Author: சக்தி ஆன்லைன் டீம்

  • If we go to the temple and worship the Lord and sit for a while, will the Mahalakshmi we have “stay” there?

    இறைவனை வணங்குவதற்காக கோவிலுக்கு செல்லும் நம்மில் சிலர் கருவறை நோக்கி சென்றதும் உள்ளிருக்கும் இறைவனுக்கு நடக்கும் வழிபாடுகளை கண் குளிர பார்க்காமல், கண்களை மூடிக்கொண்டு இரு கரம் கூப்பி வணங்குவது முறையல்ல" நம் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அதனை இறைவனை உற்று நோக்கி வணங்கியவரே" மனதுக்குள் வேண்டியவாறு முன் வைக்க வேண்டும், அதன் மற்ற பரிவார தெய்வங்களை வணங்கி விட்டு சிறிது நேரம் கோவிலுக்குள் அமைதியாக கண்களை மூடி தியானிக்க வேண்டும், இப்படி செய்தால் நம்மிடம் உள்ள மகாலட்சுமி அங்கேயே" தங்கி விடுவாள் என்ற தவறான எண்ணத்தின் காரணமாக வழிபாடு முடிந்த உடன் கோவிலை விட்டு வெளியேறுவது மிக மிக தவறு" பெருமாள் கோவிலாக இருந்தால் திவ்ய பிரபந்தம், அல்லது நாராயண நாமத்தை துதிக்க வேண்டும், சிவபெருமான் கோவிலாக இருந்தால் தேவாரம், திருவாசகம் அல்லது ஓம் நமச்சிவாய" ஓம் நமச்சிவாய"‌ என்ற மந்திரத்தை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும், இதன் மூலம், அங்கு நிலவும் அமைதியான சூழல் நம் மனதை  ஒருமைப் படுத்தி துன்பங்களை மறக்க செய்து மனம் அமைதி அடைகிறது. அங்கு ஒலிக்கும் மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் நமது மனதை தெளிவுபடுத்துவதுடன், மன அழுத்தத்தையும் குறைக்கின்றது. இதன் மூலம் தெளிவான வாழ்க்கை பாதை நமக்கு கிடைக்கும் என்பது திண்ணம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Love has a “deep place” that can hold it” “May the curse of the frog be removed” by our Lord”

    நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
    நாகத் தணையரங்கம் பேர் அன்பில்"
    நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்
    அணைப் பார் கருத்தனாவான்." 
    என்று திருமழிசை ஆழ்வாரால்"  மங்களாசாசனம் பெற்ற
    அன்பில் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள். 

    விஷ்ணு புராணமும் ஐந்தாவது திவ்ய தேசத்தின் பெருமையும் அறிவோம் வாருங்கள்.

    சுதபா மாமுனிவர் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவ வலிமை பெற்றவர். மகாவிஷ்ணு மீது அதீத பக்தி கொண்ட இவர், ஒருமுறை பாற்கடலில் நீருக்கடியில் இறைவனை நோக்கி  தவம் புரிந்து கொண்டிருந்தார்.  அப்போது அவரைப் பார்க்க துர்வாசர் வந்தார். நீருக்குள் இருந்தமையால்,  சுதபா முனிவர், துர்வாசர் தன்னை தேடி வந்ததை அறியவில்லை.  இதனால் தான் அவமதிக்கப்பட்டதாக கருதிய துருவாசர்  கோபத்தில் அவரை நீருக்கடியில் வாழும் தவளையாக ஆகும்படி  சபித்துவிடுகிறார். அப்போது துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் சுதபா முனிவர். முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாகவே"  இச்சாபம் கிடைத்தது எனவும்,  தகுந்த நேரத்தில் மகாவிஷ்ணுவின்  தரிசனம் கிடைக்க பெற்று சாப விமோசனம் ஏற்படும் என சுதபா  முனிவரிடம் துர்வாசர் கூறினார்.

    அதன்படி சுதபா முனிவர், மேலன் பில் உள்ள மண்டுக தீர்த்தம் (தவளை திருத்தத்தில்) புனித நீராடி" மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தின் வலிமையை கண்டு மனம் உருகிய திருமால் அன்பின் மிகுதியால் அவருக்கு சுந்தரராஜராக காட்சியளித்து அருளினார். இதனால் சுதபா முனிவர் சாப விமோசனம் பெற்றார்.

    என்பதும் மேலும் மற்றொரு திருமால் பெருமையாக'  இங்கு  ஒரு முறை பிரம்ம தேவனுக்கு உலகில் தான் மட்டுமே" மிக உயர்ந்தவன்.தன்னால்தான் அழகுடன் உயிரினங்கள் பிறக்கின்றன என்றஎண்ணம் மேலிட்டது. மேலும்  தன்னை யாரும் வணங்குவதில்லை என்ற தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. பிரம்மதேவனின்' இந்த மன  ஓட்டத்தை அறிந்த மகாவிஷ்ணு, பிரம்மனை எச்சரித்தார். அதன் பின்னும் தனது போக்கை மாற்றிக் கொள்ளாமல் செயல்பட்ட பிரம்மனுக்கு பாடம் புகட்ட  எண்ணி'   பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடன்னாக  பிறவி எடுக்குமாறு சபித்துவிட்டார்.  அப்போது மகாவிஷ்ணுவும் பேரழகு மானிடனாக பிரம்மன் முன் தோன்றினார். இதனால் வியந்து போன பிரம்மன் நம் படைப்பில் இது போன்ற ஒரு மானிடனை இதுவரை படைக்கவில்லையே"என நினைத்தவாறு"அந்தப் பேரழகனிடம் கேட்டபோது, பிரம்மனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக்கூடியது.

    இவை இரண்டையும் கொண்டிருக்கும் எவராலும் மேன்மையான வாழ்க்கையை வாழ முடியாது. என்று அறிவுரை செய்தார். இறைவனின் இந்த அறிவுரையை ஏற்று பிரம்ம தேவனும் தன் தவறை உணர்ந்து வழிபட்டான். அப்போது பள்ளி கொண்ட திருக்கோளத்தில் எம் பெருமான்" அன்பின் வடிவமாக எழுந்து அருளினார். 
    சுதபா மாமுனிவர், பிரம்மதேவன் ஆகியோரிடம் மிகுந்த அன்பு கொண்டு' திருமால் எழுந்தருளிய இடம்  என்பதால் ‘அன்பில்’என்ற பெயருடன் இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது. 

    கருவறையில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்கு முக பிரம்மா உடன் அன்பின் வடிவமாக கருணை புரியும் முகத்தோடு அருள் பாவிக்கிறார் அருள்மிகு ஸ்ரீ  சுந்தர்ராஜ பெருமாள். ஆண்டாள் தெற்கு அருள் புரிகிறாள்.மூலவர், அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள், உற்சவர், அருள்மிகு ஸ்ரீ வடிவழகிய நம்பி, தாயார், அருள்மிகு ஸ்ரீ அழகியவல்லி, தலவிருட்சம், தாழம்பூ, தீர்த்தம், மண்டுக தீர்த்தம் (தவளை) 108 திவ்விய தேச தலங்களில் 5 ஆம் திவ்ய தேசமான அன்பில்" திருச்சிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் இலால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில்  மேலன்பில் என்ற இடத்தில் உள்ளது. திருமழிசை ஆழ்வாரால்" பாடப்பட்ட பெருமைக்குரிய இடமாகும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Mother Sri Kali, who blessed the poet Kamban to sing, told him to write”

    ஸ்ரீ ராமனின் காவியமான இராமாயணத்தை எழுதியவர் கம்பர். ராமாயண காவியத்தை இவர் உருவாக்க காரணமாக இருந்தவர் சடையப்ப வள்ளல், பிழைப்பு தேடி வந்த கம்பரையும், அவரது தாயாரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று உணவளித்து ஆதரவுகரம் நீட்டியவர். சடையப்ப வள்ளல் நாள்தோறும் தனது வயல்வெளிக்குச் சென்று விவசாய பணிகளை மேற்கொள்வார். அப்போது ஏரியின் வடமேற்கில் உள்ள வடமேற்கில் அருள் பாவிக்கும் அன்னை ஸ்ரீ காளிகாம்பாளை வணங்கி வழிபடுவார், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்" என்பார்கள்.

    ஆனால்" அந்த கம்பன் கவி பாட அருள் புரிந்தவள் அன்னை ஸ்ரீ காளி. கம்பன் எழுதிய ராமாயண காவியம் உருவாக கருணை புரிந்தவள் இந்த ஸ்ரீ காளி தான். இவளது சன்னதியில் கம்பர் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்க்க வேண்டும், என விரும்பியவர். சடையப்பர் அதன்படி  இந்த இடத்தில் தான் வால்மீகி ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டு, கம்பராமாயணம் உருவானது. கம்பர் வணங்கிய அன்னை ஸ்ரீ காளி கோவிலானது.  திருவெண்ணெய் நல்லூர் அருகே சின்ன சேவலை என்ற கிராமத்தில் உள்ளது, இங்கு விநாயகப் பெருமான், முருகன் ஆகியோர் இருபுறமும் வீற்றிருக்க' வெட்ட வெளியில் தனக்கான மேடை மீது அன்னை ஸ்ரீ காளி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள்.  நான்கு அடி உயரத்தில் எட்டு கரங்களுடன் அன்னை ஸ்ரீ காளியின் திருமேனியானது ஞானத்தை ஊட்டும் அருள் வடிவாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    ஒன்பது நாட்கள் அன்னை ஸ்ரீ காளி கம்பளை பக்தியுடன் வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சோழ நாட்டு திருவெண்ணை நல்லூர் சடையப்ப வள்ளல் கம்பரை ஆதரித்தார். அப்போது முதலாம். குலோத்துங்க சோழன் கி.பி. 12ம் நூற்றாண்டில் கம்பரை ராமாயணம் எழுத வேண்டினான். அதற்காக, வடமொழி வான்மீகி ராமாயணத்தைக் கேட்டு, அதைக் தமிழில் மொழிபெயர்த்து எழுத சோழ நாட்டிலிருந்து, தொண்டை நாட்டிலுள்ள திருவொற்றியூர் வந்தார். அப்போது வடமொழி வான்மீகி ராமாயணத்தை கேட்டு அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கத்தில் கம்பன் அரங்கேற்றினார். என்ற மற்றொரு வரலாறும் கம்பராமாயணத்திற்கு உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Tamil God Murugan” recognized as a national monument by the Singapore government!

    சிங்கப்பூரில் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் உள்ளது. தமிழகத்திலிருந்து 1823 ஆம், ஆண்டு சென்று' சிங்கப்பூரில் குடியேறிய நகரத்தார் குடும்பத்தினர். சிலர் ஒன்று சேர்ந்து.1860 ஆம் ஆண்டு முருகப்பெருமானுக்கு, அரசமரத்தடியில் குளக்கரையின் ஓரத்தில், வேல் ஒன்றை வைத்து வழிபட்டு வந்தனர்.

    அதன் பின் முருகனுக்கு சிறு சன்னதி அமைக்கப்பட்டு 1878 ஆம் ஆண்டு, விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டன. படிப்படியாக அங்கு  ஜம்பு விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், இடும்பன், தட்சிணா மூர்த்தி, பைரவர், மகா விஷ்ணு துர்க்கை,  மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக' ஐந்து கலசங்களுடன் 75 அடி உயர ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    அதனைக் கடந்து உள்ளே சென்றாள்.  மகா மண்டபமும் அதன் நேர் எதிரில் கருவறையில் மூலமூர்த்தியான முருகப்பெருமான் கருணையே வடிவாக  ‘தண்டாயுதபாணி’ என்ற திருநாமத்துடன் அருள் பாவிக்கிறார். தன்னை வேண்டி வரும், பக்தர்களின் வேதனைகளைப் போக்கி வேண்டுதலை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கைத் தரும் உயர்ந்திட நல்லாசி புரிகிறார். தமிழ் கடவுள் ஆன" முருகப்பெருமானின் இந்த திருக்கோவிலானது, சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டு இருப்பது. இந்திய திருநாட்டிற்கு கிடைத்த பெரும் கௌரவமாகவே கருதப்படுகிறது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Brahma bowed his head in lust and asked, “Why is Rati performing penance?”

    காளிகா புராணத்தில் ரதி தேவி மன்மதன் இருவரைப் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.  தக்ஷனின் மகளாக பிரம்ம லோகத்தில் பிறந்தவள்.ரதி தேவியின் பிறப்பு காம தேவனின்  பிறப்புடன் இணைந்து நிகழ்ந்தது. தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடமே பூவாளூர். மன்மதன் உயிர்பெற்று எழுந்தமையால், மன்மதபுரம் என்ற பெயரும் இதற்கு  உண்டு.; ரதிதேவி இங்கு வழிபட்ட காரணத்தை அறிந்து கொள்வோம் வாருங்கள். 

    தேவலோகத்தில் ஒருமுறை, பிரம்மதேவன் தன் 10 பிரதிநிதிகளை படைத்து. சந்தியா என்ற அழகிய பெண்ணை உருவாக்கினான். சந்தியா பிரம்மலோகத்தில் பிறந்ததும், அவள் அழகில் மயங்கி பிரம்ம தேவனும் அவனது பிரதிநிதிகளும் வியப்பில் அசந்து நின்றனர். அப்போது பிரம்ம தேவனின் உள்ளத்தில் இருந்து  அழகிய ஆண் மகன் ஒருவன் தோன்றினான். அவனுக்கு பிரம்மன் காமன்' என பெயர் சூட்டினான். பின் பிரம்ம தேவனை வணங்கிய காமன்,  "தந்தையே, என்னை நீங்கள் உருவாக்கியதற்கான  காரணத்தை அறிய விரும்புகிறேன். காமன்  என பயிர் சூட்டினீர்கள்.

    என் கடமை என்ன என் துணை யார்" ? என்பதையும் கூறுங்கள்" என காமன் கேட்டான். அதற்கு பிரம்மதேவன்  "நீ என் காம விருப்பின் பரிபூரண வடிவாகத் தோன்றியவன். எனவே" நீ இனி காமத்தின் அதிபதியாக ஆட்சி புரிவாய்.  பூவுலகத்தில் உள்ள மானிடர்களின்  பிறப்பென்னும் ஆடல்" உன் காமக் கணைகளால் நிகழ வேண்டும்." என்றான் அவை மட்டுமல்ல,  "உன் காமக் கணைகளுக்கு ஈரேழு உலகத்தில் இருக்கும் எவராயினும் அதற்கு கட்டுப்பட்டவர்கள். மகாவிஷ்ணுவோ, சிவபெருமானோ, அல்லது நானாக இருந்தாலும், விதிவிலக்கு அல்ல, ஏழு லோகத்தில் உன்னை எதிர்க்கவோ" தடுக்கவோ" முடியாது" என்றார். அப்போது பிரம்ம தேவனின் படைப்பாற்றலை கண்டு, நெகிழ்ந்த பிரதிநிதிகள்  அவரை வணங்கினர். பின் பிரம்ம தேவனின் மனதில் இருந்து தோன்றியதால், காமனுக்கு'  'மன்மதன்’ எனப் பெயரிட்டனர். காமனிடம், "ஆண்களில் அழகானவனே உனக்கு எங்களில் மூத்தவரான தக்ஷர் தன் மகளை  உனக்கு துணைவியாக  அளிப்பார்" என வாழ்த்தினர். அப்போது. மன்மதன் தன் காம மலர் கணைகளை சோதிக்க விரும்பி  அதனை எதிரில் நின்ற' பிரம்மதேவன்.

    அவனது பிரதிநிதிகளிடம்  சோதிக்கலாம் என முடிவு செய்தான். அதன்படி தன் ஐந்து காம மலர்கணைகளை எடுத்து முதலில் பிரம்மதேவன் பின் மற்றவர்கள் மேல் தொடுத்தான். இதனால் அவர்கள்  காமம் முற்று' அங்கிருந்த சந்தியா தேவியை நோக்கினர். மன்மதன் தன் காம அம்புகளை சந்தியாதேவியின் மேல் தொடுத்தான்.  அவளின் காம இச்சை தூண்டப்பட்டு அவளின் உடலில் இருந்து 64 கலைகள் பிறக்க' பிரம்மதேவன் உள்ளிட்ட அனைவரும். கூடி இன்புற்றனர். பிரம்ம தேவனின் லீலைகள்  சந்தியாதேவியை மேலும் காமமுறச் செய்தன. சுயநிலை  மறந்து அவளும்  புணர்ந்தாள். பிரம்மதேவன் தன்னிலை மறந்து. காமத்தில் மிதப்பதை கைலாயத்தில் இருந்தபடி தன் ஞானத்தால் அறிந்த சிவபெருமான். பிரம்மலோகம் விரைந்தார். அங்கு பிரம்மதேவன்  மற்றும் அவனது பிரதிநிதிகளை தன் தண்டத்தால் அடித்து விளக்கினார். அப்போது சிவபெருமான் முன் நிலைகுலைந்து பிரம்மதேவன் தலை குனிந்து நின்றான். ஈசன் பிரம்மதேவனிடம்,  "தன் மகளையே புணரும் ஈன  காரியங்களை நீ எப்படி மனம் வந்து செய்யத் துணிந்தாய்" என கோபமாக கேட்டார். அதற்கு பிரம்மதேவன் நடந்துவற்றை விவரமாக எடுத்து சொன்னான். இதனிடையே"பிரம்மதேவன் சந்தியா தேவியுடன் இன்புற்றத்திற்கு, சாட்சியாக அவரின் உடலில் இருந்து சிந்திய  வேர்வைத் துளியிலிருந்து.

    64 ஆயிரம் அக்னிஸ்தவர்களும், நாற்பத்திஎட்டாயிரம் பிரதிநிதிகளும், மற்றும் பிரதிநிதியின்  உடலில் இருந்து தேவர்கள் தோன்றினார். பின் சிவபெருமானின் அறிவுரைகளை கேட்ட பிரம்மதேவன் மன்மதன் மேல்" கோபமுற்று' "என்னை ஈசன் முன் தலை குனிய செய்துவிட்டாய்" நீ இதனால்" ஈசனின்  நெற்றிக்கண்ணால் எரிக்கப்படுவாய்" என சாபமிட்டார். பின் ஆத்திரத்தில் தன் நாவில் இருந்து உதித்த சொல்லின் "தீமையை எண்ணியவாறு வருந்திய பிரம்மதேவன் பிரதிநிதிகளின் மூத்தவரான  தக்ஷரை அழைத்து. அவர் உடலில் இருந்து தோன்றிய ரதியை பெண் கேட்டார் அதன்படி, தக்ஷன் காமனுக்கு ரதி தேவியை திருமணம் செய்து கொடுத்தார். அப்போது பிரம்மதேவன். காமனிடம், பூலோகத்தில் இருவரும் " இன்பமும், காதலும் செழிக்கும் படி அழிவின்றி வாழ்வீர்கள். என்னால் ஏற்பட்ட சாபத்திற்கு ரதியால் விமோட்சனம் கிடைக்கும்." என இருவரையும் வாழ்த்தினார்.  வாழ்த்தைப் பெற்ற ரதியும், மன்மதனும் பூலோகம் சென்றனர்.  ஏற்கனவே" பிரம்மதேவன் கொடுத்த சாபத்தின் காரணமாக சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால், காமனை எரித்தார்.

    இதனால்"   கணவனை இழந்த ரதிதேவி  கண்ணீர்விட்டு கதறி அழுதாள். கதறினாள். மன்மதன் உயிரை மீட்க சிவபெருமானை நோக்கி கடும் தவம் மேற்கொண்டாள். பிரம்ம தேவனும் ஆத்திரத்தில் தான் சாபம் இட்டதை நினைத்து தவித்தார். தனது மானசீக புதல்வனை இழந்த மகாவிஷ்ணு ஆகியோரும். சிவபெருமானிடம் சென்று ரதியின் நிலை குறித்து முறையிட்டனர்.  இதனால் மனம் இறங்கிய  சிவபெருமான் ரதிதேவியின் முன் தோன்றினார். ‘ அப்போது உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தென்படுவான். மற்றவர் கண்களுக்கு அரூபமாகத் தோன்றுவான்' என ரதிதேவியிடம் கூறிய சிவபெருமான் மன் மதனை உயிர் பெற்று எழுச் செய்தார் என்கிறது திருமூலநாதர்  திருக்கோவில் வரலாறு, பிரம்ம புராணத்திலும், இது குறிப்பிடப்பட்டுள்ளது பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது.  இங்குள்ள ரதிதேவி வழிபட்ட சுயம்புலிங்கமானது. அருள்மிகு ஸ்ரீ ‘திருமூலநாத சுவாமி’. எனவும், இறைவி பெயர் அருள்மிகு ஸ்ரீ குங்கும சவுந்தரி அம்பாள். என்றும் அழைக்கப்படுகின்றனர்.  இருப்பிடம்' திருச்சி மாவட்டம், லால்குடி நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில்  பூவாளூர் என்ற அமைந்துள்ளது இடத்தில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • 24 “What is the purpose of the lamp and the worship of the Guru Bhagwan?” Let’s learn about its history.

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக விளங்கும், பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏலவார் குழலி சமேத அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில், சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 ஆலயங்களில்  காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 ஆலயங்களில 98 வது ஆலயமாக  விளங்குகிறது. காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. அப்பர் அடிகளால் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்ற சிறப்புடைய இதன் வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். 
     

    புராண காலத்தில்  சுவாசனன் என்ற ஓர் அரசன். இருந்தான் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த அவன்  நாட்டு மக்களை கொடூரமாக துன்புரித்து வந்தான். அவனது அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முடியாத பிற நாட்டு அரசர்கள், ஒன்று சேர்ந்து தந்திரமாக அவனைக் கொன்றனர். அப்போது எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் கொண்டு சென்றனர். அங்கு எமதர்மன் முன் நிறுத்தப்பட்ட  அவன் செய்த பாவங்களை சித்திரகுப்தன். பட்டியலிட்டு கூறினான் அதைக் கேட்ட எமதர்மன்; இத்தகைய கொடியவனா இவன் அப்படி என்றால்" விதி பூலோகத்தில் இவன் பிசாசாக அலையட்டும் என தண்டனை விதித்தான் எமதர்மன்.

    அதன்படி பூலோகத்தில் கொடுங்கோலன் சுவாசனன் அலைந்து கொண்டிருந்தான். பிசாசாக அப்போது பூர்வ ஜென்ம புண்ணியத்தால், அகத்திய அகத்திய மாமுனிவரை எதிர்பாராத விதமாக சந்தித்தான். தனது நிலையை அவரிடம் எடுத்துச் சொல்லி துன்பத்திலிருந்து விடுபட வழி கேட்டான். அவனது நிலையை கண்டு வருந்திய அகத்திய மாமுனிவரின் அறிவுறுத்தலின்படி , காசி ஆரண்யம் என அழைக்கப்படும்.  ஆலங்குடித் திருக்கோவில்  வந்து புனித நீராடி, ஸ்ரீ ஆபத் சகாயேஸ்வரரை வணங்கி தனது பாவங்கள் அனைத்தும் நீங்க பெற்று, சுவாசனன், இழந்த ராஜ்யத்தை மீண்டும் அவனிடம் கொடுத்து அருள் புரிந்தாராம் சிவபெருமான்.

    மூலவர் ஆபத்சகாயேஸ்வரர், காசி ஆரண்யேஸ்வரர், தாயார்  ஏலவார் குழலி, உற்சவ மூர்த்தி  தட்சிணாமூர்த்தி, தல விருச்சம், பூளை எனும் செடி, புனித தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான கூபம், அமிர்த புஷ்கரணி, புராண பெயர் திருவிரும்பூளை, இரும்பூளை,   இறைவனை வழிபடும் முறை' முதலில் 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், ஒரு தீபத்தை விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். 

    ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, அமைதியாக  பிரகார வலம் வந்து, கொடிமரம் முன் விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்கு  நாம்  24 தீபங்களையும் பரிகாரமாக ஏற்றி வைக்க வேண்டும். பிரம்ம தேவனின் மூல மந்திரம் 24 என்பதால்,  இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுவதாக ஐதீகம்.  இதனால் குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் நீங்குகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானை வணங்கிய பின்னர் மூன்று முறை கோவிலை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறையும் கொடி மரத்தின் கீழே விழுந்து வணங்க வேண்டும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • If you offer it, “Mayiladi” Krishna will fulfill your wishes!

    ஈரோடு மாவட்டம்,மயிலாடி' யில், சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு அருள்புரியும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அப்பகுதி விவசாயிகள் சிலர் குலம் வெட்டுவதற்காக பூமியை தோண்டிய போது சுயம்புவாக தோன்றியவர் ஆவார். இவருக்கு அவல், சர்க்கரைப் பொங்கல், பால், வெண்ணை ஆகியவை கொண்டு நிவேதனம் செய்து வழிபட்டால், திருமண வரம் கை கூடும், தொழில் விருத்தி லாபகரத்துடன் நடக்கும், ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளார்.

    இவருக்கு புதன் மற்றும் சனி ஆகிய நாட்களில் வெற்றிலை மாலை தொடுத்து. அவரது திருமேனியில் அலங்கரித்து வழிபட்டால், மனவேதனையை நீங்கி எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதேசி, புரட்டாசி வழிபாடு ஆகியவை இங்கு சிறப்புடன் நடைபெறுகிறது. வாழ்க்கையில் தள்ளாடி தவிப்புக்கு உள்ளான"அன்பர்கள் மயிலாடி ஸ்ரீ சென்று கிருஷ்ணா பெருமாளை வழிபட்டால், இன்னல் விலகி வாழ்வில் நிமிர்ந்து நிற்பது நிச்சயம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Will worshiping Kubera before going to Tirupati bring wealth?

    சென்னை வண்டலூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி குபேரன் கோவில் பிரசித்தி பெற்றதாகும், இங்கு புன்னகை தவழும் முகத்துடனும், துணைவியார்  துணைவியார் சித்தரிணியுடன் காட்சி தருகிறார் குபேரன். மேலும் குபேர லிங்கம், லட்சுமி கணபதி,   முத்துக்குமரன், ஆஞ்சநேயர், தனித்தனி சன்னதியில் நவகிரகங்கள் உள்ளன.

    மகாலட்சுமி அம்சமண கோமாதாவிற்கு பராமரிப்பு கோ சாலையும் அமையப் பெற்றுள்ளது. பசுவிற்கு உணவளித்து குபேரனை வழிபட்டால் வீட்டில் லட்சுமி தாண்டவம் ஆடுவாள் என்பது ஐதீகம், செல்வத்திற்கு அதிபதி ஆகிய லட்சுமியும், அதனைக் காக்கும் குபேரணையும் தீப ஒளி திருநாளன்று வழிபடுவது சிறப்பாகும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முன் வண்டலூர் ரத்தினமங்கலத்தில் உள்ள' லட்சுமி குபேரனை வழிபட்டால் ஏழுமலையான் இடம் வைக்கப்படும் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை, அட்சய திருதி அன்று இங்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது அன்றைய தினம் குபேரனை தரிசித்து விட்டு தங்க ஆபரணங்கள் வாங்கினால் மேலும் மேலும் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • The cow worshipped Lord Shiva to secrete milk from its udder.

    காமதேனு வழிபட்ட ஆதி லிங்கம்" சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் செய்த திருக்கோவில்' பசுவின் பெயர் தாங்கி சிவபெருமான் அருள் புரியும் புண்ணிய பூமி செல்வம் வாருங்கள்.

    புராண காலத்தில்,பிரம்மதேவன் ஒருமுறை தான் படைப்பு தொழிலை நிறுத்திவிட்டால், காத்தல், அழித்தல் பணிகளை செய்பவர்களுக்கு வேலை பறிபோகிவிடும் என நினைத்து. ஆணவத்துடன் நடந்து கொண்டார்.  அவரது அறியாமையை அகற்ற நினைத்த ஈசன். படைப்புத் தொழிலை பிரம்மன் தொடங்கினார்.  ஆனால் எந்த ஒரு உயிரினமும் தோன்றவில்லை. அப்போது சிவபெருமானை  வணங்க கயிலைக்கு வந்த காமதேனுவிடம், 'நீ பூலோகம் சென்று, பிரம்மனுக்கு பதிலாக படைப்பு தொழில் புரிந்து வா'என அருளினார். அன்று முதல் பிரம்ம தேவனுக்கு பதிலாக  பதிலாக காமதேனு  படைப்புத் தொழிலை செய்யத் தொடங்கியது. இதனை அறிந்து  பிரம்மதேவன், தனது கர்வத்தை விட்டு கைலாயம் சென்று சிவபெருமானை வணங்கி தான் செய்த தவறுக்கு மனம் உருகி  வருந்தினார். அப்போது தனக்கு மீண்டும் படைப்புத் தொழில் செய்ய அனுமதி தர வேண்டும் என பக்தியுடன் வேண்டினார். 
    உடனே சிவபெருமான், 'நீ பூலோகம் சென்று" ஆம்பிரமா நதிக்கரையில்,  வஞ்சிவனம் என்னும் இடத்தில் என்னை நோக்கி தவம் இருந்து  வழிபடுவாயாக' என கட்டளையிட்டார். அதனை ஏற்று  பிரம்ம தேவன், ஆம்பிரமா நதிக்கரையில் ஈசனை வழிபட்டு கடும் தவம் புரிந்து வந்தான். அதன் பலனாக பிரம்ம தேவனுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அப்போது 'பிரம்ம தேவனே"   உன்னுடைய அனைத்து தீய வினைகளும் இன்றுடன் விலகியது. எனவே இவ்விடத்தில் நீ" வேத விற்பனர்களை அழைத்து. மகா  வேள்வி ஒன்றை நடத்தி, கலைகளின் அம்சமான கலை மகளை திருமணம் புரிந்து, படைப்பு தொழிலை, இங்கு இருந்தவாரே" தொடங்குமாறு அருளினார். அதன்படி பிரம்மதேவன்,  ஆம்பிரமா நதியின் வடபுறத்தில் புனித பிரம்ம தீர்த்தம் உருவாக்கி'  ஈசனை வழிபட்டு, வழிபட்டார். பின்னர் வெண்ணெய் மலையின் வடக்கே மகா வேள்விச் சாலை ஒன்றை ஏற்படுத்தி வேத விற்பனர்களை அழைத்து வேள்வி நடத்தினார். பின் கலைகளின் தலைவியான சரஸ்வதி தேவியை பிரம்மதேவன் திருமணம் புரிந்து. அப்பகுதியில் இறைவனுக்கு திருக்கோவில் ஒன்றையும் எழுப்பினான். இதனிடையே" பூலோகம் வந்த காமதேனு பல சிவத்தலங்களை தரிசித்து விட்டு வஞ்சிவனம் வந்தது. தவம் புரிந்தது.  ஒரு நாள் விண்ணில் இருந்து ஒரு அசரீரி கேட்டது.  'காமதேனுவே" வஞ்சி வனத்தில், ஒரு புற்றில், மகாலிங்கம் என்னும் ஆதிலிங்கம் உள்ளது. அதனை நீ" புனித பிரம்ம' தீர்த்தத்தில் நீராடி வழிபட்டு வா'  என அக்குரல் கூறிய வாரே"
    காமதேனுவும் சுயம்பு வடிவான ஆதி லிங்கத்தை கண்டு, தனது மடியில் இருந்து பாலை சுரக்க நாள்தோறும்   வழிபாடு வந்தபோது.  

    ஒரு நாள் அதன் கால் குளம்பு, இறைவனின் திருமுடியின் இடது பாகத்தில் பட்டுவிட்டது. இதன் காரணமாக அதில் இருந்து ரத்தம் வழிந்தது. அதைக் கண்ட காமதேனு பதறியது. அப்போது சிவபெருமான்  தோன்றி, 'காமதேனுவே" கலங்க வேண்டாம். இது உன் தவறல்ல. நீ எம்மை நீ" வணங்கியதால், இனி' இந்த ஆதி லிங்கம் பசுபதிநாதர்  அன்றே" அழைக்கப்படும் என அருளினார்.  பிரம்மதேவன் மட்டுமல்ல' பசுவும் படைப்புத் தொழில் புரியும்  என்பதை பிரம்மனுக்கு உணர்த்துவதற்காகவே உன்னை பூலோகம் வந்து படைப்புத் தொழில் புரியசெய்யச் செய்தேன். நீ" பிரம்மதேவனிடம்  படைப்புத் தொழிலை கொடுத்துவிட்டு, தேவலோகம்  செல்லுமாறு அருளாசி வழங்கி விண்ணில் மறைந்தான் ஈசன்" என்பது. 

    ஆதி கருவூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோவில் தல வரலாறு ஆகும். ஏழு நிலை ராஜகோபுரம் ஏழு ஆதி சிவலிங்கங்களை நோக்கி மேலோங்கி காட்சியளிக்கிறது. இதனைக் கடந்து உள்ளே சென்றால், ஐந்து பஞ்சபூதங்களை நினைவூட்டும். இதனினும் சிறிய  ஐந்து நிலைகளுடன் கோபுரம் உள்ளது. தெற்கு விநாயகர் பெருமானும், குடை விரித்த நாக பந்தல் நிழலின் கீழ்,  காமதேனு ஆதி லிங்கத்திற்கு, பால் பாலை சுரக்கும்  காட்சி, புராண காலத்தை கண்முன் காட்டுகிறது. கருவறையில்  வீற்றிருக்கும் ஆதி சிவலிங்கம். பசுபதிநாதர் என காமதேனு" என அழைக்கப்படும் பசு வழிபட்டதின் பொருள் பட அழைக்கப்படுகிறார். இவர் சற்று சாய்ந்த நிலையில் சூரிய கதிர்கள் தன்னை வணங்கும் பொருட்டு காட்சி அளிப்பதும், இவர் மீது பசுவின் கால் தடம் இருப்பதை காணலாம், கிழக்கு முகமாக லோகமாதா அருள்மிகு ஸ்ரீ  அலங்காரவல்லி அம்மையின் பொற்பாதத்தின் கீழ்  சக்ர பீடம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தெற்கு சவுந்திரநாயகி புன்னகையுடன் வீற்றிருக்கிறாள். கரூர் மாவட்டத்தின். தலைநகரான கரூர் நகரில் ஏழு சிவ ஆலயங்களின் ஒன்றான புராணத் தொடர்புடைய அருள்மிகு ஸ்ரீ  பசுபதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் தோன்றிய  மலையில் தெற்கு திருப்பதி என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ராமன சுவாமி திருக்கோவில் மற்றும் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமி, கோவில்,  ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் காவேரி கரையோரத்தில்  சிறு குன்றின் மீது அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், மேலும் நெரூர் அருள்மிகு ஸ்ரீ  சதாசிவமும் அருள் புரிகிறார். கரூர் சென்று" பசுபதீஸ்வரரை வணங்கினால் கர்ம வினை நீங்கும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Lord Shiva gave a boon to Nandi.

    நந்தியை வாகனம் ஆக்கி வாகனத்தை  மலையாக்கி அதன் மீது அமர்ந்து சிவபெருமான் அருள் பாவிக்கும் புண்ணிய பூமி" 
    ஆந்திர மாநிலம்  ஸ்ரீ சைலம். புராண காலத்தில் சிலாதர் என்ற மகரிஷி வாழ்ந்த இடமாகும்.  பிள்ளை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி இவர் தவம் இருந்தமையால், இறைவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. இச்செய்தி அறிந்து குழந்தைகளை ஆசிர்வதிப்பதற்காக  பார்க்க சனகாதி மாமுனிவர்கள்  வந்தனர்.

    அவர்கள், நந்திதேவர் சில காலம் மட்டும் தான் பூமியில் வாழ்வார் என சிலாதர் மகரிஷியிடம் கூறினர். இதைக் கேட்டு, வருந்திய தந்தையிடம் நந்தி,”தந்தையே" வருந்தாதீர். நான் ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்து. சாகா வரம் பெறுவேன்” என்றார். அதன்படி அவரது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், நந்தியை தன் வாகனமாக இருக்குமாறு வரம் அளித்து. நந்தியின் அனுமதியின்றி தன்னை பார்க்க வர முடியாது என்று கட்டளையிட்டார். மேலும்  அவனது தம்பியாகிய பர்வதனும் தவம் புரிந்தான். அவன் தவம் இருந்த பர்வதன்கடும் தவம் செய்து ஈசனின் திரு  பாதம் எப்போதும் தன் மீது பட வேண்டும் என்பதற்காக வரம் பெற்றான். அதன் பயனாக பர்வதனை ஒரு மலையாக மாரி  ஸ்ரீ பர்வதம் என  பெயரிட்டு அம்மலையின் மீது சுயம்பு லிங்கமாக அமர்ந்து எழுந்தருளினார்.

    ஆந்த ஸ்ரீ பர்வதமே தற்போது ஸ்ரீசைலம் என அழைக்கப்படுகிறது.  சைலம் என்றால் மலை எனப் பொருள்படும். நாகஸ்ரீ என்ற சிவபக்தை தவமிருந்து 
    இப்பகுதி தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென  வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலந்தர் மகரிஷி  தவம் செய்தமையால் இம்மலை சிலந்தர் மலை ஆனது.  மல்லிகாபுரி தேசத்தை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகை மலர்களாலும், அர்ஜுனா பூக்களாலும் சிவனை பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” என்றும் அழைக்கப்படுகிறார்.

    ஸ்ரீசைலம் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு லிங்க வடிவான ஈசனுக்கு  நாமே அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடும் ஐதீகம் உள்ளது. நந்தியை தனது வாகனம் ஆகியது இங்குதான்.    அதன் மீது சிவன் அமர்ந்து ஆட்சிபுரிகிறார். சக்தியின் திருப்பெயர்   அருள்மிகு ஸ்ரீபிரமராம்பாள், பருப்பநாயகி இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர்,ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர்.  தல விருட்சம்  – மருதமரம், புண்ணிய தீர்த்தம் – பாலாநதி ஆலயம் கண்ட காலம், 1000 ஆண்டுகளுக்கு முன்பு. புராணப் பெயர்- திருப்பருப்பதம் கிராமம்- ஸ்ரீசைலம் மாவட்டம்,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்