Nellaippar car festival

நெல்லை  அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 516 வது  ஆனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
  
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  புராதன சிறப்புமிக்க  சிவாலயங்கிளல் ஒன்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன்  கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமி அம்பாள் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது . தேர் திருவிழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். 

முன்னதாக அதிகாலையில் விநாயகர் , முருகன்  தேர் சென்றதைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேரோட்டம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ஆகியோர் வடம்பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகளிலும் தேர் பவனி வந்த்து, இதனைத் தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியல்  மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையர் அவினாஷ்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரானா ஊரடங்கைத் தொடர்ந்து  இரண்டாண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *