Namakkal Iyappa Swamy Koil sangabishegam

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை 4000 தீபங்கள் ஏற்றி கொண்டாடினர்.

ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவரும் சனாதனத்திற்கு முதல் எதிர்ப்பாளருமாக இருந்த பக்தி மார்க்கமாக மக்களுக்கு சமூக அறிவியலை பரப்பிய வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஆய்விருக்கை சன்மார்க்க மன்றம் பிரார்த்தனை சபை சார்பாகவும், தனியார் கல்லூரியின் தமிழ் துறை, கலாச்சார பண்பாட்டு குழுவினரும் இணைந்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

அப்பொழுது 4000 விளக்குகளை ஏற்றி, விளக்கு யாகம் நடைபெற்றது. ஒரே நேரத்தில் 4000 விளக்குகள் ஏற்றி வள்ளலாருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவிகளை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஏராளமான ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *