Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Cancer zodiac lovers, is April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில்  கேது –  அஷ்டம  ஸ்தானத்தில்  புதன் , சனி – பாக்கிய ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – தொழில்  ஸ்தானத்தில் சந்திரன் –  லாப  ஸ்தானத்தில்  குரு – அயன சயன போக  ஸ்தானத்தில்  செவ்வாய் என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக  ஸ்தானத்தில்  இருந்து ராசிக்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    குடும்பத்தினருடன் அதீத பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம்  இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம். 

    குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும். 

    உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள். 
    தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும். 

    கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
    அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

    மாணவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள். படிப்பில் சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.  பெண்களுக்கு தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். 

    புனர் பூசம் 4ம் பாதம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை. 

    பூசம்:

    இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். 

    ஆயில்யம்:

    இந்த மாதம் பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.

    பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

    அதிர்ஷ்ட தினங்கள்:  16, 17

  • The Dharma that Gautama Buddha taught after attaining enlightenment!

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து, 10 கிமீ தொலைவில்  பிரசித்தி பெற்ற  சாரநாத் நகரம் உள்ளது, புத்தபிரான் ஞானம் அடைந்து  ஐந்து வாரங்களுக்குப் பிறகு போதித்த தனது முதல் போதனை தர்மம் என்பதை இவ்விடத்தில் உள்ள  மான் பூங்காவில்தான் உரைத்தார்.

    மேலும் தொன்மை வாய்ந்த பௌத்த சமய தளங்களும், கௌதம புத்தர் ஸ்தாபனம் செய்த  சௌகந்தி ஸ்தூபி,  அசோக தூண் ஆகியவையும் இங்கு உள்ளன. ஆண்டுதோறும் புத்த பூர்ணிமா விழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Sri Krishna Paramatma” gave as an offering” Sri Rama appearing with the Sangu Chakra”!

    கேரள மாநிலம், திருச்சூர் அடுத்த  திருப்பிரையார் என்ற கிராமத்தில் ஸ்ரீ ராமபிரான்  திருக்கோவில் உள்ளது, ராமாயணத்துடன் தொடர்புடைய இதன் புராண வரலாறு'  துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இங்குள்ள ஸ்ரீ  ராமபிரானை வழிபட்டதாகவும்,  துவாபர யுகத்தின் இறுதியில்  துவாரகை கடலில் மூழ்கிய போது.  ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வழிபட்ட ஸ்ரீ ராமபிரான் விக்கிரகமும் கடலில் மூழ்கியது. பின்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாநில   செட்டுவா கடலில் மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களது வலையில் ஸ்ரீ ராமபிரான் சிலை பிடிபட்டது, அதனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து அரசாங்கத்திடம்  ஒப்படைத்தனர். 

    அதன் பிறகு' திருப்பிரையாரில் ஸ்ரீராமரின் சிலை பிரதிஷ்டை செய்து, திருக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீ ராமபிரான் மகாவிஷ்ணு போன்று நான்கு கரங்களுடன் சங்கு சக்கரம் ஏந்திய படி காட்சியளிப்பது சிறப்பானது ஆகும்,  துவாபர யுகத்தின்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஸ்ரீ ராமபிரானை வழிபட்ட போது காணிக்கையாக செலுத்திய சங்கு சக்கரம் தான் தற்போது ஸ்ரீ ராமபிரானின் கரங்களில் இருப்பதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  கேரள மாநிலத்தில் நாலம்பலம் என  அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற  நான்கு திருக்கோவில்கள் உள்ளன. தசரத சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்கள்  ஆன' ராமன்,  லட்சுமணன், பரதன், மற்றும் சத்ருக்கனுக்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு திருக்கோவில்களில்   இது முதன்மையானது ஆகும்.

    திருவிழாக்களின் போது கொடி ஏற்றுவது கிடையாது காரணம் கொடிமரம் இந்த கோவிலில் இல்லை, பரிவார தெய்வங்களாக' சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, தர்ம சாஸ்தா ஆகியோரும் சன்னதி கொண்டு அருள் பாவிக்கின்றனர். வைகுண்ட ஏகாதிசி, மார்ச், ஏப்ரல், மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும்  பூரத்தன்று சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. அப்போது சுவாமி ஐயப்பன் 21 யானைகள் படைசூழ செண்டை மேளம் முழங்க அழைத்துச் செல்லப்படுவது கண் கொள்ளாக் காட்சியாகும்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Sri Ettiamman, the Mother who appeared as a Self” Women devotees are coming!

    திருவண்ணாமலை மாவட்டம், எரும்பூண்டி கிராமத்தில் சுயம்புவாக தோன்றிய அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது நிலத்தை மம்மட்டியால் சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. பாறையில் உரசி அது போன்று கணீர் என சப்தம் சப்தம் கேட்டுள்ளது மேலும் மம்மட்டி உரசிய இடத்திலிருந்து பூமியில் ரத்தம் கசிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்.

    ஊர் மக்களை திரட்டி வந்து குறிப்பிட்ட இடத்தை தோண்டி பார்த்தபோது அம்மன் சிலை ஒன்று இருப்பது தெரிய வந்தது. அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருத்திக்கு சுவாமி வந்து தான் ஆதிபராசக்தி எனவும் சுயம்புவாக தான் தோன்றிய இந்த இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும் எனவே கோவில் எழுப்பி தன்னை வழிபட்டால் நன்மைகள் பல ஏற்படும் என அருள் வாக்கு கூறியுள்ளார். இதனை ஏற்று கிராம மக்கள் கட்டியதுதான் இந்த எட்டியம்மன் கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.

    பௌர்ணமி, அம்மாவாசை அன்று இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் ஆடி திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது, மரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளித்தரும் அன்னை உள்ளம் கொண்டவர் எட்டியம்மன் என்பதால் இவளை நாடிவரும் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • How to automatically anoint the Shivalinga with the holy water that flows from Nandi’s mouth?

    தொன்மை வாய்ந்த கோவில்களில் ஏதேனும்" வியப்பூட்டும் கலை அம்சமோ " கட்டிட வடிவமைப்பு "அல்லது புராண கதைகள் இருக்கும், ஆனால்"பல நூற்றாண்டுகளாக நந்தி வாயிலிருந்து புனித நீரானது பெருக்கெடுத்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அதிசய கோவில் எங்கே உள்ளது தெரியுமா " ? 
    கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ  தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில் உள்ளது, இங்கு அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

    மற்ற ஆலயங்களில் உள்ளது போன்று நந்தி சிலை இருப்பினும், ஈசனுக்கு  எதிர்ப்புறமாக காட்சி அளிக்காமல், மாறாக நேர்  மேலே அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிசயம் என்னவென்றால், அந்த நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் புனித நீரானது,  கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும் விதமாக உள்ளது. இந்த நிகழ்வானது நேற்று, இன்று நடைபெறுவது அல்ல' பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கோவில் கட்டப்பட்ட நாள் முதலாகவே" நந்தியின் வாயிலிருந்து புனித நீரானது கொட்டுகிறது.
    சிவபெருமானுக்கு அந்த புனித நீர் அபிஷேகம் முடிந்தபின் அந்த நீரானது அங்குள்ள கோவில் திருக்குளத்தில் சென்று சங்கமம் ஆகிறது, நந்தியின் வாயில் இருந்து பெருக்கெடுத்து வரும் ஊற்று  நீரானது  சிவலிங்கத்தின் மீது விழும்படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இருப்பினும்.

    அந்த ஊற்று நீர்  எங்கிருந்து வருகிறது. என்பதை இதுவரை நவீன தொழில்நுட்ப கருவிகளால் கூட கண்டறிய முடியவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் சகல நோய்களையும் தீர்க்கும் அபூர்வ சக்தி உள்ளதாகவும், அதனை உட்கொண்டால்  தீராத நோய்கள் எல்லாம் தீரும் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதும், நந்தி தேவரே நேரடியாக புனித நீர் கொண்டு சிவபெருமானின் லிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்வதாக ஐதீகம், என்பதால் நாள்தோறும் இந்த நந்தி அபிஷேகத்தை கண்டு சிவன் அருளை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகின்றனர். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Who owns the heroine of Silappathikara “Kannagi Kovil”?

    மங்களதேவி கண்ணகி கோயில் என்பது தமிழகத்தின் தேனி மாவட்டம்,  மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் ஆகியவற்றின் எல்லையின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலானது, கடல் மட்டத்திலிருந்தது மேற்கு தொடர்ச்சி மலையில் 5,000 அடி உயரத்தில் உள்ளது. சிலப்பதிகாரத்தின் படி" அரசியின் கால் சிலம்பை" கோவலன் களவாடிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பாண்டிய மன்னன் அவனுக்கு மரண தண்டனை விதிதான் குற்றம் புரியாத தன் கணவன் கோவலன் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அரண்மனைக்கு வந்த கண்ணகி ,  மதுரையை எரித்த பிறகு இந்த இடத்திற்கு வந்து 14 நாட்கள் தங்கியதாகவும், இக்கோவில்'  கி.பி 1/2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    சேர ஆட்சியின்போது செங்குட்டுவன் கி.பி.  சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு சங்ககாலத்தி லோ" அல்லது அதன் தொடக்க வரலாற்றுக்  காலத்திலோ" "வண்ணாதிபாரா"பகுதியில் கண்ணகி" "மங்கலதேவி கோவில் கட்டப்பட்டு இருக்கலாம் என இலக்கிய சான்றுகள் தெரிவிக்கின்றன.  இங்கு ஆண்டு தோறும்" "சித்ரா பௌர்ணமி நாளில்" மட்டுமே கோவில் திறந்திருக்கும். அன்றைய தினம் மட்டுமே" பக்தர்கள் மலையேறி கண்ணகியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அன்றைய தினம் இரு மாநிலத்தின் மாவட்ட ஆட்சியர் இருவர், மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் சித்ரா பௌர்ணமி வழிபாடு விழா நடைபெறுகிறது.

    1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, கண்ணகி கோவில் ஆரம்பத்தில். தமிழகத்தின் தேனி மாவட்டத்துடன் இருந்ததாக தெரிகிறது, தற்போது கேரளத்துடன் இணைக்கப்பட்டு, முழுமையாக அம்மாநிலத்தின்  இடுக்கி மாவட்டத்திற்குள் வருகிறது , இருப்பினும் தமிழகத்தின் காவியமான சிலப்பதிகார நாயகி கண்ணகி கோவில் யாருக்கு ? சொந்தம் என்ற சர்ச்சை மட்டும் தொடர்கிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • It is a miracle that the flowers offered to the goddess, the “unquenchable lamp”, remain intact throughout the year without withering!

    சக்தியின் வடிவமான பார்வதி தேவி வெவ்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் கோவில் கொண்டு எழுந்தருளி வருகிறாள் அப்படி அம்பிகை எழுந்தருளி வரும் கோவில் ஒன்றில் அவளின் பார்வையால் கல்லாய் மாறிய மாமியார் மருமகள் சிறிது சிறிதாக நகர்ந்து அம்மணி விக்கிரகத்தை அடைந்துவிட்டால் பூலோகம் அழிந்துவிடும் என நம்பப்படும் அக்கோவிலுக்கு செல்வோம் வாருங்கள்.  

    கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இதன் பெயராலேயே இப்பகுதியானது ஹாசன் நகரம் என அழைக்கப்படுகிறது. இங்கு  ஆண்டுதோறும் 10 நாட்கள் மட்டுமே கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 4-ஆம் தேதிவரை பக்தர்கள் ஸ்ரீ ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். எனினும்  24ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அன்றைய தினங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் வர அனுமதி கிடையாது. இதேபோன்று தீபாவளி திருநாள் அன்றும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. 

    12 ஆம், நூற்றாண்டில். கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் ஆட்சியின் போது கட்டப்பட்ட இக்கோவிலானது. இதன் வினோத வரலாற்றை பார்ப்போம், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருத்தி அன்னை ஸ்ரீ ஹாசனாம்பா தேவி மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாள். இதன் காரணமாக நாள்தோறும் கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கி விட்டு செல்வது வழக்கம், ஒருநாள் கோவிலுக்கு வந்த அவள் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவளை தேடி கோவிலுக்கு வந்த  அவளின் மாமியார் ''வீட்டில் வேலை பார்க்காமல் எதற்கு இங்கு வந்தாய் எனக்கேட்டு ஆத்திரத்தில்  அப்பெண்ணை கையில் கொண்டு வந்த விளக்கு மாறையால்  அடித்திருக்கிறாள். அப்போது, அப்பெண் வலி தாங்காமல்   சத்தமிடவே ஸ்ரீ ஹானாம்பா தேவி  அவள் முன்பு தோன்றி அவளை கல்லாக மாற்றிவிட்டதாகவும்,  அந்த கல்தான் தற்போது கோவிலில் மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் காணப்படுகிறது.  

    இந்த கல் ஒவ்வொரு ஆண்டும் கருவறையில் உள்ள அம்மன் சிலையை நோக்கி சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும்,  இது நகர்ந்து நகர்ந்து ஸ்ரீ ஹானாம்பா தேவி  விக்ரகத்தை அடைந்துவிட்டால், இந்த கலியுகம் அழிந்துவிடும் என இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.  ஆண்டுதோறும் கோவில் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தன்று' கோயிலில் அணையா தீபம்  ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் அப்படியே எரிந்து கொண்டிருக்கும். இதேபோன்று அன்றைய தினம். தேவிக்கு  அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், சூட்டப்படும் மாலை ஆகியவற்றில் உள்ள மலர்கள் எல்லாம் அடுத்த ஆண்டு கோவில் திறக்கும் வரை. வாடாமல் நறுமணத்துடன் அப்படியே இருக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். எனவே இவை அனைத்தும்" இக்கோவிலின்' அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Why is the miracle of sweating pearls like a pearl” that appeared in the dream of Mariamman?

    கருவறையில் காட்சி தரும் அம்மனுக்கு முத்து முத்தாக  வியர்க்கும்  அதிசயமும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும் திருக்கோவிலைப் பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள். 1682 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னன் ஒருவன் சமயபுரம் அம்மனை வழிபடுவதற்காக வந்தான். இரவு நேரம் என்பதால் கோவிலில் தங்கிய போது அவனது கனவில் மாரியம்மன் தோன்றி புன்னைநல்லூரில் தனக்கு கோவில் கட்டுமாறு கேட்டாள். இதனால் உடல் சிலிர்க்க கண் விழித்து பார்த்த அந்த மன்னன் புன்னைநல்லூர் வந்து அம்மன் குறிப்பிட்ட இடத்தை பார்த்தபோது வெறும் புற்று மட்டுமே" இருந்திருக்கிறது. உடனே அதனை சுற்றி கோவில் கட்டி வழிபட்டு வந்ததாகவும், பின்னாளில் அவனது வம்சத்தை சேர்ந்த  துலஜா என்ற  மன்னனின் பிள்ளைக்கு அம்மை விழுந்து கண் பார்வை பறிபோனது. இதனால் மன வேதனை அடைந்த மன்னன் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வந்து தனது மகன் குணமாக வேண்டிக் கொண்டான்.

    அன்று இரவு அவனது கனவில் தோன்றிய மாரியம்மன உன் மனக்குறை நீங்கியது மகன் நலம் பெறுவான் என அருளாசி வழங்கினாள். அதன்படி மன்னனின் பிள்ளைக்கு கண் பார்வை மீண்டும் கிடைத்தது. இதனால் உள்ளம் மகிழ்ந்த மராட்டிய மன்னன் துலஜா ராஜ கோபுரத்துடன் அதே இடத்தில் அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு திருக்கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தியதாக வரலாறு. இங்கு கருவறையில் அருள் புரியும் ஸ்ரீ கருமாரி அம்மனுக்கு முத்து முத்தாக வியர்க்கும் அதிசயம்  நடைபெறுகிறது. இதன் காரணமாக முத்து மாரியம்மன் என்ற திருப்பயரும் அம்மைக்கு உண்டு. என்பதால் உடலில் முத்து முத்தாக போட்ட அம்மைகளும் இவளை வழிபட்டால்  குணமாகும் என்பது நம்பிக்கை,  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே  நடைபெறும் தைலக் காப்பின்போது, அம்பிகைக்கு  வெப்பம் அதிகரிக்கும். என்பதால்  தயிர்சாதம், இளநீர் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்பட்டு அம்பிகையின் வெப்பம் தணிக்கப்படுகிறது. ஜவ்வாது, சாம்பிராணி, புனுகு  ஆகியவை போட்டு அம்மனின் திருமேனியை மேலும்  குளுமைப் படுத்துவார்கள்.

    இங்குள்ள அன்னை ஸ்ரீ மாரியம்மன் க்கு  அபிஷேகம் கிடையாது. அன்னையின் திருமேனி புற்று  மண்ணால் ஆனதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை  48 நாட்கள் தைலத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. இன்றளவும் பக்தியுடன் தன்னை தேடி வந்து வணங்கும் பக்தர்களின் கனவில் தோன்றி அன்னை அவர்களது வேண்டுதல்களை நொடிப் பொழுதில் நிறைவேற்றி வருகிறாள். புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் தஞ்சையில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Do you know where the first Kalki Avatar temple, which appeared in the world before Mahavishnu took his 10th incarnation, is located?

    உத்திரபிரதேச மாநிலம் ஜெய்ப்பூரில் உலகின் முதல் கல்கி கோவில் உள்ளது. மகாவிஷ்ணுவின் 10 வது அவதாரமாக கருதப்படும் கல்கி அவதாரம் தோன்றுவதற்கு முன்பாக ' மகாராஜா சவாய் ஜெய் சிங் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. அவர்களால் தேவதத் குதிரைக் கோயிலுடன் கட்டப்பட்டது.

    இந்து மத வைணவ வேதங்களின்படி மகாவிஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரம் அதர்மத்தை அழிப்பதற்காக திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாகும், இந்த கல்கி அவதாரமானது. கிருஷ்ணா அவதாரம் முடிந்தபின்  கலியுகம் தொடங்கி 5126 ஆண்டுகள் கடந்து 4 லட்சத்தி 32 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என நம்பப்படுகிறது. உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், இறைபக்தி உள தம்பதியரின் வயிற்றில் கல்கி பிறப்பார் எனவும் கூறப்படுகிறது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Lord Muruga appearing in the copper temple” A miracle that bestows grace on the underworld!

    பெரும்பாலும் தமிழ் கடவுள் ஆன' நாம் முருக பெருமான் குன்றின் மீது எழுந்தருளி கோவில் கொண்டுள்ளதை நாம் அறிவோம். இதேபோன்று விநாயகப் பெருமான் மலை உச்சியில் எழுந்தருளியதால் உச்சி பிள்ளையாராகவும், பாதாளத்தில் கோவில் கொண்டு உள்ளதால் பாதாள கணபதி அழைக்கப்படுகிறார். ஆனால் முருகப்பெருமான் பாதாளத்தில் செப்பு திருமேனியாக எழுந்தருளி அருள் பாவிக்கும் பாதாள முருகன் கோவில் எங்கு உள்ளது தெரியுமா" ? வாருங்கள் அந்த அதிசய கோவிலில் அருள் புரியும் கந்தனை வணங்கலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  இராமலிங்கம் பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.  அருள்மிகு ஸ்ரீ பாதாள செம்பு முருகன் 16 அடி ஆழத்தில் வலது கரத்தை தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் விதமாக அழகென்ற சொல்லுக்கு முருகா என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் சித்திரை நிலவு போன்று பிரகாசிக்கும் முகத்துடன் புன்னகையோடு, இடது கையில் வெற்றி வேலுடன் நின்ற கோளத்தில் அருள் பாவிக்கிறார். வசீகரத் தோற்றத்துடன் காணப்படும் முருகனின் அழகு திருமேனியை காண கண் கோடி வேண்டும். 

    காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரைமாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. செம்பு முருகனை வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு வழிபாடும் இங்கு நடைபெறுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்