Tag: Festival

  • Thiruvarur Chariot Festival

    உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்றது.

    பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருவாரூர் ஆழித் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா தியாகோசா' என விண்ணதிரும் பக்தி முழக்கத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

    காலை 7.15 மணிக்கு சன்னதி தெருவில் தொடங்கிய தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொள்வதால் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
     

  • Banana Soorai

    திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாய க்கன்பட்டியில் கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு லட்சம் வாழை பழங்கள் சூறையிட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

    திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீ கதிர் நரசிங்கப்பெருமாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் கோவில்களின் திருவிழாவை முன்னிட்டு கடந்த திங்களன்று காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி வாழை பழங்களை கூடையில் சுமந்து உலக நன்மைக்காக ஊரை சுற்றி வந்து கதிர்நரசிங்கப் பெருமாள் கோவிலில் சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் கழந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற சூறையிட்ட வாழை வழங்களை எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
     

  • Bogi Festival Special

    பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழையபொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது. போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.

    பழைய பொருட்களையும், பயனற்றவையும்விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது போகிப் பண்டிகை. வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும் நீக்கவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவம்.

    மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய பொருட்களை எரித்துதமிழக மக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபடுவர். பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்பதற்கு ஏற்ப, பழையபொருட்களை தீயிட்டு எரித்து, போகி பண்டிகையை மக்கள் கொண்டாடுகின்றனர்.

    பனிக்காலமான மார்கழி மாதம் முடியும் நாளான போகியன்று அருகில் அண்டியிருக்கும் பூச்சிகள், விஷக்கிருமிகள் போன்றவற்றை அழிப்பதற்காகத்தான்  பழையதை எரிக்கும் சடங்கை நடைமுறைப்படுத்தினர் முன்னோர். அத்துடன், குளிர்காலத்தில் வியாதிகள் எளிதில் தொற்றிவிடும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக  மூலிகைச்செடிகளை எரித்து அதில் வெளிவரும் புகையை சுவாசித்தனர். வேப்பிலைக் கொத்துக்களை வீட்டு வாசலில் கட்டினர்.

    போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றைதீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால்வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என நம்பப்படுகிறது. பிறகு வீட்டின் வாயிலை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து அழகான கோலம்போடப்படும்.

    போகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவைபடைத்து, புத்தாடகள் படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைத்து தீப ஆராதனை செய்து வழக்கத்தில்உள்ளது. போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.

    பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களைஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போதுகுழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இவ்வாறாக பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக இந்த போகிபண்டிகை அமைந்திருக்கும்.