Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Who was the nomadic woman who came to tell fortunes to the sun?

    சக்தியின் வடிவமான அம்பிகை, ஈசனுக்கு நிகராக திருவிளையாடல் புரிபவள். அகில நாயகியான இவள் வெவ்வேறு திருப்பயிர்களில் ஆங்காங்கே அம்பிகை பல்வேறு வடிவங்களில் திருவிளையாடல் குறித்து கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாவித்து வருவதை நாம் அறிந்துள்ளோம், அதேபோன்று பார்வதி தேவி குறி சொல்லும் நாடோடி பெண்ணாக வந்தபோது அவளை அலட்சியப்படுத்திய  சூரிய பகவான் தனது பிரகாசத்தை இழந்து அவன் மங்கிய கதையே"அறிந்து கொள்வோம் வாருங்கள்.

     
    தேவலோகத்தில் ஒரு நாள், உமையவள்  குறி சொல்லும் நாடோடிப் பெண்ணின் வேடத்தில், குறி கேட்கிறாயோ" சாமி குறி கேக்குறியோ" கடந்த காலம்"நிகழ்காலம்"எதிர்காலம்" பற்றி புட்டு புட்டு வைக்கிறேன்" குறி கேட்கிறியோ"சாமி என கூறியவாறு  சென்றாள். அங்கு சூரியனிடம் சென்று, அவனின் எதிர்காலத்தை கணித்து, தருவதாக சொன்னால்,  ஆனால், வந்து தன் எதிரே நிற்பது, சக்தியின் வடிவமான  தேவி கருமாரி" என்பதை உணராத சூரியன், உமையவளை  உதாசீனப்படுத்தினான். இதனால்  கோபமடைந்த அம்பிகையின் சாபத்திற்கு ஆளான" சூரியன் தன் பிரகாசத்தை இழக்க தொடங்கினான்.

    இதனால், அவனின் புகழ் குன்றியது. பின்தனது தவறை உணர்ந்து வருந்திய சூரியன் உமையவளை மனம் உருக பிரார்த்தனை செய்து, தன்னை மன்னிக்கும் படி வேண்டினான். தேவி கருமாரி அம்மன்  சூரியனின் பிரார்த்தனையால், மனம் இறங்கி அவனை மன்னித்து அருளினால்' அப்போது சூரியன் கேட்ட வரத்தின் படி,  ஞாயிற்றுக் கிழமையை தனக்கு  உகந்த நாளாக ஏற்று" அன்னை அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் கொண்டு, அமர்ந்த  இடம்தான் திருவேற்காடு,
    திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வந்தார்.

    அண்ணனின்  வருகையால் மனமகிழ்ந்த உமையவள்,  அவரைத் தனது இருப்பிடத்திலேயே, தெற்குத் திசை நோக்கி நின்றபடியே,  ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் புரியுமாறு வேண்டினால் பெருமாளும்,  தங்கைக்கு அளித்த வாக்கின்படி திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். 
     

    ஆண்டுதோறும்  புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தில் சூரிய உதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் அன்னையின்  தலையின் மீது பிரகாசிப்பதை
    இங்கு காணலாம்,  இதன் காரணமாகவே" ஞாயிற்றுக்கிழமை அம்பிகைக்கு  உகந்த நாளாக, ஆனதின்  காரணம்'.இங்கு தேவி கருமாரியம்மன் கருவறையில் சுயம்புவாக காட்சி தருகிறாள். அம்பிகைக்கு உகந்த நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள், விளக்கு பூஜை நடைபெறுகின்றன. இங்கு தேவி கருமாரியம்மன் புற்றுக்குள் சுயம்புவாக எழுந்து அருளியதால், மிகப்பெரிய புற்று ஒன்று உள்ளது. இங்கு மற்றொரு சிறப்பாக' மரச்சிலை அம்மன்” சன்னதி உள்ளது. தல விருச்சகம் வெள்வேலம், புனித தீர்த்தம் புஷ்கரணி, ஊர் முன்பு வேலங்காடு, திருவிழாக்கள், ஆடிப் பெருந்திருவிழா, தை மாதம் பிரம்மோற்சவம், மாசி மகம், நவராத்திரி, பௌர்ணமி, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. அம்பிகை அருளும் இடம், அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு, பூந்தமல்லி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Visiting Thirukandiyur is a blessing from a previous birth!

    படைப்பின் கடவுளான பிரம்ம தேவனுக்கு கோவில்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே உள்ளது, அதிலும் சரஸ்வதியும் பிரம்மதேவன் ஒரே இடத்தில் அருள் பாவிக்கும் அற்புத திருக்கோவிலானது. வ்தஞ்சை மாவட்டம்,திருவையாறு செல்லும் வழித்தடத்தில்  திருக்கண்டியூர் என்ற இடத்தில் உள்ளது, இங்கு சிவபெருமான் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர். என்ற திருப்பெயரில் அழைக்கப்படுகிறார்.

    தனக்கென உள்ள கோவில்களில் தனியாக காட்சி தரும் பிரம்மதேவன், மிக அரிதாக அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன்  தம்பதி சமேதராக பிரம்மதேவன் கலைமகளின் வெண்தாமரை போன்று மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கிறார். கலையின் வடிவமான சரஸ்வதி தேவியும் படைப்பின் அம்சமான பிரம்ம தேவனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் பாக்கியம் பூர்வ ஜென்ம  புண்ணியமாகும், புராணத்துடன் தொடர்புடைய இவ்விடம் தோன்றியதின் காரணம், பிரம்ம தேவனின் தலையை சிவபெருமான்  கொய்தார். இதன் காரணமாக ஈசனுக்கு  பிரம்ம சிரகண்டீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.

    நான்கு முகத்துடன் புன்னகை புரிந்தவாறு'தனது துணைவியார் சரஸ்வதி தேவியுடன். இருவரையும் கலைநயத்துடன் வேறொரு பிரம்மா படைத்திருப்பாரா" ? என" எண்ண தோண்டும், வகையில், சிந்தனையை தூண்டுகிறது. இதன் அருகே மற்றொரு திருக்கோவிலும் உள்ளது, அங்கு திருமால், சாப விமோசனப் பெருமாள். என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். கல்வி, தொழில் வளர்ச்சி, கலைத்துறை, ஆகியவற்றில் சாதிக்க விரும்பும் அன்பர்கள் அன்னை ஸ்ரீ சரஸ்வதி தேவியுடன் அருள் பாவிக்கும் பிரம்ம தேவனின்' திருக்கண்டியூர் வந்து தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why did “Jakamma” curse the village landlord?

    இஸ்லாமிய அரசன்  ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருத்தியை மனம் முடிக்க விரும்பி பெண் கேட்டான்.  தங்கள் சமுதாயப்  பெண்ணின் பாதுகாப்பிற்காக அவளது உறவினர்கள். தெற்கு நோக்கி வந்தபோது.  துங்கபத்திரா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் ஆற்றின் கரையை கடக்க முடியாமல் நின்றனர். அப்போது  கம்பளத்தார் கூட்டம் வடகரையில் தங்களது குல தெய்வமான எல்லம்மா தேவியை வணங்கினர்.

    திடீரென அங்கு வந்த குழந்தை ஒன்று   நீங்கள் ஆற்றின் கரையைக் கடக்க   மரங்கள் உங்களுக்கு பாலமாக அமையும், ஆற்று நீர் அதற்கு வழி விடும், நீங்கள்  தெற்கு சீமைக்கு சென்று சிறப்போடு ஆட்சி செய்து. வாழுங்கள், உங்களுடன் இருந்து  காப்பேன்" என  மறைந்தது. அதன்படி நீர் விலகி, மரங்கள் பாலமாக அமைந்து இஸ்லாமிய அரசன். தெற்கு கம்பள நாட்டுக்கு வந்து அந்தக் குழந்தை கூறியபடியே நல்லாட்சி செய்தான்.

    குழந்தை வடிவமாக வந்து இஸ்லாமிய அரசனுக்கு உதவியது யார்" தெரியுமா ?  வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா தான் 
    யார் ? இந்த ஜக்கம்மா"  இவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பாக வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள்.
      ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பம் கட்ட மறுத்து வீர போர் புரிந்து தாய் திருநாட்டிற்காக தூக்கு மேடை ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மன். பாஞ்சாலங்குறிச்சியில், ஜெகவீர கட்டபொம்மன்- ஆறு முகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு, ஜனவரி 3, ஆம் தேதி அன்று பிறந்தார்.  வீரபாண்டிய கட்டபொம்மன்.

    தனது  30,வது வயதில் 1790 ஆம், ஆண்டு,பிப்ரவரி 2 ஆம், தேதி அன்று" 47 வது பாளையக்காரராக பதவி ஏற்று கொண்டார்.  வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு சங்கம்மாள் என்ற மனைவியும், ஊமைத்துரை, துரைச்சிங்கம் ஆகிய இரண்டு சகோதரர்களும்,  ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். கட்டபொம்மன் 9 ஆண்டுகளுக்கு மேல் அரசு பதவி வகித்து வந்தார். அப்போது கர்நாடக பிரதேசத்தை ஆண்ட, ஆற்காடு நவாப்புகள் பாளையக்காரர்களிடம், கப்பம்  வசூலிக்கும் அதிகாரத்தை கும்பினியாரிடம் வழங்கினர். அதன்படி நெல்லை சீமையில் கப்பம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய படை தளபதி மாக்ஸ்வெல் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கப்பம் வரிவசூலிக்க முடியாமல் திணறினான்.

    இதன் காரணமாக'  கி.பி. 1797 ஆம், ஆண்டு முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு தனது   படையுடன் போரிட வந்தான். 1797 முதல் – 1798 வரை நடந்த இந்த போரில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்ற முடியாமல், வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோல்வி அடைந்து புற முதுகு காட்டி ஓடினான் அதன் பின்னர். நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்டபொம்மனை நெருங்க முடியாமல், இறுதியில்' 1798 ஆம், ஆண்டு செப்டம்பர் 10‌ ஆம், தேதி தந்திரமாக பேச்சு வார்த்தைக்கு, அழைத்து கட்டபொம்மனை  இராமநாதபுரத்தில் சந்தித்தான்.

    அப்போது வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய ஆங்கிலேயர்கள் முயன்றனர். அதை முறியடித்து வீரபாண்டிய கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். பின்  1799 ஆம், ஆண்டு செப்டம்பர் 5 ஆம், தேதி  இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதி தலைமையில் நடந்த கடும் போரில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. இரு தரப்பிலும் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.

    இருப்பினும்  வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். பின் 1799 ஆம், ஆண்டு' செப்டம்பர் 9 ஆம் தேதி ஆங்கிலேயர்கள். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றினார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம்  ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம், ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி' ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் உத்தரவுப்படி, பாரத தாய் திருநாட்டை காக்க போராடிய மாவீரன்" வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, வீர மரணம் அடைந்தார். 

    தனது குலதெய்வமான ஜக்கம்மா மீது அதிக பக்தி கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் எந்த காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று ஜக்கம்மாவை வழிபட்ட பின்னரே" காரியத்தில் இறங்குவதை தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வீரபாண்டிய கட்டபொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட  எருமார்பட்டி ஊராட்சி. முன்பு வையாபுரிகிராமம் என்று அழைக்கப்பட்டது. இங்குதான் ஜக்கம்மாளின் குடும்பம் வசித்து வந்தது, இந்த வையாபுரி பகுதியிலிருந்து தான். ஜோதி நாயக்கனூர் ஜமீன்தாரின்  குதிரைகளுக்கு கொள்ளு, மற்றும் தீவனங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

    ஒருமுறை ஜமீன்தார் இங்குள்ள தனது விலை நிலங்களை பார்வையிடுவதற்காக' குதிரையில் வலம் வந்தபோது, தன் வீட்டின் முன்பாக கோலம் இட்டுக் கொண்டிருந்த பதினாறு வயது சிறுமியான  ஜக்கம்மாளை கண்டார். அவளது அழகில் மயங்கிய ஜமீன்தார். ஊர் முக்கியஸ்தர், மூலம்  ஜக்கம்மாவின் குடும்ப விபரம் குறித்து தெரிந்து கொண்டு,  உடனே ஜமீன்தார் ஊர் முக்கியஸ்தரை அழைத்துக் கொண்டு. ஜக்கம்மா  வீட்டுக்கு சென்று அவளது பெற்றோரிடம் பெண் கேட்டார். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை, இதனால் ஆத்திரம் அடைந்த ஜமீன்தார் வரும் பௌர்ணமி தினத்தில் ஜக்கம்மாவை எனக்கு திருமணம் செய்து தராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா ? என மிரட்டியதால், ஜக்கம்மாவின் அண்ணன் யோசித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தான். 
     

    உடனே" ஜமீன்தார். “என்ன யோசனை வேண்டி கிடக்கு, வருகிற பௌர்ணமி அன்று"  சொன்னது நடக்கணும்" என்றபடி ஊர் முக்கியஸ்தருடன்  கோவமாக ஜமீன்தார், சென்ற பின் ஜக்கம்மா, தனது தாயிடம் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் அம்மா" என்றுகூறி கண்ணீர் விட்டு அழுதாள். பௌர்ணமிக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் ஜமீன்தார் ஆட்களும், ஊர்முக்கியஸ்தர்களும்  ஜக்கம்மாவின், குடும்பத்தினரிடம் திருமணத்திற்கு தயாராக இருக்கும்படி எச்சரிக்க விடுத்தனர். 
    இதனால் ஜமீன்தாரை பகைத்துக்கொண்டு ஊரில் வாழ முடியாது என்பதால்,  ஊரைவிட்டு போக முடிவு செய்து. அன்றிரவு உடைமைகளை எடுத்துக்கொண்டு ஜக்கம்மாளுடன் அவளது.  குடும்பத்தினர் மேற்குத்தொடர்ச்சி மலை வழியாக' லிங்கநாயக்கன்பட்டி' மலைப்பகுதிக்கு சென்றபோது. கடும் மழை பொய்தது இதனால் ஒதுங்க இடமின்றி அனைவரும் தவித்தனர், அப்போது ஜக்கம்மாளின் அண்ணன் மனைவி, ‘‘நல்லா வாழ்ந்த குடும்பம் இன்னைக்கு இவளால் தான் நடு காட்டுல நாதியத்து நிக்குது என புலம்பினாள். இதைக்கேட்டு மன வேதனை அடைந்த  ஜக்கம்மா,  திடீரென வேகமாக சென்று யாரிடமும் சொல்லாமல், மலை உச்சியில் அமர்ந்து ஓ, வென கதறி அழுதாள் தனது குடும்பம்  கெட்டதற்கு ஜமீன்தார்தான் காரணம். குதிரை இருப்பதனால்தானே, குதிரையில் வந்து என்னைப்பார்த்து எனது குடும்பத்தையே" அழித்து விட்டான் பாவி என கோபம் அடைந்து, இந்த பகுதியில் இனி எள்ளு – கொள்ளு விளையக்கூடாது, குதிரைக்கு பட்டம் சூட்ட ராஜா நிம்மதியா வாழக்கூடாது.

    ராஜா பட்டம் சூட்டிய குதிரையும் இருக்கக்கூடாது. என தனது குலதெய்வத்தை வேண்டி சாபமிட்டபடியே"  மலை உச்சியிலிருந்து கீழே குதித்து" ஜக்கம்மா உயிர் விட்டால்,  உடலை எரியூட்டுவதற்காக குடும்பத்தினரும், உறவினர்களும் தூக்கிக்கொண்டு வந்து, இப்போதுள்ள ஜக்கம்மாள் கோயில் இருக்கும் இடத்தில் எரியூட்டினார்கள். அப்போது, மன வேதனையால், உயிர்விட்ட  ஜக்கம்மாளின் சேலை மட்டும் தீயில் கருகாமல் அப்படியே இருந்தது, இதனால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் சேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
     

    அப்போது வையாபுரி கிராமத்தில் உள்ள சிறுமி ஒருத்திக்கு, அருள் வந்து ஆடினாள். ‘‘நான், ஜக்கம்மா வந்திருக்கேன். எனக்கு இங்கேயே" கோவில் கட்டி வணங்கினா குலதெய்வமாயிருந்து. இந்த ஊர் மக்களை காப்பாற்றுவேன்" உங்க நாக்கில் இருந்து ஊருக்கு ஏற்படும் நல்லது கெட்டது முன்கூட்டியே சொல்லுவேன்" என்றால் அதன்படி கட்டப்பட்டது தான் வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஜக்கம்மா கோவில், இப்போதும் அப்பகுதியில் கொள்ளு, எள்ளு முளைப்பதில்லை அதனை ஜக்கம்மாளின் பூர்வீக விவசாயிகள் யாரும் விளைவிப்பதும் கிடையாது இன்று வரை ஜக்கம்மாவை தங்களது குலதெய்வமாகவே"அவர்கள் கொண்டாடி, வணங்கி வருகின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சிவனின் கோபத்திற்கு ஆளான மகாவிஷ்ணு! நடந்தது என்ன ?

    வழக்கமாக பெண்கள் திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு சென்றவுடன்"தனது தாய் வீட்டில் இருந்து பெற்றவர்களோ"அல்லது உடன் பிறந்தவர்களோ" தன்னைக் காண வந்துவிட்டால், அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அப்படி ஒரு முறை தனது சகோதரியான பார்வதி தேவியை பார்ப்பதற்காக அவரது புகுந்து வீட்டிற்கு மகாவிஷ்ணு'சென்றபோது தனது மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளான" கதை என்ன தெரியுமா ? அடுத்தவர் வீட்டு கதை என்றாலே"நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போன்று" அதுவும் சிவபெருமான் விட்டு கதை என்றால் கேட்க சொல்லவா வேண்டும்" வாருங்கள் என்ன நடந்தது என தெரிந்து கொள்ளலாம்,
    திருக்கைலாயத்திற்கு ஒருமுறை தனது சகோதரி பார்வதி தேவியை பார்ப்பதற்காக மகாவிஷ்ணு சென்றார், அப்போது அவரை சிவபெருமானும் பார்வதி தேவியும் வரவேற்று தடபுடலான விருந்திருக்கு ஏற்பாடு செய்து உபசரித்தனர்.

    பின் விருந்து முடிந்ததும் மகாவிஷ்ணு, சிவபெருமான், இருவரும் பார்வதி தேவியை நடுவராக கொண்டு, சொக்கட்டான் ஆடிய போது, காய் உருண்டோடியது நடுவரான பார்வதி தேவி தனது சகோதரனான மகாவிஷ்ணுவுக்கு சாதகமாக ஒரு தலை பட்சமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த  சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாறும்படி சாபம் இட்டார்.

    அப்போது பார்வதி தேவிக்கு துணையாக லட்சுமி தேவியும், தகவல் அறிந்து, பிரம்மலோகத்தில் இருந்து சரஸ்வதியும் புறப்பட்டு பார்வதி தேவியுடன் பசுவாக மாறி பூலோகம் வந்தடைந்தனர், சகோதரியை காண வந்த இடத்தில் தனது விளையாட்டால் மைத்துனன் சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானதை, எண்ணி வருத்தம் அடைந்த மகாவிஷ்ணு" மருவியப்பன் எனும் பெயர் கொண்டு மாடு மேய்ப்பானாக' பூலோகம் வந்த இடம்தான். திருவழுந்தூர் என்ற தேரழுந்தூர் அருள்மிகு ஸ்ரீ சவுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவில் ஆகும், தல விருச்சகம், வில்வம், சந்தனம், புனித திருத்தம், வேதாமிர்த  தீர்த்தம், திருஞானசம்பந்தர் பதிகம் பாடி வணங்கிய இறைவனின் இருப்பிடம் தேரழுந்தூர், நாகப்பட்டினம் மாவட்டம்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

     

  • How did Lord Shiva save the city of Madurai from the flood?

    சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரை தலைநகராகக் கொண்டு, பாண்டிய மன்னர்கள் அரசாட்சி புரிந்து வந்தனர், முடி சார்ந்த மன்னரும்" முடிவில் பிடி சாம்பல் ஆவான்" என்ற பட்டினத்து அடிகளின் தத்துவத்தின் அடிப்படையில் அம்மண்ணை ஆண்ட மன்னர்கள் அனைவரையும் தன் ஆளுமையால் மண் ஆண்டு முடிவுரை எழுதிய மதுரை மாநகரில்' சக்தியின் வடிவமான மீனாட்சி இன்றும் அரசாட்சி புரிந்து வருகிறாள். முடிவில்லா" இவளது ஆட்சியிலும் ஒரு முறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டபோது. சிவபெருமான் எப்படி நகரை காப்பாற்றினார் தெரியுமா ? வாருங்கள் அறிந்து கொள்ளலாம் அந்த சொக்கநாதனின் திருவிளையாடலை"     
    புராண களத்தில் ஒருமுறை மதுரை மாநகரில் பிரளயம் ஏற்பட்டு, பூமி இரண்டாக பிளந்தது.  

    இதனால் நகரின் நான்கு புறமும் பெரும் வெள்ளம் சூழ்ந்ததால், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி பூமிக்குள் புதைந்தது, அனைத்து கால்நடைகளும் உயிரினங்களும் ஏராளமான மக்களும் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டனர். அப்போது மதுரையின் அரசியான மீனாட்சி மதுரை மாநகரை காக்க வேண்டி, சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தால்' அப்போது மீனாட்சியின் வேண்டுதலை ஏற்று"சிவபெருமான் பாம்பு உருவெடுத்து மதுரை மாநகரின் நான்கு புறத்தையும்    தனது. உடலால் வளைத்து'. பாம்பாக இருந்தமையால்'  அப்போது ஆக்ரோஷமாக படம் எடுத்து தன் வாளால் வெள்ளப்பெருக்கை தடுத்து. மதுரை மாநகரை காப்பாற்றி அருளினார். இதன் காரணமாகவே பாம்பின் படம் எடுத்த தலையும், அதன் வாலும் ஒன்றாக நின்ற இடமே" படப்புரம் என அழைக்கப்பட்டது. இது மருவி தற்போது மடப்புரமாக ஆனது.

    இங்கு ஒருமுறை சிவபெருமான் உமையவளை அழைத்துக்கொண்டு வேட்டையாடுவதற்காக,  வந்தபோது, அடர்ந்து விரிந்த வனப்பகுதியான. இந்த இடத்தில் உன்னால்' இதற்கு மேல் ஒரு அடி கூட நடந்து வரமுடியாது தேவி எனவே" நீ சற்று நேரம். இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாட சென்று வருகிறேன். என உமையவளிடம் கூறினார். அப்போது இந்த  காட்டில், நான் மட்டும் எப்படி?" தனித்து இருப்பது சுவாமி" என உமையவள் கேட்டாள். உடனே" சிவபெருமான் காவல் தெய்வமான அய்யனாரை வரவழைத்து, உமையவளுக்கு தீங்கு ஏதும் நேராதவாறு" பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவு இட்டு வேட்டைக்கு  சிவபெருமான் புறப்பட்டார். அப்போது ஊமைவள், இந்த இடத்திற்கு நான் வந்ததால், இவ்விடம் சிறப்படையுமாறு அருள் புரிய வேண்டும் என கேட்டாள், அவ்வாறே" இறைவன் வைகையில் புனித நீராடி நம்மை" வணங்கி வழிபடும் அடியார்களுக்கு , காசிக்குச் சென்று கங்கை நதியில் புனித நீராடிய பலன் கிடைக்கும், என தேவிக்கு சிவபெருமான் வரம் கொடுத்தார்.

    அதன்படி,  மடப்புரத்தில் அன்னை பார்வதி, காளி தேவி வடிவில் தங்கினாள். அப்போது சக்திக்கு காவலாக நின்ற  அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார் என அழைக்கப்பட்டாலும், சக்தியின் வடிவமாக இங்கு காட்சியளிக்கும்"அன்னை ஸ்ரீ பத்ரகாளி தான் வழிபாட்டிற்குரிய தெய்வமாக வணங்கப்படுகிறாள். ஈசன் அளித்த வரத்தின்படி மடப்புரத்தின் சற்று தொலைவில், வைகையில் புனித நீராடி அம்மை அப்பரை வணங்கும், பக்தர்களுக்கு இன்றளவும் காசி கங்கை நதியில் நீராடிய புண்ணியம் கிடைப்பதாக நம்பிக்கை, ஆலயத்தில் கூரையின்றி வெட்ட வெளியில் வானத்தை பந்தலாகவும்' மேகத்தை தோரணமாகவும்" கொண்டு, அதர்மத்தை அழிக்க புறப்படுவது போன்று"  ஆக்ரோஷமாக  நாக்கைத் துருத்தியபடி நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளி. சக்தியின் இருபுறமும் இரண்டு பூதகணங்கள். 13 அடி உயரத்தில் அன்னையின் தலைக்கு மேல் குதிரை ஒன்று தாவி நிற்கிறது. சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகில் உள்ள மடப்புரம் சென்றாள் அன்னை ஸ்ரீ பத்ரகாளியின் இந்த அருள் வடிவை கண்டு வணங்கலாம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why did Lord Vishnu gouge out his own eye and worship Lord Shiva?

    ஒருமுறை நாரத முனிவருக்கு பக்தி என்பதற்கு பொருள் குழப்பம் ஏற்பட்டது, இது குறித்து அறிந்து கொள்வதற்காக மகாவிஷ்ணுவிடம் சென்ற போது அவர் கொடுத்த விளக்கத்தில் திருப்தி அடையாததால் சிவபெருமானிடம் சென்று விளக்கம் கேட்குமாறு' மகாவிஷ்ணு கூறியதால் நாரத முனிவர் கைலாயம் சென்று சிவபெருமானிடமும் விளக்கம் கேட்டார், அப்போது சிவபெருமான் பூலோகம் சென்று சுயம்பு வடிவாக தோன்றிய ஆயிரம் சிவலிங்கங்களை வழிபடுமாறும் அப்படி வழிபட்டால் அதற்கான விளக்கத்தை தானே" வந்து கூறுவதாக தெரிவித்தார், அதனை ஏற்று நாரத முனிவரும் பூலோகம் வந்து பல ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து, நிறைவாக திருமாற்பேறு என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அங்கு கருவறையில் ஒரு சிவலிங்கம் இருந்தது. அதன் எதிரில் லிங்கத்தை வணங்கிய வாறு'  விஷ்ணுவின் சிலையும் இருந்தது. அதைக் கண்ட நாரத முனிவருக்கு வியப்பு ஏற்பட்டது.

    இதனால் இது விஷ்ணு ஆலயமா ? அல்லது சிவன் ஆலயமா ?  என்ற சந்தேகம் உண்டாகவே"
      அங்கிருந்த அர்ச்சகரியிடம் கேட்டார்.  அந்த அர்ச்சகரும்" இது விஷ்ணுவின் ஆலயமே என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு ஆச்சரியம் உண்டானது அப்படி என்றால் இங்கு மூலவராக விஷ்ணு இல்லையே . என காரணம் குறித்து கேட்டபோது, அர்ச்சகர் அவருக்கு ஆலய பெருமை குறித்து எடுத்துக் கூறியதை நாமும் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

    புராண காலத்தில் குபன் என்ற  மன்னன் ஒருவன், ததீசி எனும் மாமுனிவருடன் யுத்தம் செய்த போது.  விஷ்ணுவின் பக்தன் ஆன"மன்னனின். வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட மகா விஷ்ணு' அவனுக்கு ஆதரவாக தானும் ததீசி முனிவருக்கு எதிராக போர் புரிந்தார், அப்போது மகாவிஷ்ணு நடத்திய சக்கர யுத்தத்தை தனது தகவலிமையால், ததீசி முனிவர் அதனை செயலற்று போகும்படி செய்தார். இதனால்,  தனது ஒரே சக்தி வாய்ந்த ஆயுதமான சக்ராயுதமே செயல் இழந்து போனதால், கவலையடைந்த மகாவிஷ்ணு' என்ன செய்வதென்று புரியாமல்  தேவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர்களின் அதன்படி,  மகாவிஷ்ணு, ஏற்கனவே"  சலந்தராசூரன் எனும் கொடுங்கோலனை  அழிக்க தான் உருவாக்கிய சுதர்சன சக்கரம்,  சிவபெருமானிடம் இருப்பதை அறிந்து அதனை,  சிவபெருமானிடம் இருந்து மீண்டும், திரும்பப் பெற்றுக் கொள்ள எண்ணி, சிவ வழிபாடு நடத்தி தவம் இருக்க முடிவு செய்து, சிவபெருமானை துதித்து பூஜை செய்ய முடிவு செய்து, சிவ பூஜையை செய்ய சக்தி வாய்ந்த சுயம்புலிங்கம் தோன்றிய கோவிலை தேடி அலைந்து, இறுதியாக' உமையவள் பூஜித்து வணங்கிய திருமாற்பேறு" எனும் இந்த இடத்தை வந்தடைந்து, உமையவள், பூஜித்த அதே" சுயம்புலிங்கத்தை நாள்தோறும்,  ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு, பூஜை செய்து. மகாவிஷ்ணு' சிவபெருமானை நோக்கி தவம் தவம் புரிந்தவாறு இருந்தபோது, ஒருநாள் அவரை சோதிக்க நினைத்த சிவபெருமான்.

    வேண்டும் என்றே" விஷ்ணு கொண்டு வந்து 1000, தாமரை மலர்களில் ஒரு மலரை மாயமாக மறைய செய்து விட்டார். 999 தாமரை மலர்களைக் கொண்டு, அர்ச்சனை செய்தபோது, கடைசி மந்திரத்தை உச்சரித்து போட,  தாமரை மலர் ஒன்று இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாவிஷ்ணு மனம் தளராமல். உடனே" தனது ஒரு கண்ணை பிடுங்கி அதையே தாமரை மலராக எண்ணிக்கொள்ளுமாறு, ஈசனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார். மகாவிஷ்ணுவின் பக்தியைக் கண்டு வியந்த சிவபெருமான். இறைவனாக இருந்தாலும், தன்னை வணங்கும்போது, தன் பக்தியை உணர வைக்க' தனது கண்ணையே பிடுங்கி பூஜித்ததை கண்டு, உள்ளம் மகிழ்ந்து ஈசன் கண்களை மேலும் அழகு பெற செய்து' தன்னிடம் இருந்த சக்கரத்தையும், மகாவிஷ்ணுவிடம் கொடுத்து, போரில் வெற்றி பெற வாழ்த்தி, இனி செந்தாமரை கண் அழகர் என அழைக்கப்படுவாய்" என அருளினார்.

    மகாவிஷ்ணு சிவபெருமானை வழிபட்டு, தனது சக்கரத்தை திரும்ப பெற்றதினால்  இதை,  ஹரி சக்ரபுரம் என கூறப்படுவதுண்டு,  ஆகவே உண்மையான பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக இக்கோவில் இருப்பதாக, அர்ச்சகர் கூறவும், அதைக் கேட்ட நாரதர் பக்திக்கு அடையாளம், அந்த கோவிலில்  உள்ள மகா விஷ்ணுவே என்பதை புரிந்து கொண்டு உடனடியாக ஈசனையும், திருமாலையும் சந்திக்க வேண்டி மேல் லோகம் புறப்பட்டு, சென்றார். இந்த அறிய புராண வரலாற்று நிகழ்வு அரங்கேறிய திருக்கோவில். தற்போது திருமாற்பேறு என்றும் , அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் எனவும், போற்றப்படுகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோவில்' இறைவனைப் போற்றி திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், பதிகம் பாடி உள்ளனர்.

    இங்கு தாமரை மலர்களால் திருமால் ஈசனை வழிபட்டதால், எம் பெருமானுக்கு தாமரை கண்ணழகர் என காரணயரும் உண்டு, அறியும் சிவனும் ஒரே இடத்தில் அருள் பாவிப்பதால் சிவா விஷ்ணு கோவிலாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவம், அன்று கருட வாகனத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.  இந்த அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் என்னும் இடத்தில் உள்ளது.

    பொன் .கோ.முத்து திருவள்ளூர்

  • A Shiva devotee was shocked to see blood flowing from a Shiva lingam that had been bitten by a spider.

    சோழ நாட்டில் சாத்தமங்கையில்,  திருநீலநக்க என்ற சிவ அடியார் வாழ்ந்து வந்தார். பரமன் மீது பக்தி கொண்ட அவர்,  ஒரு நாள் தனது துணைவியார் மங்கையர்க்கரசியுடன்' திருவாதிரை நட்சத்திரத்தன்று ஸ்ரீ அயவந்தீஸ்வரரை வணங்குவதற்காக கோவிலுக்கு சென்று, அங்கு மலர்களால் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுக் கொண்டிருந்தபோது, சிவலிங்கத்தின் மீது சிலந்தி ஒன்று ஊர்ந்து வருவதை  மங்கையர்க்கரசியார். கவனித்தார் ஈசன் திருமேனியில் ‘ சிலந்தியா ?. அதை அகற்ற வேண்டும்’ என்ற எண்ணத்துடன். தனது வாயால் அதை ஊதினார். ஆனால்" சிலந்தி அங்கிருந்து  செல்லவில்லை.

    இதனால் மீண்டும் மீண்டும் வாயால் ஊதியபடி சிலந்தியை விரட்ட முயற்சி செய்தார். அப்போது அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த  திருநீலநக்கர் என்ன ஆணவம் உனக்கு" எச்சிலை ஈசன் மீது  தெறிக்க விடுவாய்,  உன் எச்சில் இறைவன் மீது விழுந்து விட்டது. இந்த செயல் ஆகமத்திற்கு எதிரானது,  நீ தெய்வத்தை அவமதித்து விட்டாய்"  என்று மங்கையர்கரசியாரை கடுமையாக கண்டித்து விட்டு, கோபத்தில் அவரை அங்கேயே' விட்டு விட்டு, தான் மட்டும் புறப்பட்டு சென்று விட்டார்.  மங்கையர்கரசியோ, கணவனின் கோபத்திற்கு ஆளானதை எண்ணி' ஆலயத்தின் நூல், அமர்ந்து இறைவனை வழிபட்டார். ஈசனே" நான் செய்தது பெரும் பிழை என்றால், கருணை கொண்டு' என்னை மன்னித்து விடு. என் கணவன். என்னை விட்டு விலகும் படி செய்து விடாதே” என இறைவனே" சரணா கதி என அவன் திருவடியில் பணிந்து கிடந்தார். அன்றிரவு திருநீலநக்கர் கனவில் தோன்றிய ஈசன்'  திருநீலநக்கரே " உம் துணைவி எம்மிடம் தாயின் கருணையோடு, நடந்து கொண்டார். அவர் மீது பிழை ஏதுமில்லை'  பொழுது விடிந்ததும் கோவிலுக்கு, வந்து என் திருமேனியை பார்" என்றார்.

    உறக்கம் களைந்து கண் வீழ்த்த  திருநீலநக்கர். சேவல் கூவி" கதிரவன் தோன்றும் முன் , பதற்றத்துடன் கோவிலுக்கு ஓடி சென்று பார்த்தபோது. கருவறையில்  இருந்த இறைவனின் லிங்க திருமேனியில்  மங்கையர்கரசியாரின், எச்சில்பட்ட இடத்தைத் தவிர்த்து  மற்ற இடங்களில் எல்லாம் சிலந்திக் கடித்துப் புண்ணாகிய சிவபெருமானின் சுயம்பு திரு மேனியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ஈசனுக்கு நேர்ந்த கதியை நினைத்து கண்ணீர் விட்டு கதறினார். இறைவா அடியேன் அறியாது செய்த தவறை மன்னித்து அருளுங்கள்" என பணிந்து நின்றார். அப்போது சிலந்தி கடித்த காயம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்த லிங்கத் திருமேனியிலிருந்து ஜோதி வடிவில் எழுந்தருளிய  சிவபெருமான் முன் திருநீலநக்கரும்- மங்கையர்கரசியாரும் திருவடியில் விழுந்து வணங்கினர்.

    மங்கையர்கரசியை தனது தாயாக ஈசனே" ஏற்றுக்கொண்டதை எண்ணி மனம் மகிழ்ந்து.  மங்கையர்கரசியாரை மீண்டும் அழைத்துக் கொண்டு இருப்பிடம் சென்றார்.இவ்நிகழ்வுக்கு பின்  சிவபெருமானுக்கு தொண்டுபுரிவதும் அடியாருக்கு பணி செய்வதை  பாக்கியமாக  அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்க நாயனாரும், அவரின் துணைவியா  மங்கையர்கரசியாரும் செய்து கைலாய நாதன் கரம் பற்றி பிறப்பில்லா நிலை அடைந்தனர். 
    பூதிப் புயத்தர் புயத்திற் சிலந்தி புகலும்அஞ்சிஊதித் துமிந்த மனைவியை நீப்பஉப் பாலவெல்லாம்பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன்நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்எனும் வேதியனே." 
     

    திருநீலக்க நாயனார்-மங்கையர்க்கரசியார் வணங்கிய அருள்மிகு ஸ்ரீ அயவந்தீஸ்வரர் திருக்கோவில், நாகபட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட  சீயாத்த மங்கை கிராமத்தில் உள்ளது.  திருஞானசம்பந்தர் இவரை வழிபட்டு' ; மேகம் உறிஞ்சும் பெருஞ்சாத்த மங்கை’ என பதிகம் பாடினார். இங்கு ஈசனுக்கு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்ற திருப்பெயரும், அன்னை அருள்மிகு ஸ்ரீ  இருமலர்கண்ணியம்மை, உபயபுஷ்ப விலோசினி என்றும் அழைக்கப்படுகிறாள். கிழக்கே புனித சூரிய தீர்த்தமும்,(அக்கினி தீர்த்தம்) மேற்கே சந்திர தீர்த்தமும்,(குளிர்ந்த திருத்தம்) இத்திருகுளத்தில் புனித நீராடி. காலை சூரிய உதயத்திற்கு பின், மாலை சந்திர ஊதியத்திற்கு பின்னும் ஏழு பௌர்ணமிகள் தொடர்ந்து இறைவனை வழிபட்டால், திருமண தடை நீங்கும், குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இணக்கம் ஏற்படும், பிள்ளை பேரு பாக்கியம் உண்டாகும், செல்வம் செழிக்கும், என்பது நம்பிக்கை, இந்த ஆலயம் ருத்ர வியாமளா தந்தரம் ஆகமத்தில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்குள் நுழைந்ததும் திருநீலநக்க நாயனார், மங்கையர் கரசி அம்மையார், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகப் பெருமான், ஆகியோரும் உள்ளனர். இறைவன் சன்னதியில் ஐந்து நிலை ராஜகோபுரம், அம்பிகை சன்னதி முன் இரண்டு நிலை கோபுரமும் அடியார்களை இன்முகத்துடன் வரவேற்கிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

     

  • Lord Saneeswaran could not get close to Ravana!

    ஈசனை மெய்ஞானத்துடன் வணங்கும் பக்தர்களை  சனீஸ்வரனாலும் நெருங்க முடியாது' என்பதற்கு சாட்சி மார்க்கண்டேயன் மட்டுமல்ல, தென் தமிழகம் வந்தபோது சிவ பூஜையில் இருந்த இலங்கை மன்னன் இராவணனை நெருங்க முடியாமல் சனீஸ்வர பகவான் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற திருக்கோவில் எங்கே உள்ளது தெரியுமா ? வாருங்கள் தரிசிக்கலாம்.

    திருக்கைலாயத்தில் ஒரு ஒரு நாள்  பூத பூத கணங்கள் ஆயிரம் பேர், சிவஞான விளக்கத்தை அறிய வேண்டி  சிவபெருமானிடம் முறையிட்டனர்.  சிவபெருமானும், அவர்களின் கோரிக்கையை  ஏற்று, அவர்களுக்கு சிவஞான விளக்கம் அளிக்க எண்ணி' பின்  பூத கணங்களிடம், "நீங்கள் அனைவரும்,  புனித பூமியான தென்னாட்டிற்கு  செல்லுங்கள். அங்கு தென் பகுதியில்'  பெண்ணை ஆற்றின் படுகையில் உள்ள  இரண்டு சுவைகளை அறிய செய்யும் இரு வேறு' மரங்கள் உள்ளன. ஒன்று கசப்பை உணர்த்தும் வில்வம், மற்றொன்று இனிப்பை உணர்த்தும் மாமரம்.  அமைந்துள்ள நதிக்கரையில், சுயம்புபாக நான் வீற்றிருப்பேன். அங்கு அகத்திய மாமுனிவர் வந்து தினந்தோறும்  எம்மை வணங்குவது  வழக்கம்.

    நீங்களும் அவ்விடத்தில் எம்மை வேண்டி தவம் இருங்கள். உரிய நேரத்தில் நான்  அங்கு தோன்றி உமக்கு' சிவஞான விளக்கம் அளிக்கிறேன்" என உரைத்தார். ஈசனின் வாக்கில் நெகிழ்ந்த  பூதகணங்கள் இறைவனிடம் ஆசி பெற்றுக் கொண்டு,  பூலோகம் வந்தடைந்தனர். சிவபெருமான்  குறிப்பிட்ட இடத்தை தேடி வந்து கொண்டிருந்தனர்.  அப்போது திடீரென அகத்திய மாமுனிவர் எதிரே வருவதைக் கண்டு, அவரை வணங்கி' பூலோகம்    வந்த விவரத்தை எடுத்துரைத்தனர்.  அப்போது அகத்திய முனிவர்,
     "நான் பொதிகை மலை நோக்கி  செல்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட வில்வம், மாமரம் உள்ள அந்த திருத்தலம், செல்லும் வழியில் தான் உள்ளது. என்னுடன் வாருங்கள்" அழைத்துச் செல்கிறேன்' என அவர்களுக்கு சுயம்பு வடிவான சிவலிங்கத்தை காட்டி பூஜித்து விட்டு, பூதகணங்களை வாழ்த்தி தனது பயணத்தை தொடர்ந்தார்.

    பின்னர் பூதகணங்கள்  அங்கேயே தங்கி புனித நீராடி சிவனை வழிபட்டு, கடும் தவம் இருந்தனர். அவர்களின் பக்திக்கு இணங்கி  சிவபெருமான் தோன்றி அவர்களுக்கு காட்சியளித்து. தன்னை வழிபட்ட ஆயிரம் பூத கணங்களுக்கும்,  சிவபெருமான் சிவஞான விளக்கம் அளித்தார். அதைக் கேட்டு தெளிவு பெற்ற ஆயிரம் பூத கணங்களும் ஈசனுக்கு சிரம் தாழ்த்தி தங்கள் நன்றியினை தெரிவித்து, பூலோகத்திலேயே ஒரு யுக காலம் சிவனை வணங்கி தவம் இருந்து வில்வ மரங்களாக மாறி, வில்வ இலைகளால் சிவனை அர்ச்சனை செய்து சிவன் ஞான பேரின்ப முக்தி அடைய விரும்புவதாக வேண்டினர், அதன்படி இறைவன் அருள ஆயிரம் பூதகணங்களும் வில்வ மர வனமாக மாறியதால்' இந்த இடம் 'வில்வாரண்யம்' என பெயர் பெற்றது.

    தங்கள் வில்வ இலைகளை தாங்களே உதிர்த்து எடுத்து' இறைவனுக்கு  பூத கணங்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்…. அப்போது சிவ பக்தனான இலங்கை மன்னன்  இராவணன், திருக்கைலாயத்திலிருந்து அழியா வரம்    பெற்று தனது விமானத்தில் ஆகாய மார்க்கமாக வரும் போது, இந்த திருக்கோவிலை கண்டு, இராவணன் விமானத்தை உடனே தரை இறக்கினான். அப்போது  ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய" என்ற திருமந்திரம் உச்சரிக்கப்படுவதை கேட்டு, சிவ பக்தனான இராவணன் அங்குள்ள நதியில் புனித நீராடி சிவனை வணங்க' சென்றான். உச்சிக்கால பூஜை நேரம் என்பதால், அங்கிருந்த அனைத்து, வில்வ மரங்களும் பூத கணங்களாக மாறி வில்வ அர்ச்சனை செய்வதை கண்டு உள்ளம் மகிழுந்து.  

    தானும் சிவ பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டான். ஏற்கனவே தேவலோகத்தில் இராவணனை பிடிக்க பின் தொடர்ந்து வந்த சனி பகவான். இங்கு சிவ நாமம் ஒலித்துக் கொண்டிருந்ததால், சனிபகவானால் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. ஈசனின் பேராற்றலை உணர்ந்த சனி பகவான், இராவணனை நெருங்க முடியாததால் தானும் சிவனை வணங்கி விட்டு, தான் வந்த வேலையை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக  தலபுராணம் சொல்கிறது.கடலூர் மாவட்டத்தில் வில்வநகர் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் இருக்கும் இடம், வில்வ மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால், வில்வ' வனம்' என அழைக்கப்பட்டு, இறைவன் வில்வன நாதர்,வில்வநாதீஸ்வரர், என அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Goddess Saraswati seated on a white lotus

    படைப்பு கடவுளான பிரம்ம தேவனின் சக்தியாக விளங்கும் அன்னை சரஸ்வதி தேவியை' ரிக்வேதம்  ஒரு ஆறாக குறிப்பிட்டுள்ளது. வளமையை தந்து படைப்பு ஆற்றலை உருவாக்கி எண்ணங்களை தூய்மைப்படுத்துவதால், நீரோடு சரஸ்வதியை ஒப்பிடுகின்றனர். நீர் போல் பெருக்கெடுத்து ஓடும், சரஸ்வதி தேவி படைப்பின் சக்தியாகவும், கலைகள், கல்வி, பேச்சாற்றல், கவித்திறன் என கலைகளின் தலைவியாக சரஸ்வதி தேவி வணங்கப்படுகிறாள். அறிவு என்னும் ஒளிச்சுடரை தூண்டி அறியாமை இருளை அகல செய்யும், வெண்மையின் அடையாளமாக திகழும், சரஸ்வதி தேவி வெள்ளை நிற உடை அணிந்து, வெள்ளைத் தாமரையில் எழுந்தருளி தனக்கென அரிதாக தனி கோவில் கொண்டு அருள் பாவிக்கும் இடமானது.

    திருவாரூர் மாவட்டம்   கூத்தனூர். மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கலை வடிவமாக காணப்படும் இக்கோவிலின் முன் கலை நையத்துடன்  மண்டபம் காணப்படுகிறது. கருவறையில் மூலவராக சரஸ்வதி தேவி கலைகளின் அம்சமாகவே' பத்மாசனத்தில், வலது கீழ் கரத்தில்  முத்திரை, இடது கரத்தில் புத்தகமும்,  வலது மேல் கரத்தில்  அட்சர மாலையும், இடது மேல் கரத்தில் அமிர்த கலசத்துடன் கலை அம்சத்துடன் காணப்படுகிறாள். மேலும் இங்கு உள்ள 'ருத்ர கங்கை'எனும் அரசலாற்றில் சரஸ்வதி ஆறு சென்று அடைவதாக   வரலாறு கூறுகிறது. தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் முன் பெற்றோர் இங்கு அழைத்து வந்து சரஸ்வதி தேவியை வணங்க செய்து அதன் பின்னே பள்ளியில் சேர்க்கின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Brahma was saddened because there was no room for the mountains he had created!

    மணிமுக்தாற்றின் மேற்கு கரையில் மலையாகத் தோன்றி படைப்பு கடவுளான பிரம்ம தேவனை, அகத்திய மாமுனிவரை வணங்க வைத்து பூலோகம் தோன்ற கருணை புரிந்து லிங்கத்தில் எழுந்தருளி  விருத்தகிரீஸ்வரர் என்ற திருப்பெயருடன் அருள் பாவிக்கும் ஈசனின் வரலாற்றை அறிந்து கொள்வோம் வாருங்கள். 
     பிரம்மதேவன் புராண காலத்தின் ஆதியில்  பூலோகத்தை உருவாக்க எண்ணி முதலில் தண்ணீரை படைத்தான்.

    அப்போது  திருமால் தீய அரக்கர்களை  வெட்டி விழுத்தி அவ் உடல்கள் பிரம்மன் படைத்த நீரில் வீழ்ந்து மிதந்தன. அதனை கண்ட பிரம்மன் நீரும் அரக்கர்களின் உடல்களும் ஒன்றாக இருக்க மண்ணுலகம் தோன்ற அருளுமாறு சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது ஈசன் மலை வடிவாகத் தோன்றி பிரம்ம தேவனின் எதிரி நின்றார். அதனை அறியாமல் வேறு பல மலைகளைப் படைத்தான் பிரம்மன். தான் படைத்த மலைகளுக்கு இருக்க இடம் இல்லாமல் போனதால் வருந்தி நின்றான் பிரம்மன் இருக்க இடம்  இல்லை.  பெரிதும் வருந்தி மயங்கி நின்றார். அப்போது குறிப்பால் உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மன் நல்லறிவு பெற்று மழையாய் நின்ற சிவபெருமானை பூஜித்து பக்தியுடன் வழிபட்டார்.

    அதில் மன மகிழ்ந்து சிவபெருமான், அரக்கர்களின் தசையும் தண்ணீரையும் ஒன்றாக இறுகி பூலோகம் தோன்றுமாறு செய்தார். அதற்கு மேதினி என்று பெயரிட்டார். பிரம்மன் படைத்த மலைகளுக்கும் இடம் அளித்தார். அப்போது  நாமே இம்மலை வடிவாகத் தோன்றி நின்றோம்.  நான் வேறு இம்மலை வேறு அல்ல.  இந்த மலை தோன்றிய பின்னரே பிரம்மா உன்னால் பல மலைகள் தோன்றின. எனவே"   நம்  மலைக்குப் பழமலை என பெயர் தாங்கி' இப்பழமலை மண்ணுலகுக்கு ஆணிவேராக ஆழ்ந்து நின்று மேலோங்கி சிவலிங்கமாக அருள் புரிந்து நிற்கும்.

    இதனை  மெய்ஞானத்தால் உணர்ந்து, பக்தியுடன் வணங்கி வழிபடும் அடியாருக்கு வாழ்வில் நலன்கள் பல கிடைக்கும் என அருளினார். இறைவன் அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர், பழமலைநாதர், முதுகுந்தர். எனவும், அன்னை அருள்மிகு ஸ்ரீ விருத்தாம்பிகை,  பாலாம்பிகை, இளைய நாயகி என அழைக்கப்படுகின்றனர். புனித தீர்த்தம்: மணிமுத்தாநதி, நித்தியானந்த கூபம், அக்னி, சக்ர தீர்த்தம், குபேர தீர்த்தம்.தலவிருட்சம்வன்னி மரம். இருப்பிடம்:  அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருதாச்சலம், கடலூர் மாவட்டம், இங்கு செல்ல வேண்டிய வழித்தடம். கடலூர் இருந்து திருச்சி செல்லும் வழியில் விருத்தாசலம், அங்கிருந்து     ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பாலக்கரை அருள்மிகு ஸ்ரீ விருத்தகிரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்