Tag: 108

  • Mariamman koil vilakku poojai

    தர்மபுரி நெல்லி நகர் ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயிலில்108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது திரளான பெண்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை.

     தர்மபுரி நெல்லி நகர் பகுதியில் அமைந்துள்ள  ஸ்ரீ ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் 40-வது ஆண்டு திருவிழா கடந்த 18-ஆம்  தேதி கம்பம் நடுவலுடன் விழா துங்கியது அதனைத் தொடர்ந்து  108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது  இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குழந்தை பாக்கியம் வேண்டியும் உலக மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழவும் மாணவ மாணவிகள் கல்வி அறிவிப்பு பெறவும் திருமண தடை நீங்கவும் கடன் பிரச்சினை நீங்கவும் செல்வம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.

    பெண்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்து   பூக்களால் அர்ச்சனை செய்து தீபாரதனை காண்பித்து அம்மனை வழிபட்டனர் இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன விழாவிற்கான ஏற்பாடுகளை ஓம் சக்தி கோட்டை மாரியம்மன் கோயில் விழா குழுவினர் செய்தனர்.

  • palani 108 sangu poojai

    பழனி மலைக்கோயில் உலக நலன் வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

    பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் இன்று உலக நலன் மற்றும் விவசாய செழுமை வேண்டி 108 வலம்புரி சங்கு பூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் தங்கச் சப்பரத்தில் பிரதான கலசம் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு முன்னதாக தாம்பாளத்தில் வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு புனித நீர் நிரப்பப்பட்டு ரோஜா, தாமரை  அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகம் நடைபெற்றது. யாக பூஜை நிறைவாக பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாராதனை  நடைபெற்றது. பின்னர் கலசங்கள் கோவிலை சுற்றிவர செய்யப்பட்டு கலச தீர்த்தம் மற்றும் சங்க தீர்த்தம் அருள்மிகு தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், சுத்த அன்னம்,வில்வ இலை கொண்டு  அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

    முன்னதாக அர்ச்சக ஸ்தானிக சங்கம் சார்பில் சண்முக நதியில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

  • vinayakar 108 sangabishegam

    மாசி மக தீர்த்தவாரிக்கு வருகை புரிந்த தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரியில் 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்

    புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாதி கடந்த 24ஆம் தேதி நடைபெற்றது மகம் முடிந்து செல்லும் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு புதுச்சேரி புது சாரம் நடுத்தெருவிலுள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் தங்கி உள்ளார்.

     இதனைடுத்து இன்று சாரம் மாசி மகம் வரவேற்பு குழு சார்பில் தீவனூர் பொய்யாமொழி விநாயகருக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

     இதனை ஒட்டி இன்று காலை கணபதி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேக விழா அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு ஒன்பது வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனையும் காட்டப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாசி மிக வரவேற்பு குழு தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் மேலும் இன்று இரவு சுவாமி மின்விளக்கு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.

  • Lakshmi Narashimmar vazhipadu

    கடன் தொல்லையில் இருந்து விடுபட எதிரிகளின் பிரச்சனையில் இருந்து வெளியேற ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் 108 போற்றியை தினமும் கூறி வந்தால் அனைத்தும் தொல்லைகளும் பறந்து போய் விடும். மேலும் இது தைரியத்தை அளிப்பதோடு பல காலமாக தடை பட்ட காரியம் கை கூட வழி வகுக்கும்.

    1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
    2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
    3. ஓம் யோக நரசிங்கா போற்றி
    4. ஓம் ஆழியங்கையா போற்றி
    5. ஓம் அக்காரக் கனியே போற்றி
    6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
    7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
    8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
    9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
    10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி

    11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
    12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
    13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
    14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
    16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
    17. ஓம் ஊழி முதல்வா போற்றி
    18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
    19. ஓம் ராவணாந்தகனே போற்றி
    20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி

    21. ஓம் பெற்ற மாளியே போற்றி
    22. ஓம் பேரில் மணாளா போற்றி
    23. ஓம் செல்வ நாரணா போற்றி
    24. ஓம் திருக்குறளா போற்றி
    25. ஓம் இளங்குமார போற்றி
    26. ஓம் விளக்கொளியே போற்றி
    27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
    28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
    29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
    30. ஓம் இமையோர் தலைவா போற்றி

    31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
    32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
    33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
    34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
    35. ஓம் நந்தா விளக்கே போற்றி
    36. ஓம் நால் தோளமுதே போற்றி
    37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
    38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
    39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
    40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி

    41. ஓம் மூவா முதல்வா போற்றி
    42. ஓம் தேவாதி தேவா போற்றி
    43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
    44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
    45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
    46. ஓம் வட திருவரங்கா போற்றி
    47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
    48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
    49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
    50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி

    51. ஓம் மாலே போற்றி
    52. ஓம் மாயப் பெருமானே போற்றி
    53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
    54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
    55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
    56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
    57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
    58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
    59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
    60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி

    61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
    62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
    63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
    64. ஓம் அரவிந்த லோசன போற்றி
    65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
    66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
    67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
    68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
    69. ஓம் பின்னை மணாளா போற்றி
    70. ஓம் என்னையாளுடையாய் போற்றி

    71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
    72. ஓம் நாரண நம்பி போற்றி
    73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
    74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
    75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
    76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
    77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
    78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
    79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
    80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
    81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
    82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
    83. ஓம் இனியாய் போற்றி
    84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
    85. ஓம் புனலரங்கா போற்றி
    86. ஓம் அனலுருவே போற்றி
    87. ஓம் புண்ணியா போற்றி
    88. ஓம் புராணா போற்றி
    89. ஓம் கோவிந்தா போற்றி
    90. ஓம் கோளரியே போற்றி

    91. ஓம் சிந்தாமணி போற்றி
    92. ஓம் சிரீதரா போற்றி
    93. ஓம் மருந்தே போற்றி
    94. ஓம் மாமணி வண்ணா போற்றி
    95. ஓம் பொன் மலையாய் போற்றி
    96. ஓம் பொன்வடிவே போற்றி
    97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
    98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
    99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
    100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி

    101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
    102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
    103. ஓம் வள்ளலே போற்றி
    104. ஓம் வரமருள்வாய் போற்றி
    105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
    106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
    107. ஓம் பத்தராவியே போற்றி
    108. ஓம் பக்தோசிதனே போற்றி.

  • Agathiyar vinayakar vazhipadu

    ஆதிசங்கரன் மைந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆடும் சங்கரி ஆனந்தா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஐங்கரங் கொண்ட ஆண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆங்கார ஓங்கார வடிவினே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதிசிவன் தந்த அண்ணலே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆறுதல் தந்திடும் ஆன்மீக போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அங்கத்தில் தந்தத்தை கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதத்தின் வேதமே வேதியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

     

    வேதாந்த சித்தாந்த போதகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    விஞ்ஞான மெஞ்ஞான தத்துவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வீரனே வேந்தனே விக்னனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    தத்துவம் மகத்துவம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சாந்தனே வேந்தனே சேந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    விந்தையே சிந்தனையே தந்தையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேலுடன் நின்றவன் அண்ணணே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சித்திக்கும் புத்திக்கும் உற்றவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிந்தைக்கு எட்டிய சீலனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிங்கார வேலவன் சொந்தமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    சேவடி செவ்வடி சேர்வோமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்பனை கடந்த கற்பகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்றிடும் அடியவா கருணையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    காலையும் மாலையும் துதிப்பேன் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கலைமகள் முக்தியே கஜபதியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    போகமே போகத்தில் போகரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    போதனை தந்திடும் புண்ணியா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    பூமகள் நாமகள் சொந்தமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
        
    பூமியைக் காத்திடும் பூதகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதியே ஜோதியே ஐங்கர போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஆடிடும் சிவனாரின் மைந்தரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அவலும் பொரியும் உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அன்னையின் ஆசையே அற்பதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செல்லமே செல்வமே பாலனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தில் நாதரின் சோதரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வெல்லமும் அப்பமும் உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதனை தீர்த்திடும் வித்தகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேலனின் அண்ணணே வேழமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேண்டிடும் அடியவர் விளக்கமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வெந்நிறம் கருநிறம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேள்வியைக் காத்திடும் வித்தகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதியும் ஜோதியும் நீயே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆகாயம் நீயேஇவ் உலகுக்கு போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆலாலம் உண்டவன் மைந்தனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அகிலாண்ட நாயகி அங்கமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    உலகுக்கு உயிர் தந்த உத்தமா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஊணும் உயிரும் நீதானே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    உயர்நெறி என்றும் அருள்வாய் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதிடும் வேதத்தின் உள்பொருள் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓகமே யோகமே ஓங்காரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஒப்பில்லா மூர்த்தியே அப்பனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓமெனும் மெய்யே உட்பொருள் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதற்கு ஒப்பில்லா உத்தமா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கானமே ஞானமே கணநாதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கஷ்டங்கள் போக்கிடும் ஐங்கரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கருமையே கற்பக வினாயகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கருணையே கஷ்டத்தை நீக்குவாய் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சந்தமே சொந்தமே எந்தையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சந்ததம் பெருகிட வேண்டினோம் போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சக்தியின் மார்பினில் தவழ்ந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சங்கடம் தீர்த்திடும் சாஸ்தாவே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதியே ஜோதியே நாதமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஓதிடும் வேதத்தின் ஞானமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    பேதமே இல்லா பிள்ளையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    வேதாந்த செல்லவனே விக்னனே
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    எல்லா நலன்களும் தந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    எல்லையில் எங்களை காத்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    தொல்லை நீக்கிடும் தொந்தியோ போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    முந்திய பிள்ளையே மூஷிகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மரத்தடி பிள்ளையாய் நின்றவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மனமாசை போக்கும் மாமணியே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மங்கள நூலை பூண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாசில்லா மணியே தேவனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அன்னையும் தந்தையும் ஆனவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆதாரம் உலகுக்கும் நீதானே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாகாலன் தந்த மகனாரே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆனையாய் நின்ற அற்புதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    அய்யனே அப்பனே ஐங்கரா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆறுதல் தந்திடும் அருணா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    ஆகாயம் நீதானே அய்யாவே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா
    ஆங்கார ஓங்கார ரூபனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சிங்கார செந்தூர செண்பகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சேந்தனே வேந்தனே வேதமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சொப்பன சுந்தர வீரனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    சொந்தமே எந்தனின் அய்யனே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கற்பக வினாயக கருணையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கண்ணே மணியே பிள்ளையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கானமே நாதமே கனநாதா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    கலைகளில் அழிவில்லா தெய்வமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மெய்யுருகும் அன்பரின் செல்வமே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேன்மையும் செம்மையும் தந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேலான வாழ்வையும் தருவாயே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மேகமே மோதகமே மோகா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மஞ்சள் பிள்ளையே மங்களா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாணிக்க மாமணி மாதவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாயனே மாங்கனி உண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    மாதுகள் இருபக்கம் கொண்டவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தூரா எந்தன் செம்மையே போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செந்தாமரை மேல் அமர்ந்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

    செய்கின்ற பிழையை பொருத்தவா போற்றி
    கந்தனின் அண்ணா கணபதி அப்பா

     

  • Namakkal Iyappa Swamy Koil sangabishegam

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை 4000 தீபங்கள் ஏற்றி கொண்டாடினர்.

    ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவரும் சனாதனத்திற்கு முதல் எதிர்ப்பாளருமாக இருந்த பக்தி மார்க்கமாக மக்களுக்கு சமூக அறிவியலை பரப்பிய வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் பிரார்த்தனை சபை சார்பாகவும், தனியார் கல்லூரியின் தமிழ் துறை, கலாச்சார பண்பாட்டு குழுவினரும் இணைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

    அப்பொழுது 4000 விளக்குகளை ஏற்றி, விளக்கு யாகம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 4000 விளக்குகள் ஏற்றி வள்ளலாருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

  • varalakshmi 108 pottri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி

    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி

    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி

    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி

    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி

    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி

    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி

    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி

    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி

    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி

    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப் பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே

    போற்றி போற்றி போற்றி

  • mahabaleswarar koil 108 sangu poojai

    மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் 108 சங்கு பூஜை…மலைக்கோவிலூரில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக நிறைவு நாளில் 108 சங்கு பூஜை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மரகதவல்லி அம்பிகா சமேத ஸ்ரீ மஹாபலேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். கடந்த பல வருடங்களாக இந்த கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருந்து வந்தது.

    இது தொடர்பாக ஊர் முக்கியஸ்தர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோவிலை புனரமைக்க கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலை துறையின் உதவியோடு பொதுமக்களின் பங்களிப்போடு பல கோடி ரூபாய் மதிப்பில் இந்த கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டது. புனரமைக்கப்பட்ட இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நடைபெற்ற இந்த மண்டல பூஜையின் நிறைவு நாளான நேற்று திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பூஜைகளும் நடைபெற்றது.

    இதே போல இந்த கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 சங்கு பூஜையும் அதனைத் தொடர்ந்து யாக வேள்வியும் சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் மண்டல பூஜையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் திருக்கோவில் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • Biravar Temple yagam

    விழுப்புரம் அருகே பைரவர் கோயிலில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழுப்புரம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில்  அமைந்துள்ள ஶ்ரீ சம்ஹார பைரவர் ஆலயத்தில்  ஒவ்வொரு  தமிழ் மாதம் முதல் வரும் செவ்வாய் அன்று இந்த ஆலயத்தில் 108 மந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் மற்றும் பூஜையுடன் சம்ஹார பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுவது வழக்கம்.

    அதன்படி ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை சம்ஹார பைரவருக்கு  சந்தனம் பன்னீர் குங்குமம் பால் தயிர் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  ரோஜா மல்லி என பல்வேறு வகை  மலர்களைக் கொண்டு சம்ஹார பைரவருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இந்த விழாவில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சம்ஹார பைரவரை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

  • Prithyanka devi maha chandi yagam

    அரியலூர் – ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கரா தேவிக்கு   108 மூலிகைகளால்  மகா சண்டி யாகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம்.  இவ்வாலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு  108 மூலிகைகளால் சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் பக்தகர்கள் வேண்டுதலில் பேரில்  சேலைகள்  இடப்பட்டன. பின்னர் மஞ்சள் குங்குமம் திருநீறு வசம்பு வெற்றி வேலர், நன்னாரி வேர் உள்ளிட்ட 108  வகையிலான மூலிகைகள் முக்கனிகளான மா,பலா வாழை மற்றும் சப்போட்டா மாதுளை ஆப்பிள் உள்ளிட்டபழங்கள் யாகத்தில் போடப்பட்டன. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.

    பின்னர் பிரத்தியங்கிரா தேவிமற்றும் சாமுண்டீஸ்வரி அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினர். இதில் சென்னை தஞ்சாவூர் கடலூர் திருச்சி கோவை  பெரம்பலூர் மதுரை சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.