Category: ஆன்மீக செய்திகள்

ஆன்மீக செய்திகள்

  • வாத நோயை தீர்க்கும் புனித தலம்: குமரமலை சங்குதீர்த்தம்!

    புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில், காரையூர் வழியாக 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குமரமலை. இது முருகப் பெருமான் அருளால் பக்தர்களுக்கு புனிதமாக விளங்கும் தலமாகும்.

    பழநிக்கு சென்று முருகனை தரிசிக்க முடியாமல், உடல்நிலை பாதிக்கப்பட்டு வருந்திய ஒரு பக்தரின் கனவில் முருகன் தோன்றி அருள்பாலித்த தலமாக இது அறியப்படுகிறது. அந்த பக்தருக்கு முருகன் கனவில் அறிவுறுத்தியபடி, மலை மீது சங்கஞ்செடி, விபூதிப்பை, ருத்ராட்ச மாலை இருந்த இடத்தில் வேல் ஊன்றி வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பின்னர், அங்கு பாலதண்டாயுதபாணி கோயில் எழுப்பப்பட்டு, பக்தர்களின் வழிபாட்டு தலமாக மாறியது.

    குமரமலை முருகனை வணங்கி, மலை மீது உள்ள சங்கு தீர்த்த நீரை சிறிது தலையில் தெளித்து, சிறிது பருகினால், வாத நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வாத நோய் தீர்ந்தால், பாதம் அடித்து வைப்பதாக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர். இந்த சங்கு தீர்த்தம், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சமூக வலைதளங்களில், இந்த தலத்தின் புனிதம் குறித்து பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். குமரமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. உடல்நலம் மற்றும் மன அமைதி வேண்டி பலரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த தலம், முருக பக்தர்களுக்கு ஆன்மீக பலத்தையும், நோய்களிலிருந்து விடுதலையும் அளிக்கும் புனித தலமாக விளங்குகிறது.

  • சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட மணிகளும் அவற்றின் பயன்களும்!

    சிவபெருமான், இந்த பிரபஞ்சத்தின் ஆதி கடவுளாக, பல அதிசயங்களை படைத்தவர். அவரால் தோற்றுவிக்கப்பட்டதாக நம்பப்படும் நவரத்தின மணிகள், மனித வாழ்வில் செல்வம், ஆரோக்கியம், ஞானம், வெற்றி மற்றும் பல நன்மைகளை அளிக்கும் ஆற்றல் பெற்றவை. இந்த பதிவில், மாணிக்கம், முத்து, பவளம், மரகதம், புஷ்பராகம், வைரம், நீலம், கோமேதகம், வைடூரியம் ஆகிய மணிகளின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

    1. மாணிக்கம்

    • பயன்கள்: செல்வம் பெருகும்; பூத, பிரேத பயம் விலகும்.

    • மாணிக்கம் செம்மஞ்சள் நிறத்தில் பிரகாசிக்கும் இந்த மணி, செல்வ வளத்தை அதிகரிக்கும். பயம் தரும் அமானுஷ்ய சக்திகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. சிவபெருமானின் அருளால், இது வாழ்வில் நம்பிக்கையையும் தைரியத்தையும் தருகிறது.

    2. முத்து

    • பயன்கள்: வறுமை விலகி, ஆயுள் விருத்தியடையும்.

    • வெண்மையான முத்து, அமைதியையும் செழிப்பையும் கொடுக்கும். வறுமை நீங்கி, நீண்ட ஆயுளைப் பெற இது உதவுகிறது. சிவபெருமானின் படைப்பில், இது மனதை சாந்தப்படுத்தி, வாழ்வில் நிலைத்த புரட்சியை ஏற்படுத்தும்.

    3. பவளம்

    • பயன்கள்: புத்திர பாக்கியம் உண்டாகும்.

    • சிவந்த பவள மணி, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இது வரமாக அமைகிறது. சிவபெருமானின் அருளால், இது குடும்ப ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பெருக்குகிறது.

    4. மரகதம்

    • பயன்கள்: புகழைக் கொடுக்கும்.

    • பச்சை நிற மரகதம், அழகு மற்றும் புகழின் சின்னமாக விளங்குகிறது. சமுதாயத்தில் மதிப்பையும், புகழையும் பெற விரும்புபவர்களுக்கு இது சிறந்தது. சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்மணி, உங்கள் திறமைகளை உலகுக்கு வெளிப்படுத்தும்.

    5. புஷ்பராகம்

    • பயன்கள்: வெற்றியைக் கொடுக்கும்.

    • மஞ்சள் நிற புஷ்பராகம், வெற்றியின் அடையாளமாகும். வாழ்க்கையில் போட்டிகளிலும், சவால்களிலும் வெற்றி பெற இது உதவுகிறது. சிவபெருமானின் ஆற்றலால், இது உங்களுக்கு தன்னம்பிக்கையையும், வெற்றி பாதையையும் காட்டும்.

    6. வைரம்

    • பயன்கள்: பகைவர் பயம் நீங்கி, துஷ்ட மிருகங்கள் அண்டாது.

    • பிரகாசமான வைரம், பாதுகாப்பு மற்றும் வலிமையை அளிக்கிறது. பகைவர்களிடமிருந்தும், தீய மிருகங்களிடமிருந்தும் காக்கும் ஆற்றல் பெற்றது. சிவபெருமானால் படைக்கப்பட்ட இது, உங்கள் வாழ்வில் பாதுகாப்பு கவசமாக விளங்கும்.

    7. நீலம்

    • பயன்கள்: சனி தோஷம் விலகும்.

    • நீல நிற நீல மணி, சனி கிரகத்தின் தோஷங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாழ்வில் தடைகளையும், துன்பங்களையும் போக்கி, மன அமைதியைத் தருகிறது. சிவபெருமானின் அருளால், இது உங்கள் வாழ்க்கையை சீர்படுத்தும்.

    8. கோமேதகம்

    • பயன்கள்: பாவங்கள் விலகி, அஞ்ஞானம் நீங்கும், ஞான மார்க்கம் பிறக்கும்.

    • கோமேதகம், ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் மணியாகும். பாவங்களைப் போக்கி, அறியாமையை நீக்குகிறது. ஞானத்தின் பாதையை வெளிப்படுத்தி, வாழ்வில் தெளிவை அளிக்கிறது. சிவபெருமானின் படைப்பில், இது ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்.

    9. வைடூரியம்

    • பயன்கள்: அறிவு வளரும், சமுதாயத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும்.

    • பூனைக்கண் போன்று பிரகாசிக்கும் வைடூரியம், அறிவாற்றலை அதிகரிக்கிறது. சமுதாயத்தில் மரியாதையையும், கௌரவத்தையும் பெற உதவுகிறது. சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இம்மணி, உங்கள் புத்திக்கூர்மையையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்தும்.

    சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நவரத்தின மணிகள், நம் வாழ்வில் பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன. செல்வம், ஆரோக்கியம், புகழ், வெற்றி, ஞானம், பாதுகாப்பு என அனைத்தையும் பெற இவை உதவுகின்றன. இந்த மணிகளை அணிவதற்கு முன், ஜோதிடர் அல்லது ஆன்மீக ஆலோசகரை அணுகி, உங்களுக்கு ஏற்ற மணியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. சிவபெருமானின் அருளால், உங்கள் வாழ்வு செழிப்பும், சந்தோஷமும் நிறைந்ததாக அமையட்டும்!

     

  • அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடு?

    ஸ்ரீரங்கம் கோவிலில் ராமானுஜரின் தியான திருமேனி, அடியார்க்கு வழிபாடு முடிந்த பின்னரே ஸ்ரீரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது ஏன்?

    வைணவ சான்றோர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர் ஸ்ரீராமானுஜர். கி.பி. 1017 ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவரது தந்தை ஆருலகேசவ சோமயாகி, தாயார் காந்திமதி அம்மையார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ராமானுஜர் தனது தந்தையிடமே வேதங்களை கற்று தேர்ச்சி பெற்றார். 16 வயது தாண்டிய போது தந்தையை இழந்த இவர் 17 வயதில் தஞ்சம்மாள் என்பவரை மனம் முடித்தார். பின்னர் யாதவப்பிரகாசர் என்பவரிடம் வேத கல்வியை பயின்றார்.

    ஆனால் ராமானுஜருக்கும் யாதவப்பிரகாசருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ராமானுஜரை கொன்று விடுவதற்கு அவருடைய குரு திட்டமிட்டார். அதன் பின், ராமானுஜர் திருக்கச்சி நம்பியிடம் மாணவராக சேர்ந்து வேத பாடங்களை கற்க தொடங்கினார். அங்கு பல அவமானங்களை சந்தித்த பின், தனது குருவான திருக்கச்சி நம்பிகள் இடம் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர்.

    இந்த மந்திர உபதேசத்தை வேறு யாரிடமும் கூறக்கூடாது என்று குருநாதர் திருக்கச்சி நம்பிகள் கூறிய போதும், அதனை பொறுப்பெடுத்தாமல் உலகத்திற்கு எடுத்துரைத்தார். “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமாலின் மந்திரத்தை எடுத்துரைத்தார். தன் குருவான திருக்கச்சி நம்பிகளின் வார்த்தையை மீறி, உலகிற்கு எடுத்துரைத்தார். இதனால் அவர் நரகம் செல்வார் என்று சாபங்கள் கொடுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், ராமானுஜர் தன் கடைசி காலம் வரை எம்பெருமானுக்கு தொண்டுகள் புரிந்து, 120 ஆவது வயதில் உயிர் நீத்தார். மறு தினமே உடல் மேலெழுந்து வந்தது, இது அனைவரையும் வியக்க வைத்தது.

    தியானம் செய்தபடி அமர்ந்த அவருடைய திருமேனிக்கு சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை தைலம் தடவப்படுகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் இவருக்கு வழிபாடு நடந்த பின்னரே, ஸ்ரீ ரங்கநாதருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • பொன்.கோ.முத்து, திருவள்ளூர்
  • பார்வதி தேவியின் மடியில் படுத்து உறங்கும் சிவன்

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஆதிசேஷன் வெளிப்படுத்திய ஆலகால விஷத்தை தேவர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அதனை தான் அருந்திய கதை அனைவரும் அறிந்திருப்போம். ஆனால், விஷத்தை உண்ட சோர்வில் சிவன் பார்வதியின் மடியில் ஒரு மழலையே போல் படுத்து உறங்கிய இடம் எங்கே உள்ளது தெரியுமா? வாருங்கள் அங்கு செல்லலாம்.

    தேவலோகத்தில் ஒருமுறை இந்திரன் மகாவிஷ்ணுவின் உதவியோடு அமிர்தம் வேண்டி பாற்கடலை கடையை முற்பட்டான். தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் மற்றொரு புறமாக நின்று, வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர். போட்டி போட்டு கொண்டு இரு தரப்பினரும் வாசுகி பாம்பை பிடித்து இழுத்ததால், வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷத்தை கக்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்து தங்களைக் காப்பாற்றுமாறு அனைவரும் கதறினர். சிவபெருமானால் தன் அருகில் இருந்த சுந்தரரை அனுப்பி, விஷத்தை சேகரித்து கொண்டுவர அனுப்பினார். சுந்தரரும் பாற்கடலில் தோன்றிய விஷம் அனைத்தையும் பந்து போல் உருட்டி, சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். சிவன் அந்த கொடிய நஞ்சினை வாயில் போட்டு விழுங்கினார். விஷம் உடலுக்குள் செல்வதை தடுக்க, சிவனின் கழுத்தை பார்வதி தேவி இறுக்கமாக கைகளால் அழுத்தி பிடித்துக் கொண்டாள். இதனால் விஷம் சிவனின் தொண்டையிலே நின்று விட்டது. இதன் காரணமாகத்தான் ஈசனை ‘நீலகண்டன்’ என்று போற்றுகிறோம்.

    விஷத்தை அருந்திய பின்னர், உமையவளுடன் சிவபெருமான் கயிலாயம் போகும். வழியில் அவருக்கு சோர்வு ஏற்பட்டது. அதனால் அவர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து களைப்பு நீங்க உறங்கிய அந்த இடமே சுருட்டப்பள்ளி என்று கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ளது அருள்மிகு ஸ்ரீ சர்வ மங்களாம்பிகை உடனுறை அருள்மிகு ஸ்ரீ பள்ளிகொண்ட ஈஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள மூர்த்திகள் பலர் குடும்ப சமயத்தைத் தரராக காட்சியளிப்பது தனி சிறப்பு. வைணவத் தலங்களில் ஆதிசேஷன் மீது அரங்கநாதன் சைனகுளத்தில் காட்சி அளிப்பது போன்று, சிவபெருமான் இங்கு மங்களாம்பிகையின் மடியில் ஒரு மழலையை போல் பள்ளிகொண்ட ஈஸ்வரராக சயன கோலத்தில் காட்சியளிக்கும் சிறப்புடைய ஒரே கோவில். உமையவள் ‘சர்வமங்களா அம்பிகை’ என்ற திருப்பெயருடன் அருள் புரிய.

    பிரகார வளாகத்தில் நந்தீஸ்வரர், பிருகு முனிவர், பிரம்மதேவன், ஸ்ரீ மகாவிஷ்ணு, மார்க்கண்டேயன், நாரத மாமுனி, சந்திரன், சூரியன், குபேரன், அகத்திய மாமுனிவர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களோடு விநாயகப் பெருமான், வள்ளி-தெய்வயானை சகோதரராக முருகப்பெருமான் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

    • பொன்.கோ.முத்து திருவள்ளூர்
  • சேது சமுத்திர கால்வாய் கட்ட அணில் ராமருக்கு உதவியதா ?

    மகாவிஷ்ணு இராவணனை அழிக்க எடுத்த அவதாரம்தான் இராம அவதாரம். கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்கு இலங்கை செல்வதற்காக, கடற்கரைக்கு வந்த இராமரும் வானர சேனையும்  கடலை எப்படி கடப்பது என்று குழப்பமுற்றனர். அப்போது கடல் மேல் பாலம் கட்டுவதென்று முடிவெடுத்து.  அதற்கான செயலில் ஈடுபட தொடங்கினர்.

    கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமருக்கு உதவ முன் வந்தன, அவைகள் தன்னால் முடிந்த கற்களை தூக்கிவந்து பாலத்தின் மீது போட்டது.சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய எண்ணி கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது.

    என்றால் அதுதான் இல்லை. புகழ்பெற்ற வால்மீகி ராமாயணத்திலோ,  கம்பராமாயணத்திலோ,  துளசிதாசர் எழுதியதிலோ சேதுபாலம் கட்டும் பணியின் போது அணில் உதவியதாக எந்த தகவலும் இல்லை இது வெறும் கற்பனை கதையே இந்த கதையானது இந்திய மொழிகள் அனைத்திலும் வாய்மொழியாக சொல்லப்படுகிறது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • என் பசி தீர உன் பங்கையும் தா” உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் ! 

    என் பசி தீர உன் பங்கையும் தா" உண்ட மயக்கத்தில் முனிவரின் ஆசிரமத்தில் உறங்கிய வீரராகவ பெருமாள் !

    எம்பெருமான் தனது அடியார்கள் மீது அளவற்ற அன்பு கொண்டவர், அதனால்தான் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் அவர்களின் இருப்பிடத்திற்கு தேடிச்சென்று அருள்புரிவார். அந்த வகையில் புரு எனும் முனிவரின் யாகத்தின் பயனாய்ப் பிறந்த சாலிஹோத்ரர் எனும் மாமுனிவர் தினமும் தவம் செய்த பின்னர், பெருமாளுக்கு அமுது படைத்த பின்பு தான் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு நாள் சாலிஹோத்ர முனிவரின் ஆசிரமத்திற்கு வயோதிகர் வடிவில் வந்த பெருமாள். வெகு தூரத்தில் இருந்து தான் வருவதாகவும், பசிக்கிறது உன்ன உணவேதும் கிடைக்குமா ? என கேட்க முனிவரும் உணவளிக்க பசி தீரவில்லை என முனிவரின் பங்கையும் கேட்டு சாப்பிட்டு முடித்ததும், உண்ட களைப்புத் தீர எங்கே படுப்பது என முனிவரிடம் வினவ, முனிவர் தம் ஆசிரமத்தைக் காட்டினார். அங்கே பெருமாளாக சயனித்தார்.

    "படுக்க எவ்வுள்" என்று கேட்டதால் ஊர் பெயர் எவ்வுள்ளூர் என்றும் எவ்வுட்கிடந்தான் என்பது பெருமாள் திருப்பெயருமாயிற்று. தற்போது அந்த இடம்தான் திருவள்ளூர் என அழைக்கப்படுகிறது.

    ஸ்ரீதேவித் தாயார் வசுமதி எனும் பெயரில் திலிப மகாராஜாவிற்குப் பெண்ணாக அவதரித்து வாழ்ந்து வர, வீரநாராயணன் எனும் பெயருடன் வேட்டைக்குச் சென்ற பெருமாள், தாயாரை மணமுடித்ததாகத் கோவில் வரலாறு தெரிவிக்கிறது.

    108 திவ்ய தேசங்களில் ஒன்றான இங்கு திருமழிசை ஆழ்வார், திருநங்கை ஆழ்வார், துப்பூர் வேதாந்த தேசிகன் ஆகியோரால் அப்பா மாலை சூட பட்டதாகும், 5 பஞ்சபூதங்களை குறிக்கும் வகையில் ஐந்தடுக்கு ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வீரராகவப் பெருமாள் வைத்திய வீரராகவப் பெருமாள் எனவும் போற்றப்படுகிறார், வீரராகவ பெருமாள் சைனா கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார், மூலவரின் வலது புறம் சாலி கோத்திர மகரிஷி, இடதுபுறம் பிரம்மாவுக்கு உபதேசிக்கும் ஞான முத்திரையும் நிறுவப்பட்டுள்ளது.

    மூலவர் பெருமாளுக்கு சந்தன தைலத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் கருணையே வடிவாக காட்சி தருகிறார், ஆழ்வார், கணேசர், கஜலட்சுமி தாயார், கோபாலன், நம்மாழ்வார், ஆண்டாள், வேதாந்த தேசிகர், ராமானுஜர், லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ரங்கநாதர், அனுமான் சன்னதி கொண்டுள்ளனர். இங்கு உள்ள சாலிங்கிய மகரிஷிக்கு, தை அமாவாசை அன்று வீரராகவ பெருமாள் காட்சி தந்ததால் தை அமாவாசை அன்று வீரராகவரை வழிபடுவது சிறப்பாகும்.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி

     

    விற்பனைக்காக கொண்டு வந்த வளையல்களை பறிகொடுத்த வணிகர் கனவில் காட்சி தந்த ஆதிபராசக்தி, சர்ப்ப மாலை அணிந்து புற்றுக்குள் காட்சி தந்த அதிசயம்!

    அம்மா வளையல் வாங்கலையோ வளையல் வளையல் வாங்கலையோ வளையல், ஏம்பா வளையல் காரரே குங்கும கலர் வலையில் இருக்கா இருக்கு தாயே எங்க மூட்டையை இறக்கு பார்க்கலாம், தலையில் மண்பாண்டத்துடன் நின்ற பெண் கூற தாயே சுட்டெரிக்கும் வெயில்ல வந்ததுனால தாகமா இருக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா தாயே,, வளையல் காரரே பானையில் மோர் வச்சிருக்கேன் கொடுக்கவா, கொடுத்தாயே வாங்கி குடித்த வணிகர் இடம் தாகம் தீர்ந்ததா வளையல்காரரே திருந்தது தாயே ,, பாவம் வேகாத வெயில்ல நாலு தெருவு சுத்தி வந்து இருப்ப சத்த நேரம் இந்த வேப்பமரத்து நிழல்ல இளைப்பாறு அதுவும் சரிதான் தாயே,,

    மரத்தடியில் உறங்கிய வணிகர் கண்விழித்து பார்த்த போது, அருகில் வைத்திருந்த வளையல் மூட்டைகள் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மூட்டைகளை தேடியபடி ஆரணி ஆற்றின் கரையில் மாலை நேர வேலையில் சென்று கொண்டிருந்தபோது ஆற்றின் கரையில் இருந்த பெரிய புற்றில் இருந்து பாம்பு ஒன்று சீரியபடி படம் எடுத்து ஆடுவதைக் கண்டு, அச்சத்துடன் வலையில் மூட்டைகளை தேடும் முயற்சியை கைவிட்டு ஏமாற்றத்துடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது ஊருக்கு திரும்பிய அவரது.

    ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது கனவில் ஆதிபராசக்தி தோன்றி நான் ரேணுகாதேவி. பெரியபாளையம் ஆரணி ஆற்றின் கரையில் பவானியாக அவதாரம் எடுத்துள்ளேன். உன் வளையல் மூட்டைகள் விழுந்துள்ள பாம்பு புற்றுக்குள் சுயம்புவாக கோவில் கொண்டுள்ளேன். நீ பயப்பட வேண்டாம் இது எனது திருவிளையாடல் உடனே அங்குவா உனக்கு நான் காட்சி தருகிறேன் என கூறியதை கேட்டு திடுக்கிட்டு விழித்த அவர், மறுநாள் தனது உறவினர்கள் சிலருடன் அற்புதம் நிகழ்ந்த திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்திற்கு வந்து ஊர் பெரியவர்களிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார், இதனைக் கேட்டு ஊர்க்காரர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஆரணி ஆற்றின் கரையில் உள்ள புற்றை நோக்கி சென்று கிடப்பாரையால் புற்றை இடிக்க முயன்ற போது" ணங்"என்று ஒரு சத்தம் கேட்டது.

    கிடப்பாறையை வெளியில் எடுத்த போது அதில் ரத்தம் தென்பட்டது, அதோடு புற்றிலிருந்து ரத்தம் வழிந்தது இதைப் பார்த்து நடுங்கியபடி புற்றை முழுமையாக அகற்றி பார்த்தனர். அதில் சர்ப்ப மாலை அணிந்தபடி சுயம்பு ஒன்று தென்பட்டது அதன் மேல்பகுதியில் இருந்து தான் ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந்தது.

    உடனே வளையல் வணிகர் தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வழிந்த இடத்தில் வைத்து அழுத்தினார். மறுகணம் ரத்தம் நின்று போனது சுயம்பு அணிந்திருந்த சர்ப்பமும் மறைந்தது இதனைடுத்து சுவைம்புவாக தோன்றிய அன்னை ஆதிபராசக்தி பவானி அம்மனுக்கு அதே இடத்தில் கோவில் கட்டிய ஊர் மக்கள் சுயம்பு வடிவ அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து இன்று வரை வணங்கி வருகின்றனர்,

    இப்பொழுதும் அந்த வெள்ளி கவசத்தை அகற்றி விட்டுப பார்த்தால் சுயம்பு வடிவின் உச்சியில் கிடப்பாரையால் ஏற்பட்ட காயத்தின் தழும்பை காணலாம், இப்படி தன்னை வெளிப்படுத்தி பெரியபாளையத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அருள்மிகு ஸ்ரீ பவானி அம்மன் தன்னை நாடிவரும் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள் புரிந்து வருவதால்.

    தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் பெரும் திரளான பக்தர்கள் வந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி பவானி அம்மனை பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். மேலும் ஆடி மாதம் 14 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருமுடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டு வழிபடுகின்றனர்.

    பிள்ளை பேரு இல்லாத தம்பதியர், திருமணம் ஆகாத பெண்கள், பவானி அம்மனுக்கு குங்கும நிற வளையல், சிகப்பு நிற சேலை, மஞ்சள் குங்குமத்துடன் நெய் தீபம் ஏற்றி அம்மனுக்கு தாம்பூல தட்டை காணிக்கை செலுத்தினால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியமும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, பொருட்செல்வம், கல்விச்செல்வம் ஆகியவற்றை பெற விரும்புவோர் ஏழு வெள்ளிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து பவானி அம்மனை வழிபட்டால் எண்ணம் நிறைவேறும் என்பது திண்ணம்,

    கோவில் நடை காளை ஆறு மணி முதல் பிற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும், ஆடி மாதம் 14 வாரமும் இதே நடைமுறையில் கோயில் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொன்.கோ.முத்து திருவள்ளூர்

  • சகல மங்கலங்களையும் பெருக வைக்கும் தைப்பூசம்!

    தைப்பூசம் என்பது  தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.   நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தை மாதத்தில் பூசமும், வியாழனும், பௌர்ணமியும், சித்த யோகமும் கூடிய நடுப்பகல் வேளையில், சிவபெருமான் திருநடனம் ஆடினார். எனவே  தைப்பூச தினம் மிகவும் உத்தமம் ஆகும் என்பார்கள்.

    முருகப்பெருமான், அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்படு முன், பார்வதி தேவி தம் சக்தியை வேல் வடிவில் அளித்து அருள் பாலித்தார். இதனை `எம் புதல்வா… வாழி வாழி எனும்படி வீறான வேல் தர’ என்று அருணகிரியார் திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார். இவ்வாறு அம்பிகை கந்தப் பெருமானுக்கு வேல் வழங்கிய நன்னாள் தைப்பூசம் எனக் கூறப்படுகிறது. எனவே, சிவாலயங்கள் போலவே முருகப்பெருமான் திருக்கோயில்களிலும் தைப்பூசத்தன்று தேர், தீர்த்தத் தெப்பத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தைப்பூசம் அறிவைப் பிரகாசிக்கச் செய்யும் நன்னாள் என்பதால், திருவருட்பிரகாச வள்ளலார் அன்று சித்தி விளாகத்தில் ஜோதியில் கலந்தார் என்பர். இதையொட்டி வடலூரில் ஏழு திரையை விலக்கி ஜோதிக் காட்சி நடைபெறும்.

    சிவபெருமானும் முருகப்பெருமானும் வேறல்ல – இருவரும் ஒருவரே என்னும் தத்துவப்படி தைப்பூசம் – பங்குனி உத்திரம் – வைகாசி விசாகம் முதலான விசேஷ நாள்கள் முருகப்பெருமானுக்கும் உரியதாகக் கொண்டாடப்படுகிறது.

    தைப்பூச விழாவையொட்டி பழநிக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி எடுப்பதும் பிரசித்தமான விழாவாகும். தமிழகத்தில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற பல நாடுகளிலும் தைப்பூச விழா சிறப்பா கக் கொண்டாடப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார் இந்த விழாவைப் பிரபலப்படுத்தி உலகில் உள்ள எல்லா முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாகக் கொண்டாட வகை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இங்ஙனம் குருவருளும் திருவருளும் சிறந்து விளங்கும் தைப்பூசத் திருநாளில் நாமும் முக்கண்ணனையும் அவர் மைந்தன் முருக வேளையும் எல்லாம்வல்ல பராசக்தியையும் வழிபட்டு வேண்டும் வரம்பெற்று மகிழ்வோம்.

    திருநெல்வேலி தலத்தில் பராசக்தி தாமிரபரணியில் நீராடி தவம் இருந்து, தைப்பூசத் திருநாளில் இறைவனின் அருள் பெற்றாளாம். ஆக தைப்பூச நாளில் அம்மையப்பரை வழிபட, தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; சகல மங்கலங்களும் பெருகும். அதேபோல் இந்தப் புனித நாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள், வாழ் வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ்வர் என்பது ஐதிகம்.

  • செல்வ வளத்தைப் பெருக்கும் சூரியன் வழிபாடு!

    மாவாசைக்கு பிறகு வரும் 7 ஆவது நாள் திதியை 'சப்தமி' என்பார்கள். இது சூரியன் அவதரித்த தினம் என்பதால், இதனை ரத சப்தமி' என்று போற்றுகிறார்கள். அன்றைய தினம் சூரியனை நாம் வழிபாடு செய்தால், எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

    அன்றைய தினம் செய்யும் தர்மங்களுக்கு அதிக புண்ணியம் வந்துசேரும். அதேபோல் இந்நாளில் தொடங்கும் தொழில், சிறப்பான வளர்ச்சியைப் பெறும். கணவனை இழந்த பெண்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் அடுத்த பிறவியில் இந்த நிலை வராது என்கிறது ஐதீகம். 

    ரத சப்தமி அன்று சூரியனுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட்டால் சூரியனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சூரியனுக்கு உகந்த தானியம், கோதுமை. எனவே ரத சப்தமி அன்று சூரியனுக்கான நைவேத்தியத்தில் கோதுமையால் செய்யப்பட்ட உணவு இருப்பது பெரும் புண்ணியம் தரும். ரத சப்தமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, சூரியனை வணங்க வேண்டும். பின்னர் சூரியனுக்குரிய துதிகளைச் சொல்ல வேண்டும். 

    சூரியனுக்கு உகந்த நைவேத்தியம், சர்க்கரைப் பொங்கல். அதனை சூடாக இருக்கும் போதே நைவேத்தியம் செய்துவிட வேண்டும். வழிபாட்டிற்குப் பிறகு அந்த சர்க்கரைப் பொங்கலை, மற்றவர்களுக்கு வழங்கி நாமும் சாப்பிட வேண்டும். ரத சப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் இட வேண்டும். 

    சூரியனுக்கு உகந்த பத்ரம் (இலை), எருக்கம் இலை ஆகும். ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் வைத்து நீராடுவது மிகவும் அவசியம். இதனால் ஆரோக்கியமும் செல்வ வளமும் பெருகும். நீராடும் போது ஏழு என்ற எண்ணிக்கையில் எருக்கம் இலைகளை எடுத்து அடுக்கிவைத்து, அதன் மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆண்கள் என்றால் அதனுடன் விபூதியும், பெண்கள் என்றால் அதனுடன் மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ. அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்களும் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு, நம் உடலில் பாய்ந்து,உடல் உபாதைகளையும், நோய்களையும் நீக்கும் என்பது ஐதீகம்.

    சூரியன், நாராயணரின் அம்சம் என்பதால், ரத சப்தமி தினம் அன்று, பெருமாள் கோவில்களில் அவர் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்குவார். சூரியன் வழிபாட்டை தினமும் கூட செய்யலாம்.

  • வளர்ப்புத் தாயின் பார்வையில் திருப்பதி லட்டு

    வளர்ப்புத் தாயின் பார்வையில் திருப்பதி லட்டு

    விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ணரிடம் அவரது வளர்ப்பு தாயான யசோதா, "கிருஷ்ணா, உனது திருமண கோலங்கள் எதையும் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே?" என இயக்கத்துடன் கேட்டால், அதற்கு கிருஷ்ணன் கலியுகத்தில் அத்தகைய வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்தார்.

    விஷ்ணு பகவான் வெங்கடேஸ்வரராக உலகில் அவதரித்தபோது, யசோதை அம்மையார் வெங்கடேஸ்வரரின் வளர்ப்பு தாயாக வகுலா தேவி என்ற திருநாமத்துடன் மீண்டும் பிறந்தார்.

    அப்போது, வெங்கடேச பெருமாளுக்கும் பத்மாவதி தாயார்க்கும் பின்னாளில் நடைபெற்ற திருமணத்தை வகுலா தேவி கண்டு ஆனந்தம் அடைந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது. வெங்கடேச பெருமாளின் திருமண விழாவிற்கு வந்த முக்கோடி தேவர்களுக்கு தலைவாழை இலை போட்டு அருஞ்சுவை உணவு பரிமாறப்பட்டதாகவும், அதில் இடம் பிடித்த லட்டு வகுலா தேவியின் திருகரங்களால் செய்யப்பட்டது என்றும் தெய்வீக மனத்துடன் அதன் சுவை இருந்ததால் தேவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு லட்டுவை விரும்பி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

    இன்றளவும், திருப்பதி லட்டு ஆகம விதிகளை கடைப்பிடித்து பக்தியுடன் செய்யப்படுவதோடு, லட்டு தயாரிக்கும் பணியை இப்போதும் லகுலா தேவி கண்காணித்து வருவதாகவும் பக்தர்களின் நம்பிக்கை. ஸ்ரீ வகுல மாதா கோவில், திருமலை மலையிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பேரூர் கிராமத்தில், ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

    பொன்.கோ.முத்து, திருவள்ளூர்.