Tag: Thirupathy

  • Thirupathy VIP Dharshan Issue

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்று விதமான விஐபி தரிசன முறையை ரத்து செய்யப்படும் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார். 

    இதனால் அதிகமுறை சுவாமி தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் ஆண்டில் ஒருமுறை மட்டுமே விஐபி தரிசனத்தில் செல்லும் விதமாக செய்யப்படும் எனவும் அவர் கூறி இருக்கிறார். 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதியில் செயல்பட்டு வரக்கூடிய பர்டு மருத்துவமனையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி , திருப்பதி புறநகர் மேம்பாட்டு ஆணைய தலைவர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

    இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி பர்டு மருத்துவமனையில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்து உத்தரப்பிரதேசம் , ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து அதிக அளவில் நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். 

    இங்கு சிகிச்சை பெறக் கூடிய நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரக்கூடிய உறவினர்களுக்கும் எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்படும். சுமார் 4 கோடியில் 40 அறைகள் கூடுதலாக கட்டப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். 

    அறுவை சிகிச்சை மையத்தில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான ஆலோசனை செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

    இந்த மருத்துவமனையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும். கடந்த வாரம் ஸ்ரீவாரி சேவா சதன் கட்டிடத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்து சிவிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிரிழந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீவாரி சேவா  தன்னார்வலர் குடும்பத்தினரை தேவஸ்தானம் சார்பில் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி அந்த குடும்பத்திற்கு துணையாக தேவஸ்தான நிர்வாகம் இருக்கும் என்றார் அவர். 

    மேலும், ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்களில் எல் 1, எல்2,  எல் 3 என மூன்று ரகமாக பிரித்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த மூன்று தரிசன முறையும் ரத்து செய்யப்படும் என்று சுப்பாரெட்டி கூறியுள்ளார்.

    முக்கிய பிரமுகர்களுக்கு அவரவர் பதவி மற்றும் தகுதிக்கேற்ப எவ்வாறு தரிசனம் செய்து வைப்பது என்பது குறித்து அறங்காவலர் குழு கூட்டத்தில் ஆலோசித்து சாதாரண பக்தர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நல்ல முடிவை விரைவில்  எடுக்கப்படும். 

    ஒரே ஆண்டில் அதிக முறை தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டில் ஒரு முறை மட்டுமே தரிசனத்திற்கு வரும் விதமாக செய்யப்படும் என அவர் தெரிவித்தார். 

    ஏற்கனவே  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தபோது முக்கிய பிரமுகர்கள் ஆண்டில் ஒரு முறை மட்டுமே சாமி தரிசனத்திற்கு வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதனால் சாதாரண பக்தர்கள் சிரமம் அடைவதைத் தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .
     

  • Thirupathy Hundiyal Kanikkai

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழக்கிழமை காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 44 ஆயிரத்து 574 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

    புதன்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 70,028 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. இதில் 4.50 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளனர்.

    மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி கோகுலம் பக்தர்கள் ஓய்வு அறை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 24 மணி நேரம்

    ரூபாய் 300 டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்

    ஆதார் அடையாள அட்டையின் மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப் பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
     

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 16 ஆம் தேதி 5 மணி நேரம் மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அன்றைய தினம் சர்வ தரிசனம் மற்றும் திவ்ய தரிசன டிக்கெட்டுக்கள் வழங்கப்படுவது ரத்து செய்யப்படுகிறது தேவஸ்தானம் அறிவிப்பு

    17ஆம் தேதி அதிகாலை 1.31 மணி முதல் 4. 29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி சந்திர கிரகணம் ஏற்படும் ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    மேலும் 17 ஆம் தேதி ஆனிவார ஸ்தானம் எனப்படும் சம்பிரதாய முறைப்படி பழைய கணக்குகள் முடிக்கப்பட்டு புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணிவரை கோவில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. எனவே  12 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அன்று அனுமதிக்கப்பட உள்ளனர். 

    மேலும் சந்திர கிரகணத்தையொட்டி அன்று மாலை 6 மணியுடன் கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. எனவே 16ம் தேதி மதியம் 12 மணி முதல் ஐந்து மணி நேரம் மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். எனவே  அன்று ஆதார் அட்டை மூலமாக வழங்கக்கூடிய சர்வ தரிசனம் டிக்கெட் மற்றும் மலைப்பாதையில் நடந்து வரக்கூடிய பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் டிக்கெட் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. 

    17 ஆம் தேதி சந்திர கிரகணம் நிறைவடைந்த பிறகு 5 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு  கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை ,கொலுவு ஆகியவை ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து ஆனி வார ஆஸ்தான சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு மதியம் 12 மணிக்கு பிறகு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட உள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy New Facility

    பக்தர்களின் வசதிக்காக திருப்பதி ரயில் நிலையம் முன்பாக உள்ள விஷ்ணு நிவாஸம் காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நேரடியாக வரும் பக்தர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    இதனால், சென்னையிலிருந்து ரயிலில் செல்லும் பக்தர்கள் ரயில் நிலையத்துக்கு எதிரிலிருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் அறை எடுத்துத் தங்கி சுவாமி தரிசனம் செய்யலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படும். 

    திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள சீனிவாசம் காம்ப்ளக்ஸும், மாதவ நிலையமும் வழக்கம்போல் ஆன்லைன் மூலமே முன்பதிவுசெய்யப்படும். இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தானம் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது. 

    திருப்பதி ஏழுமலையானையும் திருச்சானுர் பத்மாவதி தாயாரையும் தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் இந்தியா முழுவதுமிருந்து வந்த வண்ணம் உள்ளனர். தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அறைகள் திருமலையில் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவை யாவும் ஆன் லைன் வழியாகவே பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90 நாள்களுக்கு முன்பாகவே இவற்றுக்கான முன்பதிவுகள் முடிந்து விடுகின்றன. இதனால் பலரும் கீழ்திருப்பதியில் அறை எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். 

    திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறமுள்ள `சீனிவாசம் காம்ப்ளக்ஸு'ம், `மாதவ நிலையமும், ரயில் நிலையத்துக்கு `விஷ்ணு நிவாஸு'ம் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகளாகும். இந்த விடுதிகளுக்கும் ஆன் லைன் முன்பதிவு மூலம் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய நிலையே இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி ஜூலை 16ம் தேதி இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூலை 17 ஆம் தேதி காலை அதிகாலை 1.31 மணி முதல் 4.29 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. இதையொட்டி 16ஆம் தேதி இரவு 7மணி முதல் 17 ஆம் தேதி காலை 5 மணி வரை கோவில் நடை அடைக்கப்பட உள்ளது. 

    பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாத சேவையுடன் திறக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். 

    16 ஆம்  தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்துடன் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளதால் அஷ்டதள பாத பத்ம ஆராதனை சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதேபோன்று 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் ,வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Jestabishegam

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் சிலையை பாதிக்காமல் இருப்பதற்காக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது.

     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் நடைபெற்ற அபிஷேக ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு  அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 

    இதனால்  சுவாமி  சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் உற்சவத்தை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். இந்த உற்சவம் ஒவ்வொரு  ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். 

    அதன்படி இந்தாண்டு  3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. 

    முதல் நாள் வைர கவசமும் , இரண்டாவது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டு சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாவது நாளான இன்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. 

    இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீண்டும் தங்க கவசம்  அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர் .  
     

  • Thirupathy Ezhumalayan Vaira Kavasam

     திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த ஜேஷ்டாபிஷேகத்தில் வைரக்கவசம் அணிவிக்கப்பட்டு மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

     தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு நடைபெறும் அபிஷேகத்தினால் சுவாமி  சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த ஜேஷ்டாபிஷேகம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். 

    அதன்படி இந்தாண்டு 3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. 

    இதில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு வைர கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 2வது நாளான நாளை முத்து  கவசம் அணிவிக்கப்பட்டு சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. 

    3வது நாள் மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே சுவாமிக்கு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு, துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள் பங்கேற்றனர் .  

  • Thirupathy Pooringala…. Pls note

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை சர்க்கார் சகஸ்ர கலசாபிஷேகம் சேவை நடைபெற உள்ளதால் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்துள்ள தேவஸ்தான நிர்வாகம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கோடை விடுமுறை மற்றும் வாராந்திர வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை மூன்று மணி நேரம் சர்க்கார் சகஸ்கர கலச அபிஷேகம் ( தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் பங்கேற்கக்கூடிய சேவை ) நடைபெற உள்ளது. 

    எனவே ஞாயிற்றுக்கிழமை அன்று மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டையின் மூலமாக வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் அன்று ஒரு நாளைக்கு ரத்து செய்யப்படுகிறது.  எனவே பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இலவச தரிசனத்தில் மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy 26 lakhs people dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம்  25.89 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

    மே மாதத்தில் மட்டும் 1 கோடியே 11 லட்சத்து 63 ஆயிரத்து 665 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12 லட்சத்து 66 ஆயிரத்து 432 பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் 89.02 கோடி ரூபாய் காணிக்கையாக உண்டியலில் செலுத்தியுள்ளனர். பக்தர்களுக்கு அறைகள் வாடகைக்கு விட்டதன் மூலமாக 7.24 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • Thirupathy Mudi Kaanikkai

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தலைமுடி ஏலத்தின் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ. 3.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்துவது ஐதீகம். தினமும் சுமார் 30 முதல் 40 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த தலைமுடி தரம் வாரியாக பிரிக்கப்பட்டு, அவை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. ஒவ்வொரு  மாதமும் முதல் வியாழக்கிழமை  ஏலம் விடப்படுகிறது. 

    இதன்படி இன்று 3,700 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 3.85 கோடி வருவாய் கிடைத்துள்ளது.