Author: சக்தி ஆன்லைன் டீம்

  • If you see Pandurangan in Tennankor, “all suffering will be removed”!

    திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூரில் அருள்மிகு ஸ்ரீ  பாண்டுரங்கன் திருக்கோவில் உள்ளது. ஞானானந்தகிரி சுவாமிகள் என்பவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி, தென்னாங்கூரில் தனக்கு கோவில் கட்டும் படி உத்தரவிட்டதாகவும், அதன் காரணமாக பாண்டுரங்கன் இங்கு எழுந்தருளி அருள் புரிகிறார். பிரதான மண்டபம் முழுவதும் கண்ணனின் லீலைகளை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் காணப்படுகிறது, மேலும் மண்டப விமானத்தில் கிருஷ்ணரின் லீலைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

    இங்குள்ள கிருஷ்ணன்  மதன மோகனன் எனவும் அழைக்கப்படுகிறார். கருவறையில்' பாண்டுரங்கன் இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி செங்கல் மீது நின்ற திருக்கோளத்தில் கோலத்தில்' ரகுமாயி தேவியுடன் காட்சி அருள்கிறார். வலது பக்கம்  பாண்டுரங்கன் ரகுமாயி உற்சவமூர்த்திகள், இடப்புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளின் விக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள பாண்டுரங்கனின் திருமேனியை கண்டால் உள்ளத்தில் ஓங்கி நிற்கும் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Devotees believe that the prayers of the mighty Anjaneya, who graces the Kajagiri hill in Chennai, will be fulfilled!

    சென்னை கேளம்பாக்கம் – வண்டலூர் இடையே செல்லும் சாலையில் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள கஜகிரி என்ற குன்றின் மீது அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்.108 படிக்கட்டுகள் ஏறி மலை மீது சென்றவுடன். அங்கே  கருணையே வடிவாக அருள் புரியும் வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம், ஏழு சனிக்கிழமைகள் வீர ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சூடி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, மேலும் பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வீர ஆஞ்சநேயரை பக்தியுடன் வழிபட்டு கஜகிரி மலையை கிரிவலம் வந்தால் வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது திண்ணம். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why does the sage in the form of a crocodile “eat only offerings”?

    கேரள மாநிலம்,காசர்கோடு மாவட்டம், அனந்தபுரா கிராமத்தில்' ஏரியின் நடுவில் அருள்மிகு ஸ்ரீ ஆனந்த பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இவரை நாராயணன் என்றும் அழைக்கின்றனர். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் ஆதி மூலமாக கருதப்படும் இந்த ஏரி கோவில் குகை வழியாக தினமும் ஆனந்த பத்மநாத சுவாமி வந்து செல்வதாக நம்பப்படுகிறது, மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில்' வில்வ மங்கலா என்ற மாமுனிவர் திருமாலை நோக்கி கடும் தவம்  புரிந்துகொண்டு இருந்தபோது.

    அவரது தவத்தை ஏற்று ஒரு நாள் மகாவிஷ்ணு  சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றினார். அப்போது அந்த சிறுவன் தெய்வீக கடாட்சத்துடன் இருந்ததைக் கண்ட,  வில்வ மங்கலா முனிவர் ' சிறுவனை நோக்கி யார் ? நீ என கேட்டார். அதற்கு சிறுவன் தன்னை யாருமற்ற அனாதை எனக் கூறினான்.  இதனால் இறக்கப்பட்ட  முனிவர் அவனை தன்னோடு, இருக்குமாறு பணிந்தார், அப்போது  சிறுவன்  நிபந்தனை ஒன்றை விதித்தான். எப்போதாவது என் மீது நீங்கள் கோபம் கொண்டால், அடுத்த கணமே' நான் உங்களை விட்டு சென்று விடுவேன்’ எனக் கூற, அதற்கு முனிவரும் உடன்படுகிறார்.

    நாட்கள் சில கடந்த பின் முனிவருக்கு' தொண்டு புரிந்து வந்த அந்த சிறுவன். அதன் பின் தனது சேட்டைகளை காண்பிக்க தொடங்கினான். ஒரு நாள் அவனது குறும்பு எல்லை தாண்டி போனது, இதனால் ஆத்திரம் அடைந்த முனிவர் அவன் மீது கடும் கோபம் கொண்டார். அப்போது அச்சிறுவன் முன்பு தான் கூறியதுபோல, முனிவரிடம் இருந்து விலகிச் செல்வதாகவும்,  இனி தன்னைப் பார்க்க வேண்டும் என்றால், அனந்தன் காட்டில் மட்டுமே காண முடியும் என கூறிவிட்டு உடனே அந்த ஏரி பகுதியில் உள்ள குகைக்கோள் சென்று மறைந்து விடுகிறான். அப்போதுதான், முனிவருக்கு புரிந்தது அந்த சிறுவன் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணு என உடனே' 
    சிறுவன் மறைந்த தண்ணீர் நிரம்பிய குகையை பார்க்கிறார் முனிவர்.

    அதனுள்  சிறுவனைத் தேடி முதலையாக உருவெடுத்து அந்த குகை வழியே சென்றவர், ஒரு கடற்கரையை கண்டு   வெளியேறி, வனப்பகுதியை  அடைகிறார். அங்கு அவர் முன் தோன்றிய அந்த சிறுவன், சற்று நேரத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறினான். அந்த இலுப்பை மரத்தின் கிளைகள் விரிந்து அடுத்த வினாடி பாற்கடலில்  சர்ப்பத்தின் மேல் பள்ளிகொண்ட மகாவிஷ்ணுவின் அவதார திருமேனியை கண்டு ஆனந்தம் அலைந்ததாகவும்,  இந்த இடமே தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி திருக்கோவிலாக மாறிவிட்டது என்கிறது இதன் தல புராணம், மேலும்  வில்வ மங்கலா முனிவருக்கு திருமால் காட்சியை அளித்தமையால், சிறுவனை தேடி செல்வதற்காக அவர் எடுத்த எடுத்த முதலை வடிவத்திலேயே தற்போதும் ஏரி கோவிலில் அவர் வாசம் செய்து வருவதாகவும், பக்தர்களின் நம்பிக்கை அதனை மெய்ப்பிக்கும் வண்ணம், தற்போதும் ஏரி கோவில் குகையில் முதலை ஒன்று உள்ளதையும், அந்த முதலையானது மாமிசங்களை உண்ணாமல் அதாவது ஏரியில் உள்ள மீன்களைக் கூட சாப்பிடாமல், சைவத்தை கடைபிடித்து வழிபாடு முடிந்ததும் நாராயணனுக்கு நெய்வேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் கொண்டு சென்று' பாபியா (Babia or Babiya) என அழைத்ததும் ஒரு குழந்தையைப் போன்று தண்ணீரில் துள்ளி குதித்து நீந்தி வந்து கரையில் வைக்கப்படும் நெய் வேதனை பிரசாதத்தை உண்டு விட்டு செல்கிறது. இதுவரை ஏரியில் நீராடும் பக்தர்களுக்கு முதலையால் எந்தத் தீங்கும் ஏற்பட்டதில்லை, பல ஆண்டு காலமாக இந்த ஏரியில் ஒரு முதலை மட்டுமே வாழ்ந்து வருகிறது.

    ஒரு முதலை உயிர் நீத்தாள். அதன் உடலை அப்புறப்படுத்திய அடுத்த கணமே அதிசய தக்க வகையில் இன்னொரு முதலை அதன் இடத்தை நிரப்புகிறது. அந்த முதலையும் பாபியா (Babia or Babiya)  என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டான தற்போதும் இங்கு நடைபெற்று வரும் தெய்வீக நிகழ்வு ஞானிகளால் மட்டுமே உணரக்கூடியதாகும். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Why does the Shivalingam worshipped by Kunti Devi appear in 5 colors?

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம்,  திருநல்லூரில்' மகாபாரதத்துடன் தொடர்புடைய பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ   பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மாமன்னன் கர்ணனின் தாயார் குந்தி தேவி தனது பாவம் நீங்க இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு' அத்தகைய சிறப்புக்குரிய இத்திருக்கோவிலுக்கும்

    மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வோம் வாருங்கள்.- 

    மகாபாரதத்தில் பாண்டுவின் மனைவி, பஞ்சபாண்டவர்களின் தாய் என்ற போற்றுதலுக்குரியவர், ப்ரித்தா  இளம் வயதிலேயே' குந்தி அரசன் போஜாவுக்கு' மகளாக தத்து கொடுக்கப்பட்டால், இதன் காரணமாகவே  ப்ரித்தா என்ற இவரின் பெயர் குந்தி தேவி என மாறியது. குந்தி தேவி அரச குடும்ப வழக்கப்படி' துர்வாச முனிவருக்கு சேவை புரிவதற்காகவும்' குருகுல கல்வி பயிலவும். துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டால்'  அங்கு குரு பக்தியுடன் துருவாச முனிவருக்கு சில ஆண்டுகள் சேவை செய்தாள். அதன் பின் அரண்மனை திரும்பும் காலத்தில்' குந்தி தேவியின் குருகுல சேவையை பாராட்டும் விதமாக துர்வாச முனிவர், குந்தி தேவிக்கு' தெய்வீக கடாட்ச அம்சத்துடன் ஆன'  குழந்தை பெறும்' வரம் தரும் மந்திரத்தை அருளினார். அதன்படி' நீ யாரை மனதில் நினைத்து  இந்த மந்திரத்தை ஜெபிக்கிறாயோ; அவரது அம்சத்துடன் உனக்கு ஆண் குழந்தை பிறக்கும், என தெளிவு படுத்தினார். அதன்பின் அரண்மனை திரும்பிய குந்திதேவி ஒரு முறை தனது. தோழிகளுடன் நந்தவனத்தில்' விளையாடிக் கொண்டிருந்தபோது. ஆகாய மார்க்கமாக சூரிய தேவன் செல்வதை கண்டால். அப்போது அவளுக்கு துர்வாச முனிவர், தனக்களித்த அரிய வரம் நினைவுக்கு வந்தது அதனை சோதிக்க நினைத்து.

    சூரிய பகவானை மனதில் நினைத்தவாறு மந்திரத்தை ஜெபித்தால்' உடனே ஆண் குழந்தை ஒன்று உருவானது. அப்போது தான்' குந்தி தேவிக்கு அந்த மந்திரத்தின் மகிமை தெரிந்தது, திருமணம் ஆகுவதற்கு முன்பே இப்படி குழந்தை இருந்தால் உற்றார்' ஊராரின் அவ சொல்லுக்கு ஆளாக நேரிடும், என எண்ணி, மரப்பெட்டகத்தில் அந்த ஆண் குழந்தையை வைத்து, அதனுடன் தங்கச் சங்கிலி, தனது சேலை ஒன்றையும் வைத்து, தோழி ஒருத்தி மூலம் அந்த குழந்தையை கங்கை ஆற்றில் மிதக்க விட்டால், அதன்பின் அதிரதன் என்ற தேரோட்டி, காதில் குண்டலமும், மார்பில் கவசத்துடன் பிறந்த அந்த குழந்தையை மீட்டு தனது. சொந்த மகனாக வளர்த்து வந்தார், அந்த தெய்வமகன் தான்' மாமன்னன் கர்ணன். இதனிடையே பெற்ற மகனை அனாதையாக; கங்கை ஆற்றில் வீசி எறிந்த பாவத்திற்கு விமர்சனம் தேட வேண்டி' ஒரு நாள் இது குறித்து துர்வாச முனிவரிடம் பேசிய குந்தி தேவி, எந்த தாயும் செய்ய துணியாத பாவத்தை செய்த தனது பாவம் நீங்குவதற்கு பரிகாரம் உள்ளதா என கேட்டால்' அதற்கு துர்வாச முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடல்களில் நீராடி, சுயம்பு சிவலிங்கத்தை பூஜித்து உன் பாவத்தை நிவர்த்தி செய்துக்கொள் என  கூறியுள்ளார்.ஒரே நாளில் எப்படி ஏழு கடலில் நீராட முடியும் என்று கவலையுடன் இறைவனை வேண்டினாள். குந்தி தேவி அப்போது விண்ணிலிருந்து கேட்ட அசரீரியில் ' திருநல்லூர் தளத்தில் ஒரு புனித தீர்த்தக்கேணி இருக்கிறது. அதை ஏழு கடலாக நினைத்த நீராடு' என அந்த குரல் கேட்டுள்ளது அதன்படி' மாசி மகம் அன்று சாப விமோசனம் பெறுவதற்கு குந்தி தேவி அந்த புனித தீர்த்தக் கேணியில் நீராடி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம், கருவறையில் அருள் பாவிக்கும் இறைவனின் திருப்பெயர் அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர், உற்சவர், கல்யாண சுந்தரேஸ்வரர், தாயார் அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரி, கிரி சுந்தரி, 
    ஈசன் வன குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார்.

    இங்குள்ள இறைவனின் சிவலிங்கத் திருமேனி வேறு எங்கும் காண முடியாத அரியதொரு வடிவமாக. தினமும்   தாமிரம், இளஞ்சிவப்பு, தங்கம், மரகதப்பச்சை தவிர இனம் கண்டறிய முடியாத மேலும் ஒரு நிறம் என ' ஐந்து நிறமாக காட்சியளிப்பது உலகில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். இது ஐந்து பஞ்சபூதங்களையும், பஞ்சபாண்டவர்கள் ஐந்து பேரையும் குறிப்பதாக அமைந்துள்ளது இதன் பொருள் கர்ணனைத் தவிர்த்து இனி உனக்கு ஐந்து பிள்ளைகள் மட்டும்தான் என மூத்த மகன் கர்ணனின் நிலை குறித்து சூட்சகமாக இறைவன் குந்தி தேவிக்கு உணர்த்தியதாகவும் நம்பப்படுகிறது.
    காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம், 8.25 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு, பின் 10.49க்கு உருகிய தங்க நிறம், மாலை 3.36க்கு மரகதப்பச்சை நிறத்தில்  இந்த சிவலிங்க திருமேனி காட்சி தருகிறது. லிங்கம் மாறுகிறது. பிறகு மாலை 6.00 மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காணப்படும் இதை காண கண் கோடி வேண்டும். கோவிலில் ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது.

    இதில் குந்தி தேவி நீராடியதால்' அந்த தீர்த்தக்கேணியானது "சப்த சாகர தீர்த்தம்" என்று அழைக்கப்படுகிறது. தல விருட்சம், வில்வம், இதற்கு மற்றொரு சிறப்பும் உண்டு. ஒருமுறை கைலாயத்தில் ஆதிசேடனுக்கும் வாயு பகவானுக்கும் இருவருக்குள் யார் வலிமையானவர்  என்பதில் போட்டி ஏற்பட்டது. அப்போது ஆதிசேடன் கைலாய மலையைத் தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக்கொள்ள,  வாயு பகவான் தனது வலிமையை வெளிப்படுத்த  மலையை அசைக்க முயன்று பலத்த சூறாவளி புயல் காற்றை வீசினார். இந்த இருவருக்கிடையே ஏற்பட்ட போட்டியால்  தேவர்கள், முனிவர்கள், கந்தவர்கள் அஞ்சு நடுங்கினர். அப்போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஆதிசேடன் தனது பிடியை தளர்த்திக் கொண்டார்.

    இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த வாய்வு பகவான் கைலாய மலை சிகரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து தென்னாட்டில்' திருநல்லூரிலும், மற்றொன்றை அதன் அருகிலுள்ள ஆவூரிலும் வீசினார்.  நல்லூரில் விழுந்த அந்த மலைச்சிகரமே  அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் எழுந்தருளியுள்ள குன்றாகும். இதனால் தென் கயிலாயம் எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது, அருணகிரிநாதர் திருப்புகழில் இங்குள்ள முருகனை பாடியுள்ளார். முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி, தெய்வானை சமேதராய் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.மாசி மகம் அன்று குந்தி தேவி நீராடிய புனித தீர்த்தக்கேணியில் நீராடினால் ஏழு கடல்கள் நீரும் பெருக்கெடுத்து நம் பாவங்களை போக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, 

    பொன்.கோ. முத்து திருவள்ளூர்

  • Transgender women who worship Koothandavara as their ancestral deity ask, “What did Krishna do when he took the avatar of Mohini?”

    கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கூத்தாண்டவர் கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே போர் சூழல் ஏற்பட்டது. அந்தப் போரில் பஞ்சபாண்டவர்கள் வெற்றி பெற வேண்டுமென்றால், போருக்குச் செல்வதற்கு முன்பாக' யுத்த தேவதையின் ஆசியைப் பெற  களப்பலி கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம், அதன்படி   32 சாமுத்திரிகா லட்சணம் உடைய ஆண் மகன் வேண்டும். அதற்கு ஏற்ற வடிவத்துடன். அர்ச்சுனன், கிருஷ்ணன் மற்றும் நாகக்கன்னிக்கும், அர்ச்சுனனுக்கும், பிறந்த அரவான் ஆகியோர் மட்டுமே'இதில் கிருஷ்ணன், அர்ஜுனன் ஆகிய இருவரும் பாரத போருக்கு முக்கியமானவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும். இழக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டபோது, அரவானை பலியிட முடிவு செய்து.

    கிருஷ்ணனும், அர்ச்சுனனும் இது குறித்து அரவானிடம் தெளிவாக பேசி பலியிட சம்மதம் பெற்றனர். அப்போது அரவான்  ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார். அதாவது "என் இறுதி ஆசையாக திருமண வாழ்க்கையை அடைய வேண்டும்.  அதன் பிறகு பலிக்களம் செல்வேன்" என கூறினார். ஆனால்' பொழுது விடிந்தால் பலியாகப்போகும் ஒருவனை மணக்க எந்த பெண்தான் சம்மதிப்பாள் அரவானை கணவனாக ஏற்க, பெண்கள் எவரும் முன்வரவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாண்டவர்களின் நலன் கருதி கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்து அரவானை மணந்துகொண்டார். அன்று இரவு தாம்பத்ய உறவு முடிந்தபின்.  மறுநாள், அரவான் களப்பலி கொடுக்கப்பட்டார். அதன் பிறகு அரவானை கணவனாக ஏற்றுக்கொண்ட மோகினி, விதவைக் கோலம் பூண்டாள். அதன் பிறகு பாரத போரில் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். என்பது தான்   அரவான் எனப்படும் கூத்தாண்டவரின் வாழ்க்கை வரலாறு' இதன் காரணமாகவே தங்களை மோகினி ஆக' எண்ணிக்கொண்டு. திருநங்கைகள், கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் போது.

    திருநங்கைகளுக்கு கோவில் பூசாரி கையால் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்து முடிந்தபின். அன்று  இரவு திருநங்கைகள் அனைவரும், தங்களின் கணவரை நினைத்து ஆடி, பாடி மகிழ்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவர், அதன் பிறகு சித்திரை தேரோட்டம் தொடங்கும். தேர் வீதியுலா, தெய்வநாயக செட்டியார் பந்தலடிக்கு வந்தவுடன், திருநங்கைகள் அனைவரும் தங்களது கணவரை நினைத்து ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுது தாலிக் கயிறை அறுத்து விட்டு அங்குள்ள நீர்நிலைகளில் குளித்து முடிந்தபின் வெள்ளை நிற சேலை அணிந்து கொண்டு துக்கத்துடன்  தங்களின் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். தர்மம் தலைக்க பாரதப்போரில் தனது உயிரை பலிக்களம் கொடுத்த' அரவானை கணவனாகவும், கிருஷ்ணரே, மோகினி அவதாரம் எடுத்ததால், தங்களை மோகினியாக என்னும் திருநங்கைகள் கூத்தாண்டவரை
     தங்களின் குல தெய்வமாக வணங்குகின்றனர். 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • A rare Assam temple where “only women worship” for those three days!

    அசாம் மாநிலம்'கவுஹாத்தியிலிருந்து,10 கி.மீ. தொலைவில்' நீலாச்சல் குன்று பகுதியில்' காமாக்யா தேவி கோவிலில் அமைந்துள்ளது. அசாமில் மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலானது பெண்கள் மட்டுமே வழிபடும் சிறப்புக்குரிய தாகும். பெண் தெய்வங்கள் அருள் பாவிக்கும் மற்ற ஆலயங்களில் வழிபாட்டுக்குரிய பெண் தெய்வங்களின் விக்கிரகங்கள் இருப்பதுதான் வழக்கம், ஆனால்" இங்கு முக்கிய வழிபாட்டு தெய்வமாக கருவறையில், பெண் உறுப்பு தான்.

    தெய்வமாக காட்சி அளிக்கிறது, வழக்கமாக மாதவிடாய் காலத்தில்' பெண்கள், 'அந்த மூன்று' நாட்களில், கோவிலுக்கு செல்லக்கூடாது  என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், மாதவிடாய்  நாட்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும், இந்த காமாக்யா தேவி 'அபூர்வ தெய்வமாக போற்றப்படுகிறது.காமாக்யா தேவி கோவிலில், ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை' பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் மாதம் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெண் பக்தர்கள் வருகின்றனர்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Women standing outside the shrine of Tiruppur Murugan, which only allows men to have darshan, worship him!

    திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வீரக்குமார் திருக்கோவில் உள்ளது. 600 ஆண்டுகளுக்கு முன்பு முள்புதரில் மண்ணுக்குள் சுயம்புவாக தோன்றிய முருகனை சுற்றி இருந்த முள் புதர்களை அகற்றி அப்புறப்படுத்தி விட்டு, அப்பகுதி மக்கள் முருகனை வழிபட்டு வந்த போதிலும்.16 ஆம், நூற்றாண்டில்' தான் அங்கு நிலையான கோவில் கட்டப்பட்டது.

    இங்கு வழிபாடு தொடங்கிய நாள் முதலே' வீரக்குமார் சுவாமி சன்னதிக்குள் தரிசனத்திற்காக ' ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக பெண் பக்தர்கள் சன்னதி முன் மண்டபத்துக்குள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு. அங்கிருந்தபடியே  முருகனை தரிசனம் செய்து, பிரசாதங்களை வாங்கிச் செல்லும்  வழக்கம் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Shri Sangu Narayan” who is blessed in Nepal!

    நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் தவளகிரி மலைப்பகுதியில் உள்ள சங்கு கிராமத்தில்' அருள்மிகு ஸ்ரீ சங்கு நாராயணன் திருக்கோவில் உள்ளது, நேபாள பௌத்த கட்டிடக் கலை அம்சத்துடன் காணப்படும். இந்தக் கோவில் ஆனது'  கி. மு 325 ஆம், நூற்றாண்டில் லிச்சாவி வம்ச மன்னர் ஹரி தத்தா வர்மனின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன்பின் கி.பி 496 முதல் 524 காலகட்டத்தில் மன்னர் மனதேவனின் ஆட்சி காலத்தில், இங்குள்ள தரை தளத்தில் அமைந்துள்ள கல் தூண்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது.

    அதில் அவனது படையெடுப்புகள் குறித்து தெளிவாக எழுதப்பட்டுள்ளது. பிறகு கி.பி 1585  முதல் கி.பி 1614  வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்ல அரசனின் பட்டத்து அரசியான' கங்காராணி என்பவரால் இக்கோவிலானது மீண்டும் புனரமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1708 இல்' மன்னன் பாஸ்கர மல்லர் ' கலைநயம் மிக்க இக்கோவிலின். கதவுகள், சன்னல்கள், மேற்கூரை ஆகியவற்றை தங்கம் முலாம் பூசப்பட்ட, செப்புத்தகடுகளால் அலங்கரித்தான்.

    இரண்டு அடுக்குகள் கொண்ட கருங்கல்லால் ஆன' இந்த கோவில் திருமாலுக்கு உரிய சிற்பங்களுடன் காணப்படுகிறது. இதன் பிரதான வெளியில்' சிவபெருமான், கிருஷ்ணர், சின்னமஸ்தா, ஆகியோரது சன்னதிகளும் அமைந்துள்ளது. இக்கோயிலின் நான்கு வாயில்களிலும் சிங்கங்கள், சரபங்கள், யாணைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவல் புரிவதை கடமையாக கொண்டு காட்சி தருகின்றன. மேலும் மகாவிஷ்ணுவின்  பத்து அவதாரங்களைக் குறிக்கும் அழகிய சிற்பங்கள் கோவில் கூரையை தாங்கி நிற்கிறது.பௌத்தக் கட்டிடக் கலையா ? கலை அல்லது இந்து கட்டிடக் கலையா ? என வியக்கும் வகையில் உள்ளது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Praise the Lord Shiva of the South” to those who say “Praise the Lord Shiva in Germany”!

     ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகரில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.  ஜெர்மனியில் அமைந்துள்ள பல்வேறு கோவில்களில் இது மிகவும் பிரசித்தி பெற்ற சைவத்தலமாகும்.  இந்து சமயத்தின் ருத்ரம் மந்திரம், இசை, சங்கீதம், நாட்டியம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கான வகுப்புகள் மட்டும் இன்றி' சனாதன தர்மத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கும் திட்டங்களையும் வழங்குகிறது.

    மியூனிச்சில் மரபுகளைப் பாதுகாப்பது. சமூக தொடர்புகளை மேம்படுத்துவது கலாச்சார கல்வியுடன் ஆன்மீக சிந்தனைகளை இணைப்பது அதன் சிறப்பு, ஜெர்மனியின் பன்முகத்தன்மை, பாரம்பரியம் ஆகியவற்றை வரலாற்று பூர்வமாக ஆராய விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு' இது ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. ஜெர்மனியின் அரிய பொக்கிஷமாக இது போற்றப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Why did Kashi Vishwanath appear to the morgue guard Arichandran?”

    உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோவிலானது உலகப் பிரசித்தி பெற்றதாகும், இங்கு சிவபெருமான் ஸ்ரீ காசி விஸ்வநாதர் என்ற திருப்பெயரில் எழுந்து அருளியுள்ளார். இந்துக்களின் புனித தளமாக விளங்கும் இவ்விடத்தில் புனித திருத்தமான கங்கை நதி பாய்ந்து ஓடுகிறது. பாவங்களைப் போக்கும் இடமாகவும் முக்தி அளிக்கும் புண்ணிய பூமி ஆகவும் விளங்கும், காசிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, (பனாரஸ்) என அழைக்கப்படும், வாரணாசி நகரில் இந்துவாக பிறந்த ஒருவர் மாண்டு விட்டால்' சடலத்தை காசியில் கங்கைக் கரையில் அரிச்சந்திர மயானத்தில் எரித்தால்' அவர்களின் ஆன்மா சொர்க்க லோகம் செல்லும், என்பது நம்பிக்கை, இதனால் இறந்த செல்வந்தர்களின் உடலை அவர்களது.

    உறவினர்கள் காசிக்கு எடுத்துச் சென்று அரிச்சந்திர மயானத்தில் எரித்து அஸ்தியை கங்கை நதியில் கரைக்கும் வழக்கம் காசி தோன்றிய காலத்தில் இருந்து உள்ளது. உள்ளூரிலேயே மயானம் இருக்கும்போது, காசி நகர மயானத்திற்கு அப்படி என்ன  சிறப்பு ? கங்கைக்கரை மயானத்தை ஒரு காலத்தில் அரிச்சந்திரன் காவல் காத்து வந்தான். அப்போது வாரணாசி நகர் வரும் யோகிகள், அகோரிகள், ஞானியார், சிவா அடியார்களுக்கு அரிச்சந்திரன் தொண்டு புரிந்ததாகவும், அவனது இறைத் தொண்டுக்கு மனமிரங்கிய காசி விஸ்வநாதர். நேரடியாக அரிச்சந்திரனுக்கு காட்சியளித்து என் மேல் உள்ள பக்தியின் காரணமாக அடியார்களுக்கு நீர் புரிந்த தொண்டின் பலனாக இனிவரும் காலங்களில் மயான காவல் தெய்வமாக வணங்கப்படுவாய் என அருள் வழங்கியதாகவும், அதன் பலனாக தற்போதும். உலகம் முழுவதும் இந்து மக்கள் பயன்பாட்டில் உள்ள.

    மயானங்களில் அரிச்சந்திரன் காவல் காக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது, இதன் காரணமாக இன்று வரை மயானங்களில்  அரிச்சந்திரன் கோவில்கள் அமைக்கப்பட்டு, அரிச்சந்திரனுக்கு அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டி ஆசி பெற்று' அதன் பின் அவரது அனுமதி அனுமதியோடு தான் ' மயானத்துக்குள் சென்று'  இறந்தவரின் உடலுக்கு இறுதி ஈமச்சடங்குகள் செய்யும் வழக்கம் உள்ளது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்