Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Why do Saptha Kannyar (the virgins of the sound) enjoy the blessings of the Boovarakperumal (the abode of Lord Buddha)?

    கடலூர் மாவட்டம்,ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பூவராகசாமி திருக்கோவில் உள்ளது. திருமாலின் பத்து அவதாரங்களில் மூன்றாவது அவதாரமாக விளங்குவது வராக அவதாரம். இவர் பூவராக மூர்த்தியாக இங்கு' அருள் பாவிக்கிறார். இரணியன் என்ற அசுரன் தேவர்கள், முனிவர்கள், நந்தவர்களை துன்பப்படுத்தி வந்ததோடு, நான்கு வேதங்களை எடுத்துச் சென்று பூமியை பாயாக சுருட்டி இருள் அடைய செய்து அதன் கீழ் ஒளிந்து கொண்டான். அப்போது. தேவர்கள் முனிவர்கள் கந்தவர்கள் ஆகியோருடன். அப்பகுதியைச் சேர்ந்த 'அம்புஜவல்லி தாயார். அவருடைய உயிர் தோழிகளான சப்த கன்னிகளும் திருமால் இடம் சென்று' இரணியனை அழித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.

    எனவே  திருமால் வழக்கமாக  நான்கு கரங்கள், சக்கரத்துடன்' தான் சென்றாள். இரணியன் தன்னைக் கண்டு அஞ்சி தாழ் பணிந்து உயிர் தப்பி விடுவான் என்பதால்'  பன்றி அவதாரம் எடுத்து மண்ணுக்குள் நுழைந்து சென்று திருமால் இரணியனை  கொன்ற பின் அம்புஜவல்லி தாயாரை திருமணம் செய்து கொண்டார். அப்போது அம்புஜவல்லி தாயார் தனது தோழிகளும்  தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆசையில் திருமாலிடம் வேண்டினார். இதனை ஏற்றுக் கொண்ட திருமால்  தனது இருப்பிடத்திலேயே  அவர்களுக்கு இடமளித்தார்.

    மேலும் அத்துடன் அவர்களுக்கு தோஷம் நீங்குதல், பிள்ளை பேரு வரம் வழங்குதல் போன்ற சக்திகளையும் வழங்கினார். தற்போதும் ஏழு சப்த கன்னியர்களும்' பூவராகசாமி கோவிலில் தங்களுக்கான சன்னதியில், வடக்கு நோக்கி அமர்ந்தபடி திருமாலின் அனுமதியோடு' அங்கு வரும் பக்தர்களுக்கு வரம் அளித்து வருகின்றனர். இறைவன், அருள்மிகு ஸ்ரீ பூவராக சுவாமி, (சுயம்பு மூர்த்தி) தாயார், அருள்மிகு ஸ்ரீ அம்புஜவல்லி, விமானம், பாவன விமானம்.புனித தீர்த்தம், நித்ய புஷ்கரணி,தலவிருட்சம், அரச மரம்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Devotees believe that if they worship the ‘Puliyuraan’ Siddhanatha Gurunath, they will be cured of their diseases in seconds!

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், புலியூரான் கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதசாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இங்கு 16 ஆம், நூற்றாண்டில் புலியூரான் கிராமத்தில், தென்பொதிகை மலையிலிருந்து வந்த “சித்தர்” ஒருவர் அங்குள்ள புளியமரத்தின்” கீழ் குடில் அமைத்து வாழ்ந்து வந்தார், அப்போது காரணம் புரியாது பல நோய்கள் பரவி மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். நோய் தாக்குதலுக்கு ஆளான பலர் அதற்கான சிகிச்சை கிடைக்காமல் மாண்டு போய் விட்டனர். அப்போது அப்பகுதியை ஆண்ட அரசன் பொதிகை சித்தரை அழைத்து நோய் தீர்க்கும் அரிய மருந்தினை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி நாட்டு மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டி பொதிகை சித்தர் பௌர்ணமி அன்று மகா யாகம் நடத்தி தனது தவத்தின் பலனாக 21 தேவதைகளை அழைத்து அவர்களுக்கு வேண்டிய அமுது படைத்து, கொடும் நோயை தீர்க்கும் அருமருந்து உண்டாக்கும் மூலிகை குறித்து கேட்டு அறிந்தார். பின் தேவதைகளின் வழிகாட்டுதலின்படி நோய் தீர்க்கும் மூலிகைகளை கொண்டு மக்களின் நோய்களை தீர்த்து குணப்படுத்தினார். மேலும் 21 தேவதைகளையும் வனப்பகுதியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அப்போது அப்பகுதியை சேர்ந்த தம்பிரான் என்பவர் சித்தரின் சித்து விளையாட்டுகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக ஒரு முறை பொதிகை சித்தர் தேவதைகளுக்கு அமுது படைப்பதற்காக வனப்பகுதிக்கு சென்ற போது, அவரை பின்தொடர்ந்து சென்று'அங்கு நடப்பதை கவனித்தார், வணக்கம் போல் பொதிகை சித்தர் பூஜைகள் செய்து அமுது உண்பதற்காக தேவதைகளை அழைத்தபோது 21 தேவதைகளும் வர மறுத்தனர். இதற்கான காரணத்தை புரிந்து கொண்ட பொதிகை சித்தர் தன்னை பின் தொடர்ந்து வந்து பூஜைக்கு இடையூறு செய்த' தம்பிரான் என்பவரை மயக்கமடைய செய்தார். அதன் பின் தேவதைகள் சித்தர் முன் தோன்றி  அமுது உட்கொண்டன.

    இதனால்' சித்தரும் மனமிரங்கி' தீர்த்தம் திளித்து மயங்கி கிடந்தவரை தெளிவு பெற செய்தார், பின் தம்பிரான் தான் செய்த தவறை உணர்ந்து சித்தரின் தாள் பணிந்து வணங்கி நின்றார். சித்தரும் அவரை ஆசிர்வதித்து, தனது சீடனாக ஏற்று' தன்னுடன் இருந்து சித்த மருத்துவக் கலைகளை கற்று மக்கள் நலனுக்கு  தொண்டு புரியுமாறு அருளியதோடு' சித்த மருத்துவ கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தம்பிரானும் அவருடன் இருந்து மருத்துவ சேவையில் ஈடுபட்டார். அதன்பின், தம்பிரான் சித்தரின் அனுக்கிரகம் பெற்று சித்தர் முக்தி அடையும் காலம் வரை பக்தர்களின் எவ்வித நோய்க்கும் தீர்த்தம் வழங்கி சித்தருக்கு பணிவிடை செய்து வந்தார்.

    சித்தர் முக்தி அடைந்தவுடன், அவரின் அருள்வாக்குபடி  தம்பிரான் பொதிகை சித்தரை அடக்கம் செய்து, அங்கு, அருள்மிகு ஸ்ரீ சித்தநாத குருநாதர் என்ற பெயரில் கோவில் கட்டி, 21 தேவதைகளுக்கும் பொதிகை சித்தருக்கும் அமுது படைத்து வழிபட்டு வந்தார். பின்னர் “தம்பிரான்” முக்தி அடைந்ததும் அவரது உறவினர் சித்தரின் கருவறைக்கு அடுத்து அவரை அடக்கம் செய்து தனி கருவறை,  பீடம் அமைத்தும், அவரது பணியினை செய்து வந்தார். எனவும் தற்போதும் அந்த சித்தர் கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு நோய் நொடிகள் உடனுக்குடன் குணமடைவதாகவும் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Do not pluck lotus flowers from the pond.” What did Gajendra do in response to Mahavishnu’s command?

    தூ வாய புல் ஊர்ந்து வந்து துறை வேழம்
    மூவாமை நல்கி முதலை துணித்தானை 
    தேவாதிதேவனை செங் கமலக் கண்ணனை
    நாவாய் உளானை நறையூரில் கண்டேனே ! '- 
    (திவ்யதேச பாசுர விளக்கம்‌.)

    ( துஸவாய புள்) 'தூ வாய' என்றும், 'தூ ஐய' என்றும் பிரிக்கலாம். தூ ஐய வே தஸ்வரூபியாகையாலே ஸ்வத பரிசுத்தனானா என்றபடி.! 

     கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 108 வைணவத் தலங்களில் ஒன்றான. திருநாவாய் திருக்கோவிலானது, 76-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும் பெருமாள் மீது  பாடிய இடமாகும். திருமாலை நோக்கி 9 யோகிகள் இங்கு தவம் புரிந்ததால், நவ யோகித்தலம் என அழைக்கப்பட்டு காலப்போக்கில்  தற்போது திருநாவாய் என்றழைக்கப்படுகிறது.  தேவலோகத்தில் ஒரு முறை திருமகளும்,  கஜேந்திரனும் தடாகத்தில் இருந்து பறித்த தாமரை மலர்களைக் கொண்டு மகாவிஷ்ணுவுக்கு  அர்ச்சனை செய்து வணங்கி வந்தனர். அப்போது ஒரு முறை வழக்கம்போல் தடாகத்தில் தாமரை மலர்களை பறிப்பதற்காக சென்றபோது.

    கஜேந்திரனுக்கு தாமரை மலர்கள் கிடைக்கவில்லை, இதனால் ஏமாற்றத்துடன் திரும்பிய கஜேந்திரன் இது குறித்து மன வருத்தத்துடன் சென்று' தனது நிலையை மகாவிஷ்ணுவிடம் எடுத்துரைத்தான். உடனே மகாவிஷ்ணு திருமகளை அழைத்து, இனி தடாகத்தில் நீ தாமரை மலர்களை பறிக்கக் கூடாது என கட்டளையிட்டார், அதனை ஏற்று திருமகளும் கஜேந்திரனுக்காக தாமரை மலர்களை பறிக்காமல் விட்டுக் கொடுத்தால், இதனால் மகிழ்ச்சி அடைந்த  கஜேந்திரன் அன்று முதல் நாள்தோறும் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து மகாவிஷ்ணுவை  வழிபட்டு வந்தான். அவனது பூஜையில் மன மகிழ்ந்த இறைவன் பூஜை நேரத்தில் திருமகளை தன்னுடன் சிம்மாசனத்தில் அமர செய்து, கஜேந்திரனின் பூஜையை ஏற்று திருமகளுடன் தம்பதியர் சமேதரராக கஜேந்திரனுக்கு  காட்சி கொடுத்ததாக தல வரலாறு' பெருமான் அருள்மிகு ஸ்ரீ நவ முகுந்தன் என்ற திருப்பெயரில்  கிழக்கு நோக்கிய  முழங்காலுக்கு கீழான பகுதிகள் பூமிக்கடியில் புதைந்த நிலையில் வேறெங்கும் காண முடியாத திருக்கோளத்தில் காட்சி தருகிறார், தாயார், அருள்மிகு ஸ்ரீ மலர்மங்கை நாச்சியார் என அழைக்கப்படுகிறாள்.

    தீர்த்தம், கமல தடாகம், கருவறை விமானம்,  வேத விமானம்,  கோயில் வளாகத்தில்  கணபதி, திருமகள், ஐயப்பனுக்கு தனி சன்னதிகள்  உள்ளன. ஆற்றங்கரையில் சிவபெருமான், பிரம்மதேவன், ஆகியோர் தனியாக கோவில் கொண்டுள்ளனர்.  இதன் காரணமாக் இத்தலம் மும்மூர்த்தி தலம் என போற்றப்படுகிறது. மகாபாரத காலத்தில்' பஞ்சபாண்டவர்களுடன் சேர்ந்து கிருஷ்ணர் இவ்விடத்தில் பித்ரு பரிகார பூஜை செய்துள்ளனர். ஆடி அமாவாசை தினத்தன்று பெருந்திரளானோர் இங்கு வந்து தங்கள் முன்னோருக்கு' தர்ப்பணம் செய்வது  வழக்கம், வைகுண்ட ஏகாதசி, திருவோணம் உற்சவங்களும், மாமாங்கத் திருவிழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டத்தில் இருக்கும்,   இக்கோவிலுக்கு திரூர் நகரில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. பாலக்காடு, குருவாயூர், திருச்சூர், எர்ணாகுளம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து திரூர் செல்வதற்கான பேருந்துகள் உண்டு.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “The victory tree attached to Murugan’s body”!

    முருகப்பெருமானின் அறுவடை வீடுகளில் இல்லாத சிறப்பொன்று திருச்செங்கோடு பகுதியில் மலை மீது உள்ள முருகன் கோவிலுக்கு உண்டு. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முருகப்பெருமானின் கையில் இருப்பது.  கல்லாலான வேலாகும். மற்ற கோவில்களில் முருகனின் விக்கிரகத்தில் தனியாக வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன' வேலை கருவறையில் உள்ள முருகனின் திருமேனியுடன் வைத்திருப்பார்கள்.

    இங்கு முருகப்பெருமானின் தலையில் உள்ள' கீரிடத்திற்கு மேல் 3 அங்குலம் நீட்டிக்கொண்டிருக்கும், சிறப்பினை காண முடியும், இது இறைவனின் உடலோடு சேர்ந்தே இருக்கும். எனவே இதை குறைக்கவோ, அல்லது தனியாக பிரித்து எடுக்கவோ  முடியாதப்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ணனுக்கு எப்படி உடலுடன் ஒட்டி கவச குண்டலம் இருந்ததோ அதேபோன்று முருகனுக்கு வெற்றிவேல்  இருப்பது  குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Devotees hope that the “Paatala Ponni” who is seen performing auspicious rituals in Chennai will fulfill their wishes!

    சென்னையில் பல்வேறு அம்மன் கோவில்கள் உள்ளன அவற்றில் மிகவும் பிரசித்தி பெற்றது. புரசைவாக்கம் அருள்மிகு ஸ்ரீ பாதாள பொன்னியம்மன் திருக்கோவிலாகும், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இங்கு அக்காலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கிணறு வெட்டுவதற்காக  பூமியில் மண் தோண்டிய போது  பத்தடியில் நீர் சுரக்கும் இவ்விடத்தில் 40 அடிக்கு மேல் தோண்டியும்  தண்ணீர் தென்படவில்லை,  இருந்த போதும் முயற்சியை கைவிடாத விவசாயிகள் தொடர்ந்து மண் வெட்டிய போது. கடப்பாரை, பாறை ஒன்றின் மீது உரசிய சப்தம்" கேட்டது.

    தொடர்ந்து மேலும் தோண்டிய போது அக்கினி தோன்றி, நிலத்தடி நீர் பீறிட்டு வெளியேறியது இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நற்புறமும் கடப்பாரையை வைத்து மண்ணில் புதைந்து கிடந்த பாறையை மேலே தோண்டி எடுத்தபோது. அது வெறும் பாறை அல்ல அம்மன் விக்ரகம் என தெரிந்தது, மேலும் அதன் கீழ் மற்றொரு ஐம்பொன் அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் மீது சுவாமி வந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் மிகப்பெரிய கோவில் இருந்ததாகவும் காலப்போக்கில் இயற்கையின் சீற்றத்தால் அக்கோவிலானது மண்ணில் புதைந்து விட்டது,  தான் பூமியில் பாதாளத்தில் வாசம் செய்து வந்ததாகவும், சக்தியின் வடிவமாக பொன்னி என்ற பெயரில் தற்போது தன்னை வெளிப்படுத்தி உள்ளதாகவும், எனவே இந்த இடத்திலேயே கோவில் எழுப்பி தன்னை வழிபட்டால் வேண்டிய வரங்களை அளித்து மக்களை காப்பதாகவும் அருள்வாக்கு சொன்னதை ஏற்று'மக்கள் கிணறு தோண்டிய பாதாளத்திற்கு மேல் தென்னங்கீற்றால் கூரை அமைத்து, அம்மனை வழிபட்டு வந்தனர்.

     அதன் காரணமாகவே இங்குள்ள அம்பிகை பாதாள பொன்னியம்மன் என அழைக்கப்படுகிறாள்.  அதன்படி கிணறு தோண்டிய விவசாயிகளின் வம்சாவழியினர் தற்போதும்," ஆடி திருவிழாவின் போது  இந்த பாதாள பொன்னியம்மனுக்கு தாய் வீட்டுச் சீர் வழங்குகின்றனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறி பக்தி பெருக பெருக அதன் வெளிப்பாடாக கோவில் விரிவடைந்து. விநாயகர் பெருமான், முருகன், நவகிரக மூர்த்திகள்,  தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவன், துர்க்கை அம்மன், அண்ணன்மார்களும் காட்சியளிக்கின்றனர. பிரம்மாண்டமாக  நூற்றுக்கால் மகா மண்டபம் அமைந்துள்ளது. அருள்மிகு அன்னை ஸ்ரீ பொன்னியம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அட்சயப்  பாத்திரமும் ஏந்தி  சாந்த வடிவில்' அள்ள" அள்ள" குறையாத  அட்சய பாத்திரம் போன்று தன்னை வேண்ட வேண்ட குறையாத அருளினை அள்ளி வழங்கும்  சொரூபிணியாக காட்சியளிக்கிறாள் ஆதி பராசக்தி. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன, ஏழு பௌர்ணமி, அல்லது ஏழு அமாவாசை தினத்தில் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி பாதாள பொன்னியம்மனை வழிபட்டால் உள்ளத்தில் புதைந்துள்ள வேதனைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Shri Bhadrakali Devi” who bestows grace with eight arms on the mountaintop!

    தெலுங்கானா மாநிலம், தட்கமல்லா கிராமம், வாரங்கல் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி தேவி திருக்கோவில் உள்ளது. ஏரிக்கரையின் ஓரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலானது, கி.பி 625 இல் சாளுக்கிய மன்னர்களின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்கு வழிபாட்டிற்குரிய தெய்வமான  அன்னை ஸ்ரீ பத்ரகாளி தேவி,  அமர்ந்த நிலையில் எட்டு கரங்களுடன்' ஒவ்வொரு கரத்திலும், ஒரு ஆயுதத்தை ஏந்தியவாறு' சுமார் 2.7 மீட்டர் உயரத்தில் காட்சி அளிக்கிறாள்.

    எதிரே சிம்ம வாகனமும், சிவபெருமான்,  ஹனுமான், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி மற்றும் நவகிரக சன்னதியும் உள்புறத்தில் அமைந்துள்ளது, வெளிப்புறத்தில் விக்னேஸ்வரர் அருள் பாவிக்கிறார். காகதீய மன்னர்களின் குலதெய்வமான பத்ரகாளி தேவி மிகவும், சக்தி வாய்ந்தவள் என நம்பப்படுகிறது.

    ஆண்டுதோறும், ஏப்ரல் அல்லது மே மாதம் பிரம்ம உற்சவம், ஆகஸ்ட்,- செப்டம்பர் மாதம், வசந்த நவராத்திரி, ஷாகம்பரி உற்சவம் மற்றும் சரண் நவராத்திரி போன்ற முக்கிய விழாக்களும் இங்கு நடைபெறுகிறது. வாரங்கல் பத்ரகாளி தேவியை, காலை 5:30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • The goddess, who appears as a full-term pregnant woman, “will give birth to a child, devotees have faith”!

    திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. சக்தியின் வடிவமான அங்காள பரமேஸ்வரி, நிறைமாத கர்ப்பிணி பெண் போன்று பெரிய புற்றின் தோற்றத்தை எடுத்ததாக நம்பப்படுகிறது. இங்கு முக்கிய வழிபாடு தெய்வமாக   பூங்காவனத்து அம்மன் என அழைக்கப்படுகிறாள். பிரசவ நிலையில் காணப்படும்.

    ஒரு பெண்ணை போன்று வாயைத் திறந்து சைன கோலத்தில் சுயம்பு புற்றின் வடிவத்தில் அம்பிகையின் தோற்றம் அமைந்துள்ளது. பொதுவாக அம்மன் ஆலயத்தில் சிம்மம் காணப்படும், ஆனால் இங்கு கருவறையில் லிங்க வடிவில் சிவபெருமான் அருள் பாவிப்பதால், சிங்கத்திற்கு பதிலாக நந்தி தேவர் காட்சியளிக்கிறார். இங்கு இது அபூர்வமாக கருதப்படுகிறது.

    விநாயகர், நடராஜன், மதுரை வீரன் , சுப்பிரமணியர் , தட்சிணாமூர்த்தி, தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆகியோரும் சன்னதி கொண்டுள்ளனர். தல விருச்சகம் வேப்பமரம், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு வடிவான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை பக்தியுடன் வழிபட்டால், பெண்களுக்கு திருமணம், குழந்தை பேரு, ஆண்களுக்கு வேலைவாய்ப்பு, சுயதொழில் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை,

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Kalyana Shastha Temple” will remove the ban on marriage!

    சபரிமலை சுவாமி ஐயப்பன் திருமணம் ஆகாதவர் என்பதால்' அவரை கன்னிசாமி என பக்தர்கள் அன்போடு, அழைக்கின்றனர் சுவாமி ஐயப்பன் பல்வேறு கோவில்களில், இருந்தாலும் அவை அனைத்திலும்  ஐயப்பன் அமர்ந்த நிலையில் தனியாகத்தான் காட்சியளிப்பார், ஆனால் தம்பதி சமேதராக சுவாமியை ஐயப்பன் காட்சியளிக்கும் திருக்கோவிலானது எங்கு உள்ளது தெரியுமா ? வாருங்கள் சரண கோஷத்துடன் அவனை தரிசிக்கலாம்.
    தென்காசி மாவட்டம், செங்கோட்டையிலிருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தமிழக- கேரள எல்லை பகுதியில்  ‘ஆரியங்காவு’ அருள்மிகு ஸ்ரீ சுவாமி ஐயப்பன் திருக்கோவில்  உள்ளது. இங்கு ஐயப்பன் திருமண கோலத்தில் காட்சி தருகிறார்.

    சபரிமலை போன்று இல்லாமல், மதம் கொண்ட யானையை விழுத்தி அதன் மீது  இருபுறமும் பூரண தேவி, புஷ்கலை தேவியர் சமேதராக காட்சியளிக்கும் அழகை காண கண் கோடி வேண்டும், திருமணத்தடை நீங்க இவரை வழிபடலாம்,  தமிழ் கடவுள் ஆன, முருகப்பெருமானுக்கு, ஆறு படை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை இருப்பது போன்று; சுவாமி ஐயப்பனுக்கு, ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, எருமேலி, பந்தளம்,  சபரிமலை என ஆறுபடை வீடுகள் உள்ளன. புஷ்கலை தேவியை சுவாமி ஐயப்பன் திருமணம் செய்யும் விழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது, ஆரியங்காவு ஐயப்ப சுவாமிக்கு ‘கல்யாண சாஸ்தா’ என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • The miraculous temple where Lord Shiva is depicted with a hand symbol, “Why was Indra worshipped?”

    அகத்தியமா முனிவரின் பிரம்மாதி தோஷமும், இந்திரனின் சாபமும் நீக்கி ஈசன் காட்சி அளித்ததும், சீனிவாச பெருமாள் சுயம்புவாக தோன்றிய சிவ கோவிலின் வரலாற்றை அறிவோம் வாருங்கள்.   ஒருமுறை கௌதம முனிவர் தனது மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்.   அப்போது அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது காமம் கொண்டு, அகலிகையை அடைய நினைத்து  இந்திரன் சூழ்ச்சி செய்து. அதிகாலையில் நதிக்கரைக்கு சென்று நீராடும் வழக்கமுடைய  கௌதம முனிவரை விடியும் முன்னரே"  சேவலாக மாறி இந்திரன் முனிவரை நதிக்கரைக்கு நீராட போகச் செய்தான்….

    பின் கௌதம முனிவரின் உருவெடுத்து  இந்திரன் அகலிகையுடன்  சேர்ந்து இன்புட்ரான். பொழுது விடியாததை உணர்ந்து நதிக்கரை நோக்கிச் சென்ற கௌதம முனிவர் மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தபோது,  இந்திரனின் இழுச் செயலை கண்டு கோபம் அடைந்து இந்திரனுக்கு கௌதம முனிவர் சாபம் விட்டார். அப்போது முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் சிவனை நோக்கி தவம் இருந்தான், அப்போது மணலால் சிவலிங்கம் செய்து அலங்கார அபிஷேக தீப ஆராதனை செய்து வழிபடுமாறு குரல் ஒன்று ஒலித்தது. அதன்படி மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு அபிஷேகம் செய்ய முற்பட்டபோது அபிஷேக நீர் பட்டு மணல் லிங்கத்தின் ஒரு பகுதி கரைந்து போனது. இதனால் பல காலம் அபிஷேகம் செய்ய முடியாமல் மன வேதனை அடைந்த இந்திரன் தான் உருவாக்கிய மணல் லிங்கத்தை ஆரத் தழுவி கண்ணீர் விட்டு, இனி எந்தப் பின்னையும், நுகர மாட்டேன் எனக் கதறி அழுதான். அப்போது அவனது கை  விரல்கள் லிங்கத்தின் மீது பதிந்து விட்டன.பின் பெண் ஆசையால் ஏற்பட்ட சாபத்தால் பலக்காலம், பூலோகத்தில் தவித்த இந்திரனுக்கு சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்து அருளினார்.

    அதன்படி கௌதம முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்க இந்திரன் வழிபட்ட, அருள்மிகு ஸ்ரீ வெள்வளை நாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ கைச்சினேஸ்வரர், திருக்கோயில் ஆனது, திருவாரூர் மாவட்டம் கச்சினம் கிராமத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவ ஆலயங்களில் இது 186 ஆவது தேவார ஆலயம் ஆகும். இந்திரன் மணலால் லிங்கம் செய்து வழிபட்ட பின்னர் அதனை கைகளால் எடுக்க முற்பட்டபோது, அவனது கையின் சின்னம் அதில் பதிந்து விட்டது எனவே இக்கோவிலானது  கைச்சினம் எனவும் அழைக்கப்படுகிறது, கிழக்கு நோக்கி மூன்று நிலை கோபுரத்துடன் காட்சியளிக்கும் இதன் உள்ளே நுழைந்தால், கொடி மரம், பலிபீடம், நந்தி தேவர் மண்டபம், உள்பிரகாரத்தில் விநாயகர், நவகிரகம், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர், சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகளும் உள்ளன. மற்றொரு சிறப்பாக கோவில் நிலத்தை தோண்டிய போது சுயம்பு வடிவாக தோன்றிய ஸ்ரீ சீனிவாச பெருமாளின்  திருமேனியானது இங்கு அருள் பாவிக்கிறது.
    திருவாரூர்-திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டியிலிருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Sagittarius lovers, is April favorable?.. unfavorable?.. Here is your monthly horoscope..!

    கிரகநிலை:

    தைரிய வீரிய  ஸ்தானத்தில்  புதன் , சனி – சுக ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் – பஞசம  ஸ்தானத்தில்  சந்திரன் –  ரண ருண ரோக ஸ்தானத்தில்  குரு – களத்திர  ஸ்தானத்தில்  செவ்வாய் –  தொழில்  ஸ்தானத்தில்  கேது  என வலம் வருகிறார்கள்

    கிரகமாற்றங்கள்:

    07-04-2025 அன்று செவ்வாய் பகவான் களத்திர  ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    10-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    14-04-2025 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    26-04-2025 அன்று  கேது பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    30-04-2025 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து பஞசம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

    பலன்:

    கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம்  உங்களது யோசனைகளை அலுவலகத்திலும், குடும்பத்திலும் மதிப்பார்கள். உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலையும் மாறப் போகிறது. தைரியம் பிரகாசிக்கும். எனவே எந்த முடிவையும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப் போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போனற விஷயங்களில் அவசரம் வேண்டாம். 

    தொழில் செய்பவர்களுக்கு நண்பர்கள் உதவிகள் செய்வர். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். சிலர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள்.
    உத்யோகஸ்தர்களுக்கு வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவிஉயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். 

    குடும்பத்தில் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. கவனம் தேவை. பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். 
    கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

    அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். பெண்கள் சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன. கவனம் தேவை. கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    மூலம்:

    இந்த மாதம் மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினருக்கு  உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். 

    பூராடம்:

    இந்த மாதம் வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியாமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாகநேரிடலாம் கவனம் தேவை. 

    பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வியாழக்கிழமைதோறும் வலம் வரவும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

    சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

    அதிர்ஷ்ட தினங்கள்:  1, 27, 28