Banana Soorai

திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாய க்கன்பட்டியில் கதிர் நரசிங்கப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒரு லட்சம் வாழை பழங்கள் சூறையிட்டு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பெரிய கோட்டை கிராமம் பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீ கதிர் நரசிங்கப்பெருமாள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பகவதியம்மன் கோவில்களின் திருவிழாவை முன்னிட்டு கடந்த திங்களன்று காப்பு கட்டுதல் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி வாழை பழங்களை கூடையில் சுமந்து உலக நன்மைக்காக ஊரை சுற்றி வந்து கதிர்நரசிங்கப் பெருமாள் கோவிலில் சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் கழந்து கொண்ட பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற சூறையிட்ட வாழை வழங்களை எடுத்துச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *