Tag: car

  • thiruparamkundram car festival

    மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், வெள்ளி ஆட்டுக்கடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

    இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை 7:45 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பரங்குன்றம், திருமங்கலம் கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு பாதையாத்திரை ஆக வந்தடைந்தனர். அவர்கள் இன்று காலையில் தேரோட்டம் விழாவில் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர் இந்த சிறிய வைர தேரானது  ரத வீதிகளில் மட்டும் உலா வந்தது.

    முன்னதாக சுப்ரமணியசாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிறிய வைர தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதிகள் வழியாக தேர் பவனி வந்தது கண்கொள்ளாக் கட்சியாக இருந்தது.

    தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் கோயிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக திருவண்ணாமலை பகுதியில் இருந்து வல்லுனர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

  • Nellaippar car festival

    நெல்லை  அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் 516 வது  ஆனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
      
    தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற  புராதன சிறப்புமிக்க  சிவாலயங்கிளல் ஒன்று சுவாமி நெல்லையப்பர்- காந்திமதியம்மன்  கோயிலாகும். இங்கு ஆண்டு தோறும் ஆனிப் பெருந்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3- ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமி அம்பாள் காலை மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வான தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது . தேர் திருவிழாவினையொட்டி சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர். 

    முன்னதாக அதிகாலையில் விநாயகர் , முருகன்  தேர் சென்றதைத் தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் தேரோட்டம் நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்வில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், ஆகியோர் வடம்பிடித்து தேரை இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க நான்கு ரதவீதிகளிலும் தேர் பவனி வந்த்து, இதனைத் தொடர்ந்து அம்பாள் தேர் இழுக்கப்பட்டது.  

    இந்த நிகழ்ச்சியல்  மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையர் அவினாஷ்குமார், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு 13 மாவட்டங்களைச் சேர்ந்த 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரானா ஊரடங்கைத் தொடர்ந்து  இரண்டாண்டுகளுக்குப் பின் தேரோட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

  • March 27 Palani murugan car festival

    மார்ச் 27 – பழநி முருகன் திருக்கல்யாணம்
    சார்வரி வருடம் – பங்குனி 14
    திருச்சுழி சிவன் தேர்
    27-மார்-2021 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    சதுர்த்தசி          
    திதி நேரம்    :    சதுர்த்தசி    ந.இ    3.12
    நட்சத்திரம்    :    பூரம்    இ    7.09
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவோணம்,அவிட்டம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்