையால் உனக்கு, மூன்று வரங்களை அளிக்கிறேன்"என கூறினார்.  அதன்படி வாயு பகவான், 'தான் உலகம் முழுவதும் எங்கும்.  நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்’ அனைத்து  உயிரின் அந்தராத்மாக செயல்பட வேண்டும்' தான் ' வழிபட்ட கற்பூர லிங்கம் தன்னுடைய   பெயராலேயே வழங்கப்பட வேண்டும்’, என மூன்று வரங்களை கேட்டான். அதன்படி   சிவபெருமான் வரம் அளித்தார். இதனால்  வாயு பகவான் இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே" சிவலிங்க வழிபாடு ஏற்பட்டது. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் எழுந்தருளி உள்ள இறைவன் திருப்பெயர்:   ஸ்ரீ அருள்மிகு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர். அம்பிகையின் திருப்பெயர்: அருள்மிகு ஸ்ரீஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை, ஞானாம்பிகை, ஞானசுந்தரி தல விருச்சகம் வில்வம்,       தீர்த்தம் : ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு. இங்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர், நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், அகத்திய மாமுனிவர், பட்டினத்தார், பத்ரகிரியார்,  நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், சிலந்தி, பாம்பு, யானை, முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Do you also want to see the wonderful event of 63 Nayanmars throwing palm oil to Kailaya Nathan on the day of Maha Shivratri?

    சிவபெருமான் தனது திருவிளையாடல் மூலம், தனது அடியார்களுக்கு பல்வேறு சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் படும் அவதியை கண்டு மகிழ் பவர் மட்டுமல்ல, அதிலிருந்து அவர்களை மீட்டெடுத்து மோட்ச நிலை வழங்குவதற்காக தானே" வெவ்வேறு வடிவங்கள் எடுத்து நேரடியாக சென்று ஆட்கொண்ட கதைகள் சிவபுராணத்தில் ஏராளம், அப்படி சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட 63 நாயன்மார்கள் குறித்து நாம் அறிந்திருப்போம், அவர்களின் வரலாற்றை தான் நாம் சிவபுராணமாக போற்றி வருகிறோம்"அந்த 63 நாயன்மார்களும் ஒரே" நேரத்தில் கூடி சிவபெருமானுக்கு பாமாலை சூட்டுவது எப்போது தெரியுமா ?

    உலகத்தில் பிறளையும் ஏற்பட்டபோது. உலக உயிர்கள் அனைத்தும் அபயம் தேடி கைலாயம் சென்று சிவபெருமானின் திருவடியை பற்றின. அப்போது பார்வதி தேவி உயிரினங்களைக் காக்க சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தால், பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான். தனது கருணையால் உலகை சமப்படுத்தி மீண்டும் உயிரினங்களை படைத்தார், அப்போது பார்வதி தேவி தான் மேற்கொண்ட தவத்தின் பலன் உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் சென்றடைய அருள் புரியுமாறு" இறைவனை வேண்டினாள். அதன்படி சிவபெருமான் அருளிய தினமே" மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி ஆனது" பூலோகத்தில் உள்ள ஆலயங்களில் மட்டுமல்ல ஏழு லோகங்களிலும் கொண்டாடப்படுவதாகவும், அப்போது தேவர்கள், மாமுனிகள், ரிஷிகள், கந்தவர்களும் விரதத்தை கடைப்பிடித்து கண் விழித்து சிவபெருமானை போற்றி வணங்குவார்கள்.

    இதேபோன்று மானுடர்களாக அவதரித்து சிவன் ஆட்கொண்டதால் பிறப்பில்லா நிலை அடைந்து இறைவனடி சேர்ந்த 63 நாயன்மார்களும் மகா சிவராத்திரி அன்று கைலாயத்தில் ஒன்றாக கூடி சிவனைப் போற்றி பாமாலை சூட்டி வழிபடுவதாகவும், இந்த அற்புத நிகழ்வை சிவராத்திரி விரதத்தை கடைபிடிக்கும் நீங்களும் காண வேண்டுமா ? அதற்கு சிவனை நோக்கி ஆழ்ந்த தியானத்தில் மனதை ஒருங்கிணை படுத்துங்கள் பின் கைலாயத்தில் இருப்பது போன்று வாவித்துக் கொண்டு ஓம் நமச்சிவாய"ஓம் நமச்சிவாய"என்ற திருமந்திரத்தை ஆத்ம ரீதியாக உச்சரித்து உங்கள் அவ கண்ணை திறந்து பாருங்கள் கைலாயநாதன் உங்கள் கண்முன்னே" முழுவதும் நாயன்மார்கள் பாமாலை சுற்றி அவரை போற்றுவதையும் நாம் உணரலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Maha Shivratri was blessed by the grace of

    மகா சிவராத்திரி எப்படி உருவானது? புராண காலத்தில் உலகம் பிரளயம் ஆன போது, அதில் இருந்த உயிரினங்கள் அவையும் தேடி" சிவபெருமானிடம் சென்றன.  இதனால் உலகம் செயலற்று போனது. இதனைக் கண்ட, அன்பின் வடிவமான உமையவள்  உலகம் மீண்டும் இயங்குவதற்கும், உயிரினங்கள் இன்புற்று வாழ்வதற்காகவும் கடும் தவம் செய்தால், அன்னையின் தவக்கோளத்தை கண்ட சிவபெருமான்   அப்போது, மீண்டும் உயிரிகளை உயிர்களை படைத்து ஆட்கொண்டார்.

    எம்பெருமானின் அருளால்.உலகம் மீண்டும் இயங்கத் தொடங்கியது. உமையவள் சிவனை நோக்கி விரதம் இருந்து வழிபட்ட அந்நேரத்தில் அனைத்து உயிரினங்களும்  விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டன. அந்த நாளை சிவராத்திரி ஆகவும் கொண்டாடப்படுகிறது. அன்றைய நாளில்  மகா சிவராத்திரி விரத வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று  முக்தி அடைய வேண்டும் என உமையவள் வேண்டி ஈசனிடம் வரம் பெற்றமையால், நந்தி தேவர், சனாகதி முனிவர் உள்ளிட்ட முக்கோடி தேவர்களும் மகா சிவராத்திரி விரதம் இருந்து நற்பலன்களை பெற்றதாக பல்வேறு புராண கதைகள் வெவ்வேறு வடிவங்களில் கூறுகின்றன.

    அன்றைய நாள் முதல்  பல யுகங்களாக இந்த மகா சிவராத்திரி தினத்தை தற்போது வரை தேவர்களும், மாமுனிகளும், கந்தவர்களும் கடைப்பிடித்து வருவதாக ஐதீகம்,மகா சிவராத்திரி தினத்தன்று  மாலை சூரியன் மறைந்தது முதல் மறு தினம்  சூரியன் உதயமாகும் வரை சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். ஐதீகமாகும்.மகா சிவராத்திரி அன்று  அன்று தேவாரம், திருவாசகம், திருமுறைகள் மற்றும் சிவபுராணம் படிப்பது மிகவும் சிறப்புடையதாகும், மகா சிவராத்திரி திருநாள் அன்று சிவபெருமானுக்கு'பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், திருநீர் ஆகியவற்றை கொண்டு பக்தியுடன் நாளை எங்களுக்கு சென்று அபிஷேகம் செய்ய வேண்டும், இதனால் லிங்க வடிவான சிவபெருமான் ஆனந்தம் அடைந்து அருளை அள்ளி வழங்குவார், அன்பே சிவம்" அவன் அருளே" பெரும் செல்வம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்