Rameswaram Masi siva rathiri

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ராமநாத சாமிக்கும், பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்பாளும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா வந்தனர். 

திருவிழாவின் முக்கிய நாளான மார்ச் 4ம் தேதி அருள்மிகு நடராஜர் வீதி உலாவும், இரவு சுவாமி – அம்பாள் வெள்ளிரத வீதி உலாவும் நடைபெற உள்ளது. மறுநாள் காலை தேரோட்டத்தையொட்டி அலங்கரித்த திருத்தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளியதும் ரதவீதியில் உலா வருவர். தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி மாசி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *