Tag: 108

  • 108 Hanuman Potri

    ஓம் அனுமனே போற்றி
    ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அவதார புருஷனே போற்றி 

    ஓம் அறிஞனே போற்றி
    ஓம் அடக்கவடிவே போற்றி
    ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
    ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
    ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
    ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
    ஓம் ஆனந்த வடிவே போற்றி

    ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
    ஓம் இசை ஞானியே போற்றி
    ஓம் இறை வடிவே போற்றி
    ஓம் ஒப்பிலானே போற்றி
    ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
    ஓம் களங்கமிலாதவனே போற்றி
    ஓம் கர்மயோகியே போற்றி
    ஓம் கட்டறுப்பவனே போற்றி
    ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
    ஓம் கடல் தாவியவனே போற்றி

    ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
    ஓம் கீதாபாஷ்யனே போற்றி
    ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
    ஓம் கூப்பிய கரனே போற்றி
    ஓம் குறுகி நீண்டவனே போற்றி
    ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
    ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
    ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
    ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
    ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
    ஓம் சீதாராம சேவகனே போற்றி
    ஓம் சூராதி சூரனே போற்றி
    ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    ஓம் சொல்லின் செல்வனே போற்றி
    ஓம் சூரியனின் சீடனே போற்றி
    ஓம் சோர்வில்லாதவனே போற்றி
    ஓம் சோக நாசகனே போற்றி
    ஓம் தவயோகியே போற்றி
    ஓம் தத்துவஞானியே போற்றி
    ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
    ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் தீயும் சுடானே போற்றி
    ஓம் நரஹரியானவனே போற்றி
    ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
    ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
    ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
    ஓம் பண்டிதனே போற்றி
    ஓம் பஞ்சமுகனே போற்றி
    ஓம் பக்தி வடிவனே போற்றி
    ஓம் பக்த ரட்சகனே போற்றி
    ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
    ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
    ஓம் பயம் அறியாதவனே போற்றி
    ஓம் பகையை அழிப்பவனே போற்றி
    ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
    ஓம் பிரம்மச்சாரியே போற்றி
    ஓம் பீம சோதரனே போற்றி
    ஓம் புலனை வென்றவனே போற்றி
    ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
    ஓம் புண்ணியனே போற்றி
    ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
    ஓம் மதி மந்திரியே போற்றி
    ஓம் மனோவேகனே போற்றி

    ஓம் மாவீரனே போற்றி
    ஓம் மாருதியே போற்றி
    ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
    ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
    ஓம் மூலநட்சத்திரனே போற்றி
    ஓம் மூப்பில்லாதவனே போற்றி
    ஓம் ராமதாசனே போற்றி
    ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
    ஓம் ராமதூதனே போற்றி
    ஓம் ராம சோதரனே போற்றி
    ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
    ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
    ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
    ஓம் ராமாயண நாயகனே போற்றி
    ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
    ஓம் ராகவன் கண்மணியே போற்றி
    ஓம் ருத்ர வடிவனே போற்றி
    ஓம் லட்சியப் புருஷனே போற்றி
    ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
    ஓம் லங்கா தகனனே போற்றி
    ஓம் லங்காவை வென்றவனே போற்றி
    ஓம் வஜ்ர தேகனே போற்றி
    ஓம் வாயுகுமாரனே போற்றி
    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
    ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
    ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
    ஓம் விளையாடும் வானரனே போற்றி
    ஓம் விஸ்வரூபனே போற்றி
    ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி

    ஓம் வித்தையருள்பவனே போற்றி
    ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
    ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
    ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
    ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
    ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
     

  • Durga devi 108 pottri

    1. ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
    2. ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
    3. ஓம் அபயம் தருபவளே போற்றி
    4. ஓம் அசுரரை வென்றவளே போற்றி
    5. ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
    6. ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
    7. ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
    8. ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
    9. ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
    10. ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி

    11. ஓம் ஆலால சுந்தரியே போற்றி
    12. ஓம் ஆதியின் பாதியே போற்றி
    13. ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
    14. ஓம் இணையில்லா நாயகியே போற்றி
    15. ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
    16. ஓம் இடபத்தோன் துணையே போற்றி
    17. ஓம் ஈர மனத்தினளே போற்றி
    18. ஓம் ஈடிணையற்றவளே போற்றி
    19. ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
    20. ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி

    21. ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
    22. ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
    23. ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
    24. ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
    25. ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
    26. ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
    27. ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
    28. ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
    29. ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
    30. ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

    31. ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
    32. ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
    33. ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
    34. ஓம் காளியே நீலியே போற்றி
    35. ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
    36. ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
    37. ஓம் கிரிராஜன் மகளே போற்றி
    38. ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
    39. ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
    40. ஓம் குறுநகை கொண்டவளே போற்றி

    41. ஓம் குங்கும நாயகியே போற்றி
    42. ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
    43. ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
    44. ஓம் கோள்களை வென்றவளே போற்றி
    45. ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
    46. ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
    47. ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
    48. ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
    49. ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
    50. ஓம் சங்கரன் துணைவியே போற்றி

    51. ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
    52. ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
    53. ஓம் சிங்கார வல்லியே போற்றி
    54. ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
    55. ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
    56. ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
    57. ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
    58. ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
    59. ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
    60. ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி

    61. ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
    62. ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
    63. ஓம் தயாபரியே தாயே போற்றி
    64. ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
    65. ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
    66. ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
    67. ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
    68. ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
    69. ஓம் நன்மை அருள்பவளே போற்றி
    70. ஓம் நவசக்தி நாயகியே போற்றி

    71. ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
    72. ஓம் நிமலையே விமலையே போற்றி
    73. ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
    74. ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
    75. ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
    76. ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
    77. ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
    78. ஓம் பயிரவியே தாயே போற்றி
    79. ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
    80. ஓம் பயங்கரி சங்கரியே போற்றி

    81. ஓம் பார்வதிதேவியே போற்றி
    82. ஓம் புவனம் படைத்தவளே போற்றி
    83. ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
    84. ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
    85. ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
    86. ஓம் மங்கல நாயகியே போற்றி
    87. ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
    88. ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
    89. ஓம் மகமாயித் தாயே போற்றி
    90. ஓம் மாதர் தலைவியே போற்றி

    91. ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
    92. ஓம் மாணிக்கவல்லியே போற்றி
    93. ஓம் மாயோன் தங்கையே போற்றி
    94. ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
    95. ஓம் முக்தியளிப்பவளே போற்றி
    96. ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
    97. ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
    98. ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
    99. ஓம் யசோதை புத்திரியே போற்றி
    100. ஓம் யமபயம் போக்குபவளே போற்றி

    101. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
    102. ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
    103. ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
    104. ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
    105. ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
    106. ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
    107. ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி
    108. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
     

  • Kuberan 108 Pottri

    செல்வ கடவுளான குபேரனை வணங்கி இந்த  போற்றிகளை உச்சரித்து வழிபட்டால் செல்வ நிலை உயரும் வாழ்வில் சுபிட்சம் பெருகும்

     அளகாபுரி அரசே போற்றி
    ஆனந்தம் தரும் அருளே போற்றி
    இன்பவளம் அளிப்பாய் போற்றி
    ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
    உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
    ஊக்கம் அளிப்பவனே போற்றி
    எளியோனுக்கு அருள்பவனே போற்றி
    ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
    ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
    ஒன்பது நிதி பெற்றவனே போற்றி

    ஓங்கார பக்தனே போற்றி
    கருத்தில் நிறைந்தவனே போற்றி
    கனகராஜனே போற்றி
    கனகரத்தினமே போற்றி 
    காசு மாலை அணிந்தவனே போற்றி
    கிந்நரர்கள் தலைவனே போற்றி
    கீர்த்தி அளிப்பவனே போற்றி
    கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
    குருவாரப் பிரியனே போற்றி

    குணம் தரும் குபேரா போற்றி
    குறை தீர்க்கும் குபேரா போற்றி
    கும்பத்தில் உறைபவனே போற்றி
    குண்டலம் அணிந்தவனே போற்றி
    குபேர லோக நாயகனே போற்றி
    குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
    கேடதனை நீக்கிடுவாய் போற்றி
    கேட்டவரம் அளிப்பவனே போற்றி
    கோடி நிதி அளிப்பவனே போற்றி
    சங்க நிதியைப் பெற்றவனே போற்றி

    சங்கரர் தோழனே போற்றி
    சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
    சமயத்தில் அருள்பவனே போற்றி
    சத்திய சொரூபனே போற்றி
    சாந்த சொரூபனே போற்றி
    சித்ரலேகா பிரியனே போற்றி
    சித்ரலேகா மணாளனே போற்றி
    சிந்தையில் உறைபவனே போற்றி
    சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
    சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி

    சிவபூஜை பிரியனே போற்றி
    சிவ பக்த நாயகனே போற்றி
    சிவ மகா பக்தனே போற்றி
    சுந்தரர் பிரியனே போற்றி
    சுந்தர நாயகனே போற்றி
    சூர்பனகா சகோதரனே போற்றி
    செந்தாமரைப் பிரியனே போற்றி
    செல்வ வளம் அளிப்பவனே போற்றி
    செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
    சொர்ணவளம் அளிப்பவனே போற்றி

    சொக்கநாதர் பிரியனே போற்றி
    சௌந்தர்ய ராஜனே போற்றி
    ஞான குபேரனே போற்றி
    தனம் அளிக்கும் தயாபரா போற்றி
    தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
    திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
    திருவிழி அழகனே போற்றி
    திருவுரு அழகனே போற்றி
    திருவிளக்கில் உறைவாய் போற்றி
    திருநீறு அணிபவனே போற்றி

    தீயவை அகற்றுவாய் போற்றி
    துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
    தூயமனம் படைத்தவனே போற்றி
    தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
    தேவராஜனே போற்றி
    பதுமநிதி பெற்றவனே போற்றி
    பரவச நாயகனே போற்றி
    பச்சை நிறப் பிரியனே போற்றி
    பவுர்ணமி நாயகனே போற்றி
    புண்ணிய ஆத்மனே போற்றி

    புண்ணியம் அளிப்பவனே போற்றி
    புண்ணிய புத்திரனே போற்றி
    பொன்னிற முடையோனே போற்றி
    பொன் நகை அணிபவனே போற்றி
    புன்னகை அரசே போற்றி
    பொறுமை கொடுப்பவனே போற்றி
    போகம்பல அளிப்பவனே போற்றி
    மங்கல முடையோனே போற்றி
    மங்களம் அளிப்பவனே போற்றி
    மங்களத்தில் உறைவாய் போற்றி

    மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
    முத்து மாலை அணிபவனே போற்றி
    மோகன நாயகனே போற்றி
    வறுமை தீர்ப்பவனே போற்றி
    வரம் பல அருள்பவனே போற்றி
    விஜயம் தரும் விவேகனே போற்றி
    வேதம் போற்றும் வித்தகா போற்றி
    வைர மாலை அணிபவனே போற்றி
    வைகுண்டவாசப் பிரியனே போற்றி
    நடராஜர் பிரியனே போற்றி

    நவதான்யம் அளிப்பவனே போற்றி
    நவரத்தினப் பிரியனே போற்றி
    நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
    நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
    வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
    ராவணன் சோதரனே போற்றி
    வடதிசை அதிபதியே போற்றி
    ரிஷி புத்திரனே போற்றி
    ருத்திரப் பிரியனே போற்றி
    இருள் நீக்கும் இன்பனே போற்றி

    வெண்குதிரை வாகனனே போற்றி
    கைலாயப் பிரியனே போற்றி
    மனம் விரும்பும் மன்னவனே போற்றி
    மணிமகுடம் தரித்தவனே போற்றி
    மாட்சிப் பொருளோனே போற்றி
    யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
    யௌவன நாயகனே போற்றி
    வல்லமை பெற்றவனே போற்றி
    ரத்தின மங்கலத்தில் உறைந்தானே போற்றி
    குபேரா போற்றி போற்றி
     

     

  • varalakshmi viradham 108 pottri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி
    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி 
    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி
    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே 
    போற்றி போற்றி போற்றி
     

  • Muruga peruman 108 pottri

    1. ஓம் ஆறுமுகனே போற்றி
    2. ஓம் ஆண்டியே போற்றி
    3. ஓம் அரன்மகனே போற்றி
    4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
    5. ஓம் அழகா போற்றி
    6. ஓம் அபயா போற்றி
    7. ஓம் ஆதிமூலமே போற்றி
    8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
    9. ஓம் இறைவனே போற்றி
    10. ஓம் இளையவனே போற்றி
    11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
    12. ஓம் இடர் களைவோனே போற்றி
    13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
    14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
    15. ஓம் உமையவள் மகனே போற்றி
    16. ஓம் உலக நாயகனே போற்றி
    17. ஓம் ஐயனே போற்றி
    88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
    19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
    20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
    21. ஓம் ஒங்காரனே போற்றி
    22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
    23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
    24. ஓம் கருணாகரரே போற்றி
    25. ஓம் கதிர்வேலவனே போற்றி
    26. ஓம் கந்தனே போற்றி
    27. ஓம் கடம்பனே போற்றி
    28. ஓம் கவசப்பிரியனே போற்றி
    29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
    30. ஓம் கிரிராஜனே போற்றி
    31. ஓம் கிருபாநிதியே போற்றி
    32. ஓம் குகனே போற்றி
    33. ஓம் குமரனே போற்றி
    34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
    35. ஓம் குறத்தி நாதனே போற்றி
    36. ஓம் குணக்கடலே போற்றி
    37. ஓம் குருபரனே போற்றி
    38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
    39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
    40. ஓம் சரவணபவனே போற்றி
    41. ஓம் சரணாகதியே போற்றி
    42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
    43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
    44. ஓம் சிக்கல்பதியே போற்றி
    45. ஓம் சிங்காரனே போற்றி
    46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
    47. ஓம் சரபூபதியே போற்றி
    48. ஓம் சுந்தரனே போற்றி
    49. ஓம் சுகுமாரனே போற்றி
    50. ஓம் சுவாமிநாதனே போற்றி
    51. ஓம் சுகம் தருபவனே போற்றி
    52. ஓம் சூழ் ஒளியே போற்றி
    53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
    54. ஓம் செல்வனே போற்றி
    55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
    56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
    57. ஓம் சேவகனே போற்றி
    58. ஓம் சேனாபதியே போற்றி
    59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
    60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
    61. ஓம் சோலையப்பனே போற்றி
    62. ஓம் ஞானியே போற்றி
    63. ஓம் ஞாயிறே போற்றி
    64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
    65. ஓம் ஞான உபதேசியே போற்றி
    66. ஓம் தணிகாசலனே போற்றி
    67. ஓம் தயாபரனே போற்றி
    68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
    69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
    70. ஓம் திருவே போற்றி
    71. ஓம் திங்களே போற்றி
    72. ஓம் திருவருளே போற்றி
    73. ஓம் திருமலை நாதனே போற்றி
    74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
    75. ஓம் துணைவா போற்றி
    76. ஓம் துரந்தரா போற்றி
    77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
    78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
    79. ஓம் தேவாதி தேவனே போற்றி
    80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
    81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
    82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
    83. ஓம் நாதனே போற்றி
    84. ஓம் நிலமனே போற்றி
    85. ஓம் நீறணிந்தவனே போற்றி
    86. ஓம் பரபிரம்மமே போற்றி
    87. ஓம் பழனியாண்டவனே போற்றி
    88. ஓம் பாலகுமரனே போற்றி
    89. ஓம் பன்னிரு கையனே போற்றி
    90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
    91. ஓம் பிரணவமே போற்றி
    92. ஓம் போகர் நாதனே போற்றி
    93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
    94. ஓம் மறைநாயகனே போற்றி
    95. ஓம் மயில் வாகனனே போற்றி
    96. ஓம் மகா சேனனே போற்றி
    97. ஓம் மருத மலையானே போற்றி
    98. ஓம் மால் மருகனே போற்றி
    99. ஓம் மாவித்தையே போற்றி
    100. ஓம் முருகனே போற்றி
    101. ஓம் யோக சித்தியே போற்றி
    102. ஓம் வயலூரானே போற்றி
    103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
    104. ஓம் விராலிமலையானே போற்றி
    105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
    106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
    107. வேலவனே போற்றி
    108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி
     

  • Nalla velai kidaikka enna seiya vendum?

    நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
    நல்ல வேலை எல்லோருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. படித்துக் கொண்டிருக்கும்போதே சிலருக்கு, படிப்பை முடித்தவுடன் தான் படித்ததற்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துவிடும். தனது தகுதிக்கு தகுந்த வேலையை எப்படி தேடி பிடிப்பது என்ற பயமும் வந்துவிடும். இப்படிப்பட்ட பயங்களை எல்லாம் கடந்து எப்படியாவது முட்டிமோதி படிப்பில் தேர்ச்சி பெற்று வந்துவிடுவோம். ஆனால் இந்த சமுதாயத்தில் படித்த படிப்பிற்கும், கிடைக்கும் வேலைக்கும் சம்மந்தமே இல்லாமல் தான் பலர், கடமைக்காக வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். 
    படித்து முடித்து விட்டோம். சம்பாதிக்காமல் இருந்தால் இந்த சமூகத்தில் பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் பிடித்த வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன? கிடைத்த வேலைக்கு செல்வோம் என்று சொல்லிக்கொண்டு மனதிற்கு இஷ்டம் இல்லாத வேலைகளை செய்வோரின் எண்ணிக்கை தான் இன்றளவில் அதிகமாக உள்ளது. இப்படி தன் மனதிற்கு இஷ்டம் இல்லாத வேலையை செய்வதன் மூலம் அந்தத் துறையில் நம்மால் முன்னேற்றம் அடைவது என்பது இயலாத ஒன்றாகிவிடும். இதன் மூலம் வாழ்க்கையின் முன்னேற்றமானது தடைபடும். எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் முட்டிமோதி மேலே வந்துவிடுவர். ஆனால் ஏதாவது ஒரு காரணத்தினால் ஆரம்பித்த இடத்திற்கே வந்து முடிந்துவிடும்.
     இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைப்பதற்கான சுலபமான வழிபாடு தான் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டை எப்படி செய்வது என்பதை பற்றி இப்போது விரிவாக காண்போம்.
     முதலில் நம் பூஜை அறையில் ராஜராஜேஸ்வரி அம்மன் திரு உருவப்படத்தை வைக்க வேண்டும் அந்த அம்மனின் படத்திற்கு தினம்தோறும் வாசனை மலர் சூட்ட வேண்டும். அம்மனை வழிபட தொடங்குவதற்கு முன்பு முதலில் விநாயகரை வணங்கி கொள்ள வேண்டும். அம்பாளின் படத்தின் முன்பு 2 நெய் தீபங்கள் ஏற்றி வைக்கப்பட வேண்டும். அடுத்ததாக ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு வாசனை உள்ள உதிரி பூக்களைக் கொண்டு ‘ஓம் ராஜராஜேஸ்வரியே நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து அர்ச்சனை செய்து வர வேண்டும். 
    மந்திரம் சொல்லி முடிக்கப்பட்ட பின்பு அம்மனுக்கு தீப, தூப ஆராதனை காட்டி நமஸ்காரம் செய்து வணங்கிக் கொள்ள வேண்டும். உங்கள் மனதிற்கு பிடித்த வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றாலும், உயர் பதவி கிடைக்க வேண்டும் என்றாலும் இப்படி தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் நீங்கள் இந்த வழிபாட்டினை மனதார தொடர்ந்து செய்து வரவேண்டும். 
    இந்த பூஜைகளை பாதிக்கப்பட்டவர் தான் செய்ய வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. தன் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு தாய் இந்தப் பூஜையை செய்து வரலாம். தன் கணவனுக்காக மனைவியும் செய்யலாம். முழு நம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் செய்யும் எந்த வழிபாடாக இருந்தாலும் அது வெற்றியை அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

  • Azhagiya Nambiyar Koil

    நெல்லை மாவட்ட கோயில்கள் – 2

    திருப்பதி தெரியும். தென் திருப்பதி தெரியுமா? நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், திருக்குறுங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோயில்தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

    திருப்பதியைப் போன்றே இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

    கோடை காலங்களில்  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற புகழ்பெற்ற மலைப் பகுதிகளுக்குச் செல்ல பலரும் விரும்புவார்கள். அந்த வகையில் ஆன்மீக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளனர்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்தால் திருக்குறுங்குடியை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நம்பி மலைக் கோவில் உள்ளது. மனத்துக்கு ரம்மியமாகவும், பார்வைக்குக் குளிர்ச்சியாகவும் அடர்ந்த மரங்கள் நிறைந்த பாதையில் சுமார் 2 கிலோ மீட்டர் சென்றதும், மலைப்பாதை தொடங்குகிறது. 

    மேடும், பள்ளமுமாக இந்த மலைப் பாதை பார்ப்பதற்குக் கடினமான தோற்றம் கொண்டிருந்தாலும் மலைக் காடுகளின் பசுமை வாசனையும், குளுமையான மூலிகைக் காற்றும் மலையேறுபவர்களுக்குக் கொஞ்சமும் கூட சோர்வையோ, களைப்பையோ அளிப்பதில்லை. அந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அந்தப் பிரதேசம் நம்மைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்கிறது.


    மலைக்கோவிலில் இருக்கும் திருமலை நம்பியை தரிசிக்க பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டுவது வழக்கம். அனால், பெரியவர்கள்  மலை மீது ஏறிச் செல்ல சிரமப்படுவதால் அவர்களுக்காகவே கீழ் கோவிலில் இருந்து மலைக்கோவில் செல்ல ஜீப் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக 8 பேர் வரை பயணம் செல்லலாம். நபர் ஒருவருக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். சிலர் மலையடிவாரம் வரை சென்று காட்டுபாதையில் நடந்தே மலை நம்பி கோவிலுக்கு செல்கிறார்கள்.

    பசுமை விரித்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை முகட்டில் மேகக் கூட்டங்களின் நடுவில் நம்பினோரைக் கைவிடேன் என கருணையின் பிறப்பிடமாக திருமலைநம்பி வீற்றிருக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலை திருமங்கையாழ்வார் கட்டியதாகக் கூறப்படுகிறது.

    ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மலை என்றும் கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    `வைணவ தலத்தின் குரு` என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் நம்பி கோவிலில் நடைபெற்றுள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அதாவது அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது. 

    நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதி உள்ளது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. 

    நம்பி மலைக்கு வரும் பயணிகள் இரண்டு வகையான பலனை அடைகின்றனர். மலை மேல் உள்ள நம்பியாண்டவரை தரிசித்தும், அருவியில் குளித்த ஆனந்தத்தையும் பெறுகின்றனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதிகள் இருந்தாலும் தேவையற்ற கெடுபிடிகள் இல்லாத சுற்றுலாத் தலமாகவே உள்ளது. மலையில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியில் மூலிகை கலந்து வருவதால் சோப்பு, ஷாம்பு போன்றவற்றைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் திருக்குறுங்குடிக்கு பேருந்து வசதிகள் உள்ளன. அதுபோலவே அருகிலுள்ள வள்ளியூர், களக்காடு ஆகிய ஊர்களில் தங்கும் விடுதிகளும் உள்ளன.

    Google Maps link – https://goo.gl/maps/j1aFx3TTwSTTubCQA

  • 108 Kilo Kunguma abishegam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு 108 கிலோ குங்குமத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    மஹிஷாசுர மர்த்தினி சிறப்பு :

    மஹிஷாசுரமர்த்தினிக்கு நடைபெறும் ஹோமம், அபிஷேகம், மற்றும் பூஜைகளில் பங்கேற்று வழிபடுவதால் அசுர குணம் அழியும், தடைகள் நீங்கும், வியாதிகள் குணமாகும், பாவங்கள் விலகும், பயம் அகலும், சர்வ துக்கங்களும் விலகும். துர்க்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான பெயர்களால் போற்றப்படுகிறாள். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18 திருக்கரங்களுடன், சிரித்த முகத்துடன், மஹிஷனை வதம் செய்யும் கோலத்தில், 9 அடி உயரத்தில், 1008 பெண்கள் மஞ்சள் நீரினால் மஹா அபிஷேகம் செய்து, பல கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வப்பொழுது சூலினி துர்கா ஹோமம், மஞ்சள் குங்கும அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் வருகிற 16.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு சூலினி துர்கா ஹோமத்துடன் 108 கிலோ குங்குமத்தினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    குங்குமாபிஷேகத்தின் சிறப்பு :

    குங்குமம் ஆரோக்கியமான அனைத்து செயல்களையும் தோற்றுவிக்கும் அற்புத பொருள் ஆகும். குங்குமம் அனைவரையும் வசீகரிக்க செய்து, தெய்வீகத்தன்மையுடன் சுபதன்மை ஏற்படுத்தும். மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் கொண்டு  அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜை செய்வதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். தீய சக்திகள் விலகும், ரத்த சம்பந்தமான உள்ள நோய்கள் விலகும். கிருமி நாசினியான குங்குமம் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை தடுத்து மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருகிறது.

    நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி, சக்தி குவியும் இடம். சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்ட வைக்கும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில் தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்பட காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதை தூண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை கொண்டு ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஹோமம், அபிஷேகத்தின் பலன் :

    இப்பூஜையின் மூலம் கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கான ஆதாரம்.

    சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் விலகும்.

    மேலும் பக்தர்கள் அனைவரும் இவ்வைபவங்களில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Vinayakar chadurthi homam

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 02.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக 108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.

    ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் :

    உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால், பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இருவரும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.

    வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.

    இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் திருவோணம் மற்றும் பக்தர்களின் ஜென்ம நக்ஷத்திர நாட்களில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சன்னதியில் தன்வந்திரி ஹோமத்துடன் 108 கணபதி ஹோமம் விநாயக சதுர்த்தி நாளில் நடைபெற உள்ளது.

    விநாயக சதுர்த்தி :

    ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் வரும் நாளே விநாயக சதுர்த்தியாகும். விநாயக பெருமானுக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன்,  மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு உள்ளது. இவற்றுள் 'விநாயகர்' என்பது  'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.

    108 கணபதி ஹோமம் :

    மஹா கணபதி, மஹா கர்ண கணபதி, மஹா சக்தி கணபதி, சர்வ சக்தி கணபதி, நித்ய கணபதி, நிமல கணபதி, நித்யானந்த கணபதி, நாத கணபதி, நாகேஸ்வர கணபதி, நவ நதிய கணபதி, சித்து கணபதி, ஷ்யாமள கணபதி, சிங்கார கணபதி, சிவசக்தி சந்தான கணபதி, வினோத கணபதி, விஷேட கணபதி, சாத்வீக கணபதி, சதானந்த கணபதி, சுமூக கணபதி, சுத்த ஷ்யாமள கணபதி, சுத்த சிவமய கணபதி, சுந்தர கணபதி, மஹா காவ்ய கணபதி, ஜ்வாலா கணபதி, ஜோதி கணபதி, ஜோதி ஆனந்த கணபதி, சங்கர கணபதி, ஆனந்த கணப்தி, ஆரோக்ய கணபதி, முத்து கணபதி, முக்தி கணபதி, முக்தி யோக கணபதி, இச்சா கணபதி, இமாச்சல கணபதி, இந்திர கணபதி, வித்யா கணபதி, விமல கணபதி, உச்ச கணப்தி, உச்சிஷ்ட கணபதி, உகார கணபதி, ஈசான கணபதி, ஈசானந்த கணபதி, ஊர்மிள கணபதி, யந்திர கணபதி, ஏகானந்த கணபதி, ஐக்கிய கணபதி, ஐஸ்வர்ய கணபதி, ஹோம கணபதி, ஓங்கார கணபதி, ஔஷத கணபதி, கர்ண கணபதி, கந்பக கணபதி, ஞான கணபதி, ஞான சக்தி கணபதி, சதாசிவ கணபதி, சங்கல்ப கணபதி, கன்ன கர்ண கணபதி, டம்ப கணபதி, நாத கணபதி, நவ நதிய கணபதி, தபோநந்த கணபதி, தபசு கணபதி, தர்க்க ஜெய கணபதி, பவித்ர பத்ம கணபதி, மகார கணபதி, யாக கணபதி, யாக சக்தி கணபதி, ரத கணபதி, ராக கணபதி, லலிதா கணபதி, லவண கணபதி, வஜ்ர கணபதி, வசீகர கணபதி, நாத கணபதி, நாதாம்ச கணபதி, யோக கணபதி, யோக மஹா சக்தி கணபதி, ஞான நித்ய கணபதி, கமல கணபதி, ஷ்ராவண கணபதி, சித்த கணபதி, சித்து புத்தி கணபதி, கல்ப கணபதி, வித்தக கணபதி, லக்ஷ்மி கணபதி, சிந்து கணபதி, முக்தி கணபதி, சகஸ்ரார கணபதி, வினோத கணபதி, வில்லங்க நிவாரண கணபதி, அஷ்ட சித்து கணபதி, அஷ்ட ஐஸ்வர்ய கணபதி, அட்ஷய கணபதி, இடா கணபதி, இடா பிங்கள கணபதி, இடா பிங்கள சூட்ஷம கணபதி, ப்ரணவ கணபதி, ப்ரம்ம குண்டலினி கணபதி, விஷ்ணு கணபதி, சிவ கணபதி, ஆதி சக்தி கணபதி, ஆதார கணபதி, ப்ரணயாம சக்தி கணபதி, ப்ரகாச கணபதி, விக்னேஷ்வர கணபதி, வினோத கணபதி, சர்வ ஜெய கணபதி, சர்வ ஜெய விஜய கணபதி.

    மேற்கண்ட 108 கணபதியை வேண்டி 108 கணபதி ஹோமம் மாபெரும் ஹோமகுண்டத்தில் ஷண்மத ஆச்சாரியர்களை கொண்டு விநாயக சதுர்த்தியன்று நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் அஷ்ட திரவியங்கள், அறுகம்புல், தேன், நெய், விலை உயர்ந்த மூலிகைகள், பிணி தீர்க்கும் திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள், மோதகங்கள், பல வகையான புஷ்பங்கள், பழங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளன.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 108 கணபதி ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு மஹா கணபதியின் பேரருளால் கர்ம விநைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். சகல காரிய அனுகூலமும் உண்டாகும், இடையூறுகள் விலகும், பேரும் புகழும் கிடைக்கும், சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழும் நிலையை பெறலாம். மேலும் பக்தர்களுக்கு பலவகை நர்பலன்கள் கிடைக்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு :

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513. செல் – 9443330203

  • Varalakshmi viradham 108 pottri

    வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீ லட்சுமி போற்றி உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் கிட்டும்.

    சகல செல்வங்களுடன் முதலில் தோன்றிய ஆதிலட்சுமியை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி
    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி 
    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி
    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே 
    போற்றி போற்றி போற்றி