Thirupathy Jestabishegam

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் சிலையை பாதிக்காமல் இருப்பதற்காக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது.

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி சிலைகள் சேதம் அடையாமல் இருப்பதற்காக மூலிகை திரவியங்களால் நடைபெற்ற அபிஷேக ஜேஷ்டாபிஷேகம் நிறைவு பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  தினமும் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு  அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது. 

இதனால்  சுவாமி  சிலைக்கு சேதம் ஏற்படாமல் இருக்கும் விதமாக உற்சவர் சிலைக்கு அணிவிக்கப்படும் தங்க கவசம் அகற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் உற்சவத்தை   ஜேஷ்டாபிஷேகம் எனப்படும். இந்த உற்சவம் ஒவ்வொரு  ஆண்டும் தெலுங்கில் வரும் ஜேஷ்டமாதத்தில் பவுர்ணமியன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். 

அதன்படி இந்தாண்டு  3நாட்கள் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசங்கள் அகற்றப்பட்டு பஞ்சலோக சிலைகள் சேதம் ஏற்படாமல் இருக்க மூலிகை திரவியங்களால் ரங்கநாதர் மண்டபத்தில்  சிறப்பு யாகமும், அபிஷேகமும் நடத்தப்பட்டது. 

முதல் நாள் வைர கவசமும் , இரண்டாவது நாள் முத்து கவசமும் அணிவிக்கப்பட்டு சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மூன்றாவது நாளான இன்று பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட மூலிகை திரவியங்களால் கோயில் ஜீயர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது. 

இதைதொடர்ந்து மாலை உற்சவர்களுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மீண்டும் தங்க கவசம்  அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தொடர்ந்து அப்படியே அணிவிக்கப்பட்டு சுவாமிக்கு பூஜைகள், அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த உற்சவத்தில் துணை செயல் அலுவலர் ஹரிந்திரநாத் உள்ளிட்ட அதிகாரிகள் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர் .  
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *