Blog

  • மழையை தரும் “மிளகு பிள்ளையார்”

    திருநெல்வேலி மாவட்ட சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில். இந்தக் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தின் வரலாற்றைக் காண்போம்.

    கேரளத்தை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு தீராத வியாதி உண்டாயிற்று. மருந்தால் அது தீரவில்லை. ஒருநாள் அவனது கனவில், ‘மன்னா! நீ உன் உயரத்துக்கு ஒரு பொம்மை தயார் செய்து, அதனுள் துவரம் பருப்பு அளவுள்ள மாணிக்க கற்களை கொட்டி, உன் வியாதியை அதற்குள் இடம் மாற்றி, ஒரு பிராமணனுக்கு தானமாக கொடுத்து விடு. உன்னிடம் உள்ள அந்த வியாதி அந்த பிராமணனை சேர்ந்து விடும்’ என அசரீரி ஒலித்தது.

    அந்த அசரீரியை தெய்வத்தின் கட்டளையாக ஏற்ற மன்னன், ஒரு பொம்மையை செய்தான். ஆனால் அந்த பொம்மையை எந்த பிராமணனும் வாங்க முன்வரவில்லை. இந்த தகவலை கர்நாடகாவில் உள்ள பிரம்மசாரி பிராமண இளைஞன் ஒருவன் கேள்விப்பட்டான். இதனையடுத்து அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து மன்னரிடம் இருந்து அந்த பொம்மையை வாங்கிக் கொண்டான்.

    பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் அந்த பொம்மை உயிர் பெற்றது. தனக்கு அந்த பிரம்மசாரி செய்திருந்த காயத்ரி மந்திரத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. ‘அப்படி கொடுத்து விட்டால் வியாதி உன்னை அண்டாது’ என்றும் அந்த பொம்மை சொன்னது. இதனைக்கேட்ட அந்த பிரம்மசாரி பொம்மை கேட்டபடி காயத்ரி மந்திரத்தின் பலனின் ஒரு பகுதியை கொடுத்து விட்டான். ஆனால் கொடுத்த பின்னர் அவனது மனது துன்பம் அடைந்தது.

    ‘வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே’ என்று அவன் கலங்கினான். இதற்கு பிராயச்சித்த மாக தனக்கு கிடைத்த மதிப்பு மிக்க மாணிக்க கற்களை பொதுநலன் கருதி செல வழிப்பது என்று அவன் முடிவெடுத்தான். ‘என்ன நன்மை செய்யலாம்?’ என்பதில் குழப்பம் வரவே, பொதிகை மலையில் வசித்து வரும் அகத்திய முனிவரிடம் சென்று யோசனை கேட்பது என்று முடிவு செய்தான்.

    பிறகு பொதிகை மலை சென்று அகத்தியரை சந்தித்தான். அவனது பிரச்சினையை அறிந்து கொண்ட அகத்தியர், ‘நல்ல விஷயங்களிலேயே தலை சிறந்தது தண்ணீர் தானம் தான். நீ மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அதன் வாலைப் பிடித்துக்கொண்டே செல். அது போகும் வழியை குறித்துக்கொள். அதன்படி கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங் களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு’ என்றார்.

    அந்த இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்தான் இளைஞன். கடைசியாக பிராஞ்சேரி என்ற ஊரில் பசு மறைந்து விட்டது. அங்கே மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை வெள்ள காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும்.

    மக்களுக்காக நல்லது செய்பவர்கள், தங்கள் பெயரை விளம்பரப்படுத்துவதில்லை. அந்த இளைஞனின் பெயரும் கூட இன்றுவரை யாருக்கும் தெரியாது. அவனது மொழியின் பெயராலே அந்த கால்வாய்க்கு ‘கன்னடியன் கால்வாய்’ என்று பெயர் வைத்து விட்டனர். கன்னடத்தில் இருந்து வந்த ஒரு இளைஞன், மலையாள மன்னனிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான்.

    அந்த இளைஞன் கால்வாய் வெட்டியதோடு நின்று விடவில்லை. அந்த கால்வாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவேண்டுமே என்று கவலைப்பட்டான். அவன் கவலைப்பட்டது போலவே, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மழையே இல்லை. கால்வாய் தண்ணீர் ஓடாமல், காய்ந்து போய் விட்டது.

    உடனே அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்தான். அந்த அபிஷேக நீர், கால்வாய்க்குள் விழும்படி செய்தான். என்ன ஆச்சரியம்! உடனே மழை கொட்டி தீர்த்தது. இப்போதும் மழை இல்லாத காலங்களில் சேரன்மாதேவி பகுதி விவசாய சங்கத்தினர் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.

    அவன் பிரதிஷ்டை செய்த விநாயகரே ‘மிளகு பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார்.

    மழை இல்லாத காலங்களில் இத்தலத்தில் வீற்றிருக்கும் விநாயகரது உடலில் மிளகை அரைத்துத் தேய்த்து அபிஷேகம் செய்து, அந்த புனித நீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்பது ஐதீகம்.

    திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேரன்மாதேவி திருத்தலம்.

     

  • 12 ராசிக்காரர்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள்

     

    ஜாதக ரீதியாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பரிகாரங்கள் மூலம் நிவர்த்திகள் செய்துக்கொள்ளலாம். ஆனால் எந்த ராசிகாரர்கள்  எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கலாம். இந்தப் பதிவின் மூலம் அந்தந்த ராசிகளுக்கான தெய்வங்களும், அவர்களுக்கான சுலோகங்களையும் பார்ப்போம்.

    ‪‎மேஷம் :

    மேஷ ராசியில் பிறந்தவர்கள் முருகனுக்கான  சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூற துன்பங்கள் நீங்கும்

     

    ஷண்முகம் பார்வதீ புத்ரம்

    க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்

    தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்

    வந்தே ஸிவாத் மஜம்

     

    ரிஷபம் :

     ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்தும் கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.

     

    ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை

    ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ

     

    மிதுனம் :

     மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

     

    ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நம:

     

    கடகம் :

    கடக ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு  பவுர்ணமிக்கும்  அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம் ஐம் க்லீம் ஸோமாய நம:

     

    சிம்மம் :

     

     சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

     

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம:

     

    கன்னி :

     

    கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

    ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம:

    ‪‎

    துலாம் :

     

    துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்

    ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நம:

     

    விருச்சிகம் :

     

    விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.

    தரணி கர்ப்ப ஸம்பூதம்

    வித்யுத் காந்தி ஸமப்ரதம்

    குமாரம் சக்தி ஹஸ்தம்ச

    மங்களம் ப்ரணமாம்யஹம்.

     

    தனுசு :

     

    தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.

    ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நம:

     

    மகரம் :

     

    மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

    ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம:

     

    கும்பம் : 

    கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

    ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம:

     

    மீனம் :

    மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

    ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம:

     

    நம்முடைய ராசிக்குரிய சுலோகங்களை, தினமும் பாராயணம் செய்து நம்முடைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவோம்.

     

  • விநாயகர் சதுர்த்தி!

    விநாயகனே வினை தீர்ப்பவனே..”, ‘முதல்வனுக்கே எங்கள் முதல் வணக்கம்’ இப்படி முழு முதற்கடவுளான விநாயகர் எல்லோராலும் போற்றப்படுகிறார்.தங்கக் கலசத்துக்கு கீழும் இருப்பார், தகரக் கொட்டகையிலும் இருப்பார் இந்த விக்னேசன். ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ இது வெறும் பழமொழி அல்ல, நாம் ஒவ்வொருவரும் விநாயகர் மீது கொண்ட நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது.ஆம், அதனால் தான் மண்ணைக் குழைத்து பிடித்து வைத்தாலும் பிள்ளையார் தான், மஞ்சளை பிடித்து வைத்தாலும் பிள்ளையார் தான். பிடித்து வைக்கும் போது அதில் அந்த    விநாயகரே வந்து அமர்வதாக ஐதீகம் இருக்கிறது. இப்படி ஆண்டி முதல் அரசன் வரை கொண்டாடும் விநாயகருக்கு ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விமரிசையாக விழா கொண்டாப்படுகிறது. பொதுவாக அந்த நாளினையே  விநாயகரின் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

       விநாயகர் சதுர்த்தி, இந்த வருடம் நாளை(வெள்ளிக்கிழமை) உலகெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. விநாயகர் சதுர்த்தி அன்று  விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்று விவரிக்கிறார் கடம்பூர் ஐயப்பன் கங்காதர குருக்கள்.

          “விநாயகர் சதுர்த்தி அன்று, காலையிலேயே வீட்டை சுத்தம் செய்து, நல்ல நேரத்தில் களிமண்ணினால் செய்த விநாயகர் சிலையை வீட்டுக்கு கொண்டு  வர வேண்டும்.விநாயகருக்கு சதுர்த்தி அன்று பூஜை செய்ய உகந்த நேரம் மாலை வேலை தான். சதுர்த்தி பிறையை தரிசித்து, விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். காலை மற்றும் மதியத்தில் விரதம் இருந்து விநாயகர் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். நாளை மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு மேற்கொள்வது சிறந்தது.  விநாயகருக்கு அருகம்புல் மாலை, தும்பைபூ மற்றும் எருக்கம்பூ  சாற்றி வழிபடலாம்.

      நமது வசதிக்கு ஏற்ப பட்சணங்கள் செய்து வழிபடலாம். பொதுவாக 16 வகையான உணவுகளை படைத்து விநாயகரை வழிபட வேண்டும். அவற்றில் குறிப்பாக, மோதகம், கொழுக்கட்டை, பால், தயிர், தேன், அவல்,பொறி, கடலை, சர்க்கரை, பேரீட்சை, தேங்காய்,விளாம்பழம், வாழைபழம், கொய்யா, மாதுளை,லட்டு  மற்றும் சுண்டல் செய்து விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். களிமண்ணால் ஆன சிலையை வைத்து வழிபடுவது சிறப்பு. தூப ஆராதனையின் போது “பாலும் தெளிதேனும்..” என்ற ஸ்லோகத்தை சொல்லி வழிபடுவது சாலச் சிறந்தது.விநாயகரை வழிபட்ட பிறகே நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.

     மூன்று நாட்களுக்கு பிறகு, வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையாய் உரிய முறையில் பூஜைகள் செய்து நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

    எல்லோருக்கும் அருளும் முதல்வனை ‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வழிபடுவது சிறப்பாகும். முழுமுதற் கடவுள் நம்மை காத்து அருட்கொள்வான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

  • பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்!

    1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

    2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

    3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

    8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

    9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

     

    11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

    12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

    13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

    14. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

    15. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார். 

    16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் … சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

    17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

    18.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

    திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
    சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா 
    ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா 
    வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

    ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

  • பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்!

    1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

    2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

    3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

    4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

    5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

    தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

    7.தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

    8.அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

    9.இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

    10.அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

     

    11.இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

    12. 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

    13. இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

    14. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

    15. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார். 

    16.கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் … சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

    17.தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

    18.பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.

    திருவாவினன்குடி சிறக்கும் குருபரா குமரா குழந்தை வேலாயுதா
    சரவணை சண்முகா சதாசிவன் பாலா இரவலர் தயாபரா 
    ஏழைபங்காளா பரமேஸ்வரிக்குப் பாலா தயாபரா 
    வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா.

    ஸ்ரீ பழநி மலை முருகப் பெருமானுக்கு அரகரா.. அரகரா.. அரகரா.. அரோகரா..

  • ஒன்பது கிரகங்களுக்குரிய தெய்வங்கள்…  

     

    கிரக பலன்கள் குறித்த அச்சமும், பரிகார நிமித்தமான கிரக வழிபாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    சூரியன் – சிவன்

    சந்திரன் – பார்வதி

    செவ்வாய் – முருகன்

    புதன் – விஷ்ணு

    வியாழன் – பிரம்மா, தட்ணாமூர்த்தி

    சுக்கிரன் – லட்சுமி, இந்திரன், வருணன்

    சனி – சாஸ்தா (ஐயப்பன்)

    ராகு – காளி, துர்க்கை, மாரியம்மன்

    கேது – விநாயகர், சண்டிகேஸ்வரர்

     

    இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.

     

    கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.

    அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

  • ஒன்பது கிரகங்களுக்குரிய தெய்வங்கள்…  

     

    கிரக பலன்கள் குறித்த அச்சமும், பரிகார நிமித்தமான கிரக வழிபாடும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

    சூரியன் – சிவன்

    சந்திரன் – பார்வதி

    செவ்வாய் – முருகன்

    புதன் – விஷ்ணு

    வியாழன் – பிரம்மா, தட்ணாமூர்த்தி

    சுக்கிரன் – லட்சுமி, இந்திரன், வருணன்

    சனி – சாஸ்தா (ஐயப்பன்)

    ராகு – காளி, துர்க்கை, மாரியம்மன்

    கேது – விநாயகர், சண்டிகேஸ்வரர்

     

    இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.

     

    கிரகங்கள் ஒன்பது (சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது). இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு அதிபதி நியமிக்கப் படுவார். அந்த அதிகாரியே கிரகத்தின் அதி தேவதையாக அறியப் படுகிறார்.

    அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

  • மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம் இருக்கும் புன்னியத்தலமான ஸ்ரீவாஞ்சியம், சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஆகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம். அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திகழும் திருவாஞ்சியம், பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் என்பதால் இது ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

    பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிற  ஸ்ரீவாஞ்சியத்தில் உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள  குப்தகங்கையில் நீராடி ,பின் இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் தான் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும் என்கிறார்கள். நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.

     

                                                                            

    எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் ,கோயில் அருகில் யாராவது இறந்து விட்டாலும் கூட ,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடக்கிறது.

    தலத்தின் புராணக்கதை

    பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்க்கையில், காவிரிக் கரையில் கண்ட திருவாஞ்சியத்தின்  அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர் என்கிறது புராணம்.

     மேலும் ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரின் பாவங்களை சுமந்ததால் ,தனக்கு ஏற்பட்ட பாவத்தை எங்கனம் போக்குவது என்று கேட்க,  அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

     

    ஸ்ரீவாஞ்சியத்தின் எண்ணிலடங்கா சிறப்புகள்

    ஒருவர் திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை,தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

    இத்தலத்தின் சிவனின் முன் யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்டவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஸ்ரீவாஞ்சியத்தில் அருள் பாலிக்கும் மங்கலாம்பிக்கையை வணங்க , மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வர்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலமாகவும்,காலசர்ப்பதோஷத்திற்கான தலமாகவும் விளங்குகிறது. சனிபகவான் அதிதேவதையான எமதர்மராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறலாம்.

     நம் இறுதி காலம் முடிந்தபின் ,நமது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே ‘ஆத்ம தர்ப்பணம்’ செய்து, முக்தி கிடைக்க வழி செய்துக்கொள்ளலாம்.

    இத்தலத்தில் இறந்தாலோ அல்லது ,இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலோ  சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

    இவ்வளவு சிறப்புகளைக் கொண்டுள்ள ஸ்ரீவாஞ்சி திருத்தலம் வாழ்வில் நாம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய புண்ணிய தலமாகும்.

     

     

  • மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    மரணபயம், மனச்சஞ்சலம் போக்கும் ஸ்ரீவாஞ்சியம்

     

    64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம் இருக்கும் புன்னியத்தலமான ஸ்ரீவாஞ்சியம், சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஆகும். கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது  ஸ்ரீ வாஞ்சியம். அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திகழும் திருவாஞ்சியம், பூலோக கைலாயம் என அழைக்கப்படுகிறது. தன்னைப் பிரிந்த திருமகளை (ஸ்ரீ) மீண்டும் அடைய விரும்பி விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் என்பதால் இது ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது.

    பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகிற  ஸ்ரீவாஞ்சியத்தில் உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள  குப்தகங்கையில் நீராடி ,பின் இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் தான் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும் என்கிறார்கள். நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.

     

                                                                            

    எமதர்மனே இங்கு ஷேத்திர பாலகராக இருப்பதால் ,கோயில் அருகில் யாராவது இறந்து விட்டாலும் கூட ,பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடக்கிறது.

    தலத்தின் புராணக்கதை

    பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடிப் பார்க்கையில், காவிரிக் கரையில் கண்ட திருவாஞ்சியத்தின்  அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர் என்கிறது புராணம்.

     மேலும் ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரின் பாவங்களை சுமந்ததால் ,தனக்கு ஏற்பட்ட பாவத்தை எங்கனம் போக்குவது என்று கேட்க,  அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார்.  அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது.

     

    ஸ்ரீவாஞ்சியத்தின் எண்ணிலடங்கா சிறப்புகள்

    ஒருவர் திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை,தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.

    இத்தலத்தின் சிவனின் முன் யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்டவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஸ்ரீவாஞ்சியத்தில் அருள் பாலிக்கும் மங்கலாம்பிக்கையை வணங்க , மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வர்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலமாகவும்,காலசர்ப்பதோஷத்திற்கான தலமாகவும் விளங்குகிறது. சனிபகவான் அதிதேவதையான எமதர்மராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்ட தொல்லைகள்  உபாதைகள் நீங்கப் பெறலாம்.

     நம் இறுதி காலம் முடிந்தபின் ,நமது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே ‘ஆத்ம தர்ப்பணம்’ செய்து, முக்தி கிடைக்க வழி செய்துக்கொள்ளலாம்.

    இத்தலத்தில் இறந்தாலோ அல்லது ,இறந்தவர்களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலோ  சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

    இவ்வளவு சிறப்புகளைக் கொண்டுள்ள ஸ்ரீவாஞ்சி திருத்தலம் வாழ்வில் நாம் ஒரு முறையாவது செல்ல வேண்டிய புண்ணிய தலமாகும்.

     

     

  • விநாயகர் திருவுருவ விளக்கம்

     

     

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரின் திருவுருவ விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

     

    இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகர் வழிபாடு இந்தியாவிலும், நேபாளத்திலும் முழுவதாக காணப்படுகிறது. அத்துடன் இந்து சமயம் தவிர்த்து பௌத்தம், சமணம் போன்ற மதங்களிலும் உள்ளது. இவர் கணபதி, ஆனைமுகன் என வேறு பல பெயர்களாலும் அறியப் பெறுகிறார்.

    திருவடி :

    ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.

    பெருவயிறு :

    ஆகாசம் எல்லாப் பொருள்களும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.

    ஐந்துகரங்கள் :

    பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலை குறிக்கிறது.எனவே, இவா் ருத்ரா் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே,இவரே சா்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.

    கொம்புகள் :

    மகாபாரதத்தை எழுதுவதற்காக தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.

    தாழ்செவி :

    விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளை சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.