If you see Pandurangan in Tennankor, “all suffering will be removed”!

திருவண்ணாமலை மாவட்டம், தென்னாங்கூரில் அருள்மிகு ஸ்ரீ  பாண்டுரங்கன் திருக்கோவில் உள்ளது. ஞானானந்தகிரி சுவாமிகள் என்பவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி, தென்னாங்கூரில் தனக்கு கோவில் கட்டும் படி உத்தரவிட்டதாகவும், அதன் காரணமாக பாண்டுரங்கன் இங்கு எழுந்தருளி அருள் புரிகிறார். பிரதான மண்டபம் முழுவதும் கண்ணனின் லீலைகளை சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் காணப்படுகிறது, மேலும் மண்டப விமானத்தில் கிருஷ்ணரின் லீலைகள் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

இங்குள்ள கிருஷ்ணன்  மதன மோகனன் எனவும் அழைக்கப்படுகிறார். கருவறையில்' பாண்டுரங்கன் இடுப்பில் இரண்டு கைகளை வைத்தபடி செங்கல் மீது நின்ற திருக்கோளத்தில் கோலத்தில்' ரகுமாயி தேவியுடன் காட்சி அருள்கிறார். வலது பக்கம்  பாண்டுரங்கன் ரகுமாயி உற்சவமூர்த்திகள், இடப்புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளின் விக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள பாண்டுரங்கனின் திருமேனியை கண்டால் உள்ளத்தில் ஓங்கி நிற்கும் துன்பமெல்லாம் நீங்கிவிடும் என்பது திண்ணம். 

பொன்.கோ.முத்து திருவள்ளூர்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *