Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Libra lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    பஞசம  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – அஷ்டம  ஸ்தானத்தில் குரு -பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் -அயன சயன போக  ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.
    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.
    14-03-2025 அன்று சூரிய பகவான் பஞ்சம  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    துணிச்சலாக காரியங்களில் ஈடுபடும் அதே நேரத்தில் நியாயமாகவும், நேர்மையாகவும அதனை செய்து முடிக்கும் குணமுடைய துலா ராசியினரே இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

    தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

    குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  

    பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும்.
    அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சனைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்க்கட்சியினரின் உதவி கிடைக்கும். கட்சித் தலைமை உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்பை ஒப்படைக்கும்.

    கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளில் வெற்றி அடைவர். உங்களை உதாசீனப்படுத்திய நிறுவனமே அழைத்துப் பேசும். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்களை கற்றுத் தெளிவீர்கள்.மாணவர்களுக்கு கல்வியில்  முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 

    சித்திரை 3, 4 பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும்  சமாளிப்பது  நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

    சுவாதி:

    இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத  சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை  தரும். 

    விசாகம் 1, 2, 3ம்  பாதம்:

    இந்த மாதம் அவ்வப்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.

    பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க  கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி கிடைக்கும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7

    அதிர்ஷ்ட தினங்கள்:  26, 27, 28

  • Zodiac lovers, is March favorable?.. unfavorable?.. Here is your zodiac sign for this month..!

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் கேது -களத்திர  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -அஷ்டம  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – தொழில்  ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யும் குணமுடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.
    குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள். 

    பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம்.
    அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கட்சித் தலைமையின் ஆதரவு கிட்டும். கட்சி மேல்மட்டத்தால் அலைக்கழிக்கப்படுவர்.
    கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். உங்களது கலைத்திறன் வளரும். 
    மாணவர்கள் சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

    மகம்:

    இந்த மாதம் வீண் மனக்கவலையை  உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

    பூரம்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு  செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    உத்திரம் 1ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

    பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30

    அதிர்ஷ்ட தினங்கள்:  22, 23

  • Cancer zodiac lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது -அஷ்டம  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -பாக்கிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – லாப  ஸ்தானத்தில் குரு -அயன சயன போக  ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியம் உடைய கடக ராசியினரே இந்த மாதம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

    தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
    குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். 
    பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

    அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள்.
    கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். மாணவர்களுக்கு  புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

    புனர்பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. 

    பூசம்:

    இந்த மாதம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.  நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

    ஆயில்யம்:

    இந்த மாதம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். 

    பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் – புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28

    அதிர்ஷ்ட தினங்கள்:  19, 20, 21

  • Gemini lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    ராசியில் செவ்வாய் -சுக ஸ்தானத்தில் கேது -பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -தொழில்  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – அயன சயன போக  ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய  மிதுன ராசியினரே இந்த மாதம் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். எனினும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
    தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

    கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

    பெண்கள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
    அர்சியல்வாதிகள் கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கட்சியில் உங்களைப் பற்றிய சலசலப்பு நீங்கும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து உங்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்.

    கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வருமானம் உயர வழி பிறக்கும். விமர்சனக்களையும் தாண்டி முன்னேறுவார்கள். வேலைப்பளு காரணமாக வெளியில் தங்க நேரலாம்.மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:

    இந்த மாதம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம்  லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

    திருவாதிரை:

    இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

    புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

    இந்த மாதம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத  செலவு உண்டாகும். 

    பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன் – வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 24, 25, 26

    அதிர்ஷ்ட தினங்கள்:  18, 19, 20

  • Taurus lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    ராசியில்குரு -தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் செவ்வாய் -பஞசம  ஸ்தானத்தில் கேது -தொழில்  ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -லாப  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    பிரச்சனைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் ரிஷப ராசியினரே இந்த மாதம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின்  நட்பு கிடைக்கும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான  விஷயங்கள்  சாதகமாக  நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.
    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

    பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில்  ஏதாவது கவலை இருந்து வரும். 
    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 

    அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

    மாணவர்களுக்கு  வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

    கார்த்திகை 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

    ரோகிணி:

    இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

    மிருகசிரீஷம் 1, 2, பாதம்:

    இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

    பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில்  சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 22, 23

    அதிர்ஷ்ட தினங்கள்:  15, 16, 17

  • How did Murugan, who was hidden in the tomb, come to Kandakottam?

    ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
    உத்தமர் தம் உறவுவேண்டும்,
    உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்,
    உறவுகல வாமைவேண்டும்.
    பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும், பொய்மை
    பேசா திருக்கவேண்டும்.
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்
    பிடியா திருக்கவேண்டும்.
    மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை,
    மறவா திருக்கவேண்டும்.
    மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
    வாழ்வில்நான் வாழவேண்டும்.

    தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே,
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி,
    சண்முகத் தெய்வமணியே

    என அருள் பிரகாச வள்ளலார் சுவாமிகள் தனது திரு அருட்பாவில் கந்தகோட்டை முருகன் குறித்து இவ்வாறு பாடி பணிந்துள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க கந்தகோட்டை முருகன் வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம்.

    போரூர் அடங்கிய நிலப்பரப்பை பாளையக்காரர்கள் ஆண்டு கொண்டு இருந்தபோது, மராட்டியர்கள் பகை கொண்டு படை எடுத்து வந்தனர். அப்போது இருதரப்பிற்கும் ஏற்பட்ட போரில் மராட்டிய படையினர் பெரும் அழிவை ஏற்படுத்தியதோடு, வழிபாட்டு தளங்களையும் விட்டு வைக்காமல் கோவிலுக்குள் புகுந்தும் செல்வங்களையும் அபகரித்தனர். இதனைக் கண்டு மனம் வருந்திய பொன்னம்பல தம்பி பிரான் அடிகள், திருப்போரூர் கோவிலில் இருந்த முருகப்பெருமானின் உற்சவ மூர்த்தியை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைக்குமாறு கட்டளை இட்டார். அதன்படி மூலவர் திரையிட்டு மூடப்பட்ட நிலையில் உற்சவமூர்த்தி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இறைவனுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டதை நினைத்து தம்பி பிரான் அடிகள் மனம் வரைந்தினார். பின் போரூர் கோவிலுக்குள் புகுந்த மராட்டிய படை கலக காரர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். அப்போது மூலவர் முருகப் பெருமான் திரை நீக்கி அங்கிருந்து புற்று ஒன்றில் புகுந்தது மறைந்ததாகவும், முருகப்பெருமானை வேண்டி பக்தர்கள் பக்தியுடன் உருகியதால் மராட்டிய படையினரின் பிடியிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பிய அப்பகுதி மீண்டும் செல்வ செழிப்புடன் மேலோங்கி வளர்ந்ததாகவும் பெருமையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.

    பகுதியை சேர்ந்த பக்தர்கள் சிலர் ஆடி கிருத்திகை அன்று காவடி எடுத்து பாதயாத்திரை ஆக திருப்போரூர் சென்று முருகனை வழிபட்ட பின்னர், இருப்பிடம் திரும்பி கொண்டு இருந்தபோது, சற்று ஓய்வு எடுப்பதற்காக மரத்தடி ஒன்றில் தங்கினர். அப்போது, பக்தர் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், அருகில் இருந்த புற்றில், தான் சிலையாக இருப்பதை உணர்த்தினார்.

    புற்றிலிருந்த சிலையை எடுத்த பக்தர்கள், ஊர் திரும்பிய போது குறிப்பிட்ட ஓரிடத்தில் பாரம் அதிகமானதால் கையில் இருந்த முருகன் சிலையைக் கீழே வைத்தனர். பின்னர் அங்கிருந்து அதை எடுக்க முற்பட்டபோது முடியாததால், அங்கேயே திருக்கோயில் எழுப்பினர். முருகனுக்கு “கந்தசுவாமி” என்ற திருப்பெயரிட்டு வழிபட்டனர். அந்த இடம்தான் பெத்தநாயக்கன்பேட்டை என அழைக்கப்பட்ட, அவ்விடம் முருகன் கோயில் அமைந்த பிறகு, “கந்தகோட்டம்” என தற்போது அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள முருகனை பம்பன் குமாரகுருபரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோரும் பாமாலை சூட்டி உள்ளனர். அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமி திருக்கோயில் கந்தகோட்டம், சென்னை பாரிமுனையில்அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • aries-will-the-month-of-december-be-favorable

    கிரகநிலை:

    தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் குரு -தைரிய வீரிய  ஸ்தானத்தில்  செவ்வாய் -ரண ருண ரோக ஸ்தானத்தில்  கேது -லாப  ஸ்தானத்தில்  சூர்யன், சந்திரன், சனி -அயன சயன போக  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன், புதன் என வலம் வருகிறார்கள்
    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் லாப  ஸ்தானத்தில்  இருந்து அயன சயன போக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து லாப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மேஷ ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
    தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

    குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
    பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 

    கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தைக் குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 
    அரசியல் துறையினர் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  

    மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.
அஸ்வினி:
    இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

    பரணி:

    இந்த மாதம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

    கார்த்திகை 1ம் பாதம்:

    இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

    பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

     அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – செவ்வாய் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 19, 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்:  12, 13, 14

  • Virgo lovers, is March favorable?.. unfavorable?.. Here is your horoscope for this month..!

    கிரகநிலை:

    ராசியில் கேது -ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன், சனி -களத்திர  ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு -தொழில்  ஸ்தானத்தில் செவ்வாய்  என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    04-03-2025 அன்று சுக்ரன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    09-03-2025 அன்று புதன் பகவான் வக்ரம் ஆகிறார்.

    14-03-2025 அன்று சூரிய பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    18-03-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் புதன் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-03-2025 அன்று புதன் வக்ர நிவர்த்தி ஆகிறார்.

    பலன்:

    எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிக்கும் கன்னி ராசியினரே இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும்.   விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும்.  மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

    தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.
    குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

    பெண்கள் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.  எதிர்பார்த்த தகவல்கள் வரும். 
    அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. சகாக்களுடன் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். எனினும் கட்சி மேல்மட்டத்தில் மதிக்கப் படுவீர்கள்.

    கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்பு தேடிவரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது அவசியம்.
    மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை.  பாடங்கள் எளிமையாக தோன்றும். 

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்குவன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

    அஸ்தம்:

    இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும்  என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

    பரிகாரம்:  கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் – வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

    அதிர்ஷ்ட தினங்கள்:  24, 25, 26

  • Lord Shiva, who filed a false complaint against a devotee and destroyed the entire court

    தனது திரு ஓட்டை தானே மறைத்துவிட்டு தனது பக்தன் மீது பொய் புகார் கொடுத்து வழக்காடு மன்றத்திற்கு அளக்க அழிக்க விட்ட திருநீலகண்டம் தில்லையில் ஆடிய தாண்டவ திருவிளையாடல் என்ன தெரியுமா ?

    சிவ பக்தரான தில்லையைச் சேர்ந்த நீலகண்டம் எப்பொழுதும் நடராஜப் பெருமானை நினைத்தபடி திருநீலகண்டா "திருநீலகண்டா" என கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.  அதேபோன்று'அடியார்கள் இடமும் அன்பு மிகுதியுடன் நடந்து கொள்வார். நடராஜ பெருமானை எந்த நேரமும், துதித்து வந்தமையால்,  இவரை திருநீலகண்டர் என காரண பெயரிட்டு அழைத்தனர். தனது குல மரபின்படி திரு ஓடுகளை செய்து, அடியார்களுக்கு வழங்கும் அரும்ப பணியினை செய்து வந்தார். நீலகண்டத்தின்  மனைவியும் கணவனின் சொல்படி வாழ்ந்து வந்தாள். அப்போது ஊழ்வினையின் பலனாக அவரது தூய உள்ளம், சிற்றின்பத்தை தேடி தாசியிடம் சென்றது.  இதை அறிந்து, அவரது மனைவி வேதனையுடன் தன் கணவரிடம் கோபம் கொண்டாள். நீலகண்டர் ஏதும் புரியாது திகைத்தார். கூடல்  இன்பத்திற்காகவே" மனைவி இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணி' நீலகண்டர். ஒருநாள் இரவு  மனைவியின்.

    அங்கத்தை நீக்கி கூடச் சென்றார். பொறுமை இழந்த மனைவி .ஐயனே" இனி எம்மை தொடுவீரின்  திருநீலகண்டம் என்று கூறித் திருநீலகண்டத்தின் மீதே சத்தியம் இட்டு, தம்மை இனி தீண்டக் கூடாது என்று கூறி விட்டாள். சிவபெருமானையே"தன் உயிராக உணர்வாக நினைத்த நீலகண்டம், மனைவி, இவ்வாறு ஆணையிட்டதை  கேட்டு மனம் வருந்தினார்.  மனைவியின் கோபத்தில் உள்ள நியாயத்தை  உணர்ந்து.  எம்மை என்றதனால்  மற்ற மங்கையரையும் இனி மனதாலும் தீண்டேன்" என  சிவன் மீது சத்தியம் செய்து. நீலகண்டர். அன்று முதல் தனது சிற்றின்பத்தை விட்டு, முற்றும் துறந்த முனிவரைப் போல ஐம்புலன்களையும் தன்னுள் அடக்கி வாழ தொடங்கினார். ஒரே வீட்டில் வசித்த போதும், கணவன்-மனைவி இருவரும் இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டு'கட்டுப்பாடுடன் வாழ்ந்தனர். பின் ஆண்டுகள் பல கடந்து நீலகண்டரும்,  அவரது துணைவியாரும் முதுமை அடைந்தனர்.

    அப்போது சிவபெருமான், நீலகண்டனின் பெருமையை உலகுக்கு பறைசாற்ற எண்ணி' தனது திருவிளையாடலை தொடங்கினார். சிவ அடியார் போல் வேடமிட்டு,  திருவோடு ஏந்தி தெருவில் நடந்து  நீலகண்டனின் வீட்டை வந்து அடைந்தார்.நீலகண்டரும் அவரது துணைவியாரும் அடியார் கோலத்தில் வந்த பெருமானை வணங்கி வரவேற்று உபசரித்து முறைப்படி வழிபட்டனர். அப்போது நீலகண்டம் சிவ அடியாரிடம், ஐயனே" இத் தொண்டன் என்ன பணி செய்தல் வேண்டும் ? என
    பணிவுடன் கேட்டார். அதற்கு சிவ அடியார்  தன்னிடமிருந்த  திருவோட்டைக் காண்பித்து  நீலகண்டா ! இத் திருஓட்டின் மதிப்பை நிர்ணிக்க முடியாது.  விலை மதிப்பிட முடியா" கற்பகத் தரு போன்றது, பொன்னும், மணியும், தங்கமும், வைரமும் கூட இதற்கு ஈடாகாது. இத்தகைய திருவோடடை உன்னிடம் ஒப்படைக்கிறேன். திரும்பி வந்து நான் கேட்கும்போது தருவாயாக என்று கூறி திருவோட்டினை நீலகண்டன் இடம் கொடுத்தார்.

    அதை பணிவோடு நீலகண்டம் பெற்று ஐயனே"  உங்கள் சித்தம் என் பாக்கியம் என்று கூறினார். திருஓட்டை பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தார். சிவ அடியாரும், தில்லை சென்று அங்கு சில காலம் தங்கி' பின் ஒரு  நாள் நீலகண்டத்தைக் காண வந்த. சிவ அடியாரை வரவேற்று, பாத பூஜை செய்து, இருக்கையில் அமரச் செய்தார். சிவனடியார் நீலகண்டத்திடம் தான் வந்த வேலை முடிந்து விட்டமையால், திருவோட்டைத் தருமாறு கேட்டார். நீலகண்டம் வேகமாக சென்று திருஓட்டைப் பாதுகாப்பாக வைத்திருந்த இடத்தில் போய் பார்த்தபோது. அங்கு அதனைக் காணாது அதிர்ச்சியுடன்  மனைவி யிடம் ஓட்டை காணவில்லையே என்றார். தான் அறியேன்"  எப்படி காணாமல் போகும் என்று இருவரும் தவித்தனர்.  நிலை தடுமாறினர். பின் வாடிய முகத்துடன் இருவரும் சிவனடியார் பக்கம் வந்து சுவாமி என அழைத்து. தயங்கி நின்றார் நீலகண்டன் அவரின். தயக்கத்தை  கண்ட சிவனடியார் சற்று கோபமாகவே ஏனடா"  இத்தனை தாமதம் ? திரு ஓட்டை கேட்டால் கொடுக்க மனமின்றி ஒளித்து வைத்துக் கொண்டாயா? நான் உடனே  போகவேண்டும் , காலம் தாழ்த்தாமல் அதை கொடு என்றார். அவரது சினத்தை கண்டு நடுங்கிய நீலகண்டம், உண்மையிலே யே அத்திருஓடு காணாமல் போய் விட்டது சுவாமி என கண்ணீர் மல்க வணங்கினார்.  அடியாரோ கோபத்தில் நிதானம் இழந்து தாண்டவம் ஆடினார்.  நீலகண்டம்  அய்யனே  சினங்கொள்ளாதீர் அறியாது நடந்த தவறு பொறுத்துக் கொள்ள வேண்டும், திருஓடு மறைந்த தந்திரத்தை நான் அறியேன். மன்னித்து விடுங்கள்" உங்கள் மண் ஓட்டிற்குப் பதில் பொன் ஓடு வேண்டும் என்றாலும் , தருகிறேன் என்று பணிவோடு கூறினார்.

    சிவனடியாருக்கு மீண்டும் கோபம் வந்தது . என்ன ? வேறு ஒரு ஓடு தருகிறாயா ?  நீலகண்டா !  ஓட்டின் அருமைபெருமை பற்றி நான்  கூறியதனால்' நீ அந்த ஓட்டைத் திருடியிருக்கிறாய் என குற்றம் சாட்டியதைக் கேட்டு, தவறு சுவாமி"தவறு  உண்மையாகவே சொல்கிறேன்  அடியேன் தங்களது த திரு ஓட்டை  திருடவில்லை என்று நீலகண்டன் கூறினார் . நீ திருட வில்லை என்பது உண்மையானால், நான் திருடவில்லை என்று உன் மகன் கரம் பற்றி கோவில் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அம்பலத்தான் மீது சத்தியம் செய்யும் என்றார் எனக்கு மகன் இல்லையே சுவாமி ! என  மகன் இல்லாவிட்டால் என்ன ? மனைவியின் கையைப் பற்றி குளத்தில்  மூழ்கி உண்மையை நிலை நாட்டினால் அது போதும்" என்றார். சிவ அடியாரின்  ஆணை, நீலகண்டத்தின்  மனத்தை மேலும் வேதனை ப்படுத்தியது. அவர் தர்ம சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டார்.  தமக்கும் – மனைவிக்கும் உள்ள இல்லற பிரச்சனையை சொல்ல முடியாத நிலையில், சுவாமி மன்னிக்க வேண்டும், நானும் என் மனைவியும் ஒரு சபதம் செய்து கொண்டிருக்கிறோம். எனவே என் மனைவி கரம் பற்றி சத்தியம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக மறுத்தார் நீலகண்டன். இனியும் உன்னோடு பேசிப் பயனில்லை வா  வழக்குமன்றம் செல்வோம் என முடிவாகச் சொன்னார் சிவ அடியார்.

    நீலகண்டன் அதற்கு சம்மதிக்க இருவரும், தில்லைவாழ் அந்தணர்களின் அரிய அவைக்கு சென்று' அவர்களிடம் வழக்கை எடுத்துரைத்தார் அப்போது. நீலகண்டனோ"  ஓட்டைத் திருடவில்லை என  முடிவாக தெரிவித்தார். இதனால் அவை முன்னவர் சிவ அடியார் விருப்பத்தின் படி குளத்து நீரில் மூழ்கி சத்தியம் செய்யுமாறு கூறினர். நீலகண்டன் மனைவியின்  கரம்பற்றி , நிபந்தனையை நிறைவேற்ற முன்வரவில்லை மாறாக'; இல்லம் சென்று, தன் மனைவியை  அழைத்து கொண்டு கோவில் குளம் நோக்கி வந்த நீலகண்டன்.   மூங்கில் கட்டை  ஒன்றினை கொண்டு வந்து அதன் ஒரு பக்கத்தைத் தாமும், மறுபக்கத்தை அவர் மனைவியும் பிடித்தவாறு நீரில் மூழ்குவதை ஏற்க மறுத்த அவைனர். கரம் பற்றியே குளத்து நீரில் மூழ்கிச் சத்தியம் செய்ய வேண்டும் என ஆணையிட்டனர்.  

    வேறு வழியின்றி நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் அவை அறிய எடுத்துக் கூறி மூங்கில் கட்டையை கணவன் மனைவி இருவரும் பற்றிக் கொண்டு, அவையின் அனுமதியின்றி குளத்து நீரில் மூழ்கி எழுந்தபோது. சிவபெருமானின் அருளால், முதுமை நீங்கி, இளமையுடன் எழுந்தனர். அப்போது அங்கிருந்த   சிவனடியார் திடீரென்று மறைந்து விட்டார். ஆகாயத்தில் இருந்து பூ மழை பொழிந்தது. தில்லை நடராஜர் கோவில் மணிகள் ஒலித்தன" சங்கு நாதம்  முழங்கியது' கைலாய எங்கும் வாக்கியங்கள் இசைத்தென" ஜோதி வடிவான ஈசன் பார்வதி தேவியுடன் எழுந்தருளி பக்த  தம்பதியருக்கு காட்சி அளித்தார்.  

    திருநீலகண்டரும் அவரது துணைவியாரும் பக்தி பெருக்கில் நிலத்தில் வீழ்ந்து அம்மை அப்பரை வணங்கினர். சிற்றின்ப சேற்றில் சிக்காமல் ஐம்புலன்களையும்  வென்ற அடியவர்களே" தில்லை அம்பலத்துல் அகப்பட்டு திருநீறு நீலகண்டத்தை பற்றியதால்" நீலகண்டா இனி நீ திருநீலகண்டர் என அழைக்கப்படுவாய்" எக்காலமும், குன்றா இளமையுடன் அனைத்து செல்வங்களையும் பெற்று  நலமுடன் வாழ்வீர்கள் ஆக" என எம்பெருமான் வரம் அளித்தார். அதன் பின் திருநீலகண்ட நாயனாரும் அவரது மனைவியாரும் இறைவனின் திருவருளினால் இளமை குன்றாமல், இன்பத்துடன் திருப்பணிபுரிந்து  நெடுநாள் வாழ்ந்து தில்லை நடராஜனின் பொற்பாத கமலங்களில் பணிந்து பிறவா நிலை அடைந்து திரு நீலகண்டர் 63 நாயன்மார்களில் ஒருவராக இறைப் புகழுடன் அடியார்களின் உள்ளங்களில் குடி கொண்டுள்ளார். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • It’s a miracle that if you perform puja by mentioning one zodiac sign, all 12 zodiac signs will get benefits!

    உயிரினங்கள் இயங்குவது கிரகங்களின் செயல்பட்டின் ஆதிக்கத்தால் தான் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதன்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ராசி நட்சத்திரங்கள் அமையப்பட்டு, அதன்படி அவர்களின் வாழ்வியல் அமையும் என்பது ஜோதிட வல்லுநர்களின் கணிப்பு ஆனால்"குறிப்பிட்ட ஒரு ராசிக்கு உரியவர் சிவபெருமானுக்கு பூஜை செய்தால் அதன் பலன் 12 ராசிகளுக்கும் கிடைக்கும் அதிசய கோவிலை தரிசிக்கலாம் வாருங்கள்.

    மன்னார்குடி அடுத்த  கழுவத்தூரில் சோழ மன்னர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. ராமாயண காலத்தில்' பறவைகளின் அரசனான ஜடாயு சிவபெருமானை வேண்டி இங்கு தவம் தவம் புரிந்து கொண்டிருந்தான். அப்போது இலங்கையின் மன்னனான ராவணன் சீத்தையை கடத்திச் சென்றான் சீதையின் அவையே குரலைக் கேட்டு, தனது தவத்தை கலைத்த பறவைகளின் அரசனான ஜடாயு சீதையைக் காப்பாற்ற ராவணனை தடுக்க முற்பட்டபோது. அறிவிழந்த ராவணன்  வாள் கொண்டு ஜடாயு இறகுகளை வெட்டி வீசினான்' காயத்துடன் ரத்தம் வலிய ராமனை தேடிச்சென்று சீதையை ராவணன் கடத்திச் சென்ற செய்தியை கூறிவிட்டு ராமனின் திருவடியிலேயே ஜடாயு தனது உயிரை விட்டான்.

    அவருக்கு ராமன் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்தான். பறவைகளின் அரசன் ஜடாயு இங்கு  தவம் புரிந்த போது  பூஜை செய்த சுயம்புலிங்கம் அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் சிவனின் வடிவமாகவும், ஆதிபராசக்தி அன்னை பார்வதி தேவியின் வடிவமாக' அருள்மிகு ஸ்ரீ சவுந்திர நாயகி தாயாரும் அருள் பாவிக்கிறாள். கழுகத்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தரநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவிலில்' பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட யோக ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்