Tag: Festival

  • Thirumalai Hanuman Jayanthi Festival

    திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில்  கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.

    திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில்  ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த  ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும்  அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி  ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி  முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால்   ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.

  • Madurai Meenakshiyamman Temple Vaikasi Spring Festival

    மதுரை மீனாட்சியம்மன் கோவில் வைகாசி வசந்த உற்சவ விழா

  • Surandai Sri Azhakuparvati Amman Temple Chitrai Chariot Festival

    சுரண்டை ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா

  • Yugadhi Festival celebration

    ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.

    பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.

    காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.

    விநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். அனைவரும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதம் எடுத்துக்கொண்டு, மங்கள ஆரத்தி செய்வது வழக்கம்.

    யுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலன்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான பஞ்சாங்கப் படனமாக மலர்கிறது.

  • thiruparamkundram car festival

    மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

    இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:45 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதையாத்திரை ஆக வந்தடைந்தனர். அவர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் இந்த சிறிய வைர தேரானது  ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

    முன்னதாக சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது.

    தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • March 07 2023 Holi Festival

    மார்ச் 7 – ஹோலி பண்டிகை…
    சுபகிருது வருடம் – மாசி 23   
    பவுர்ணமி
    ஹோலி,
    திருக்கோஷ்டியூர் பெருமாள் தெப்பம்
    07-மார்-2023 செவ்வாய்  
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30     
    திதி : பவுர்ணமி     
    திதி நேரம் : பவுர்ணமி இ 7.14
    நட்சத்திரம் : பூரம் ந.இ 3.16
    யோகம் : சித்த-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம் : அவிட்டம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • October 24 Deepavali Festival

    அக்டோபர் 24 தீபாவளி திருநாள்
    சுபகிருது வருடம் – ஐப்பசி 7
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    தீபாவளி (அதிகாலை 5:00 – 5:30 நீராடலாம்)
    24-அக்-2022 திங்கள்  
    சுபமுகூர்த்த நாள்(காலை 06:00 – 07:30)
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                         
    திதி    :    சதுர்த்தசி         
    திதி நேரம்    :    சதுர்த்தசி    மா    5.39
    நட்சத்திரம்    :    அஸ்தம்    ம    3.33
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி,உத்திரட்டாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்

     

  • Deepavali festival celebration

    உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடும் பண்டிகை தீபாவளி. இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வடஇந்தியாவில் 5 நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி என்றாலே புத்தாடை அணிவது, இனிப்புக்கள் பகிர்வது, பட்டாசு வெடிப்பது என்பது தான் பலருக்கும் தெரிந்து ஒன்று. ஆனால் தீபாவளி கொண்டாடுவதற்கு என்று சில முறைகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். தீபாவளி என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல நமக்கும் தெய்வீக சக்திக்கும் இடையேயான பந்தத்தை உறுதிப்படுத்தும் விரத நாளும் கூட தான்.

    தீபாவளி கொண்டாட்டம் என்பது புத்தாடை வாங்குவதில் இருந்து துவங்குகிறது. ஆனால் புத்தாடை வாங்கும் போது முதலில் முழு முதற் கடவுளான விநாயகருக்கு ஒரு வஸ்திரம் எடுக்க வேண்டும் என்பது தான் முறை. அவரும் நம் வீட்டில் ஒருவர் என்ற நெருக்கத்தை அது ஏற்படுத்தும். நம்மை போலவே தீபாவளியன்று கோவில்களில் உள்ள தெய்வங்களுக்கும் புத்தாடை அணிவிப்பார்கள். அருகில் உள்ள கோயில்களில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஏற்றது போல் வஸ்திரங்கள் வாங்கி கொடுக்கலாம்.

    நம் வீட்டிற்கு வருபவர்கள், வசதி இல்லாதவர்கள், தீபாவளியை கொண்டாட முடியாத நிலையில் இருப்பவர்கள் என யாருக்காவது நம்மால் முடிந்த அளவிற்கு புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்கிக் கொடுத்து அவர்களும் சந்தோஷமாக தீபாவளியை கொண்டாட செய்யலாம். இது போன்று செய்வதால் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு, இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும்.

    தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். அனைவராலும் கங்கையில் போய் நீராட முடியாது என்பதனால் தீபாவளியன்று ஒவ்வொரு தேவதைகளும் ஒவ்வொரு பொருளில் எழுந்தருளி, மக்களுக்கு ஆசி வழங்குகிறார்கள். அங்கு கங்கா தேவி, வீடுகளில் உள்ள தண்ணீரில் எழுந்தருளுகிறாள். தீபாவளியன்று அதிகாலை 3 மணி முதல் 5.30 மணி வரை சுடுதண்ணீரில் கங்கா தேவி வாசம் செய்கிறாள். நல்லெண்ணையில் மகாலட்சுமியும், சீயக்காய் போன்றவற்றில் தேவர்களும் வாசம் செய்கிறார்கள்.

    இவர்களின் ஆசி நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் தீபாவளி நாளில் அதிகாலையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் கையால் நல்லெண்ணைய், சீயக்காய் வைத்து, சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும் என்ற முறை வைக்கப்பட்டது. இப்படி குளிப்பதால் நம்முடைய பாவங்கள் நீங்கி, கங்கையில் குளித்ததற்கு இணையான புண்ணியம் நம்மை வந்து சேர்வதுடன், மகாலட்சுமியின் அருளும் கிடைக்கும் என்ற சொல்லப்படுகிறது. மகாலட்சுமியின் அருள் என்றால் வெறும் பணம், காசும் மட்டும் அல்ல. நல்ல அழகான தோற்றப் பொலிவு, தெளிவு ஆகியவையும் மகாலட்சுமியின் அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும்.

    கங்கை ஸ்நானம் முடிந்த பிறகு புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசு போன்ற அனைத்தையும் சுவாமி படத்திற்கு முன் படைத்து, வணங்கிய பிறகு பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற வேண்டும். தீபாவளி என்றாலே தீபங்களின் வரிசை என்று தான் அர்த்தம். அதனால் தீபாவளி நாளன்று வீட்டின் பூஜை அறையில் குறைந்தது 5 அகல் விளக்காவது ஏற்ற வேண்டும். சிலரது வீட்டில் ஓம் வடிவம், விளக்கு வடிவம் என கோலமிட்டு அதன் மீது, அதன் மீது விளக்குகளை வைக்கும் வழக்கம் உண்டு. இவ்வாறு விளக்குகள் ஏற்றி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டு, தீபத்தின் ஒளியில் இறைவனை கண்டு வழிபட வேண்டும் என்பதே தீபாவளி கொண்டாட்டம் ஆகும்.

  • Nellaippar car festival

    நெல்லை  அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 516 வது  ஆனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
      
    தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  புராதன சிறப்புமிக்க  சிவாலயங்கிளல் ஒன்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன்  கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமி அம்பாள் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது . தேர் திருவிழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். 

    முன்னதாக அதிகாலையில் விநாயகர் , முருகன்  தேர் சென்றதைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேரோட்டம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ஆகியோர் வடம்பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகளிலும் தேர் பவனி வந்த்து, இதனைத் தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.  

    இந்த நிகழ்ச்சியல்  மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையர் அவினாஷ்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரானா ஊரடங்கைத் தொடர்ந்து  இரண்டாண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

  • January 14 2022 Pongal Festival Rasi palan

    ஜனவரி 14 – தைப்பொங்கல் நாள் ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –    சுகம் 
    ரிஷபம் –     மகிழ்ச்சி 
    மிதுனம் –     நன்மை  
    கடகம் –      லாபம் 
    சிம்மம் –      அமைதி
    கன்னி –      புகழ்  
    துலாம் –      நட்பு
    விருச்சிகம் – வெற்றி
    தனுசு –       உற்சாகம் 
    மகரம் –      சுபம் 
    கும்பம் –     நிறைவு  
    மீனம் –       கவனம்
    சந்திராஷ்டமம்    –  சுவாதி, விசாகம்