Blog

  • This week Suba Hora

    ஞாயிற்றுக்கிழமை உள்ள சுப ஓரையில் மருந்து உண்ண , பெரியோரை பேட்டி காண ,பிரயாணம் செய்ய ஆகிய சுப செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் . திங்கட்கிழமை அன்று உள்ள சுப ஹோரையில் புது நகை வாங்கவும் புதிய ஆடை உடுத்தவும், புதிய கடை திறக்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம் .

    செவ்வாய்க்கிழமை அன்று உள்ள சுப ஓரையில் ஆப்பரேஷன் சிகிச்சை செய்ய ,ஆயுதம் செய்ய ,இயந்திரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

     புதன் கிழமையில் வரும் சுப ஓரையில் கலை பயில, கணித ஆரம்பம் செய்ய ,பொன் உருக்க ,,வித்தியாரம்பம் செய்ய, நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

     வியாழக்கிழமை வரும் சுப ஓரையில் பெரியோரை காண்பதற்கும், வாங்கிய கடன் தீர்ப்பதற்கும் ,புதிய வஸ்திரம் வாங்குவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     வெள்ளிக்கிழமையில் வரும்    சுப ஓரையில் புதிய தொழில் செய்வதற்கும், சுபமான செயல்களை பேசுவதற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

     சனிக்கிழமை வரும்  சுப ஓரையில்ஆயுதம் பழகுவதற்கும், யாத்திரை செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இங்கு கொடுக்கப்பட்டுள்ள சுபஹோரை.. நல்ல நேரம் சென்னையில் வசிக்கும் அன்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.சரியான ராகு காலம் ,எமகண்டம் (பகல் காலத்தில், இரவு காலத்தில் )போன்ற நேரங்கள் சென்னைக்கு கணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது 


    தொகுத்தவர் :  ஜோதிடர் பிரேம்குமார் . M.G.online astrologer. 

    போன் 8754 76 3832

  • Sabari malai Nadai thirappu

    புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி திறந்து வைத்தார்.

    ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 9- ந் தேதி திறக்கப்பட்டது. 11- ந்தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் நடை 13- ந்தேதி இரவு அடைக்கப்பட்டது.

    இதையடுத்து புரட்டாசி மாத பூஜைக்காக கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசு தேவன் நம்பூதிரி நேற்று மாலை 5 மணிக்கு நடையை திறந்து வைத்தார். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

     தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனை, புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் 21- ந் தேதி இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

  • Parvathi Homam

    திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர்.

    ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது. ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.

    ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு. 

    இந்த திருமணத் தடைகள் நீங்க சித்தர்களின் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் ஹோமங்கள் நடத்தியவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இதில் பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும்,  ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும் நடத்தி அதன் பலன்கள் கிடைக்க செய்துள்ளார்.

    சுருளிமலையில் செய்த யாகங்கள் அனைத்தையும் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார். இதனால் இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.

    திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 

    சுவாமிகளை சந்திக்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
    தொடர்புக்கு: 63747 72550, 74490 12379.

  • Vinayakarai vazhipadum murai

    விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

    பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

    தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

    அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.
     

  • September 17 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – யோகம் 
    ரிஷபம் – செலவு
    மிதுனம் – ஓய்வு
    கடனம் – பாசம் 
    சிம்மம் – தனம் 
    கன்னி –  கவனம் 
    துலாம் –  புகழ்
    விருச்சிகம் – அச்சம் 
    தனுசு –     பாராட்டு
    மகரம் –   நற்செயல்
    கும்பம் – ஆரோக்யம் 
    மீனம் – ஜெயம் 
    சந்திராஷ்டமம்    – சித்திரை
     

  • September 17 Sangadahara chadurthi

    செப்டம்பர் 17 சங்கடஹர சதுர்த்தி
    விகாரி வருடம் – ஆவணி 31
     சங்கடஹர சதுர்த்தி 
    17-செப்-2019 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரிதியை          
    திதி நேரம்    :    திரிதியை    ம    3.24
    நட்சத்திரம்    :    அசுவினி    முழுவதும்    0.00
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • aswini deva mandiram

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது.

    விபத்து, ஆபத்தில் இருந்து காக்கும் அஸ்வினி தேவ மந்திரம்
    அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
    தாவஸ்விநௌ து மஹ
    சுதா சம்பூர்ண கலச கராலஜெள
    அஸ்வ வாசு கநௌ

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
     

  • Kadan thollai theera

    ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். 

    அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

    வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.
     

  • Prasnna Venkatesa perumal koil kumbabishegam

    232 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருப்பட்டனம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.  28 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். 

    காரைக்கால் – நாகை வழித்தடத்தில் திருப்பட்டினம் என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயம். திருப்பதி சென்று வெங்கடாஜலபதி – யை வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் திருப்பதி சென்று வழிபட்ட புண்யம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

    232 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்திற்கு 28 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுக்கப்பட்டு அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த இரு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு கோயில் திருப்பணி வேலைகள் முடிவடைந்து, கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டன. கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டும் பணிகளும் முடிவடைந்தது. 
       
    இதை தொடர்ந்து கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின. யாகசாலை அமைக்கப்பட்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள்  விக்ரகம் யாகசாலையில் வைக்கப்பட்டு கால சாந்தி, பகவத் ப்ராத்தனை , புண்யாக வாசனம் , திருவாதாரனம் மற்றும் திருமஞ்சனம் உள்ளிட்ட விஷேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன.

    முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று 4ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மஹாபூர்ணாகதி நடைபெற்றது. இதன் பின்னர் மேள , தாள வாத்தியங்கள் முழங்க கடம்புறப் பாடு நடைபெற்றது. அதோடு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆலயத்திற்குள்  பிரவேசிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. 

    இதன் பின்னர் இராஜகோபுரம் மற்றும் ஆலய விமானங்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.  அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என சரண கோஷம் எழுப்பி பக்தியுடன் வழிபட்டனர்.  
     

  • September 16 Rasi Palan

    செப்டம்பர் 16… ராசி பலன் 
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – நஷ்டம் 
    ரிஷபம் – புகழ்
    மிதுனம் – மேன்மை 
    கடனம் – மகிழ்ச்சி
    சிம்மம் – பாராட்டு 
    கன்னி –  ஆரோக்கியம் 
    துலாம் –  ஆதரவு
    விருச்சிகம் – பயம் 
    தனுசு –     அமைதி
    மகரம் –   அன்பு
    கும்பம் – பேராசை 
    மீனம் – வெற்றி 
    சந்திராஷ்டமம்    – அஸ்தம்