Category: அவசியம் படிக்க

அவசியம் படிக்க

  • nellaiappar-koil-ippasi-thiruvizha

    நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, காந்திமதி அம்பாள் சன்னதியில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறும்.

    திருவிழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் நவம்பர் 2-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசிய சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை பிரதானச் சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறது.

    3-ந் தேதி முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.

    4-ந் தேதி அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் திருக்கல்யாண வைபவ விழா, காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வருதல் ஆகியவை நடைபெறும்.

    4,5,6-ம் தேதிகளில் அம்பாள் சன்னதியில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா, 7-ம் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேச வீதி உலா ஆகியவை நடைபெறும்.

    இவ்வாறு நெல்லை யப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரி பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • thirupathy-gold-chariot

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் முக்கயி நிகழ்வான தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 7-வது நாளான நேற்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா வந்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஏழுமலையான் தங்க தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு தங்க குதிரை வாகனத்தில் மாடவீதிகளில் பவனி வந்தனர்.

    நாளை காலை 7 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது. தெப்பகுளம் அருகேயுள்ள வராஹி கோவிலில் பூஜைகள் செய்து பின்னர் தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.

     

  • indraya-naal-palan

    அக்டோபர 17
    விளம்பி வருடம் – புரட்டாசி 31
    17-அக்-2018 புதன்
    நல்ல நேரம் : 9.00 – 10.30
    ராகு : 12.00 – 1.30
    குளிகை : 10.30 – 12.00
    எமகண்டம் : 7.30 – 9.00
    திதி : அதிதி
    திதி நேரம் : அஷ்டமி ம 1.48
    நட்சத்திரம் : உத்திராடம் இ 10.58
    யோகம் : அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : திருவாதிரை,புனர்பூசம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – வெற்றி
    ரிஷபம் – வருத்தம்
    மிதுனம் – நன்மை
    கடனம் – அமைதி
    சிம்மம் – செலவு
    கன்னி – ஆதரவு
    துலாம் – உதவி
    விருச்சிகம் – பாசம்
    தனுசு – சுகம்
    மகரம் – நட்பு
    கும்பம் – போட்டி
    மீனம் – கோபம்

  • soorya-prabai-vaganathi-malayappa-swamy

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் ஏழாம் நாளில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 10-ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று காலை அனுமந்த வாகனத்திலும், மாலை யானை வாகனத்தில் மலையப்பசாமி ராமச்சந்திரமூர்த்தி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று காலை சூரிய பிரபை வாகனத்தில் சூரிய நாராயணமூர்த்தியாக நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து, இன்று இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதி உலா வர உள்ளார்.

  • thirupathy-dasavadara-silaigalai-kaana

    ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள தசாவதார சிற்பங்கள் உள்ளிட்ட பாரம்பரிய சிற்பங்களைக் காண ஏற்பாடு செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    அதன்படி செயல் அதிகாரி அனில்குமார் சிங்காலின் உத்தரவின்படி, ஏழுமலையான் கோயிலில் உள்ள தொன்மையான தூண்களை தமிழகத்தைச் சேர்ந்த குழுவினரைக் கொண்டு மூலிகைகள் மூலம் சுத்தப்படுத்தும் பணியை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. மேலும் நன்கொடையாளர்களின் உதவியால் அத்தூண்களில் உள்ள சில சிலைகள் நன்றாகத் தெரியும் வகையில் அவற்றுக்கு வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் கோயில் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது.

    அதேபோல் ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள பல மண்டபங்களில் யாளி, மோகினி, வடபத்ரசாயி, தாண்டவ கிருஷ்ணன், சஞ்சீவனி மலையுடன் அனுமன், லட்சுமி நாராயணர், மூன்று முகங்கள் கொண்ட பிரம்மா, சரஸ்வதி தேவி, யோக நரசிம்மர் உள்ளிட்ட சிலைகள் உள்ளன. கோயிலின் யாசாலையில் கல்கி, திரிவிக்ரமர், வாமன அவதாரம், கிஷ்கிந்தா காண்டம், தானவர் சிலைகள் உள்ளன. ஊஞ்சல் மண்டபத்தில் சத்யபாமா, ருக்மணி சமேத வேணுகோபாலர், மற்ற மண்டபங்களில் கோவிந்தராஜ சுவாமி, சீதாராமர், வாலி – சுக்ரீவன் யுத்தம், கருடன், யசோதையுடன் கிருஷ்ணர் உள்ளிட்ட சிலைகள் அங்குள்ள தூண்களின் செதுக்கப்பட்டுள்ளன.

    இதற்கு முன் இச்சிலைகளைக் காண பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதியளித்து வந்தது. ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதாலும், அந்த மண்டபங்களில் உண்டியல் காணிக்கை நடைபெற்று வருவதாலும் மண்டபங்கள் முழுவதும் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளன. இதனால் இச்சிலைகளை பக்தர்களால் பார்க்க இயலவில்லை. அவற்றை பக்தர்கள் காணும் வகையில் தேவஸ்தானம் தற்போது வழிவகை செய்து வருகிறது.

  • sri-lalitha-sahasranamam-thonriya

    திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,”லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?”என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,” ” பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் ,”என்றார்.

    அகத்தியர் தன்மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது, இவ் லலிதாம்பிகையை தரிசித்து, ” லலிதா சகஸ்ரநாமம் ” சொன்னார்.

    அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், ” லலிதா நவரத்தின மாலை” என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

    நெய் குள தரிசனம்

    திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
    அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம் 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.
    சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம்.
    நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற தரிசனம். திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

  • sri-lalitha-sahasranamam-thonriya

    திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஹயக்கிரீவர் அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமம் இதன் பெருமையைப் பற்றி விவரித்தார். இதைக்கேட்ட அகத்தியர்,”லலிதா சகஸ்ரநாமத்தை எத்தலத்தில் கூறினால் முழுப்பலன் கிடைக்கும்?”என கேட்டார். அதற்கு ஹயக்கிரீவர்,” ” பூலோகத்தில் அம்பாள் மனோன்மணியாக வீற்றிருக்கும் இடத்திற்குச் சென்று சொன்னால் பூரண பலன் கிடைக்கும் ,”என்றார்.

    அகத்தியர் தன்மனைவி லோப முத்திரையுடன் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகை ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது, இவ் லலிதாம்பிகையை தரிசித்து, ” லலிதா சகஸ்ரநாமம் ” சொன்னார்.

    அம்பாள் மகிழ்ந்து அத்தம்பதிகளுக்கு நவரத்தினங்களாக தரிசனம் தந்தாள். அப்போது அகத்தியர், ” லலிதா நவரத்தின மாலை” என்னும் ஸ்தோத்திரம் பாடினார்.

    நெய் குள தரிசனம்

    திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது. விஜயதசமி அன்று கருவறைக்கு முன்பாக 15 அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
    அத்துடன் புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம் 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.
    சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர் கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம்.
    நவராத்திரி நிகழ்வின் மிகவும் பிரசித்தி பெற்ற தரிசனம். திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும் தரிசனம்.

  • sridi-sai-baba-100-year-celeb

    ஷீரடி சாய்பாபாவின் 100வது ஆண்டு நினைவு நாள் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது. 1918ம் ஆண்டில் இதே நாளில் தான் சாய்பாபா தனது ஸ்தூல உடலை விட்டு மறைந்தார்.

    மகாராஷ்டிராவில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நகரம் ஷீரடி. 18ம் நூற்றாண்டு தொடக்கத்தில் அங்குள்ள பழமையான மசூதிக்கு பின்னே சிறுவன் ஒருவன் தியானம் செய்தான்.

    அவனது முகத்தில் ஒளிர்ந்த தேஜஸை பார்த்த கிராமத்து தலைவர் மனைவி தினமும் அந்த சிறுவனுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கத் தொடங்கினார். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த கோயில் பூசாரி ஒருவர் சிறுவனை சாய் என்று அழைத்தார்.

    அந்த கிராமமே சிறுவன் சாயை தெய்வீக அருளுடன் பார்த்து வந்த சூழ்நிலையில், திடீரென அவன் ஷீரடியிலிருந்து காணாமல் போனான். ஊரே அவனை தேடிய நிலையில், மீண்டும் சாய் ஷீரடிக்கு விஜயமானான். அப்போது அவனக்கு வயது பதினாறு.

    மீண்டும் ஷீரடி வந்த சிறுவன் சாயை ஊர்மக்கள் கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள். சாய் என்பதுடன் பாபாவை இணைந்து சீரடி மக்கள் அவனை சாய்பாபா என்று அழைத்தனர். சாய்பாபாவை பற்றி தகவல்கள் ஊர்முழுக்க பரவியது. பல பகுதிகளிலிருந்து அவரை தேடி மக்கள் ஷீரடிக்கு வர தொடங்கினர்.

    மக்களின் துயரங்களுக்கு விடியலாகவும், அவர்களது இன்னல்களுக்கு மருந்தாகவும் சாய்பாபா பல அற்புதங்களை செய்தார். கடவுள் கிருஷ்ணனை வணங்கியபடி, மசூதியில் தங்கி வந்த அவர் மீது இந்து, இஸ்லாம் மக்கள் வேறுபாடு காட்டமல் அன்பு பாராட்டினர்.

    சாய்பாபாவுக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் அவருக்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் தான் ஜீவசமாதி அடையை வீடு கட்டி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே அவர் கட்டிக்கொடுத்தார்.

    மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் அன்பு பாராட்டிய சாய்பாபா, 1918ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாளில் ஜீவசாமாதி அடைந்தார். அன்று முதல் மக்கள் அவரை கடவுளாக வழிபடத்தொடங்கினர்.

    நம்பிக்கை வைக்கும் அன்பர்களுக்கு பாபா எப்போதும் துணை நிற்பதாக அவரது பக்தர்கள் கருதுகின்றனர். ஜீவசமாதி அடையும் சாய்பாபா துவாரகாமாயீயில் தீ மூட்டிவிட்டுச்சென்றார். அந்த நெருப்பு இன்றும் அணையாமல் உள்ளது.

    அதில் வரும் சாம்பலை பக்தர்கள் விபூதி பிரசாதமாக ஈடுக்கொண்டனர். நாட்டில் உள்ள பல்வேறு சாய்பாபா கோயில்களில் விபூதி தான் முக்கிய பிரசாதமாக விளங்குகிறது. இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு பிறகு, ஷீரடிக்கு தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் ஷீரடி சாய்பாபா

    சீரடி சாய்பாபா மறைந்த தினம் விஜயதசமி நாளாகும். இந்தாண்டு விஜயதசமியை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை சீரடியில் உள்ள சாய்பாபா கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வரும் 17 முதல் 19ம் தேதி வரை பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி அக்டோபர் 17ம் தேதி சாய்பாபாவின் பக்தி பாடல்கள் பாடுவது உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 18ம் தேதி சாய்பாபாவின் உருவம் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 19ம் தேதி இந்த நிகழ்வுகள் கொண்டாட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

  • indru-ungal-rasikku-enna-palan

    அக்டோபர் 16
    விளம்பி வருடம் – புரட்டாசி 30
    16-அக்-2018 செவ்வாய்
    நல்ல நேரம் : 7.30 – 9.00
    ராகு : 3.00 – 4.30
    குளிகை : 12.00 – 1.30
    எமகண்டம் : 9.00 – 10.30
    திதி : அஷ்டமி
    திதி நேரம் : சப்தமி கா 11.53
    நட்சத்திரம் : பூராடம் இ 8.38
    யோகம் : சித்த யோகம்
    சந்திராஷ்டமம் : மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்
    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் – செலவு
    ரிஷபம் – ஆதாயம்
    மிதுனம் – சுகம்
    கடனம் – பெருமை
    சிம்மம் – பயம்
    கன்னி – நற்செய்தி
    துலாம் – நன்மை
    விருச்சிகம் – போட்டி
    தனுசு – மேன்மை
    மகரம் – அச்சம்
    கும்பம் – உதவி
    மீனம் – வரவு

  • sabarimalai-nadai-thirappu

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

    இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் 5 நாட்களிலும், வி‌ஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர விழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களிலும் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து ஐயப்பனை வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து தீபாராதனை நடத்துவார்.

    18-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உ‌ஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, பு‌ஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 22-ந் தேதி வரை தந்திரி ராஜீவரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

    முன்னதாக 18-ந் தேதி காலையில் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உண்ணிகிரு‌ஷ்ணன் நம்பூதிரி முன்னிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் நடப்பாண்டின் மண்டல சீசன் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன், 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.