Blog

  • Thiruchendur Muruganai Arivom

    செந்தூரில் ஸ்ரீ செந்திலாண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.

    முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.

    முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். 

    இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.

    முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபத்மன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.

    மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய்வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்.

    காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம். முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையொட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.

    முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு எடுக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.

  • Kanniga Parameswari Gayathri Mandiram

    திருமணம் தடைப்படும் பெண்கள் கன்னிகா பரமேஸ்வரிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    திருமண தடை நீக்கும் கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி மந்திரம்
    மந்திரங்களுக்கு தாயானவள் காயத்ரி. மங்கயர்கரசியான அம்பிகைகளுக்கென்று தனி காயத்ரி மந்திரமே உள்ளது. தினம்தோறும் இதனை பாராயணம் செய்ய நம்முள் மிகப்பெரிய ஆன்மீக அதிர்வை உணர முடியும்.  

    ஓம் பாலாரூபிணி வித்மஹே

    பரமேஸ்வரி தீமஹி

    தன்னோ கந்யா ப்ரசோதயாத் 
     

  • Eliya Parigarangal

    வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்.

    நல்ல சம்பாத்தியம் இருந்தும் பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும்.

    மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது.

    காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும்.

    தற்கொலை எண்ணங்கள் மேலும் வாழ பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாற ஆரம்பிக்கும். ஆண்களுக்கும் செய்யலாம். மூக்குத்தி அணிய வேண்டியதில்லை.

    வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது.

    காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும்.

    இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும்.

    வீட்டை சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ செயற்கையாக அமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும்.

    காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும்.

    சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும்.

    துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும்.
     

  • September 19 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – ஆதரவு
    ரிஷபம் – தொல்லை
    மிதுனம் – நன்மை 
    கடனம் – புகழ்
    சிம்மம் – மேன்மை 
    கன்னி –  இன்சொல்
    துலாம் –  பாராட்டு
    விருச்சிகம் – விவேகம் 
    தனுசு –     ஆக்கம் 
    மகரம் –   அன்பு 
    கும்பம் – சாந்தம் 
    மீனம் – மகிழ்ச்சி
    சந்திராஷ்டமம்    – விசாகம்
     

  • September 19 Karthigai

    செப்டம்பர் 19 – கார்த்திகை
    விகாரி வருடம் – புரட்டாசி 2
     கார்த்திகை 
    19-செப்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    பஞ்சமி          
    திதி நேரம்    :    பஞ்சமி    மா    4.52
    நட்சத்திரம்    :    பரணி    கா    7.29
    யோகம்    :    சித்த-மரண யோகம்
    சந்திராஷ்டமம்    :    விசாகம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • Purattasi Vazhipadu

    தமிழ் மாதங்களில் 6–வது மாதமாக புரட்டாசி வருகிறது. இது கன்னி ராசிக்குரிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்தது. அன்று நோன்பு நோற்று உபவாசம் இருப்பது வழக்கம். ‘உப’ என்றால் ‘சமீபம்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் ‘வசிப்பது’ என்று பொருள். இறைவனுக்கு சமீபமாக செல்ல, நாம் நோன்பு நோற்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    புரட்டாசி மாதம் மகாளய பட்சம் வருகிறது. மகாளய பட்சத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுக் கிறோம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காக்கும் கடவுளாகிய திருமாலை வேண்டி விரதம் இருப்பதால் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும், மூதாதையர்கள் சாபங்களில் இருந்தும் விடுபட பெருமாள் அனுக்கிரகம் செய்கிறார்.

    புரட்டாசி சனிக்கிழமை விரதம் திருப்பதி ஏழுமலையானுக்கு மிகவும் உகந்தது. தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம். பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார். ஏழுமலையான் சீனிவாசன் என்ற பெயரில் பூமிக்கு வந்த கதை தெய்வாம்சம் மிக்கது.

    சனிக்கிழமை விரதம்
    புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும். பின்னர் அலமேலுமங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும். இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பூஜைக்குரியனவற்றை சேகரித்து வைத்து, ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும். சர்க்கரைப்பொங்கல், வடை, எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.

    ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும். அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம் போல் செய்து, மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்திபோல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். 

    அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும். பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனை வருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம். துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.

    இந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும். எந்த விரதமானாலும் பகலில் தூங்கக் கூடாது. வெற்றிலை, பாக்கு போடக்கூடாது. மது, மாமிசத்தை விலக்கி பாவம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து உயிர்களிடத்தும் கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

  • Purattasi month sirappugal

    பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் நாளைப் பிறக்கிறது. இது, தமிழ் மாதங்களில் 6-வது மாதமாகும். இது கன்னி ராசிக்குரிய மாதமாகும்.

    புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

    புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

    இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.

  • Kadhal Kamam Kannan

    – 'மாரி மைந்தன்' சிவராமன்

    பாரதப் போர் 
    முடிவுற்றிருந்த
    நேரம்.

    போர் முடிந்திருந்ததே
    தவிர 
    போர்க்குணம் முடிந்தபாடில்லை.
    பலருக்கும் மீதமிருந்தது.

    பிணக்குவியல்
    ஒருபுறம்… .
    குற்றுயிரும் 
    குலையுயிருமாய் 
    துடித்துக் கொண்டிருந்தோர்
    பிணக்குவியலின் 
    நடுப்புறம்.

    பீமனின் 
    கதையினால் 
    கதை முடியும் 
    தருணத்திலிருந்தான் துரியோதனன்.

     பிணக்குவியலின் ஊடே பிணக்கு குறையாதிருந்த துரியோதனனைக் கண்டான்
     துரோணாச்சாரியாரின் 
     மகன் அசுவத்தாமன்.

    அரசாண்ட மன்னன் இப்போது – 
    அனாதையாக….. மரணத்தின் விளிம்பில்.

     துரியோதனின்
    ஆருயிர் தோழன் அசுவத்தாமன்
     துடிதுடித்துப் போனான்.

    மீதமிருந்த
     போர்க்குணம்
    கொலை வெறியாகக் கருக்கொண்டது.

    அது
    ஒரு கருவைக் கூட விட்டுவைக்காத 
    தீக்குணம்
    கொண்டிருந்தது.

    " உயிர் நண்பனே …
    உன்னை 
    அழித்தவர்களை 
    இன்று இரவுக்குள் 
    அழித்து
    அவர்களின்
    தலைகளை உன் காலடியில் சமர்ப்பிப்பேன்."

    சபதமிட்டான்.
    மனம் குமுறி
    ஓலமிட்டான்.

    அவன் குரல் போர்க்களத்தில் 
    பிணமாய் கிடந்த யாருக்கும் கேட்கவில்லை.

    ஆனால் 
    அது 
    போர் சூத்திரதாரியான கண்ணனுக்கு கேட்டது.

    விபரீதம் உணர்ந்த 
    கண்ணன்
    உடனே விரைந்து பாசறையில் இருந்த பாண்டவர்களை 
    வேறிடம் செல்ல பணித்தான்.

    அவர்கள் 
    அவசர அவசரமாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.

    கட்டுக்கடங்கா கொலை வெறியுடன் வந்த அசுவத்தாமனின் கண்களில் 
    புறப்பட்டுக் கொண்டிருந்த பாஞ்சாலியின் புதல்வர்கள் நிழலாடினர்.

    அவர்களைப் பிடித்து தலைகளைக் கொய்தான். கொக்கரித்தான்.
    "பாண்டவர் வம்சம் அழிந்தது .."

    நல்லவேளை அபிமன்யுவின் மனைவி உத்தரை அவன்
    கண்களில் படவில்லை.

     தப்பித்தாள்.

     எப்படியோ வாரிசு கிடைத்துவிடும் என கணப்பொழுதில் தகவலறிந்த 
    தர்மர் 
    பெருமூச்சுவிட்டார்.

     காரணம்
     அது சமயம் உத்தரை கருவுற்றிருந்தாள்.

    வம்சத்தை அழிக்கவந்த அசுவத்தாமனின்
    மூலையிலும் 
    பொறி தட்டியது.

    அபிமன்யுவின் மனைவி உத்தரையை
    அவன் கண்கள் தேடின.

    கருவறுக்க வந்தவன்
     நொடிப் பொழுது கூட
     யோசிக்காமல் 
     பிரமசிரசு அம்பை
     ஏவினான் .

    பிரம்மாசுரத்திற்கு இணையான 
    வல்லமை கொண்டது 
    பிரம்ம சிரசு.

    எல்லாம் அறிந்த மாயக்கண்ணன் 
    அம்பைத் தடுக்க ஆயத்தமானான்.

     ஆபத்பாந்தவன் 
    முயற்சி 
    வெற்றி காணாமல் இருக்குமா ?

    உத்தரை 
    உயிர்தப்பினாள்.

    ஆனால் 
    அவள் 
    வயிற்றில் இருந்த
    கரு 
    உருத்தெரியாமல் கருகியது.

     காலம் நகர்ந்தது.

    உத்தரை
    மகவு பெற்றாள்.

    குழந்தை 
    இறந்தே பிறந்தது.
    அதுவும் 
    ஒரு கரிக்கட்டை.

    பாண்டவர் கதறி
     அழுதனர்.

    மாயவன்
    கனிந்து குனிந்து
    மெல்லிய 
    புன்னகையோடு சொன்னான்.

     " கவலைப்படாதீர்கள்.

    கரிக்கட்டை 
    உயிர்பெறும்"

    கரியான சிசு 
    உயிராகும்
    அதிசயத்தைக் காண
     கூட்டம் 
     சேரத் தொடங்கியது.

    பராசரர் 
    வியாசர் 
    ஞானிகள் 
    முனிவர்கள் 
    என பெருங்கூட்டம்.

    கண்ணபிரானின்
    கருணை முகம்  பார்த்திருந்தனர்
    அத்தனை பேரும்.

    கண்ணன் உரக்கச் சொன்னான்
    " பிரம்மச்சரிய விரதத்தை நழுவாமல் 
    கடைப்பிடிக்கும் 
    ஒருவர் தொட்டால் 
    கரி உரு மாறும் .
    பொன் நிறமாகும்.
    நிறை குழந்தையாகும்."

    "இவ்வளவுதானா 
    இதோ 
    நான் தொடுகிறேன்." வந்தனர் 
    அதுகாறும் 
    நாடு வியந்திருந்த
     முனிவர் பெருமக்கள்.

    ஒவ்வொருவராய்  தொட்டும் 
    ஜனிக்கவில்லை பாண்டவரின் வாரிசு.

    இத்தனை நாள் கொண்டிருந்த
    இறுமாப்பு சரிந்து ஞானிகள்
     தலைகுனிந்தனர்.

     "சரி …. 
    ஒருவர்கூட இல்லையா….

    நான் தொட்டுப் பார்க்கிறேன்."

    அர்த்தப் புன்னகையோடு தொடப் போனான்
    விஷமக்காரன்.

    முனிவர்கள் 
    ஒருசேர 
    கண்ணனை 
    கோபமாய் பார்த்து
    நமட்டுச் சிரிப்பை
    உதிர்த்தனர்.
     
    "கண்ணா…..
    நாங்கள் 
    பல காலம் 
    காட்டில் தனித்து 
    தவமேற்கொண்டு பிரம்மச்சரியத்தின் எல்லையைக் கண்டவர்கள்..

    எங்கள் உயிரே பிரமச்சரியம் தான்.

    நாங்கள்
    பந்தபாசம் ஏதும் இல்லாதவர்கள். பற்றற்றவர்கள்.

    நாங்கள் தொட்டே 
    கரு உயிர் 
    பெறாத போது 
    நீ ……"

     வெடித்தார்
     ஒரு மூத்த முனிவர்.

    " நீ எட்டு 
    பட்டத்தரசிகளுடன்
     காதலில் திளைக்கும் காதல் மன்னன்.

    பதினாறாயிரம்
     ஆயர்குலப் பெண்டிருடன்
     ராஜகிரீடை புரிந்தத 
     காமராஜன்.

    உனக்கு ஒழுக்கம் 
    என்ற வரலாறு 
    இதுவரை இல்லை….

     நீ ….பிரம்மச்சாரியா…"

    தாடி நீவி
    மீசை மீறிய
    பற்கள் பளிச்சிட
    ஏகடியம் செய்தார்.

    கோகுலக்கண்ணன் வேடிக்கையாய் 
    அவரைப்
     பார்த்தவண்ணம்
    " கரிக்கட்டையை
     நான் தொட்டால்
     யாருக்கும் 
     நட்டம் இல்லை."
    என்றவாறு 
    தொட்டான்…..
    மெலிதாய் நீவினான்…

    மாயாஜாலம் போல் கரிக்கட்டை 
    உயிர் பெற்று 
    பிறந்த குழந்தையாய் 
    பூத்தது.

    கூட்டம் ஆரவாரித்தது.

     தவமுனிவர்களும்
    முக்காலம் உணர்ந்த ஞானிகளும் 
    தொங்கிய தலையினராய் கண்ணனின் பாதம் நோக்கினர். 

    "முனிவர்களே !
    நீங்கள் தவ
    ஆற்றல் மிக்கவர்தாம்.

     பிரம்மச்சரியத்தின்
     பிம்பமே நீங்கள்தான்.

    ஆனால்….."

    கண்ணணின் 
    காந்தக் கண்கள் 
    முழுதாக முனிவர்கள் அனைவரையும் 
    ஒருமுறை மேய்ந்து
     விரிந்தது .

    பின் சொன்னான்,
    "உங்கள் 
    உள்மனதில் காமம் இருந்தது.

     சிலசமயங்களில்
     காமத்தால் துடித்தீர்கள்.
     புத்தி பேதலித்திருந்தது.
     உள்ளம் பொய்திருந்தது.

     நான் 
    பல்லாயிரம் 
    பாவையரோடு சல்லாபித்திருந்தது
     நிஜமே.

    உலகோர் 
    நினைப்பதும் அதுவே.

     ஆனால் 
    ஒரு தடவை கூட 
    என் மனது
     காமமானதில்லை.
    கசடானதில்லை..

    அது 
    மோன நிலையிலும்
    ஞான நிலையிலேயுமே இருந்தது.

    ஒருபோதும் 
    மோக நிலையில் 
    இருந்ததில்லை.

    உங்களுக்குத் தெரியாததல்ல…..
     யாருக்கும் எவருக்கும்
    ஏன்
    முற்றும் துறந்த
    முனிவருக்கும் கூட 
    காமம் தவிர்ப்பது
    எளிதல்ல."

    ஞானப்பால் அருந்திய 
    ஞானியர் வாழ்த்துரைக்க பார்த்தன் எதிர்பார்த்த
    பரவசம்
    பாண்டவர் பூமியில்
     படர்ந்தது .

    விண்ணதிர 
    கரவொலியும் 
    கிருஷ்ண நாமமும்
     ஒலித்தன.

    அதையும் மீறி
    மழலையின் 
    அழுகுரல் 
    உத்தரையை 
    அழைத்தது.

    ஓடி வந்து 
    குழந்தையை 
    மார்புறத் 
    தழுவினாள்.

    கண்ணனை வணங்கியபடியே குழந்தைக்கு 
    அமுதூட்டத் 
    தயாரானாள்
    தாயான உத்தரை.

  • September 18 Rasi Palan

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – லாபம் 
    ரிஷபம் – நலம் 
    மிதுனம் – சுகம் 
    கடனம் – நட்பு
    சிம்மம் – வெற்றி  
    கன்னி –  போட்டி 
    துலாம் –  அசதி
    விருச்சிகம் – பாராட்டு 
    தனுசு –     பொறுமை 
    மகரம் –   நற்செயல்
    கும்பம் – புகழ் 
    மீனம் – நன்மை 
    சந்திராஷ்டமம்    – சுவாதி
     

  • September 18 Purattasi 1

    செப்டம்பர் 18 – புரட்டாசி 1
    விகாரி வருடம் – புரட்டாசி 1
    18-செப்-2019 புதன்  
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    12.00 – 1.30    
    குளிகை    :    10.30 – 12.00
    எமகண்டம்    :    7.30 – 9.00                          
    திதி    :    சூன்ய          
    திதி நேரம்    :    சதுர்த்தி    மா    4.21
    நட்சத்திரம்    :    அசுவினி    கா    6.09
    யோகம்    :    மரண-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சுவாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்