Author: சக்தி ஆன்லைன் டீம்

  • Tirupati of Tamil Nadu: The seven mountains where Lord Shiva bestows his blessings!

    தென்னகப் பகுதியில் ஆன்மீக பயணம் மேற்கொண்ட அகத்திய மாமுனிவர், திருமால் வாசம் செய்யும் திருமலையின் பெருமை குறித்து பிறர் கூற அறிந்து, இதுபோன்று சிவபெருமானுக்கு ஏழுமலை இல்லையே என ஏங்கினாராம். இதனை அறிந்த அகத்திய முனிவரின் உள் அகத்தில் குடி கொண்ட சிவபெருமான், "தனது தொண்டரின் விருப்பத்தை நிறைவேற்றும்படியாக" ஏழு குன்றுகள் அமைந்த வெள்ளையங்கிரி மலை மீது எழுந்தருளி, தன்னை அங்கு வந்து தரிசிக்குமாறு அகத்திய மாமுனிவருக்கு ஞானத்தின் மூலமாக உணர்த்தினாராம்.

    அதன்படி, அகத்திய மாமுனிவர் வெள்ளையங்கிரி மலை சென்று, அங்கு சுயம்புவாக அவதரித்த சிவ லிங்கத்தை வழிபட்டு தவத்தில் ஈடுபட்டார். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய மாமுனிவர் தவம் புரிவதை கண்ட அந்த ஏழு குன்றுகளும் சிவனை நோக்கி தானும் தவம் புரிந்தன. அவைகளின் பக்தியை மெச்சி சிவபெருமான் தானும் தவக்கோலம் பூண்டதாக வரலாறு.

    அதன்படி, பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் இதன் பெருமை அறிந்து இப்பகுதிக்கு வந்த போது, வேடன் ஒருவன் தனது நிலப்பரப்பில் அனுமதி இன்றி நுழைந்த அர்ஜுனனுடன் போர் புரிந்ததாகவும், பின் அந்த வேடன் தன் வேடத்தை கலைத்து சிவபெருமானாக காட்சியளித்த போது, அவரை பக்தி பெருக்குடன் வணங்கிய அர்ஜுனனுக்கு சிவபெருமான் தனது பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் பாவித்தார்.

    இங்கிருக்கும் ஏழு குன்றுகளும், நம் உடலில் உள்ள “ஏழு யோக சக்கரங்களை” குறிப்பதாக சாஸ்திர வல்லுநர்கள் கூறுகின்றனர். இமயத்தில் உள்ள கைலாயத்திற்கு யாத்திரை செல்ல இயலாதவர்கள் "தென் கைலாயம்" என ஆன்மீக அன்பர்களால் அழைக்கப்படும். வெள்ளையங்கிரி யாத்திரை சென்று அங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்தால், ஏழு பிறவியிலும் கைலாய யாத்திரை சென்று வந்த பலன் கிட்டும் என்பது திண்ணம்.

    கோவை மாவட்டம் பூண்டி கிரிமலையானது 5 1/2 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏழு குன்றுகள் சிவபெருமான் அருள் பாவிக்கும் தென் திருப்பதி ஆகும். கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமா 36 கி.மீட்டதூரத்தில் மேற்குத் தொடச்சி மலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பல்வேறு ரிஷிகளும், மாமுனிகளும், சித்தர்களும், ஞானிகளும் ஈசனை வேண்டி தவம் புரிந்து பிறப்பில்லை நிலை அடைந்த பெருமைக்குரிய இடமாகும்.

    – பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Special worship of Sri Ranganatha only after worship of the devotees is completed?

    ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?

    வைணவ சான்றோர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி, தாயார் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜர் தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ச்சி பெற்றார். 16 வயது தாண்டிய போது தந்தையை இழந்த இவர் 17 வயதில் தஞ்சம்மாள் என்பவரை மனம் முடித்தார். பின்னர் யாதவப்பிரகாசர் என்பவரிடம் வேத கல்வியை பயின்றார்.

    ஆனால் ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராமானுஜரை கொன்று விடுவதற்கு அவருடைய குரு திட்டமிட்டார். அதன் பின், ராமானுஜர் திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து வேத பாடங்களை கற்க தொடங்கினார். அங்கு பல அவமானங்களை சந்தித்த பின், தனது குருவான திருக்கச்சி நம்பிகள் இடம் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர்.

    இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று குருநாதர் திருக்கச்சி நம்பிகள் கூறிய போதும், அதனை பொறுப்பெடுத்தாமல் உலகத்திற்கு எடுத்துரைத்தார். “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமாலின் மந்திரத்தை எடுத்துரைத்தார். தன் குருவான திருக்கச்சி நம்பிகளின் வார்த்தையை மீறி, உலகிற்கு எடுத்துரைத்தார். இதனால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், ராமானுஜர் தன் கடைசி காலம் வரை எம்பெருமானுக்கு தொண்டுகள் புரிந்து, 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். மறு தினமே உடல் மேலெழுந்து வந்தது, இது அனைவரையும் வியக்க வைத்தது.

    தியானம் செய்தபடி அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தைலம் தடவப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் இவருக்கு வழிபாடு நடந்த பின்னரே, ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்
  • The temple is one, the Trinity is three, and the Brahmotsavam witnessed by the Thirukakshi Nambis is three!

    வெங்கடேச பெருமாள் மீது பெரும் பக்தி கொண்ட ராமானுஜ சுவாமிகள் குருவான திருக்கச்சி நம்பிகள், பெருமாளிடம் தன்னால் இயன்ற ஏதேனும் கைங்கரியம் செய்ய எண்ணினார். அதன்படி கையில் விசிறியுடன் திருவரங்கம் சென்று விசிறி சேவை புரிய அனுமதித்தருமாறு பெருமாளிடம் வேண்டியபோது, அவர் காவிரி கரையில் இருப்பதால் எப்போதும் குளிர்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்து சேவையை ஏற்க மறுத்தார்.

    பின்பு திருக்கச்சி நம்பிகள், அங்கிருந்து நேராக திருமலை சென்று வெங்கடேச பெருமாளிடம் தான் வந்த நோக்கம் குறித்து தெரிவித்த போது, ஏற்கனவே மழையின் மீது இருப்பதால் அதிக அளவில் குளிர் காற்று வீசும் காரணத்தால் தன்னை சுற்றி குளிர்ச்சியான சூழலில் நிலவுவதை எடுத்துரைத்து சேவையை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் காஞ்சி மாநகரை வந்த திருக்கச்சி நம்பிகள் அங்கு உக்கிரமாக இருந்த ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு தனது விசிறி சேவையை புரிந்து பூரிப்படைந்தார்.

    பூவிருந்தவல்லி வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள், நாள்தோறும் காஞ்சி மாநகரில் சென்று தனது கைங்கரியத்தை செய்து வந்த நிலையில், நாளடைவில் வயது முதிர்வு அடைந்தும், விடாமல் பெருமாளுக்கு கைங்கரியம் செய்வதை தனது வாழ்நாள் கடமையாக எண்ணி சேவையை தொடர்ந்தார். அவரது பக்தியில் உருகிய வரதராஜ பெருமாள், பூவிருந்தவல்லி தோன்றி, திருக்கச்சி நம்பிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று காட்சியளித்து அவரை ஆட்கொண்டார். அவர் காட்சி அளித்த அந்த இடத்தில்தான் ஆலயம் எழிலோடு காட்சி அளிக்கிறது.

    இங்கு திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் சேவை புரிகிறார். மூலவரான ஸ்ரீ வரதராஜப் பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் சிரத்தில் சூரியனுடன் இருப்பதால் இது சூரிய தலமாகவும் போற்றப்படுகிறது. மேலும், திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள், திருவரங்கம் ஸ்ரீ அரங்கநாதர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆகியோரும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி இருப்பதும், மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவம் நடைபெறுவது தனி சிறப்பு.

    அப்போது ஒரே பரம்பொருளான எம் பெருமான் மூவராக கருட வாகனத்தில் திருக்கச்சி நம்பிக்கு காட்சி தரும் அழகை காண கண் கோடி போராது. தாயார், மல்லிகை மலர் தோட்டத்தில் அவதரித்ததால் அருள்மிகு ஸ்ரீ 'புஷ்பவல்லி' என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பூவில் இருந்து வந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்று அழைக்கப்பட்டு தற்போது, அதுவே மருவி 'திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி' என அழைக்கப்படுகிறது.

    • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்
  • Lord Shiva sleeping on Goddess Parvati’s lap

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆதிசேஷன் வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அதனை தான் அருந்திய கதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், விஷத்தை உண்ட சோர்வில் சிவன் பார்வதியின் மடியில் ஒரு மழலையே போல் படுத்து உறங்கிய இடம் எங்கே உள்ளது தெரியுமா? வாருங்கள் அங்கு செல்லலாம்.

    தேவலோகத்தில் ஒருமுறை இந்திரன் மகாவிஷ்ணுவின் உதவியோடு அமிர்தம் வேண்டி பாற்கடலை கடையை முற்பட்டான். தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மற்றொரு புறமாக நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். போட்டி போட்டு கொண்டு இரு தரப்பினரும் வாசுகி பாம்பை பிடித்து இழுத்ததால், வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்து தங்களைக் காப்பாற்றுமாறு அனைவரும் கதறினர். சிவபெருமானால் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை சேகரித்து கொண்டுவர அனுப்பினார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய விஷம் அனைத்தையும் பந்து போல் உருட்டி, சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். சிவன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் செல்வதை தடுக்க, சிவனின் கழுத்தை பார்வதி தேவி இறுக்கமாக கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். இதனால் விஷம் சிவனின் தொண்டையிலே நின்று விட்டது. இதன் காரணமாகத்தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று போற்றுகிறோம்.

    விஷத்தை அருந்திய பின்னர், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் போகும். வழியில் அவருக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் அவர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க உறங்கிய அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ளது அருள்மிகு ஸ்ரீ சர்வ மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பள்ளிகொண்ட ஈஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள மூர்த்திகள் பலர் குடும்ப சமயத்தைத் தரராக காட்சியளிப்பது தனி சிறப்பு. வைணவத் தலங்களில் ஆதிசேஷன் மீது அரங்கநாதன் சைனகுளத்தில் காட்சி அளிப்பது போன்று, சிவபெருமான் இங்கு மங்களாம்பிகையின் மடியில் ஒரு மழலையை போல் பள்ளிகொண்ட ஈஸ்வரராக சயன கோலத்தில் காட்சியளிக்கும் சிறப்புடைய ஒரே கோவில். உமையவள் ‘சர்வமங்களா அம்பிகை’ என்ற திருப்பெயருடன் அருள் புரிய.

    பிரகார வளாகத்தில் நந்தீஸ்வரர், பிருகு முனிவர், பிரம்மதேவன், ஸ்ரீ மகாவிஷ்ணு, மார்க்கண்டேயன், நாரத மாமுனி, சந்திரன், சூரியன், குபேரன், அகத்திய மாமுனிவர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களோடு விநாயகப் பெருமான், வள்ளி-தெய்வயானை சகோதரராக முருகப்பெருமான் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

    • பொன்.கோ.முத்து திருவள்ளூர்
  • Who is the father of Budha who imparts knowledge to the living beings of the world?

    நவக்கிரகங்களில் சூரியனுக்கு அடுத்த இடத்தில் உள்ள முதல் கிரகம் புதன் ஆகும். கிரகங்களில் இளையவராக இருப்பதால், சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுழலக் கூடிய ஆற்றல்மிக்க கிரகமாக புதன் இருக்கிறான். சூரியனுக்கு அருகில் இருக்கும் கிரகம் புதன் என்பதால், புதனுக்கு சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும். இதன் காரணமாக புதன், புத்தி, அறிவு, ஞானம் உள்ளவராக இருப்பதாக ஜோதிட வல்லுநர்கள் கணிக்கின்றனர். இத்தகைய ஆற்றல் மிக்க புதன் யார்? அவனது வரலாறு என்ன, வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

    குருபகவானின் மனைவியான தாரை, ஒரு சமயம் சந்திரனுடைய இல்லத்திற்கு செல்கிறாள். அப்பொழுது, சந்திரனின் அழகை கண்டு மயங்கிய தாரை தன் கணவன் குரு பகவானை மறந்து சிலகாலம் சந்திரன் இருப்பிடத்தில் வசிக்கிறாள். அப்போது சிவபெருமானை நோக்கி குரு பகவான் தவத்தில் இருந்ததால், மனைவி தாரையைப் பற்றி அவர் நினைக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரன், தாரையை தன் மனைவியாகவே நினைத்து சிலகாலம் அவளோடு இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டான். பின் தவம் முடிந்து குரு பகவான் தாரையைத் தேடினார். இதனால் தாரை, சந்திரனிடமிருந்து விடை பெற்று மீண்டும் குருவிடம் வந்து சரண் அடைந்தாள். அவ்வேளையில் தாரை கர்ப்பவதியாக இருந்தாள். குருவோடு சிலகாலம் வாழ்ந்ததும், தாரா ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு புதன் என்று பெயரிட்டாள். திருமண வாழ்க்கைக்கும் தாம்பத்திய நிலைக்கும் மாறாக பிறந்த அந்த குழந்தை சீக்கிரமே பிறந்து விட்டது. இந்த குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்று குரு பகவானுக்கே சந்தேகம் உண்டானது. அவரது சந்தேகம் நியாயமானது என்பதை அறிந்த பிரம்ம தேவன் புதனுடைய உண்மையான தந்தை சந்திரன் தான் என்பதை குருவுக்கு எடுத்துரைத்தார் என்பது புராண கதைகளில் ஒன்று.

    பிரம்ம தேவன் புதனை அழைத்து "சூரியனுக்கு அருகில் அமர்க" என கட்டளையிட்டதால், புதனும் அதனை ஏற்று சூரியனுக்கு அருகே வந்து அமர்ந்தான். சூரியனைப் போலவே சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து ஒன்பது கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரத்தினை பெற்றான். புதன் தன் கைப்பட பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஒன்று தற்போதும் காசியில் உள்ளது. புதன் மீண்டும் கடும் தவம் மேற்கொண்டு, ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிபதியாக தேர்வு செய்யப்பட்டான் என்கிறது வேதம். உலக உயிர்களுக்கு அறிவை அளிப்பதால், புத்தி போதகன் என்றும், அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் என்ற பெயர்களும் புதனுக்கு உள்ளது. புதனுக்கு வலது புறம் ஸ்ரீ மகா விஷ்ணு இருப்பதால், அவரை பிரார்த்தனை செய்தாலும் அது புதனை சென்று அடையும்.

    • பொன்.கோ.முத்து திருவள்ளூர்
  • Whom do I consider a devotee? What did Lord Sri Krishna say?

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னது" என் பக்தசீலர்களாக நான் கருதுவது யாரை என்றால், யார் அதி உத்தம நம்பிக்கையும் பற்றுறுதியான மனஒருமையும் கொண்டு சலனமற்ற பக்தி சிரத்தையுடன் உபாசிக்கிறார்களோ அவர்களையே.

    இதன் பொருள்:

    யார் இறைமையை அறிவதில் முழுமனத்துடனான பேரார்வம் கொண்டு, ஆன்மீகப் பயிற்சிகளால் தன் சுய ஊட்ட உணர்வை சரணடைவித்து இறையுணர்வை அனுபவிக்கிறார்களோ, அவர்களே இறைமையின் உண்மை உபாசகர்களாக அங்கீகரிக்கப் படுகிறார்கள்.

    -பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • On which days you can abhishek to which deities!

    திங்கட்கிழமை சிவபெருமானுக்கு, செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கும் முருகனுக்கும், புதன்கிழமை பெருமாளுக்கும், வியாழக்கிழமை தெட்சிணாமூர்த்திக்கும், வெள்ளிக்கிழமை அம்பாளுக்கும், சனிக்கிழமை கண்ணனுக்கும் அபிஷேகம் செய்யலாம். வைணவ கோவில்களில் அனுமானுக்கு நடத்தப்படும் பால் அபிஷேகம் சிறப்பானது ஆகும், அதனை விட சிறப்புக்குரியது இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காமல் இறைவனை பூஜிப்பது. 

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Did Squirrel help Ram to build Setu Sea Canal?

    மகாவிஷ்ணு இராவணனை அழிக்க எடுத்த அவதாரம்தான் இராம அவதாரம். கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்காக, கடற்கரைக்கு வந்த இராமரும் வானர சேனையும்  கடலை எப்படி கடப்பது என்று குழப்பமுற்றனர். அப்போது கடல் மேல் பாலம் கட்டுவதென்று முடிவெடுத்து.  அதற்கான செயலில் ஈடுபட தொடங்கினர்.

    கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமருக்கு உதவ முன் வந்தன, அவைகள் தன்னால் முடிந்த கற்களை தூக்கிவந்து பாலத்தின் மீது போட்டது.சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய எண்ணி கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது.

    என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ,  கம்பராமாயணத்திலோ,  துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் பணியின் போது அணில் உதவியதாக எந்த தகவலும் இல்லை இது வெறும் கற்பனை கதையே இந்த கதையானது இந்திய மொழிகள் அனைத்திலும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • Who is the judge in heaven who calculates the sins committed by the monitors?

    ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் இன்றி சர்வாதிகாரிகளின் ஆலமியின் கீழ் உள்ள மேலை நாடுகளில் கூட, ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. வழக்கை கொடுத்தவருக்கும் எதிர் மனுதாரருக்கும் இடையே அவரவர் தரப்பு வழக்கறிஞர்களின் மாதத் திறமையின் அடிப்படையில் பாதிக்கப்படும் நபருக்கு நீதி வழங்குவதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடுநிலையோடு நீதி வழங்க நீதிபதி ஒருவர் இருப்பது போன்று" பூலோகத்தில் மனிதர்களாகிய நாம் செய்யும் பாவ புண்ணியங்களை கணக்கிட்டு, அதற்கேற்ப நீதி வழங்குவதற்காக மேல் லோகத்தில் நீதிபதி ஒருவர் உள்ளார் அவர் யார் ? வாருங்கள் அந்த நீதிமானை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    அஷ்ட திசை பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடம் இருந்து தோன்றியவர்கள் மரீசி, காசியபர், சூரியன் ஆகிய மூவர். சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன். விஸ்வகர்மாவின் மகளை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு ஆண் பிள்ளைகளும், யமுனா என்ற பெண் குழந்தையும் பிறந்தனர்.

    எமன் – நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் காவலன். தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட போது, சூரியனின் ஆலோசனைப்படி சிவனை வேண்டி யாகம் நடத்தி கடும் தவம் புரிந்து, சிவபெருமான்ிடம் இருந்து தென் திசை அதிபதி என்ற பட்டம் பெற்று, எமலோகத்து அதிபர் ஆனார். சிவபெருமான், தனது ரிஷப வாகனத்திற்கு நிகராக, கருமை நிறம் கொண்ட எருமை மாடு ஒன்றை உருவாக்கி, மகாவிஷ்ணுவின் அம்சமான எமனுக்கு பரிசாக வழங்கினார் அதுவே எமதர்மனின் வாகனமான எருமை.

    மேலும், மானிடர்கள் உள்ளிட்ட ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரம் மிக்க நீதிபதி பொறுப்பையும் சிவபெருமான் எமதர்மனுக்கு அளித்தார். அவர் அமர்ந்து தீர்ப்பு வழங்குவதற்காக ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிம்மாசனம் அமைத்து கொடுத்தார்.

    எமதர்மன் அதில் அமர்ந்து நீதி வழங்குவதாக புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அவரது நீதி சிறிது சரிந்தாலும் சிம்மாசனத்துடன் எமதர்மன் அக்னி ஆற்றில் விழுந்து தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதால், நடுநிலையுடன் தீர்ப்பு வழங்கி வருவதாகவும் புராண கதைகள் உண்டு. தேவர்களுக்குள் மதிநுட்பம் மிக்கவராகவும் எமதர்மன் விளங்குகிறார். தர்மத்தின் வழி நடக்கும் அவர் ‘எமதர்மன்’ ‘தர்மராஜன்’ எனவும், காலம் தவறாமல் கடமையை செய்வதால் காலன்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • “Satisfy my hunger, give your share” Perumal, the hero who slept in the ashram of the sage!

    என் பசி தீர உன் பங்கையும் தா" உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் !

    எம்பெருமான் தனது அடியார்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், அதனால்தான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் அவர்களின் இருப்பிடத்திற்கு தேடிச்சென்று அருள்புரிவார். அந்த வகையில் புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் மாமுனிவர் தினமும் தவம் செய்த பின்னர், பெருமாளுக்கு அமுது படைத்த பின்பு தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் சாலிஹோத்ர முனிவரின் ஆசிரமத்திற்கு வயோதிகர் வடிவில் வந்த பெருமாள். வெகு தூரத்தில் இருந்து தான் வருவதாகவும், பசிக்கிறது உன்ன உணவேதும் கிடைக்குமா ? என கேட்க முனிவரும் உணவளிக்க பசி தீரவில்லை என முனிவரின் பங்கையும் கேட்டு சாப்பிட்டு முடித்ததும், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார்.

    "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. தற்போது அந்த இடம்தான் திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் ஆகியோரால் அப்பா மாலை சூட பட்டதாகும், 5 பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் போற்றப்படுகிறார், வீரராகவ பெருமாள் சைனா கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார், மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் கருணையே வடிவாக காட்சி தருகிறார், ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதி கொண்டுள்ளனர். இங்கு உள்ள சாலிங்கிய மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று வீரராகவ பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை அன்று வீரராகவரை வழிபடுவது சிறப்பாகும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்