Blog

  • Siddhar Vaaku Parigarangal

    குஜராத் சோம்நாத் கோயிலில் மக்கள் நன்மைக்காக பிணிகள் நீக்கும் யாகங்கள் செய்தவர் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள்

    குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்துள்ளது சோம்நாத் கோயில். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் முதன்மையானது.

    இங்கு ஜோதிர் லிங்கத்தின் நேர் பின்புறம் உள்ள சக்தி அம்மன், 51 சக்தி பீடங்களில் தேவியின் வயிற்றுப் பகுதி விழுந்த சக்தி பீடத்திற்குரியதாகும். மிகவும் சக்தி வாய்ந்த இடமாக இத்தலம் விளங்குகிறது.

    இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு. ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது.

    தனது 27 மனைவியரில் ரோஹிணியிடம் மட்டுமே அளவுகடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார். காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான்.

    இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக ‘சோமன்’ என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் விளிக்கப்படுகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் மக்கள் நலன் வேண்டியும், பிணிகள் நீங்கவும், நோயின்றி சிறப்பு வாழவும் சித்தர்கள் அருளாசிபடி சிறப்பு வேள்விகள் நடத்தி உள்ளார் ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். இந்த வேள்வியின் மகிமையும், அதன் ஆற்றலும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் இதுபோன்ற வேள்விகளை நடத்தி உள்ளார்.

    இங்கு வருபவர்களுக்கு பிணிகள் நீங்குகிறது. திருமணத் தடை, வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை என்று அனைத்தும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. முக்கியமாக குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது. யாகங்களின் பலன்கள் முழுமையாக மக்களுக்கு கிடைக்கிறது. 

    இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.

    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – பயம் 
    ரிஷபம் – நன்மை 
    மிதுனம் – நற்செயல்
    கடனம் – ஆதாயம் 
    சிம்மம் – சுகம் 
    கன்னி –  புகழ்
    துலாம் –  கவலை
    விருச்சிகம் – நலம் 
    தனுசு –     நட்பு
    மகரம் –   வெற்றி 
    கும்பம் – துன்பம் 
    மீனம் – லாபம் 
    சந்திராஷ்டமம்    – அசுவினி,பரணி
     

  • September 5 Teachers Day

    செப்டம்பர் 5 – ஆசிரியர் தினம்
    விகாரி வருடம் – ஆவணி 19
    05-செப்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    சப்தமி          
    திதி நேரம்    :    சப்தமி    இ    3.05
    நட்சத்திரம்    :    விசாகம்    கா    10.53
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Kalachakra Poojai

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நக்ஷத்திர தோஷங்கள் ஆகல 27 நக்ஷத்திர ஹோமத்துடன் காலசக்கிர பூஜை நடைபெற உள்ளது.

    நமது வாழ்வில் நக்ஷத்திரங்கள் மற்றும் நவகிரகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. வேத ஜோதிடப்படி நவம் என்றால் ஒன்பது என்றும் கிரஹ என்றால் கோள்கள் என்றும் பொருள். ஒருவர் பிறக்கும் பொழுது காணப்படும் கிரக நிலைகள் மற்றும் நக்ஷத்திரம் தான் அவருடைய வாழ்வின் பல்வேறு சூழ்நிலைகளில் அவர்தம் செயல் மற்றும் விளைவுகளை நிர்ணயிக்கின்றன என்பது ஜோதிட விதியாகும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

    நமது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் நவகோள்களின் மற்றும் நக்ஷத்திரங்களின் அனுக்கிரகத்தைப் பெற நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம் மிகவும் முக்கியமானது. அவரவரின் கர்ம வினையைப் பொறுத்துத்தான் அவரது ஜாதகத்தில் 9 கிரகங்களின் நிலை, நக்ஷத்திரங்களின் பலம் அமையும். அதன் அடிப்படையில் தான் வெற்றி, தோல்வி காணப்படும். சில சமயங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் தோஷம் காரணமாக வாழ்வில் இடையூறுகள் ஏற்படும். ஒன்பது கிரகங்கள், 27 நக்ஷத்திரங்களை திருப்தி படுத்தும் விதத்தில் யக்ஞஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் இந்த ஹோமம் மற்றும் பூஜையில் பங்கு கொள்வதன் மூலம் தோஷங்கள் குறையும், வாழ்வில் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வ செழிப்பு மற்றும் இடையூறில்லாத வெற்றிகளை பெற முடியும்.

    27 நக்ஷத்திர ஹோமம் – காலசக்கர பூஜை பலன்கள்

    மனித பிறவியின் வாழ்வானது 27 நட்சத்திரம், நவக்கிரஹங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அமைகின்றது. நமது பூர்வ புண்ணிய பாவம், முன்னோர்களின் பாவம், சாபம் இவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் திருமணத்தடை, இருதார யோகம், வம்ச விருத்தி குறைபாடு, தொழில் தடை, அடுத்தடுத்து ஏற்படும் கண்டங்களும், விபத்துக்களும், தீராத வியாதி, அற்ப ஆயுள், வாழ்வின் முன்னேற்றத்தடை போன்ற குறைகள் யாவும் நட்சத்திரங்கள், நவக்கிரஹங்கள் வாயிலாகவே ஏற்படுகின்றது.

    இவற்றிலிருந்து விடுபட நட்சத்திரங்களையும், நவக்கிரஹங்களையும் வழிபட்டு கெடு பலன்கள் நீங்கி, சுப பலன்கள் பெற மேற்கண்ட யாகம் பலன்தரும். மேலும் தனதான்யம், சௌபாக்யம் பெருகும். கடன் பிரச்சனைகள் நீங்கும். அறிவு, புகழ், பலம் உண்டாகும். எதிரிகள் தொல்லை நீங்கும். நிலம், வீடு சம்பந்தமான பிரச்னைகள் நீங்கும். தொழில் வியாபார அபிவிருத்தி, பணவரவு, செல்வம், செல்வாக்கு பெருகும். வழக்கு வியாஜ்யங்களினால் ஏற்படும் தடைகள் அகலும். சகலவிதமான தோஷங்கள், பாபங்கள், சாபங்கள் நீங்கி வாழ்க்கையில் நலம் பெறலாம். துன்பங்கள் குறையும், தடைகள் விலகும், அனைத்து முயற்சிகளிலும் வெற்றி, அதிர்ஷ்டங்கள் மற்றும் நன்மைகள் பெறலாம், நவக்கோள்கள் மற்றும் நக்ஷத்திர அதிதேவதைகளின் அனுக்கிரகம் கிடைக்கும்.

    வெற்றிகரமான வாழ்க்கை ஆமையும், மன அழுத்தம் குறையும், செயல்திறன் கூடும், வாழ்க்கையில் வளர்ச்சி, வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சி, கல்வியில் வெற்றி, நீண்ட ஆயுள், செல்வ செழிப்பு, தொழிலில் முன்னேற்றம், இயற்கை வளம் போன்ற பல்வேறு பலன்களை பெறலாம். இந்த யாகம் 27 நக்ஷத்திர விருட்சங்களுடைய இலைகளையும், 9 நவக்கிரகங்களுக்குரிய விருட்சங்களின் சமித்துகளுடன் நவதானியங்கள், பலவர்ண வஸ்திரங்கள் கொண்டு நடைபெற உள்ளது.

    மேற்கண்ட யாகத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் காலசக்கரமாக அமைத்துள்ள 27 நட்சத்திர, 9 நவரக்கிரக விருட்ஷங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பக்தர்கள் அனைவரும் இந்த யாக பூஜைகளில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், வாலாஜாபேட்டை – 632 513.
    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
     

  • Sasti Viradham

    சஷ்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்… அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்த பெண்களின் கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள். 

    குழந்தை வரம் இல்லாத பெண்களுக்கு மிக சிறந்த விரதம் சஷ்டி விரதம். சஷ்டி திதியில் விரதம் இருந்து வந்தால் வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் பெறலாம்.

    எல்லா மாதமும் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி  6 நாட்கள் சஷ்டி விரதம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
    இந்த சஷ்டி விரத நாட்களில் பகலில் உறங்குதல் கூடாது.
    இந்த சஷ்டி விரதத் தினத்தன்று இரவிலும் கண் விழித்து இருப்பது மிக மிக கூடுதல் பலன்களை தருகின்றது.
    முருகனை ஆறு காலமும் பூஜை செய்து  வந்தால், கடன் தொல்லையில் இருந்து நீங்களாம்.
    கடன் தொல்லையை நீங்குவதற்கு மற்றும் பணம் சேர இந்த 6 நாட்களில் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்டு வேண்டும்.

    முருகனை மனதில் நிலை நிறுத்தி நேரம் தவிர விடாமல் கூடுதல் நேரம் கிடைத்தாலும் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை நினைத்து தியானம், பிரார்த்தனை, பாராயணம் செய்யலாம்..

  • Ketkum varam tharum Poiyamozhi vinayakar

    குள்ள குள்ளனே.. குண்டு வயித்தனே..
    வெள்ளிக்கொம்பனே.. விநாயக நமஸ்தே.

    எதுவானாலும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கும் நாம், முழு முதல் கடவுளாக வழிபடுவது அந்த பிள்ளையாரைத்தானே. 

    கொஞ்சமாய் மஞ்சளை பிடித்துவைத்தாலே அங்கு வந்துவிடும் பிள்ளையார், ஆலமரத்தடியிலும் அரச மரத்தடியிலுமாக அமர்ந்து கொண்டு கேட்டவர்க்கு கேட்ட வரம் தருகிறார். 
    அப்படிப்பட்டவர் விழுதே விடாத ஆலமரத்தின் அடியில் இருந்து கொண்டு அருள் பாலிக்கும் இடம் எது என்று தெரியுமா?

    பொய்யாமொழி விநாயகராக தீவனூர் என்ற இடத்தில் எழுந்தருளியிருக்கிறார். 
    திண்டிவனம் – செஞ்சி சாலையில் தீவனூர் என்ற சிறிய கிராமத்தில் பெரிய குளத்தருகே சுயம்புவாக இருக்கிறார். 
    கோயிலுக்கு செல்லும் பாதையில் முதலில் ஆதிவிநாயகர் கோயில் சிறியதாக காட்சியளிக்கும். பொய்யாமொழி பிள்ளையாரை பார்ப்பதற்கு முன் ஆதி விநாயகரை பார்த்து ஒரு கற்பூரம் ஏற்றிவிட்டு செல்வார்கள். 

    பின்னர் குளக்கரையை கடந்து சென்றால், தீவனூர் பொய்யாமொழி பிள்ளையார் கோயிலுக்குள் நுழையலாம்.
    சுயம்பு வடிவில் லிங்கமாக காட்சியளிக்கும் பிள்ளையார், கணபதி லிங்கம் என்றும் அழைக்கப்படுகிறார். அபிஷேக ஆராதனைகளின்போது அவரின் பிள்ளையார் ரூபத்தில் துதிக்கையுடன் வெளிப்படுவதை பார்க்க முடியும். 

    முன்னொரு காலத்தில் இந்த கோயில் பூசாரி, வியாபாரி ஒருவரிடம் பூஜைக்கு மிளகு கேட்க, அந்த வியாபாரி கொடுக்க மனமில்லாமல் உளுந்துதான் இருப்பதாக கூறிவிட்டார். பின்னர் வியாபாரத்திற்கு போன இடத்தில் அவரது அத்தனை மிளகு மூட்டைகளும் உளுந்து மூட்டைகளாக மாறிப் போயிருந்தன. எனவே, சொன்ன மொழியை உண்மையாக்கிய இவர் பொய்யாமொழி விநாயகராக அழைக்கப்படுகிறார். 

    இக்கோயிலில் கொடி மரத்திற்கு வலப்புறம் நவகிரகங்கள் அமைந்துள்ளன. கொடிமரத்தை கடந்து சென்ற உடனேயே பொய்யாமொழி பிள்ளையாரை பார்க்கலாம். அண்மைக் காலத்தில்தான் கோயில் புனரமைக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் வழக்கம்போல குளக்கரை பிள்ளையாராகத்தான் இருப்பார்.

    குளக்கரையை ஒட்டி காணப்படும் ஆலமரங்கள் விழுதுவிட்டு காட்சியளிக்கும் நிலையில், கோயிலுக்கு பின்புறம் 3 ஆலமரங்கள் உள்ளன. மூன்றும் சிவன், பிரம்மா, விஷ்ணுவாக கருதப்படுகின்ற தெய்வ மரங்கள். இந்த மூன்று ஆலமரங்களும் விழுதில்லா மரங்கள் என்பதுதான் இவற்றின் தனிச்சிறப்பு.

    பிள்ளையாரை வணங்குபவர்கள், இம்மரங்களையும் சேர்த்தே வணங்குகிறார்கள். அந்த இடத்தில் பொங்கல் வைக்கவும், காதுகுத்து போன்ற எளிய குடும்ப விழாக்களுக்குமாக இடம் இருக்கிறது. எப்போது அங்கு சென்றாலும் யாராவது பொங்கல் வைப்பதும் புதுமணத் தம்பதியர் வந்து ஆசி பெற்றுச் செல்வதுமாக இருப்பார்கள். 
    திருமண தோஷம் நீக்கும் தலமாகவும், குழந்தைப்பேறு அளிக்கும் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. 

    பல ஜமீன்தார் பரம்பரையினரும், அவர்களை சார்ந்தவர்களும் குலதெய்வமாக வழிபட்ட வரலாறு கொண்டவர் பொய்யாமொழி விநாயகர். அந்த காலத்தில் பல குடும்பங்கள் வண்டி கட்டிக் கொண்டு வந்து இக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவர். ஆண்டுக்கு ஒருமுறையாவது இக்கோயிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுவது இன்றும் பல குடும்பங்களின் வழக்கமாக உள்ளது. 

    இவரிடம் கேட்ட வரத்தை பொய்க்காமல் நிறைவேற்றித் தருபவர் என்பதாலும் பொய்யாமொழி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இதனால் பொய்யாத வரம் தரும் பிள்ளையாரை ஒருமுறை தரிசித்துவிட்டு வரலாமே..

    பாலும் தெளிதேனும், பாகும் 
    பருப்பும் இவை நான்கும் கலந்த
    நான் உனக்குத்தருவேன்
    கோலம் செய்
    துங்கக் கலிமுகத்துத் தூயவனே 
    நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!

    -பாமா, எழுத்தாளர்
     

  • September 4 Rasi palan

    செப்டம்பர் 4… இன்றைய ராசி பலன்….. 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – களிப்பு
    ரிஷபம் – இன்பம் 
    மிதுனம் – வெற்றி
    கடனம் – நலம் 
    சிம்மம் – கவலை
    கன்னி –  வரவு
    துலாம் –  பயம் 
    விருச்சிகம் – சிக்கல்
    தனுசு –     புகழ்
    மகரம் –   மேன்மை 
    கும்பம் – தடங்கல்
    மீனம் – பரிசு
    சந்திராஷ்டமம்    – ரேவதி, அசுவினி
     

  • September 4 subamugurthanaal

    செப்டம்பர் 4 வளர்பிறை சுபமுகூர்த்த நாள்
    விகாரி வருடம் – ஆவணி 18
     subamugurthanaal சுபமுகூர்த்த நாள்
    04-செப்-2019 புதன்  மொகரம்4
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள்(காலை 9.00 – 10.30)
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சஷ்டி          
    திதி நேரம்    :    சஷ்டி    அ.கா    4.12
    நட்சத்திரம்    :    சுவாதி    கா    11.34
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரேவதி,அசுவினி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Palani koil kumbabishega erpadugal

    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தற்போது அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தாலே கும்பாபிஷேகம் என்ற நிலை மாறி, தற்போது நீதிபதிகள் குழு, தொல்லியல் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கும்பாபிஷேக குழு என பல்வேறு குழுக்கள் கோயில்களை நேரில் ஆய்வு செய்து திட்டமதிப்பீட்டுகளை வழங்கி அதை சீராய்வு செய்த பின்னரே கும்பாபிஷேகத்துக்கு முடிவு எட்டப்படுகிறது. 

    இதனால் பழனிக் கோயில் கும்பாபிஷேகம் பல ஆண்டுகள் தள்ளிப் போனது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கும்பாபிஷேகம் செய்வதற்கு முந்தைய பாலாய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. 

    பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு நூறு வேதவிற்பன்னர்களை வைத்து யாகம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பழனி வாழ் பொதுமக்களுக்கும், முருகபக்தர்களுக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. 

  • Navagraga vinayakar

    செங்கல்பட்டு படாளம் கூட்ரோடு வழியாக வேடந்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்ருதபுரி ராமானுஜ யோகவனம் என்கிற தியான மண்டபம். இங்கு அபூர்வமான கஜகேசரியோகம் கொடுக்கக்கூடிய நலம் தரும் நவக்கிரக விநாயகர் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சுமார் 12 அடி உயரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானை, அவரது திருமேனியில் முன்புறம் அமைந்துள்ள நவக்கிரகங்களுடன் தரிசனம் செய்யலாம். விநாயகரின் பின்புறம் யோக நரசிம்மரை சேவிக்கலாம்.
     
    இந்த நவக்கிரக விநாயகர் தரிசனம், அனைத்துவிதமான தோஷங்களையும் நீக்கி வாழ்வில் நலன்கள் தரவல்லது. இங்கு விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.